Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘இனப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வு கைநழுவி போய்விட்டது’ “இனப்பிரச்சினைத் தீர்வுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சளைக்காது உழைத்து, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் உட்பட கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், வர்த்தக பிரமுகர்கள், யாழ்ப்பாண-மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் தலைவர்கள் ஆகியோர் அக்கறையுடன் செயற்பட்டு அயராது உழைத்து, 2004ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறந்த வாய்ப்பு கைநழுவிபோய்விட்டது. அதுவே இனப் பிரச்சினைக்கான இறுதியான சந்தர்ப்பமானதாகவும் இருந்ததென நான் கருதுகிறேன்” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள உடக அறிக்…

  2. புலிகள் செய்த தவறுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம் நல்க வேண்டும் வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், 'முடியாது' என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, 'வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்' என்று, எங்களிடத்தில் கூறவேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் அரசியல் இலாபம் கருதியும் அரசியல் வாதிகள் தங்களது எழுச்சி, இருப்பு மற்றும் சொந்த நலன்களை முன்நிறுத்தியும் செயற்பட்டதனாலேயே இந்த நாடு அழிவுப்பாதைக்கு சென்றது. அத்துடன் சுதந்திரத்…

  3. எதிர்காலத்தில் நாட்டிற்கு நல்லது செய்ய பிரபாகரன் போன்ற ஒருவரை தான் கொண்டு வர வேண்டும் என்றால் அதனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இதனை கூறியுள்ளார். மேலும், நான் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை யுத்தம் தொடர்பிலும், விடுதலைப்புலிகள் தொடர்பிலும் நன்றாக அறிந்தவன். அப்போது பல விகாரைகள் அமைப்பதற்கு விடுதலைப் புலிகளிடம் உதவிகளையும் பெற்றுள்ளேன். அவர்களிடம் இன ஒற்றுமைகள் சார்ந்த விடயங்களை பேசினேன், அப்போது எவரும் குறை கூறவில்லை. ஆனால் இன்று பல தமிழ் அரசியல்வாதிகள் என்னை இனவாதியாக சித்தரிக்கின்றனர். யுத்தத்தின் போது சுமார் 2000 தமிழ், சிங்கள மக்கள் கிழக்கில் இரு…

  4. 2020ம் ஆண்டிலிருந்து புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் இலங்கையில் புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முழுமையாக புகையிலை பயிர்ச் செய்கை தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிலை உற்பத்திகளினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/20694

  5. ஆர்ப்பாட்டம்... படப்பிடிப்பு - பேரின்பராஜா சபேஷ் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தங்களுடைய விடுதிப்பிரச்சினை மற்றும் வகுப்புத்தடைகள் போன்ற, 5 கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று (7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஆர்ப்பாட்டம்/46-198156

  6. ஞானசார தேரரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை? – ராஜித பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராஜித சேனாரட்னவை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் ஞானசார தேரருக்கு தொடர்பு இருப்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை ஞானசார தேரருடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரன் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் அவர் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கோரியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்…

  7. திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அந்த பிரதேசத்தில் தற்போது அமைதியின்மை நிலவுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிசார் உள்ளிட்ட எவரையும் குறித்த பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்க…

    • 6 replies
    • 2.3k views
  8. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம் கொழும்பு, கெப்பிட்டிப்பொல மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகிலுள்ள மின்மாற்றியில் வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தீ பரவியுள்ளது. குறித்த தீயை அணைப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு வாகனங்கள் இதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியின்-உத்தியோகபூர்வ-வாசஸ்தலத்திற்கு-அருகில்-வெடிப்பு-சம்பவம்/175-198155

  9. வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். உரும்பிராயில் இன்று திங்கட்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறீதரன் கலந்து கொண்டுள்ளார். இதன்போதே பாராளுமன்ற உறுப்பினரிடம் வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின…

    • 2 replies
    • 371 views
  10. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சர் ரவூவ் ஹக்கிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இன்னமும் இனவாதமானது அப்படியே தான் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனை தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அரசியலமைப்பு மாற்றத்தின் இது போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், …

    • 5 replies
    • 507 views
  11. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிறைவேற்ற இணங்கவில்லை – மங்களசமரவீர! ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனால் சிறிலங்கா தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையினை சிறிலங்கா நடைமுறைப்படுத்தும் என அரசாங்கம் தெரிவிக்கவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானம், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்து, கூட்டு எதிரணியினர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த பிரேரணைக்கு பதிலளித்து இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்திருந்தார். சிறிலங்கா அரசாங்க…

    • 0 replies
    • 324 views
  12. மகிந்தவுக்கு உதவிய பாதாளக் குழுக்களின் விவரங்கள் என்னிடம் – விரைவில் வெளியிடுவேன் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மிரட்டல் மகிந்த அணி­யி­னர் அதி­கம் துள்­ளி­னால் அவர்­க­ளுக்கு உத­வி­ய-­ மற்றும் கா­டைத்­த­னத்­தில் ஈடு­பட்ட பாதாள உல­கக் குழு­வி­ன­ரின் பெயர்ப் பட்­டி­யலை வெளி­யி­டப்­போ­வ­தாக ஐக்கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முஜி­புர் ரஹ்­மான் தெரி­வித்­துள்­ளார்.இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­த­தா­வது, மகிந்த ஆட்­சியை விட்­டுச் செல்­லும்­போது எங்­க­ளது தலை­யில் கட்­டி­விட்­டுச் சென்ற பிரச்­சி­னை­களை நாங்­கள் அனு­ப­வித்­துக்­கொண்டு இருக்­கின்­றோம். மீதொட்­ட­முல்ல குப்பை மேடு மற்­றும் சைட்­டம் உள்­ளிட்ட பல பிரச்­சி­னை­ களை அவர…

  13. மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முஸ்தீபு நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின்பால் மக்களின் கவனம் திரும்பியுள்ள தற்போதைய சூழலில் அரசாங்கம் திருட்டுத்தனமாக நாட்டு வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எனவே மத்தளன விமான நிலையத்தின் 60 சதவீத பங்கை இந்தியாவுக்கும் விற்பனை செய்யவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரமளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு அரசாங்கம் செய்யுமாயின் அது நாட்டுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலைய…

    • 2 replies
    • 457 views
  14. “பிரபாகரனை கண்டுபிடித்தவர்களுக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியவில்லை” (எம்.ஆா்.எம்.வஸீம்) பிரபாகரனை கண்டுபிடித்த அரசாங்கத்துக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி அனுமதித்தால் கைதுசெய்வோம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அத்துடன் ஞானசாரதேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை இதுதொடர்பாக எந்த சமாதான பேச்சுக்கும் இணங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/ar…

    • 1 reply
    • 295 views
  15. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் : செவிடன் காதில் ஊதிய சங்கு முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­ப­டும்­போது, காப்­பு­றுதி தொகையைப் பெறு­வ­தற்­காக உரி­மை­யா­ளர்­களே தீ வைத்துக் கொள்­கின்­றனர் என சட்­டத்தை நிலை­நாட்டும் அதி­கா­ரிகள் கூறு­கின்றனர். முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்­களை முறை­யிட்­ட­போதும் செவிடன் காதில் ஊதிய சங்­கு­போன்றே நிலைமை உள்­ளது என அமைச்சர் ரவுப் ஹக்கீம் சபையில் குற்­றஞ்­சாட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்ற செவ்­வாய்க்­கி­ழமை ஜெனீவா தீர்­மானம் குறித்த சபை ஒத்­து­ழைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­வத்தில் கலந்து கொண்ட உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவ…

  16. சிறிலங்காவின் தொடருந்து துறை அபிவிருத்திக்காக 318 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா சிறிலங்காவின் தொடருந்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டொலரை கடனாக வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. சிறிலங்கா நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், நிதியமைச்சின் செயலர் சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்கின்காவும் புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சிறிலங்காவின் தொடருந்து துறையை அ…

    • 0 replies
    • 317 views
  17. கட்டாரில் விமான நிலையம், வணிக நிறுவனங்களில் முண்டியடிக்கும் கூட்டம் – இலங்கையர்கள் அச்சம் கட்டாருடனான அனைத்துத் தொடர்புகளையும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாஹ்ரெய்ன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் துண்டித்துள்ளதால், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மீது எந்த உடனடிப் பாதிப்பும் ஏற்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நிலைமைகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால், அங்குள்ள சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்பு கொள்ளலாம். கட்டாரில் உள்ள, அந்த நாட்டுடன் உறவுகளை முறித்துக் கொண்ட நாடுகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர், நெருக்கடிகள…

    • 0 replies
    • 552 views
  18. ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம் ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நோர்வேயில் கடந்த மே மாதம் 28ஆம் நாள் நடந்த தமிழ்3 இன் சங்கமம் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேராசிரியர் இராமு மணிவண்ணன், நிகழ்வின் ஒரு அங்கமாக சிறப்புரையாற்றினார். அத்துடன் பார்வையாளர்களுடனான உரையாடலும் இடம்பெற்றது. தமிழகத்தின் அரசியல் சூழலும், அதன் வெளிப்பாடுகளும் ஈழத்தமிழ் அரசியலின் சமகாலமும் பற்றிய விடயங்கள் சார்ந்த தனது அவ…

    • 0 replies
    • 401 views
  19. ‘இராஜதந்திர அணுகுமுறையை தமிழரசுக் கட்சியினர் கற்க வேண்டும்’ “இராஜதந்திர அணுகுமுறையை, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைக் கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுவதற்கே மிக அக்கறையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்…

  20. ஆட்சியைக் கவிழ்க்குமாறு மகிந்தவை உசுப்பேற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் சிறிலங்காவில் ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளனர் என்றும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்து நாட்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, ரோக்கியோவில் இருந்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா அரசாங்கத்தின் அழிவுகரமான கொள்கைகளால், தம்மால் தப்பிப்பிழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்கள், குறிப்பாக வாகன ஏற்றுமதியா…

    • 0 replies
    • 180 views
  21. மாகாணச் சட்ட ஒழுங்கில் அக்கறையற்றுள்ளார் விக்கி வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாடல் வடக்கு மாகா­ணத்­தின் சட்ட ஒழுங்கு அமைச்­ச­ராக உள்ள முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், தனது அமைச்­சுப் பத­வி­யைப் பொறுப்­பேற்று 3 வரு­டங்­க­ளா­கி­யும் மாகா­ணச் சட்ட ஒழுங்கு தொடர்­பில் எவ்­வித முயற்­சி­க­ளை­யும் எடுக்­க­வில்லை. இவ்­வாறு குற்­றம் சாட்­டி­னார் வடக்கு மாகாண எதிர்க் கட்­சித்­த­லை­வர் சி.தவ­ராசா. வடக்கு மாகா­ணத்­தில் உள்ள கால்­ந­டை­யான மாடு­களை வெளிப் பிர­தே­சங்­க­ளுக்­குக் கொண்டு செல்ல அனு­ம­திக்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்தி மாகாண சபை உறுப்­பி­னர் லிங்கநாதன் பிரேரணை ஒன்றை நேற்றுச் சபையில் முன்மொழிந்தார். இந்தப…

  22. ’கறுப்பு ஆடுகளுக்கு மன்னிப்பே கிடையாது’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “எந்தச் சீருடை அணிந்திருந்தாலும் என்ன இலட்சினை அணிந்திருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. கறுப்பு ஆடுகளைத் தண்டித்து இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாப்போம்” என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியால், நாடாளுமன்றில் நேற்றுக் கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார். ஜெனீவா தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தொடர்ந்து உரையாற்றிய மங்கள, “இலங்கையின் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடும் எந்தவோர் ஒப்பந்தத்திலும் நாங்கள்…

  23. முன்னாள் போராளிகளுக்கு கட்சியில் இணைய அழைப்பு விடு­த­லைப் புலி­க­ளிள் அமைப்­பில் போரா­ளி­யா­க­வி­ருந்த அனைவரும் ஆயுத கலா­சா­ர­மற்ற ஜன நாய­கப் போரா­ளி­க­ளாக மீண்­டும் ஒரு குடை­யின்­கீழ் அணி­தி­ரண்டு மக்­க­ளுக்கு சேவை செய்­யும் ஜன­நா­ய­கப் பயணத்­தில் பங்கு கொள்­ளுங்­கள். இவ்­வாறு ஜன­நா­ய­கப் போராளிகள் கட்சி அறை­ கூ­வல் விடுத்­துள்­ளது. ஜன­நா­ய­கப் போரா­ளி­க­ளாக ஒரு வேண்­டு­கோளை முன்வைக்கின்­றோம் எனும் தலைப்­பில் கிழக்கு மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் வழங்­கப்­பட்­டுள்ள துண்­டுப் பிர­சும் ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. “விடு­த­லைப்­பு­லி­க­ளின் அர­சி­யல் பிரி­வான ஜன­நா­யக போரா­ளி­க­ளாக உங்­கள் முன் வந்­து­நிற்­க…

    • 2 replies
    • 666 views
  24. சக்தி டிவி செய்திகள் 8PM (06/06/2017)

  25. ஐங்கரநேசன், குருகுலராசாவை பதவி நீக்குங்கள்! பரிந்துரைத்தது முதலமைச்சர் நியமித்த விசாரணைக் குழு வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. அனேகமாக நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.