ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
நந்திக்கடலில் நேற்று மட்டும் 2,000 கிலோ மீன்கள் வலையில் தொழிலாளர்கள் மகிழ்ச்சி முல்லைத்தீவு நந்திக்கடலில் நேற்று 2 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் தொழிலாளர்களால் பிடிக்கப்பட்டன என்று மீனவர்கள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தால் நீரில் உப்புத்தன்மை அதிகாரித்தமையால் நந்திக்கடல் பகுதியில் கடந்த வாரம் பல இலட்சக் கணக்கான மீன்கள் உயிரிழந்து கரையொதிங்கின. தொடர்ந்து வெப்பநிலை அதிகரிப்பதால் நந்திக்கடலில் மீன்கள் உயிரிழக்கக் கூடும் என்ற அச்சத்தில் மீனவர்கள் இருந்தனர். “நந்திக்கடலில் நேற்று மட்டும் 2 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான மீன் தொழிலாளர்க…
-
- 0 replies
- 279 views
-
-
யாழ்ப்பாண வான்பரப்பில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாற்றம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ் வானில் தோன்றியுள்ளதாகவும், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கடும் காற்றுடனான மழை பெய்துள்ளது. நேற்று பரவிய சுனாமி வந்தியை தொடர்ந்து இது தொடர்புப்பட்டவை என பலர் அச்சமடைந்துள்ளனர். எப்படியிருப்பினும் இது அச்சமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் இதனை தட்டு மேகங்கள் (குடஞுடூஞூ ஞிடூணிதஞீண்) என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.thinakkural.lk/article.php?local/ferorwbzzp2817182e6c…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான இடைக்காலத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது. இந்நிலையில் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லி அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்கமைய முதன்முறையாக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து இவ்விரு அமைச்சர்கள், கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து பிரத்தியேகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்…
-
- 0 replies
- 216 views
-
-
வடமாகாணசபை விவகாரம் தொடர்பில் முதல்வரின் நகர்வு சரியானது எனத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன், வடமாகாணசபை தொடர்பில் பேச எனக்கு தார்மீக உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் மிகவும் பிரபல மாகாண சபைகளானவை, வட மாகாணசபையும் கிழக்கு மாகாணசபையுமே ஆகும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு கோரி போராடியது, தமிழர்களாகும். அகிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் இரண்டையும் முன்னெடுத்துப் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்தவர்கள், தமிழர்கள் ஆகும். ஆகவே, அதிகாரப்பகிர்வின் ஒரு கட்ட…
-
- 0 replies
- 343 views
-
-
12ஆம் திகதி பொங்கல் , 13 இராசி இல்லை. 14ஆம் திகதி நடாத்த முடிவு. ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய தடை வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்ற சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து பரிமாற்றத்திற்காக வடமாகாண சபையில் எதிர்வரும் 14ஆம் திகதி விசேட அமர்வு நடைபெறவுள்ளது. நேரடி ஒளிபரப்புக்கு தடை. குறித்த அமர்வில் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தடை விதித்துள்ளார். அத்துடன் அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை வைத்துக்கொண்டு அவர்களை குற்றவாளிகள் எனும் விதமாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன என சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு தடை விதிப்…
-
- 0 replies
- 265 views
-
-
சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாறுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீன் பிடியை அதிகரிக்கும் நோக்கில் பருத்தித்துறையிலும், பேசாலையிலும் இரண்டு துறைமுகங்கள் அமைக்கவுள்ளோம். இதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க முன்வந்துள்ளது. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கின் மீன் உற்பத்தி 40 வீதமாக இருந்தது. அதன் பின்னர் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 4 வீதமாக வீழ்ச்சி கண்டது. தற்போது 12 வீதமாக உள்ளபோதிலும் அது திருப்திகரமானதாக அமையவில்லை. அத்துடன் வடக்கு மீனவர்கள் இன்றும் 30 வருடங்களுக்கு முந்திய பாரம்…
-
- 0 replies
- 221 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிரான வேலைகளையே செய்துவருவதால் அதற்கான மாற்றுத்தலைமையை ஏற்படுத்தும் முயற்சியை முதல்வர் விக்கியும் தமிழ் மக்கள் பேரவையும் அதன் கோரிக்கைகளை முழுமையாக ஏற்கும் ஈபிஆர்எல்எப் உம் அதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தற்போது தமிழரசு கட்சியும் ரெலோவும் ஒன்றாக இணைந்துவிட்டன. புளொட் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் காட்டிக்கொள்கின்றது. எனவேதான் உறுதியானவர்களை உண்மைக்காக செயற்படவேண்டும் என்பவர்களை, உறுதியான முடிவை எடுக்கவேண்டும் எனக்கேட்கின்றோம். …
-
- 0 replies
- 216 views
-
-
முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைக்க வேண்டாம் ; பொறுமையை சோதிக்காதீர்கள்! முஸ்லிம்களின் பொறுமையை இனியும் சோதிக்காதீர்கள், முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள். நாங்கள் இவ்வளவு நாளும் பொறுத்தது போதாதா? எங்களைத் தொடர்ந்தும் சீண்டிக்கொண்டு இருப்பவர்களுக்கெதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?. இவ்வாறு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெகுண்டெழுந்தார். ஜெனீவா மனித உரிமைப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதமொன்றில் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது, அல்லாஹ்வையும், முஸ்லிம்களின் இறைத்தூதரையும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறையையும் தொடர்ந்தும் கேவலப்படுத்தி பழி சொல்லி வரும் …
-
- 8 replies
- 999 views
-
-
தீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு! ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகம் இலங்கை அரசின் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. பிரதியில் நாட்டுக்கு எதிராக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னரே அதனைக் கையளிப்பதா இல்லை தொடர்ந்து தடுத்து வைப்பதா என்பதை தீர்மானிக்கப்படும் என்று யாழ் சுங்கப் பிரிவு அதிகாரி கூறியுள்ளார். நில ஆக்கிரமிப்பின் அரசியல் குறித்தும், வரலாற்றில் அபகரிக்கப்பட்டு அடையாள அழிப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடும் இந்த நூல், 2009இற்குப் பின்னர் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட அரச, இராணுவ நில ஆக்கிரமிப்பு…
-
- 11 replies
- 967 views
- 1 follower
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (07/06/2017)
-
- 0 replies
- 334 views
-
-
ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அழைப்பு ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாணயாகே தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கடந்த மாதம் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு லைகா நிறுவனத்தின் தலைவரும், ரஜினியின் `2.0' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தவருமான சுபாஷ்கரன் அழைப்பு விடுத்திருந…
-
- 0 replies
- 327 views
-
-
இலங்கையும் சீனாவின் இராணுவத்தளமாக மாறக்கூடும்: அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் எச்சரிக்கை உலகம் முழுவதும் சீனா இராணுவத் தளங்களை ஸ்தாபித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளத்திற்கு சாத்தியமான இடமாக பாகிஸ்தான் அமையக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் இராணுவத் தளமொன்றை அமைத்த பின்னர், உலகம் முழுவதும் இராணுவத் தளங்களை சீனா விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, பங்களாதேஷ், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவின் இராணுவத்…
-
- 0 replies
- 328 views
-
-
‘இனப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வு கைநழுவி போய்விட்டது’ “இனப்பிரச்சினைத் தீர்வுக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சளைக்காது உழைத்து, மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்தினர் உட்பட கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், வர்த்தக பிரமுகர்கள், யாழ்ப்பாண-மட்டக்களப்பு பல்கலைகழக மாணவர் தலைவர்கள் ஆகியோர் அக்கறையுடன் செயற்பட்டு அயராது உழைத்து, 2004ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறந்த வாய்ப்பு கைநழுவிபோய்விட்டது. அதுவே இனப் பிரச்சினைக்கான இறுதியான சந்தர்ப்பமானதாகவும் இருந்ததென நான் கருதுகிறேன்” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள உடக அறிக்…
-
- 0 replies
- 357 views
-
-
புலிகள் செய்த தவறுக்கு கூட்டமைப்பு பிராயச்சித்தம் நல்க வேண்டும் வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தரவேண்டும். இல்லையென்றால், 'முடியாது' என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, 'வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்' என்று, எங்களிடத்தில் கூறவேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் அரசியல் இலாபம் கருதியும் அரசியல் வாதிகள் தங்களது எழுச்சி, இருப்பு மற்றும் சொந்த நலன்களை முன்நிறுத்தியும் செயற்பட்டதனாலேயே இந்த நாடு அழிவுப்பாதைக்கு சென்றது. அத்துடன் சுதந்திரத்…
-
- 0 replies
- 355 views
-
-
எதிர்காலத்தில் நாட்டிற்கு நல்லது செய்ய பிரபாகரன் போன்ற ஒருவரை தான் கொண்டு வர வேண்டும் என்றால் அதனைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என அம்பிட்டிய சுமனரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இதனை கூறியுள்ளார். மேலும், நான் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை யுத்தம் தொடர்பிலும், விடுதலைப்புலிகள் தொடர்பிலும் நன்றாக அறிந்தவன். அப்போது பல விகாரைகள் அமைப்பதற்கு விடுதலைப் புலிகளிடம் உதவிகளையும் பெற்றுள்ளேன். அவர்களிடம் இன ஒற்றுமைகள் சார்ந்த விடயங்களை பேசினேன், அப்போது எவரும் குறை கூறவில்லை. ஆனால் இன்று பல தமிழ் அரசியல்வாதிகள் என்னை இனவாதியாக சித்தரிக்கின்றனர். யுத்தத்தின் போது சுமார் 2000 தமிழ், சிங்கள மக்கள் கிழக்கில் இரு…
-
- 2 replies
- 423 views
-
-
2020ம் ஆண்டிலிருந்து புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் இலங்கையில் புகையிலைச் செய்கை தடை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முழுமையாக புகையிலை பயிர்ச் செய்கை தடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிலை உற்பத்திகளினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை தடுக்கும் நோக்கில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/20694
-
- 0 replies
- 471 views
-
-
ஆர்ப்பாட்டம்... படப்பிடிப்பு - பேரின்பராஜா சபேஷ் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தங்களுடைய விடுதிப்பிரச்சினை மற்றும் வகுப்புத்தடைகள் போன்ற, 5 கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று (7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஆர்ப்பாட்டம்/46-198156
-
- 0 replies
- 393 views
-
-
ஞானசார தேரரை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை? – ராஜித பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராஜித சேனாரட்னவை ஏன் காவல்துறையினர் கைது செய்யவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் ஞானசார தேரருக்கு தொடர்பு இருப்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை ஞானசார தேரருடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரன் கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் அவர் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கோரியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்…
-
- 0 replies
- 397 views
-
-
திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அந்த பிரதேசத்தில் தற்போது அமைதியின்மை நிலவுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிசார் உள்ளிட்ட எவரையும் குறித்த பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்க…
-
- 6 replies
- 2.3k views
-
-
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம் கொழும்பு, கெப்பிட்டிப்பொல மாவத்தையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு அருகிலுள்ள மின்மாற்றியில் வெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தீ பரவியுள்ளது. குறித்த தீயை அணைப்பதற்கு, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு வாகனங்கள் இதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக, தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியின்-உத்தியோகபூர்வ-வாசஸ்தலத்திற்கு-அருகில்-வெடிப்பு-சம்பவம்/175-198155
-
- 0 replies
- 208 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ். உரும்பிராயில் இன்று திங்கட்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறீதரன் கலந்து கொண்டுள்ளார். இதன்போதே பாராளுமன்ற உறுப்பினரிடம் வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின…
-
- 2 replies
- 372 views
-
-
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இனவாதச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அமைச்சர் ரவூவ் ஹக்கிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் இன்னமும் இனவாதமானது அப்படியே தான் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனை தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அரசியலமைப்பு மாற்றத்தின் இது போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், …
-
- 5 replies
- 508 views
-
-
மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை நிறைவேற்ற இணங்கவில்லை – மங்களசமரவீர! ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைனால் சிறிலங்கா தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட அறிக்கையினை சிறிலங்கா நடைமுறைப்படுத்தும் என அரசாங்கம் தெரிவிக்கவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜெனிவா தீர்மானம், நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் என்று எச்சரித்து, கூட்டு எதிரணியினர் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த பிரேரணைக்கு பதிலளித்து இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்திருந்தார். சிறிலங்கா அரசாங்க…
-
- 0 replies
- 325 views
-
-
மகிந்தவுக்கு உதவிய பாதாளக் குழுக்களின் விவரங்கள் என்னிடம் – விரைவில் வெளியிடுவேன் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மிரட்டல் மகிந்த அணியினர் அதிகம் துள்ளினால் அவர்களுக்கு உதவிய- மற்றும் காடைத்தனத்தில் ஈடுபட்ட பாதாள உலகக் குழுவினரின் பெயர்ப் பட்டியலை வெளியிடப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, மகிந்த ஆட்சியை விட்டுச் செல்லும்போது எங்களது தலையில் கட்டிவிட்டுச் சென்ற பிரச்சினைகளை நாங்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். மீதொட்டமுல்ல குப்பை மேடு மற்றும் சைட்டம் உள்ளிட்ட பல பிரச்சினை களை அவர…
-
- 0 replies
- 217 views
-
-
மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முஸ்தீபு நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தின்பால் மக்களின் கவனம் திரும்பியுள்ள தற்போதைய சூழலில் அரசாங்கம் திருட்டுத்தனமாக நாட்டு வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எனவே மத்தளன விமான நிலையத்தின் 60 சதவீத பங்கை இந்தியாவுக்கும் விற்பனை செய்யவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரமளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு அரசாங்கம் செய்யுமாயின் அது நாட்டுக்குச் செய்யும் பாரிய துரோகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலைய…
-
- 2 replies
- 458 views
-