ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
நாடாளுமன்றில் வார்த்தைகளால் மோதிக்கொண்ட சுமந்திரன் - மனோ கணேசன் அமைச்சர் மனோ கணேசனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டினால் வாக்குவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதும், வழிநடத்தல் குழுவின் கூட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து விவாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, அரசியலமைப்பு திருத்த முன்மொழிவ…
-
- 0 replies
- 288 views
-
-
மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை – ராஜித அரசமைப்புத் திருத்தத்தை மகாநாயக்க தேரர்கள் எதற்காக எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேரர்கள் இது குறித்து வழங்கும் அறிவுரையை நாடாளுமன்றில் விவாதிக்க தீர்மானித்துள்ளோம். நாட்டின் தலைவரான ஜனாதிபதி தனது அதிகாரத்தை மக்களுக்கும் ஏனைய அமைப்புக்களின் பிரதானிகளுக்கும் வழங்குகிறார். அவர்கள் அதற்கு எதிர்ப்பை வழங்குகின்றனர். இது ஏன் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார். …
-
- 2 replies
- 415 views
-
-
உயர் நீதிமன்றம் இடைக்கால தடை : குப்பை பிரச்சினை தொடருகிறது..! கொழும்பு மாநகரசபையால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முத்துராஜவெல பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. http://www.virakesari.lk/article/21523
-
- 0 replies
- 193 views
-
-
யாழ்.மாட்டத்தில் சுமார் 5 ஆயிரத்து 400 ஏக்கர் காணிகள் படையினர் வசம் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் முப்படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ்.மாவட்ட செயலகத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றைய கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ள பகுதிகளை விடுவிப்…
-
- 2 replies
- 378 views
-
-
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களிற்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கு தெரிவு செய்யும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணியளவில் சமூக சேவைகள் திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஒதுக்கீட்டில் வடக்கு மாகாணத்தில் உள்ள 300 பயனாளிகளுக்கு குறித்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், மாவட்டம் தோறும் 60 பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார். குறித்த வேலைத்திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்யும் நிகழ்வு மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 338 views
-
-
முஸ்லிம்கள் முகவர்கள் மூலம் தொடர்பைப் பேணியதாலேயே எம்மை பற்றி சரியான தெளிவை பெறவில்லை ; நாமல் இந்த நாட்டு முஸ்லிம்களுடன் முகவர்கள் மூலம் தொடர்பை பேணியதால்தான் முஸ்லிம்கள் எம்மை பற்றி சரியான தெளிவை பெறவில்லை என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி கலாநிதி நஸார் தலைமையில் கிண்ணியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், எம்மிடம் இருந்து ஆட்சியை பறிக்க மேற்குலகம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்லிம்கள் சிக்கிக்கொண்டனர். அதை இப்…
-
- 1 reply
- 356 views
-
-
இலங்கையின் கிழக்கே சர்வதேச இஸ்லாமிய நாடுகளில் துணையுடன் அறிவிக்கப்படாத இஸ்லாமிய போரை பாகிஸ்தானிய தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தொடக்கியுள்ளதாக தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் எழுச்சி பெறா விட்டால் கிழக்கின் வரலாறு மாற்றி எழுதப்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சிறந்த தமிழ் பாரம்பரியத்தை கொண்ட மட்டக்களப்பு மாநிலம் தமிழ் மொழி வழி மாநிலமாகவும் தனியே தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இரண்டு இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணமாக உள்ள நிலையில் இன்று முஸ்லிம் மத அடையாளத்தின் அடிப்படையில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட முதலமைச்சர் அனைவரும் அரசியல் செய்வதுடன் முஸ்லிம் மத அடையாளங்களை அடிப்படையாக கொண்ட நி…
-
- 2 replies
- 862 views
-
-
திசைமாறும் வடக்கு மாணவர்களின் செயற்பாடுகள் - அறிவட்சன் கல்வி வளர்ச்சி என்பது, பலதுறைகளில் அசுரவேகத்தில் முன்னேற்றம் அடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. தொழில்நுட்ப ரீதியிலானதும் விஞ்ஞான ரீதியிலுமானதுமாக வளர்ச்சியைக்காணும் உலகில், அதனை மேம்படுத்திச்செல்லும் கருவியாக, கற்றலும் கற்பித்தலும், காணப்படுகின்றது. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே, இன்று பெருமளவில் பேசப்படும் விடயங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, மேற்கத்தேய நாடுகளில், மாணவர்கள், ஆராச்சியில் ஈடுபடுவதன் பலனாக, பல்வேறான புதிய தொழில்நுட்ப விடயங்களை, உலகுக்கு அறிமுகம் செய்யும் செயற்பாடுகள், அதிகரித்து வருகின்றது. இவ்…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ்.நெடுந்தீவு பகுதியில் வறட்சி காரணமாகவும், பராமரிப்பு இன்றியும் குதிரைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு பகுதியில் குதிரைகளின் லயம் காணப்படுகின்றது. தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக குதிரைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 10 இற்குட்பட்ட குதிரைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன. குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட இதுவரையில் எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குதிரை லயம் உள்ள குதிரைகளுக்கு உரிய பராமரிப்பு இன்மையால், மேலும் பல குதிரைகளும் உயிரிழந்து விடுமோ என்ற அச்சம் நிலவுவதாக மக்கள் தெரிவி…
-
- 0 replies
- 853 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 05-07-2017
-
- 0 replies
- 182 views
-
-
ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிரேஷ்ட பெண் வணிக ஊடகவியலாளரும், சண்டே டைம்ஸ், ஏ.எப்.பி. போன்ற ஊடகங்களின் முன்னாள் ஊடகவியலாளருமான மெல் குணசேகர கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்துவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏ.ஜோர்ஜ் அல்லது ' பெயின்ட் பாஸ்' என அறியப்படும் பிரதிவாதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே…
-
- 0 replies
- 327 views
-
-
சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, சமஅந்தஸ்த்தை ‘அரசமைப்பில் உள்வாங்கவும்’ உடல் ரீதியான தீங்குகளை ஏற்படுத்தும் வன்முறைகளின் காரணமாக, கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருக்கும் நிலையில், ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, பாரபட்சமின்மை, சமஅந்தஸ்த்து உள்ளிட்ட விடயங்கள், அரசியலமைப்பு ரீதியாக உள்வாங்கப்படும் போதே, அது சாத்தியமாகும்” என்று, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று(04) நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உர…
-
- 1 reply
- 406 views
-
-
இங்கே நான் பதிவிட்டிருக்கும் படங்கள் அனைத்தும் கிழக்குமாகணத்தின் வாகரை கதிரவெளிக்கு இடைப்பட்ட இடங்களில் பிடிக்கபட்ட படங்கள். சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்களான நிறைமாத கட்பினிகளும் சிறுவர்களும் கால்களை இழந்த ஆண்களுமாக பல பேர் வீதிகளுக்கு காபன் போடபட்ட மீதி கற்களை பொருக்கிகொண்டிருக்கிறார்கள். வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரித்த போது இடிவிழுந்ததை போல உணர்ந்தேன் இவர்களைப்போல பல குடும்பங்கள் அந்தபிரதேசத்தில் சாப்பாட்டிற்க்கு வளி இல்லாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் இவர்களுக்கு வாழ்வாதாரமே இல்லை என்பதும் விசாரித்த போது தெரிந்துகொண்டேன். அப்படியானால் இங்கே கொங்கிறீட் வீதி அமைக்கும் சிறி நேசனுக்கோ விளையாட்டு மைதானம் அமைக்க பணம் ஒதுக்கும் கோவிநத…
-
- 1 reply
- 1.3k views
-
-
"புதிய அரசியலமைப்பை பௌத்த பீடங்கள் முழுமையாக எதிர்க்கும்" அஸ்கிரிய பீடம் தேர்தல் திருத்தம் தவிர அரசியலமைப்பில் வேறு எந்தவொரு திருத்தமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்புக்கு பெளத்த பீடம் முழுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றது என்று அஸ்கிரிய மகாநாயக பீடம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் வாதிகளின் கருத்துக்களில் நம்பிக்கை இல்லை. புதிய அரசியல் அமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகாநாயக்க தேரர் பீடமும் ஒன்றுகூடி போராடவேண்டிய நிலைமை வரும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க பீடம் குறிப்பிட்டுள்ளது. புத்தசாசன அம…
-
- 5 replies
- 1.1k views
-
-
-
வாகனேரியில்_குடாமுனைகல் எனும் இடத்தில் முஸ்லிங்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல வயல் செய்கை ஆடுமாடு விற்பனை மீன்பிடி என்று ஊடுருவத்தொடங்கி தற்போது தொழுகைக்கான பள்ளிவாசல் ஒன்றை அங்கு தொழில் செய்ய சென்று பாம்பு தீண்டி இறந்தவரின் உடலைவைத்து சமாதி கட்டி அதில் வழிப்பாட்டை நடத்த. தொடங்கி இருக்கிறார்கள் தயவு செய்து இப்படியான முஸ்லிங்களின் ஊடுருவலை தடுக்குமாறு கிரான் பிரதேச செயலாளர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம் http://battinaatham.com/description.php?art=10823
-
- 14 replies
- 1.4k views
-
-
மாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு நடத்த உள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். மூன்று பீடங்களினதும் மாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி நாளைய தினம் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த உள்ளார். கண்டி அஸ்கிரி விஹாரையில் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது. உத்தேச அரசியல் சாசனம் மற்றும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதி, மாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக நேற்றைய தினம் மாநாயக்க தேரர்கள் தங்களுக்கு இடையில் சந்திப்பு …
-
- 0 replies
- 299 views
-
-
"மஹிந்த தரப்பினரை கூண்டில் ஏற்றுவேன்" சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் மூன்று மாதத்திற்கு என்னிடம் தாருங்கள், தந்தால் மஹிந்த தரப்பு உட்பட சகல குற்றவாளிகளையும் கூண்டில் ஏற்றிக்காட்டுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பிற்கு ஆதரவு செலுத்துவதன் மூலம் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியினை உருவாக்கலாம் என கனவு காணவேண்டாம். மஹிந்த தரப்பினரை விட்டுவிட்டு என்னுடன் செயற்படுபவர்கள் மீதே வழக்குகள் தாக்கல்செய்யப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எமது கட்சியை ஓரம்கட்ட பார்க்கின்றீர்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 340 views
-
-
ஐ.எஸ்.வரைபடத்தின் மூலையில் இலங்கை 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு தொடர்பு இதுகுறித்து அவதானம் செலுத்தினோம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இது குறித்து பெரிதும் அவதானம் செலுத்தப்படவில்லை. காரணம் ஐ.நா. விவகாரத்தின் போது இலங்கைக்கு அரேபிய நாடுகள் பெரிதும் உதவியதால் கடந்த அரசாங்கம் அவர்களுடன் நட்புறவை பேணியது. யுத்தத்தினை முடித்த பின்னர் எந்த தீவிரவாத அமைப்பு எம்மை எதிர்த்தாலும் அவர்களுடன் போராடுவோம் என்ற மனநிலையில் பாதுகாப்பு தரப்புக்களும் இருந்தன . அதனால் கடந்த அரசாங்கத்தினால் இஸ்லாமிய இனவாதிகள் பற்றி தேடவில்லை என்று கூற முடியாது. காரணம் அந்த நாட்களில் இஸ்லாமிய இன…
-
- 0 replies
- 508 views
-
-
மலையக தமிழ் உறுப்பினர்கள் ஓரணியில் செயற்படத் தீர்மானம் மொஹொமட் ஆஸிக் மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆறு தமிழ் உறுப்பினர்கள், சபையினுள் தனித்து ஓர் அணியாகச் செயற்பட தீர்மானித்துள்ளதாக, அறிவித்துள்ளனர். மத்திய மாகாண சபைக் கட்டடத்தில், நேற்று (04) அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். மத்திய மாகாண சபையின் அங்கத்தவரான ஆர். ராஜா ராம் இது பற்றித் தெரிவிக்கையில், “ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், எம்.ராம், எஸ்.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, உதயகுமார் மற்றும் திருமதி சரஸ்வதி சிவகுரு ஆகியோரே, தமிழ் மு…
-
- 0 replies
- 300 views
-
-
சவூதி அரேபிய இளவரசர்- ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் சவூதி அரேபிய இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இலங்கையின் வர்த்தக, சுற்றுலா துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாத…
-
- 0 replies
- 252 views
-
-
கிளிநொச்சியில் இரு கனரக வாகனங்கள் மோதி விபத்து : இருவர் வைத்தியசாலையில் அனுமதி கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துத் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறி ரக வாகனமும் வெளிக்கண்டல் …
-
- 0 replies
- 265 views
-
-
மைத்திரி ‘கொலை’ முயற்சி; பெண்ணுக்கு சிறை ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முயன்ற பெண்ணுக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஒத்திவைத்த சிறைத்தண்டனையை விதித்துள்ளார். வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட செல்வகுமார் வேலமணி (வயது 62) என்ற பெண்ணுக்கே மேற்கண்டவாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் மீது, 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தி படுகொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார் என்று, அந்தப் பெண்ணின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அக்குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே, அப்பெண்ணுக்கு மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதித்து தீர்…
-
- 0 replies
- 218 views
-
-
‘புகையிலைக்குத் தடை என்றால் மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன?’ “புகையிலைச் செய்கை தடை செய்யப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைகள் என்ற வகையில் என்னென்ன பயிர்ச் செய்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இல்லையேல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில், நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று (04) அறிக்கையொன்றை விடுத்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், யாழ்ப்பாணத்தில் சுமார் 400 ஆண்டு…
-
- 0 replies
- 305 views
-
-
‘மயிலிட்டியில் மீள்குடியேற 120 குடும்பங்கள் தயார்’ மயிலிட்டித்துறை பகுதியில் மீள்குடியேறுவதற்கு, 120 குடும்பங்கள் தயாராகவுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் நேற்று (04) தெரிவித்தார். கடந்த 27 ஆண்டுகளாக, இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் நிலப்பகுதி நேற்று முன்தினம் (03) விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட பகுதியான ஜே - 251 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, 27 ஆண்டுகளுக்கு முன் இடம்பெயர்ந்து, தற்காலிக இடைத்தங்கல் முகாம்கள், வெளியிடங்களில், 252 குடும்பங்கள், தற்காலிகமாகத் தங்கியுள்ளன. இந்நிலையில், இடைத்தங்கல் ம…
-
- 0 replies
- 177 views
-