ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
‘அரசியல் கைதிகளே இல்லையென்பது தமிழ் அரசியலை இல்லாது செய்வதாகும்’ -எஸ்.நிதர்ஷன் நாட்டில் அரசியல் கைதிகள் தற்போது இல்லை என்று அரசாங்கம் கூறுவது, தமிழ் மக்களின் அரசியலை இல்லாமற்செய்வதற்குச் சமனாகும் என, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய அமைப்பு, நல்லை ஆதீன குரு முதல்வரை, நல்லை ஆதீனத்தில் இன்று (26) சந்தித்து கலந்துரையாடியுள்ளது. சந்திப்பு தொடர்பாக அருட்தந்தை மா.சக்திவேல் கருத்து தெரிவிக்கையில், “அரசாங்கம், அரசியல் ரீதியாகத் தீர்மானங்களை மேற்கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.…
-
- 1 reply
- 294 views
-
-
யாழ் முஸ்லிம் வர்த்தகர்கள் ஒரு மணி நேர கதவடைப்பு. IMAGE யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடைகளைப் பூட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட உபபொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவிற்கும் இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் – ஐந்து சந்தி பகுதியில் ஒன்றுகூடிய முஸ்லிம் மக்களால் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறுவதற்கு இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் இன்றைய தினம் ஒரு மணி நேரம் கடைகளை மூடி தமது எதிர்ப்பை வெளியி…
-
- 0 replies
- 561 views
-
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தேன்! – சந்தேகநபர் வாக்குமூலம்!! Share “நல்லூரில் உள்ள வீட்டில் தண்ணியடிச்சுட்டு (மதுபோதை) அந்தச் சந்தியில் வந்து நின்றம். பொலிஸ்காரன் வரேக்க, உனக்கு தைரியம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்துச் சுடடா பார்ப்பம் என்று மச்சான் சொன்னான். பொலிஸ்காரன்ர துவக்கை எடுக்கேக்க தெரியாமல் சுடுபட்டுட்டுது” இவ்வாறு நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபர், பொலிஸில் நேற்றுச் சரணடைந்து வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்தார். சந்தே…
-
- 2 replies
- 557 views
-
-
கொலன்னாவையில் தொடர்ந்தும் பதற்றம் ; 15 பௌசர்களில் எரிபொருள் விநியோகம் , 10 பேர் கைது கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பொற்றோலிய ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்களால் குறித்த ரயில் இடைமறிக்கப்பட்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை தாம் அங்கிருந்து அகலமாட்டோமென மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததையடுத்து அவர்களை பொலிஸார் அகற்றமுற்படுகையில் பதற்றநிலை உருவாகியது. இந்நிலையில் கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து …
-
- 0 replies
- 285 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துவைப்பு வேளைப் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரேரணையை முன்வைத்தார். நேற்று நாடாளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரேரேணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “காணாமல் போன ஆள்கள்” தொடர்பான விடயம் இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது. அத்தோடு, காணாமல் போன ஆள்களுடைய குடும்பங்கள்…
-
- 0 replies
- 214 views
-
-
முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் காலமானார் (நமது நிருபர்) முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் முன்னாள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் நேற்றுக் கொழும்பில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 84. சுகவீனம் காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்பு பொரளையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மன்சூர் மேலதிக சிகிக்சைகளுக்காக கொழும்பிலுள்ள மற்றுமொரு தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டிருந்தார். அங்கும் அவருக்கு சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 441 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை சனிக்கிழமை கைச்சாத்தாகும் அமைச்சரவை அங்கீகாரம் என்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க (எம்.சி.நஜிமுதீன்) அமைச்சரவையில் இன்று (நேற்று) சமர்ப்பிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள் ளது. எனவே, எதிர்வரும் சனிக்கிழமை குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச் சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரி…
-
- 0 replies
- 469 views
-
-
ரவி கருணாநாயக்கவுக்கும் அலோஷியஸுக்கும் இடையில் எவ்வாறான தொடர்பு உள்ளது? உடனடியாக வெளிப்படுத்தவேண்டும் என்கிறது தேசிய சுதந்திர முன்னணி (ஆர்.யசி) மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் தனிப்பட்ட திருட் டுகள் இடம்பெறவில்லை. இதன் பின்னணியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் அர் ஜுன் அலோசியஸுக்கும் இடையிலான உறவு என்னவென்பது உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்தது. மத்திய வங்கி ஊழல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குற்றவா…
-
- 0 replies
- 322 views
-
-
பளையில் பெறுமதிமிக்க முதிரை மரக்குற்றிகள் மீட்பு கிளிநொச்சி, பளை பகுதியில் பெறுமதி மிக்க முதிரை மரக் குற்றிகள் நேற்று இரவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. மல்லாவி பகுதியிலிருந்து எருவுக்குள் மறைத்து பார ஊர்தி ஒன்றில் கடத்த முற்பட்ட குறித்த குற்றிகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பெற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய பளை இத்தாவில் பகுதியில் வைத்து சோதனையிடப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/22349
-
- 0 replies
- 200 views
-
-
அரசாங்கம் அவசர நடவடிக்கையாக (1), (2), (3)ல் குறிப்பிடப்பட்டுள்ள அதன் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் செயற்பாடுகளைத் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்:- இலங்கைப் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆற்றிய உரை:- 2017 ஜுலை 25ந் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையின்போது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பின்வரும் பிரேரணையை முன்வைப்பதற்கான அறிவித்தலை ,இத்தால் தருகின்றேன். ‘காணாமல் போன ஆட்கள்’ தொடர்பான விடயம் , இலங்கையில், குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பாரதூரமான ஒரு பிரச்சினையாகச் சில காலமாக இருந்து வருகின்றது. அத்தோடு, காணாமல் போன ஆட்களுடைய குடும்பங்கள், வடக்குக் கி…
-
- 0 replies
- 185 views
-
-
நல்லூர் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் சரணடைவு நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மைச் சந்தே நபர் இன்று காலை 8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்சரணடைந்துள்ளார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. http://uthayandaily.com/story/13666.html
-
- 14 replies
- 1.2k views
-
-
அனைவரையும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரிக்கை : கடமைக்கு திரும்பாதோர் தாமாகவே விலகியதாக கருதப்படுவர் பொதுமக்களின் நலன்கருதி அனைவரும் பணிக்குத்திரும்புமாறு பெற்றோலியத்துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிபொருள் விநியோக நடவடிக்கைளை அத்தியாவசிய சேவையாக நேற்று நள்ளிரவு முதல் அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் நன்மை கருதியும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை புரிந்துகொண்டும் பெற்றோலியத்துறை ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு திரும்புமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, எரிபொருள் விநியோக நடவடிக்கையில் இணைந்து கொள்ளாத தனியார் எரிபொருள் பௌசர்களின் அனும…
-
- 0 replies
- 231 views
-
-
யாழ்.வேம்படி பாடசாலையில் வானிலிருந்து வீழ்ந்த திரவம் அமில மழையாக இருக்காது பல்கலைப் புவியியலாளர் கூறுகிறார் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் சில நாள்களுக்கு முன்னர் மஞ்சள் நிற திரவம் வானிலிருந்து வீழ்ந்தமையானது, அமில மழையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருக்கும். இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, குறித்த பாடசாலை வளாகத்தில் நின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மஞ்சள் நிறத்திலான திரவம் வீழ்ந்தது. …
-
- 2 replies
- 608 views
-
-
குவைட்டுக்குச் சென்ற 51 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர் வேலை வாய்ப்புக்காக குவைட் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில்,அங்கு பல்வேறான துன்புறுத்தலுக்கு உள்ளான பணிப்பெண்கள் 51 பேர் விசேட விமானத்தின் மூலம் இன்று (25) இலங்கையை வந்தடைந்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/குவைட்டுக்குச்-சென்ற-51-பணிப்பெண்கள்-இன்று-நாடு-திரும்பினர்/175-201307
-
- 0 replies
- 287 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவருக்கு பதவி நீடிப்பு ஏன்? பன்னாட்டுச் சமூகத்தின் அறிக்கைகளில் குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஒரு வருட காலத்துக்கு மீண்டும் பதவி நீடிப்பை வழங்கி மனித உரிமைகள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இலங்கையின் உள்நாட்டுப் போர் மிக மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்திய இலங்கை யின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாக பணியாற்றிய சிசிர மென்டிஸுக்கே அமைச்சரவை பதவி நீடிப்பை வழங்கியுள்ளது. கூட்டு அரசு , உள்நாட்டுப் போரின்போது இடம் பெற்ற பெரியளவிலா குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது குறி…
-
- 0 replies
- 316 views
-
-
சக்தி டிவி செய்திகள் 25th July 2017, 8PM
-
- 0 replies
- 511 views
-
-
இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாவுக்கு போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்கும் அதேவேளை, அன்றாடம் மண் ஏற்றுபவனுக்கு வெடி என நீதிமன்ற வாயில் வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான விசாரணைக்காக இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட போதே பிள்ளையான், அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், தமிழ் மக்கள் விடுதலைப் புலி…
-
- 2 replies
- 419 views
-
-
உயிருள்ளவருக்கு உயிரிழந்தவரின் கால் – தமிழ் மருத்துவர் சாதனை உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தும் முதலாவது சத்திரசிகிச்சை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை குருதிக்கலன் தொடர்பான பிரபல சத்திர கிச்சை நிபுணரான யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/13878.html உயிரிழந்தவரது காலை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தி தமிழ் வைத்தியர் சாதனை உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்துகின…
-
- 0 replies
- 571 views
-
-
வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூருக்கு அருகில் இடம்பெற்றது. வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை , ஜெகன் உள்ளிட்ட 53 போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் , மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து …
-
- 0 replies
- 327 views
-
-
வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவின் தொடர்பை ஆராயப் பணிப்பு! புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்தபோது அந்த இடத்தில், இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காணொலியை நீதிபதிக்கு காண்பித்தனர். நீதிபதி மேற்படி காணொலி தொடர்பில் வி…
-
- 1 reply
- 520 views
-
-
அரசியலில் ரணில் 40! – கேக் வெட்டினார் மைத்திரி!! தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக 40 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைந்துள்ளார். அதை முன்னிட்டு அரச தலைவரும், அமைச்சர்களும் நேற்றுப் பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அரச தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர். http://uthayandaily.com/story/13868.html
-
- 0 replies
- 406 views
-
-
இந்திய மீனவர்கள் மூவர் கைது -செல்வநாயகம் கபிலன் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் மூவரை காரைநகர் கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர் என, யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இந்திய-மீனவர்கள்-மூவர்-கைது/71-201281
-
- 0 replies
- 201 views
-
-
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 23 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு இலங்கை விமானப் படை தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் காத்தான்குடி விஜயம் செய்ததுடன், அவருக்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்…
-
- 9 replies
- 1.2k views
-
-
சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இறுதி அஞ்சலியை செலுத்தினார். கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகவலரான ஹேமரத்ன மீது இனந்தெரியாத ஆயுததாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் சிலாபத்திலுள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அன்னாரது பூதவுடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினா…
-
- 0 replies
- 366 views
-
-
விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமத்தில் சட்டவிரோத மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினரைக்கண்டு, மண் ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோதே, இந்தத் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுத…
-
- 3 replies
- 432 views
-