ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
இந்திய கடற்படை நிகழ்வில் இலங்கைத் தளபதியால் சர்ச்சை இந்தியக் கடற்படை அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன சிறப்பு அதிதியாகப் பங்கேற்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று, இந்தியச் செய்தி தெரிவிக்கிறது. கேரள மாநிலம் எழிமலவில் உள்ள இந்திய கடற்படை அக்கடமியில் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்விலேயே இலங்கை கடற்படை தளபதி, சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு, வெளிநாட்டு படை அ…
-
- 1 reply
- 230 views
-
-
’இலக்கத்தகடுகளை அகற்றியமை தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது’ -எஸ்.நிதர்ஷன் வலி. வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகடுகளை, இராணுவத்தினர் அகற்றி அவற்றை கொண்டு சென்றமை தொடர்பில், எமக்கு எதுவும் தெரியாது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பு பார்த்துக்கொள்ளும்” என, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை வடக்கு குரு வீதி என்ற இடத்தில் உள்ள பொதுக் கிணறு சுத்தப்படுத்தப்பட்டபோது அதற்கு இருந்து, 2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் சந்தைக்கு விற்பனைக்கு வந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மீட்கப்பட்டன. …
-
- 0 replies
- 268 views
-
-
காணாமற்போனோர் விவகாரம்: ‘கோட்டா ஊடாக அறியலாம்’ “காணாமல்போனோர் தொடர்பான விவரங்களை வழங்க, தற்போதைய அரசாங்கத்தால் முடியாது. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால், அவர்கள் தொடர்பான விவரங்களை வழங்க முடியும். அதனால், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைத்து, கோட்டாபய ஊடாக, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய முடியும்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் விடயங்கள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் அவர், தொடர்ந்து கூறியுள்ளதாவது, “தமிழர் தாயகப் பகுதியில், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காண…
-
- 0 replies
- 320 views
-
-
யாழ். நூலகத்தை எரித்தோரை தண்டிக்கத் தவறிவிட்டது அரசு வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் சாடல் “யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் நேரடிச் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட போதும் சம்பவத்துடன் தொடர் புடையவர்களைத் தண்டிக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்” இவ்வாறு குற்றஞ்சாட்டினார் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கத்தின் ஏற் பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகம் எரிப்பு நினைவுதினம் நேற்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண எத…
-
- 1 reply
- 225 views
-
-
மலசலகூடத்திற்குள் உணவுப்பொருள் : மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு நகரில் மனித நுகர்வுக்கு உதவாத உணவுகளை மலசலகூடத்திற்குள் வைத்து பராமரித்து பாதுகாத்து தயாரித்து விற்பனை செய்து வந்த உணவகம் ஒன்று செவ்வாய்க்கிழமை 30.05.2017 மாலை சீல் வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். தகவல் ஒன்றை அடுத்து உடனடியாக 10 நிமிட இடைவெளியில் சம்பந்தப்பட்ட உணவகம் சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவுகள் பத்திரப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். அமுதமாலன் தலைமையிலான பொதுச…
-
- 0 replies
- 152 views
-
-
அழிந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபா : இறந்தவருக்காக ஒரு இலட்சம் - ஜனாதிபதி (ஆர்.யசி) கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ள மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு இறந்தஒவ்வொரு நபருக்குமான நஷ்டஈடாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கவும் முற்றாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 25 இலட் சம் என்ற அடிப்படையில் வழங்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மண்சரிவு பாதிப்பில் இருக்கும் நபர்களுக்கு மாற்று இடங்களை வழங்கி குறித்த பகுதிகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளை எச்சரிக்கை வலயமாக பிரகடனப்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 178 views
-
-
இலங்கையின் 100 கோடி டாலர் விமான நிலையம் விமானங்களுக்கு காத்துக் கிடக்கிறது ========================================== இலங்கையில் தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்டத்தில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையம் விமானப் போக்குவரத்து எதுவும் இன்றி காய்ந்துப்போய்க் கிடக்கிறது. ஒரு சர்வதேச விமான நிலையமான அதில் வாரத்துக்கு 50 முதல் 75 பயணிகளே வந்து போகிறார்களாம். ஒரு விமான சேவை மாத்திரந்தான் அங்கு வந்து போகிறதாம். 100 கோடி டாலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்னுமொரு பாதகமாக பார்க்கப்படுகின்றது. இது குறித்த பிபிசியின் காணொளி.
-
- 1 reply
- 426 views
-
-
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் இன்று(31.5.2017) மீன்பிடிக்க சென்றவரை முதலை கடித்து குதறியுள்ளது. மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்ற துறைநீலாவணை 7ம் வட்டாரத்தை சேர்ந்த கந்தப்பன் சிவராசா(வயது 49)என்பரையே இவ்வாறு கடித்து குதறியுள்ளது.இச்சம்பவம் மாலை 6.45 மணியளவில் மட்டக்களப்பு வாவியில் இடம்பெற்றுள்ளது. வழமையாக மீன்பிடிக்க சென்ற சிவராசா என்பவர் தோணியிலிருந்து மீன்பிடித்து கொண்டிருந்தார். இவ்வேளையில் பின்னால் வந்து தோணியை கடித்துள்ளது.இதனால் தோணி இரண்டாக பிளந்துள்ளது. தோணியில் இருந்தவர் வாவிக்குள் வீழ்ந்துள்ளார்.இதனால் முதலை விருப்பத்துக்கு ஏற்றவகையில் கடித்து குதறியுள்ளது. இதனால் மீனவர் கூக்குரல் போட்டுள்ளார்.இதனால் வாவியில் …
-
- 0 replies
- 443 views
-
-
அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சி:- அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க கடேட் பிரிவைச் சேர்ந்த 33 படைவீரர்கள் இவ்வாறு இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுத பயன்பாடு, உடல் பயிற்சி மற்றும் களப் பயிற்சி போன்றன இந்த அமெரிக்க கடேட் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 7ம் திகதி வரையில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ அகடமி, இராணுவத் தலைமையகம், இராணுவ எரிகணை தாக்குதல் பயிற்சிப் பாடசாலை ஆகியன உள்ளிட்ட சில முக்கிய இடங்களுக்கும் அமெரிக்க கெடட் வீரர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். (கோப்பு படம்) …
-
- 0 replies
- 473 views
-
-
யாழ்.மாவட்டத்தில் இருந்து குடிநீரை பெற்று போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைகளை யாழில் அமைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்றைய தினம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.கிழக்கு பிரதேச சபைக் குட்பட்ட சிறுப்பிட்டி, நீர்வேலி மேற்கு பகுதியில் குழாய்க் கிணறு மூலம் நீரை பெற்று குடிநீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அத்தொழிற்சாலைக்கான அனுமதியை வலி.கிழக்கு பிரதேச சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. குழாய்க் கிணறு மூலம் தண்ணீர் பெறப்படுகிறது என்றும் அத் தொழிற்சாலையின் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்கு செல்வதாக தெரிவித்து அப்பகுதியில் குறித்த தொழிற்சாலையை ஆ…
-
- 4 replies
- 909 views
-
-
இரணைமடுவுக்கு கீழான சட்டவிரோத வயல்விதைப்பு அழிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான தீர்மானிக்கப்பட்ட அளவை விட மேலதிகமாக சட்டவிரோதமாக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இன்று 01-06-2017 அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. இரணைமடுகுளத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கு 890 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இரணைமடு குளத்திள் கீழ் உள்ள 22 கமக்கார அமைப்புகளுக்கும் வயல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக 280 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இரணைமடுகுளத்தில் பத்து அடிக்கு குறைவான நீர் இருப்பதன் காரணமாக தீர்மானி…
-
- 1 reply
- 563 views
-
-
கொலைக்குற்றங்களில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 5 பேருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளார். மூன்று வேறு வேறு கொலைக் குற்றச்சாட்டு வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஐந்து பேருக்கு வவனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளார். இந்த மரண தண்டனை தீர்ப்புக்கள் வியாழக்கிழமை ஜுன் மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றவாளிகளாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பெண்ணாவார்.. மூன்றுமுறிப்பு வழக்கு வவுனியா மூன்றுமுறிப்பைச் சேர்ந்த ஐஸ்பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பிரபல வர்த்தகராகிய நிலமே ஆராச்சிகே தர்மகீர்…
-
- 0 replies
- 473 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (01/06/2017)
-
- 0 replies
- 265 views
-
-
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் முறைப்பாடு இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. கொழும்பு தெவட்டஹவா பள்ளிவாசலில் இன்று மாலை அசாத் சாலியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா ஆகிய 9 நாட்டு பிரதிநிதிகளிடமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ காணொளிகள் மூலம் முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு எடுத்துச்சொல்லப்பட்டதுடன்…
-
- 0 replies
- 243 views
-
-
1 காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் தமது பிள்ளைகளை இராணுவமே கடத்தி சென்றது என 18 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்துள் ளமை கண்டனத்துக்குரியது என ஈ.பி.ஆர். எல்.எப் இன் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பவர் ஆளுநராக இருக்க தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த விசாரணையும் நடத்த முடியாது. தமிழீழ விடுதலைப்புலிகள் …
-
- 0 replies
- 383 views
-
-
7 யாழ். கல்லுண்டாய் வெளிக்கு அண்மையில் உள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தோல் மற்றும் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அப் பகுதியில் உள்ள கால்நடைகளின் இறப்புக்கள் திடீரென அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள குடிமனைகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அண்மைக்காலமாக தோல் நோய்கள் தொடர்ச்சியாக தென்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிர ங்கு போன்ற நோய் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அத்துடன் சுவாசம் சம்பந்தமான ஒருவித நோய்த்தொற்றும் பெரியவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்த்தாக்கத்தால் தொண்டை, வாய் என்பன பாதிக்கப…
-
- 0 replies
- 449 views
-
-
கடமைகளை சரியாக செய்தால் அரசியல் தலையீடுகள் ஒரு பொருட்டல்ல -கிளிநொச்சியின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் : கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு புதிதாக இன்று 01-06-2017 வலயக் கல்விப் பணிப்பாளராக திருஞானம் ஜோன் குயின்ரஸ் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மடு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் தற்போது கிளிநொச்சியின் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். 1988 ஆம் ஆண்டு உதவி ஆசிரியராக கல்வித்துறைக்குள் பிரவேசித்த அவர் பின்னர் பலாலி ஆசிரியர் கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும், கலைப் பட்டதாரியாகவும் காணப்பட்டார். தொடர்ந்து பண்பாட்டியல், தமிழ், மற்றும் கல்வி ஆகிய மூன்று துறைகளில் முதுமானி பட்…
-
- 0 replies
- 270 views
-
-
அவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய விமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதி அனர்த்த நிவாரணப்பொருட்களே வந்தடைந்துள்ளதாகவும் குறித்த நிவாரணப்பொதியில் மீட்புப் பணிக்கு பயன்படுத்தக்கூடிய படகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/20530
-
- 1 reply
- 325 views
-
-
இந்துக் கோவிலுக்கு ஒரு சட்டம் விகாரைக்கு வேறொரு சட்டமா? வடக்கு எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி “பிள்ளையார் ஆலயத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் பிரதேச சபை சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தயங்குவது ஏன்? பிள்ளையார் கோவிலுக்கு ஒரு சட்டம் பௌத்த விகாரைக்கு ஒரு சட்டமா? ” இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதன் போது நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் தெரிவுமுறை மற்றும் நாவற்குழி வ…
-
- 2 replies
- 439 views
-
-
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென க…
-
- 8 replies
- 438 views
-
-
விபத்திற்குள்ளான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை வழங்கியது வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான இலங்கை விமானப்படைக்குச்சொந்தமான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்கள் இந்திய விமானப்படை மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது. பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற இலங்கை விமானப்படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் அண்மையில் விபத்திற்குள்ளான நிலையில் அதில் பயணித்த 11 பேரும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருந்தமை…
-
- 1 reply
- 208 views
-
-
போதுமான நிவாரணம் வழங்கப்படுவதில்லை பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்; சுகாதார நிலைமையில் சீர்கேடு என்றும் குற்றச்சாட்டு (இரத்தினபுரியிலிருந்து ஆர்.யசி) வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் எமக்கு உரிய முறையில் நிவாரணங்கள் கிடைக்கப்பெறுவதில்லை. விசேடமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெறுவதில் பெரும் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். கடந்த வாரம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்குண்டு பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரத்தின…
-
- 0 replies
- 198 views
-
-
A சீனாவின் மூன்று போர்க்கப்பல்களும் சிறிலங்காவை வந்தடைந்தன சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கும், உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டும் சீன கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வரத் திட்டமிட்டிருந்த இந்தப் போர்க் கப்பல்கள், அனர்த்தங்களை அடுத்து, உதவிப் பயணமாக கொழும்பு வந்துள்ளன. இந்தக் கப்பல்களில் 10 படகுகளில் தலா 5 பேர் கொண்ட மருத்துவக் குழுக்கள் வந்துள்ளன. இந்த மருத்துவக் குழுக்கள் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகளில் ஈடுபடவுள்ளன. சாங் சுன், ஜிங் சோ, சாவோ ஹூ ஆகிய போ…
-
- 0 replies
- 325 views
-
-
வெள்ளம் வடிந்தது உயிரிழப்புகள் 203 96 பேர் மாயம் ஒன்றரை இலட்சம் குடும் பங்கள் பாதிப்பு 9 ஆயிரம் வீடுகள் சேதம் (எம்.எப்.எம். பஸீர், ஆர்.யஷி) நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட வெள் ளம் மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து…
-
- 0 replies
- 345 views
-
-
ஞானசாரரை கொல்ல முயற்சி பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை படுகொலை செய்வதற்கு முயற்சிப்பதாக, குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு, நேற்று (31) அறிக்கையிட்டது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் சிலர், ஞானசாரதேரரை படுகொலை செய்துவிட்டு, நாட்டில் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பதாக, முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் திலன்ன குமார வித்தானகே, பொலிஸ்மா அதிபரிடம் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய, அந்த விசாரணை குற்றத…
-
- 0 replies
- 294 views
-