Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ’கோப்பை எனது கையில் திணித்துவிட்டனர்’ - - எஸ்.நிதர்ஷன் "ஆளுநரிடம் செல்வதற்கான உள்ளே சென்ற போது, வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானக் கோப்பை (பைல்) என்னுடைய கையில் கொண்டுவந்து திணித்து விட்டார்கள். எல்லோரும் கெட்டிக்காரர்கள்தானே? இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாவது?" என, வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில், சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி - பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது. அங்குவைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வடம…

    • 7 replies
    • 772 views
  2. சக்தி டிவி செய்திகள் 8PM (12-07-2017)

  3. 11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்: முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு சிக்கல் 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேகநபராக, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாது தவித்து வரும், கடற்படையின் லுத்தினல் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிர…

  4. தென்னிலங்கை மீனவர்களுக்கு முல்லை மாவட்ட கடற்றொழில் திணைக்களம் துணை முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோதமான தொழில்கள் அனைத்திற்கும் முல்லை மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையதின் பொருளாளர் எ.மரியராசா இக் குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி மீன்பிடித்தல்…

  5. நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிற்கும் : டி.எம் சுவாமிநாதன் நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிக்கும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரவித்துள்ளார். யாழ் நீர்வேலியில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் வாழும் கடற்தொழிலாளர்கள் ,விவசாயிகள் மற்றும் ஏனைய கைத்தொழில்களில் ஈடுபடுவோரின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு நாங்கள் ப…

  6. நாங்கள் முஸ்லிம்களை தங்களோடு வைத்திருக்க முஸ்லிம் கட்சிகளை நம்பியிருந்தமையே தாங்கள் செய்த மிகப் பெரும் தவறு. தற்போது அத் தவறை சரி செய்து முஸ்லிம் மக்கள் விடயங்களை முஸ்லிம் அரசியல் வாதிகளை விடுத்து நேரடியான பொறிமுறைகள் அமைத்து கையாண்டு கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற இளைஞசர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.. நேற்று 11-07-2017ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் இளைஞ்சர் மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை கவிழ்க்க இடம்பெற்றுக்கொண்டிருந்த சூழ்ச்சியை அறியாது அதில் அகப்பட்டுக் கொண்டதாக மன வேதனையோடு கருத்துக்களை பரிமாறினார்கள். …

    • 0 replies
    • 324 views
  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பில் மகிழ்ச்சி – அஸ்கிரி பீட பதிவாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில் மகிழ்ச்சி என அஸ்கிரி பீட பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஸ்கிரி பீடாதிபதியை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏதேனும் தப்பான அபிப்பிராயங்கள் நிலவினால் அதனை தீர்ப்பதற்கு இது ஒர் நல்ல சந்தர்ப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சரின் சில கடும்போக்குடைய நிலைப்பாடுகள் வருத்தம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். h…

  8. ‘டெனிஸ்வரனை நீக்குமாறான கடிதம் கிடைக்கவில்லை’ - எஸ். நிதர்ஸன், எஸ். ஜெகநாதன் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சரான பா. டெனிஸ்வரனை, வட மாகாண அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு, கடிதமேதும் தனக்குக் கிடைக்கவில்லை என வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், இன்று சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும்போதே, மேற்படி கருத்தை விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார். ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டம், வவுனியாவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலையில், டெனிஸ்வரனை கட்சியிலிருந்து இட…

  9. புலித்தொப்பி வழக்கு; சந்தேகநபர்கள் விடுவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குரிய இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை, இலண்டனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 15 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, இராணுவத்தின் முன்னாள் வீரர் உள்ளிட்ட மூவரை, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (12) விடுவித்தது. இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களான முல்லைத்தீவு - நந்திக்கடல் இராணுவ முகாமின் இலத்திரனியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்…

  10. ‘புலிகளின் சட்டக் கல்லூரிக்கு வரவில்லை’ - எஸ்.நிதர்ஷன் “தமிழீழ விடுதலை புலிகளால், கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட சட்டக் கல்லூரிக்கு நான் வந்திருக்கவில்லை” என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில், புலிகளால் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ சட்டக் கல்லூரிக்கு, விக்னேஸ்வரன் சென்றதாக, இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் சில புகைப்படங்கள், செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழுக்கான விஜயமொன்றை மேற்கொண்ட, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்னிங்கை, தனது வாசஸ்தலத்தில், நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்…

  11. புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும் - ஜனாதிபதி புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறைமை மாற்­றப்­பட வேண்டும் என மக்கள் எதிர்­பார்­கின்­றனர். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். தெஹி­அத்த கண்­டிய மகா­வலி சாலிகா மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை…

  12. யாழில் கூட்டுபாலியல் வன்புணர்வு முயற்சி : மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு.! யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். இருந்தபோதிலும் குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்ததையடுத்து கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் அம் மாணவியை வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தள்ளிவிடப்பட்டிருந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலு…

  13. அர­சி­லி­ருந்து வில­க­வுள்ள சு.கவின் அதி­ருப்­திக் குழு மைத்­தி­ரி­யி­டம் விரை­வில் நிபந்­தனை முன்­வைப்பு கூட்டு அர­சி­லி­ருந்து வில­கிச் சுயா­தீ­ன­ மாக இயங்­கப்­போ­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் சிலர், முக்­கிய நிபந்­த­னை­கள் அடங்­கிய சிறப்பு அறிக்­கை­யொன்றை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் விரை­வில் கைய­ளிக்­க­வுள்­ள­னர். இந்த அறிக்­கைக்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வர் என்ற வகை­யில் அரச தலை­வர் வழங்­கும் கருத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே கூட்டு அர­சில் நீடிப்­பதா அல்­லது வெளி­யே­று­வதா என்ற முடிவை மேற்­படி உறுப்­பி­னர்­கள் எடுக்­க­வுள்­ள­னர். “க…

  14. டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு நோய் பரவல் தொடர்பில் தூதரங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார அமைச்சரின் இயலாமை குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கு அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சரை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் …

    • 0 replies
    • 234 views
  15. துன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி எமது தனிப்பட்ட குரோதங்கள் முரண்பாடுகளுக்காக பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல , அதனால், மாற்று தலைமைக்கு இடமே இல்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டு இருந்த கனேடிய உயர்தானிகர் ஷெல்லி வைட்டிங் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில்…

  16. நெல்லியடியில் நிலவிய பதற்ற நிலையால் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வெளியேற்றப்பட்டனர் யாழ். பருத்தித்துறை மணற்காடு பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி 25 வயதான யோகராசா தினேஷ் உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லியடி பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். தற்போது இந்த பகுதியில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தினேஷின் இறுதிக் கிரியைகள் நேற்று (11) நடைபெற்றது. நீ…

  17. பொலிஸாருக்கு சட்டத்தை கையிலெடுக்க முடியாது பொலிஸார் சட்டத்தை கையில் எடுத்து அநீதி இழைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் - மணல்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சட்டத்தை நடைமுறைப்படுத்தவே பொலிஸாருக்கு உரிமையுள்ளதாகவும், அதனை மீற அனுமதியில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, யாழில் இடம்பெறும் சட்டவிரோத மண் வர்தகத்துடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்து சட்டத்தை அமுல்டுத்த பொலிஸாருக்கு முடியும் எனவும் சுமந்திரன் சுட…

  18. வவுனியா வந்தார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை விஷேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இன்று வவுனியாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் இம்மாதம் 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதி அரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் ந…

  19. அமைச்சுப் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்குங்கள் - அவரது கட்சியான ரெலோ அதிரடி தீர்மானம் கட்சியின் கூட்டுப்பொறுப்பை மீறி செயற்பட்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறு வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் குறித்த அமைச்சருடைய கட்சியான தமிழீழ விடுதலை இயக் கத்தினால் (ரெலோ) நேற்றையதினம் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டம் நேற்றையதினம் வவுனியாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போதே மேற் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளத…

  20. பல நூறு ஆண்டுகளாக முஸ்லிம் மையவாடியாக உள்ள நூற்றுகணக்கான ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள பெரிய கரிசல் மையவாடி காணி அயல் கிராமமான சின்னக் கரிசல் கிராமத்தை சேர்ந்தவர்களினால் தங்கள் தேவாலயத்திற்கு சொந்தமான கானி என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிவானினால் அங்காணி தேவாலையத்திற்கு சொந்தம் என தீர்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற பதிவாளரினால் சுற்றுவேளி அடைக்கப்பட்டு கிரிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெரிய கரிசல் வாழ் முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின் கொதித்து எழுந்த மக்கள் தங்கள் உறவுகளின் ஜனாஷாக்கள் தோண்டி எடுத்து இக் காணி எங்களுக்கு சொந்தமானது என்றும் நிருபிப்பதற்கு போராட்…

    • 8 replies
    • 1.5k views
  21. எல்­லை­ தாண்­டிய மீன்­பி­டியை மேற்­கொண்டால் கைதுகள் தொடரும் இலங்கை கடல் எல்­லையில் சட்­ட­வி­ரோ­த­மாக மீன்­பி­டியில் ஈடு­பட்டால் கைது செய்­வதை தடுக்க இய­லாது. எமது மீன­வர்­களை பாது­காக்­கவே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என மீன்­பி­டித்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். தடை­செய்­யப்­பட்ட மீன்­டியை நிறுத்­து­மாறு பல சந்­தர்ப்­பங்­களில் நாம் இந்­திய தரப்­பிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இந்­திய அரசும் ஏற்­றுக்­கொண்ட விட­யத்தை தொடர்ந்தும் செய்­ய­வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். அத்­து­மீறி இலங்கை கடல் எல்­லைக்குள் பிர­வே­சிக்கும் தமி­ழக மீன­வர்­களை கைது­செய்­வது மற்றும் தண்­டப்­பணம் அற­வி­டப்­படல் குறித்து பாரா­ளு­மன…

    • 7 replies
    • 647 views
  22. மன்னார் பகு­தியில் முறுகல் நிலையை ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் மூவர் கைது 17 ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல் (தலை­மன்னார் நிருபர்) நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி செயல்­பட்டு இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை உரு­வாக்­கி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மன்னார் பொலி­ஸாரால் சந்­தே­க­ந­பர்கள் மூவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது­செய்­யப்­பட்ட இவர்கள் பலத்த பொலிஸ் பாது­காப்­புடன் மன்னார் மாவட்ட நீதிவான் ஆசீர்­வாதம் கிறே­சியன் அலெக்ஸ்­ராஜா முன்­னி­லையில் நேற்று மாலை ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இவர்­களை ஒரு வாரத்­துக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். இரு சமூ­கங்­க­ளு…

    • 1 reply
    • 404 views
  23. இளைஞர் படுகொலை : நெல்லியடி முதல் கொடிகாமம்வரை பலத்த பாதுகாப்பு யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகிய துன்னாலையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள், இன்று காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், நெல்லியடி முதல் கொடிகாமம் அரசடி வீதிவரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் உயிரிழந்து, பின்னர் பதற்றம் நிலவியபோதும், எந்தவோர் அரசியல்வாதிகளும் தமது பகுதிக்குள் வரவில்லை என்று தெரிவித்த, இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தில் உள்ள இளைஞர்கள், வரும் தேர்தல் காலத்தில், எந்தவோர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பகுதியில் காலடி எடுத்து வைக்கமுடியாதென்று கூறி…

  24. யாழ் பொது நூலகத்தில் புகைப்படக்கண்காட்சி “எனது கனவுகள்; எனது திறன்கள், எனது பயணம்” தேசிய ரீதியில் பயணம் செய்யும் ஒரு புகைப்படக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை யாழில் (11.07) நடைபெற்றது. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சி கூடத்தினை கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் மற்றும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினால் பொருளாதார நிலை மாற்றத்திற்கான விசேட திறன்களை மேம்படுத்தல் எனும் கருத்திட்டத்தின் கீழ் நிலையான வேலைவாய்பபினை பெற்றுக்கொள்வதற்காக கடந்து வந்த விடயங்கள், தொழிலுக்கான திறன்கள் தொடர்பான “எனது கனவுகள், எனது திறன்கள், எனது பயணம்” எனும் தொனிப்பொருள…

  25. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் A320 எயார் பஸ்ஸால் நாளாந்தம் நாட்டிற்கு 1.86 மில்லியன் ரூபா நட்டம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் குத்தகைக் காலம் நிறைவடைந்த A320 எயார் பஸ் காரணமாக நாளாந்தம் நாட்டிற்கு 12,000 அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளது. இந்த விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக இந்தோனேஷியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இந்த விமானத்தை மீள ஒப்படைக்கத் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் 12,000 அமெரிக்க டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. இலங்கை நாணயப் பெறுமதியில் அது 1.86 மில்லியன் ரூபாவாகும். இதுவரை தாமதமான 64 நாட்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.