ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
கூட்டமைப்பைச் சந்தித்தார் மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு நேற்று (11) மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இன்று (12) சந்தித்தார். இதில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைருமான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். - See more at: http://www.tamilmirror.lk/196523/க-ட-டம-ப-ப-ச-சந-த-த-த-ர-ம-ட-#sthash.orhCjqwu.dpuf
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
சக்தி டிவி செய்திகள் 13th May 2017, 8PM
-
- 0 replies
- 185 views
-
-
சீனாவை சென்றடைந்தார் ரணில் 'one Belt, One Road' மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவருடைய மனைவி பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்கவுடன் சற்று முன்னர் சீனாவைச் சென்றடைந்தார். - See more at: http://www.tamilmirror.lk/196583/ச-ன-வ-ச-ன-றட-ந-த-ர-ரண-ல-#sthash.gF3SoyTR.dpuf
-
- 2 replies
- 459 views
-
-
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும்! - நரேந்திர மோடி FRIDAY 2017-05-12 19:00] இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14 வது சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 2500 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும் புத்த பகவானின் போதனைகள் 21ம் நூற்றாண்டிலும் செல்லுபடியாகும் என்றும் அதன் பெறுமதியை எதிர்காலத்தில…
-
- 15 replies
- 614 views
-
-
சிறந்த பொருளாதாரப் பலமும் , உயர்வான கல்வி சிந்தனையும் கொண்ட மக்களை அதிகளவு அங்கத்துவப்படுத்தும் சமூகமே ஒரு ஆரோக்கியமுள்ள சமூகமாக அங்கீகரிக்கப்படுகிறது. பொருளாதாரப் பலவீனம் கொண்ட சமூகமானது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள, எப்படிப் பிறர் கையை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ? அப்படியே கல்வித் தரம் குறைந்த சமூகமும் அறிவுப் பசிக்காய் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும். இத்தகையதொரு சூழ்நிலையின் கைதியாவதைப்போன்றகொடுமை வேறொன்றும் இல்லை. அத்தகையதொரு சூழ்நிலை தமக்கு வந்துவிடக் கூடாது என்றே எல்லோரும் விரும்புவர். இருப்பினும், தெரிந்தும் தெரியாமலே இலங்கைத் தமிழ் சமூகமானது அத்தகையதொரு சூழ்நிலைக்குள்பிரவேசிக்கின்றதா? அல்லது அத்தகையதொரு சூழ்நிலையை நோக்கி நகர்த்தப்படுகி…
-
- 3 replies
- 1.9k views
-
-
நரேந்திர மோடி எங்களில் ஒருவர் : அமைச்சர் விஜேதாஸ பெருமிதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்களில் ஒருவர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தமை எமக்கு கிடைத்த பெருமையாகும் என்று புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமான சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இங்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நிகழ்வை இலங்கையில் நடத்தக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.…
-
- 1 reply
- 591 views
-
-
நீர் விரயமாவதை தடுக்க நிபுணர்களுடன் பேசினோம்: சி.வி எஸ்.நிதர்ஷன் நீர் விரயமாவதைத் தடுப்பது குறித்,து அவுஸ்திரேலியா நாட்டின் நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச நீர் மையத்திலிருந்து அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கைலி மிலிகன், பாப்லோ போரன்ஸ் என்ற இரு செயற்றிட்ட அலுவலர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை, முதலமைச்சர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே, முதலமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றிருந்த வட மாகாண சபை உ…
-
- 0 replies
- 403 views
-
-
தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்கள், எந்தவொரு தரக்கட்டுபாடு அற்ற விதத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவ்வாறான விளையாட்டுப்பொருட்களால் புற்றுறோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பல…
-
- 0 replies
- 355 views
-
-
வடக்கில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தமிழர் தரப்பு தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் 6000 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. குறித்த 6000 வீடுகளும் ஈபிடிபி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோரின் வேண்டுகோளுக்கமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 6000 வீட்டுத் திட்டம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், எமது மாகாண மக்களுடன் கலந்துரையாடாமல் இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது எமது மாகாண மக்களை புறக்கணிக்கும் செயல் என சுட்டிக் காட்டினேன். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும்…
-
- 0 replies
- 412 views
-
-
கிராமங்கள், பல்கலைக்கழகம் அமைப்பதற்கு உதவியளியுங்கள் ; இந்தியப்பிரதமரிடம் இ.தொ.கா.கோரிக்கை மலையகத்தில் வாழும் மக்களின் இருப்பை நிரந்தரமாக்குவதற்கு மக்கள் கிராமங்கள் உருவாக்கப்படுவதோடு எதிர்கால சந்ததியினருக்காக பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கும் எமக்கு உதவியளியுங்கள் என இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் கோரிக்கை விடுத்தது. குறித்த கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக உறுதியளித்த இந்தியப்பிரதமர் அவ்விடயங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை இந்திய தூதுவர் ஊடாக தனக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 272 views
-
-
இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெறுவது உறுதி ; ஹர்ஷ டி சில்வா இலங்கைக்கு ஜீ. எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெறும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஐரோப்பாவின் 28 நாடுகளுக்கு இப்போது உள்ள சலுகை மூலம் 6600 உற்பத்திகளை எந்தவித தீர்வை வரியும் இல்லாது ஏற்றுமதி செய்ய முடியும். நல்லாட்சி அரசாங்கம் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவெனவும் அவர் குற…
-
- 0 replies
- 161 views
-
-
தேசிய மட்டத்திற்குச் சென்ற கரப்பந்தாட்ட அணியை மாகாணத்திற்கு அனுப்பாத பாடசாலை பெற்றோர்கள் கவலை:- கடந்த வருடம் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கரப்பாந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண மட்டத்தில் வெற்றிப்பெற்று தேசிய மட்டத்திற்குச்சென்ற கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலய அணியை இம்முறை மாகாண மட்ட போட்டிகளுக்களுக்கே அனுப்பாது விட்டமை பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் கரப்பாந்தாட்ட போட்டியில் கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. கடந்த வருடம் இடம்பெற்…
-
- 0 replies
- 250 views
-
-
சமஷ்டித் தீர்வுக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்! - மோடியிடம் கோரிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வொன்றை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்து பேச்சு நடத்தினர். குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக, கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்கள் எ…
-
- 1 reply
- 476 views
-
-
தமிழில் உரையாற்றிய மோடி : மேலும் 10 ஆயிரம் வீடுகள் !! . மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். இதனால், அரங்கத்தில் அவருக்கு பாரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரணடுயிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19932 '…
-
- 9 replies
- 963 views
-
-
இரண்டாம் நாள் நினைவேந்தல் கடைப்பிடிப்பு வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு அருகில், இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்களின் நினைவிடத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. http://uthayandaily.com/story/2614.html
-
- 0 replies
- 195 views
-
-
முள்ளிவாய்க்காலில் இன்னும் இறுதிப்போர் அடையாளங்கள் இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத துப் பாக்கி ரவைகள் உக்கிய நிலையில் இப் போதும் காணப்படுகின்றன. முள்ளியவாய்க்கால் கிழக்குப் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ரவைகள் பல வெடிக்காத நிலையில் உக்கிக் காணப்படுகின்றன என்று கூறப்பட்டது. போர் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்த நிலையிலும் போரின் அடையாளங்களையும்,வடுக்களையும் அங்கு ஒரு சில இடங்களில் பரவலாகக் காணமுடிவதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள…
-
- 0 replies
- 282 views
-
-
டிக்கோயா தள வைத்தியசாலையை திறந்து வைத்தார் மோடி மலையகத்திற்கு விஜயம் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசின் உதவியில் கட்டப்பட்ட டிக்கோயா கிளங்கன் தள வைத்தியசாலையை சற்றுமுன்னர் திறந்து வைத்தார். Tags http://www.virakesari.lk/article/19930
-
- 1 reply
- 278 views
-
-
தலதா மாளிகையில் மோடி வழிபட்டார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அவருடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சென்றிருந்தார். - See more at: http://www.tamilmirror.lk/196520/தலத-ம-ள-க-ய-ல-ம-ட-வழ-பட-ட-ர-#sthash.5CyYSx5q.dpuf
-
- 3 replies
- 513 views
-
-
மோடியுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை! - விக்னேஸ்வரன் வேதனை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர் என்றும், இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குத் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, "நான் நேற்றைய நிகழ்விற்கு சென்றேன். மோடி எனக்கு கைலாகு கொடுத்து நலம் விசாரித்தார். நான் இருந்த இடத்திலிருந்து மோடி சற்று தொலைவிலேயே இர…
-
- 0 replies
- 477 views
-
-
செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19810
-
- 16 replies
- 1.4k views
-
-
புங்குடுதீவு வித்தியா படுகொலை : குற்றப்பத்திர ஏடுகளை பாதுகாக்க நீதிமன்று உத்தரவு யாழ்ப்பாணம், புங்குடுதீவு வித்தியா படுகொலை தொடர்பில் முதல் ஒன்பது எதிரிகளுக்கும் எதிரான குற்றப்பகிர்வு பத்திர வழக்கு ஏடுகள் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணையானது கொழும்புக்கு மாற்றப்படுவது தொடர்பான முயற்சிகள் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பகிர்வு பத்திரத்தை இரும்பு பெட்கத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ்.மேல் நீதிமன்றமானது நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கானது கடந்த திங்கட்கிழமையே சட்டமா அதிபரால் யாழ்.மேல் …
-
- 4 replies
- 419 views
-
-
மஹிந்த - மோடி இரவோடிரவாகச் சந்திப்பு இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கலந்துரையாடலொன்று தொடர்பில், இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் காணப்படவில்லை என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கவே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நரஞ்சித் சிங் சந்து தெரிவித்தார். நேற்று (11) மாலை, கங்காரம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…
-
- 1 reply
- 510 views
-
-
சக்தி டிவி செய்திகள் 12th May 2017, 8PM
-
- 0 replies
- 292 views
-
-
அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்ளப் போவதில்லை – கோதபாய அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். செயற்பாட்டு அரசியலில் களமிறங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கோதபாய அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யப் போவதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தமது மகன் உள்ளிட்ட பல உறவினர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் இதனால் அடிக்கடி அமெரிக்கா சென்று வர வேண்டியிருப்பதாகவும் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள எவ்வித அவசியமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்…
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக அமைந்திருந்தது – நரேந்திர மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு பிரதமர் மோடி நேற்று இலங்கைக்கு வந்திருந்தார். இன்று மாலை தனது இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியன் எயர்லைன்ஸ் விமான சேவையின் விசேட விமானமொன்றின் மூலம் பிரதமர் நாடு திரும்பியுள்ளார். பிரதமர் மோடி நாடு திரும்பிய போது, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று அவரை வழியனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக …
-
- 0 replies
- 173 views
-