ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் சமையல் எரிவாயு பாரவூர்தி ஒன்றும் சுற்றுலா பஸ் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏ9 பிரதான வீதியில் பாதசாரி கடவையில் நபர் ஒருவர் திடீரென கடக்க முற்பட்ட போது முன்னால் சென்ற வேன் மற்றும் பஸ் என்பன சடுதியாக நிறுத்தி போது அதே திசையில் பயணித்த சமையல் எரிவாயு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதோடு, வாகனங்கள் மாத்திரமே சேதமடைந்துள்ளன.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tags htt…
-
- 0 replies
- 415 views
-
-
கங்காராமையில் மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமை சீமா மாகலய விகாரைக்கு விஜயம் செய்துள்ளார். மங்கள விளக்கேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், வழிபாடுகளிலும் ஈடுபட்டார். - See more at: http://www.tamilmirror.lk/196467/கங-க-ர-ம-ய-ல-ம-ட-#sthash.xaYhyRz0.dpuf
-
- 0 replies
- 300 views
-
-
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பொன்சேகாவின் கருத்துக்களால் இரு கட்சிகளிடையே முரண்பாடு கொழும்பு காலிமுகத்திடலில் பிரதான எதிர்க்கட்சியான கூட்டு எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்துக்கு இந்த அளவுக்கும் மக்கள் திரள்வார்கள் என்று ஆளும் கட்சித்தலைவர்களும் நினைக்கவில்லை; எதிர்க்கட்சியினரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாட்டின் சமீபகால அரசியல் வரலாற்றில் இது ஒரு பிர மிப்பைத் தரும் சாதனையாகும். இத்தகைய விதத்தில் பெரும் அளவில் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்காததால், அந்த மிக விசாலமான மைதா னத்தைக் கூட்டு எதிரணியினர்களுக்கு வழங்குவ தற்குத் தலைமை அமைச்சர் ரணில் விக்கி ரமசிங்க ஏற்பாடு செய்திரு…
-
- 0 replies
- 307 views
-
-
சாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம் சாவகச்சேரி சங்கத்தானை புகையிரத நிலையத்து அண்மையில் இன்று அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரதத்துடனேயே இராணுவ வாகனம் மோதியுள்ளது. காயமடைந்த இராணுவத்தினர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/archives/26520
-
- 0 replies
- 255 views
-
-
மோடி புறப்பட்டார் சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இன்று(11) மாலை 6 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, விசேட விமானத்தின் மூலமாக, புதுடெல்லியிலிருந்து சற்றுமுன்னர் புறப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/196430/ம-ட-ப-றப-பட-ட-ர-#sthash.mCdnrs0Q.dpuf
-
- 0 replies
- 214 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுநாள் சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனாவிற்கான பிரதமரின் விஜயத்துடன் ஆசிய பசுபிக் வலய நாடுகளுடனான இலங்கையின் பொருளாதார உறவுகள் முழுமையடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் துறைமுக நகர்த் திட்டம் இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என சீனா தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த திட்டம் முழுமையடையும். துறைமுக நகர்த் திட்டத்தின் ஊடாக 80,000 தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். சுற்றுலாப் பயணிகள், நிதி நிறுவனங்கள், அனைத்துலக நிறுவனங்களை நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கு இந்த துறைமுக அபிவிருத்தி நகர்த் திட்டம் வழியமைக்கும் என சீனா சுட்டிக்காட்டியுள்ளதுடன் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக நகராக இந்த துறைமுக அபிவிருத்தி நகர்…
-
- 0 replies
- 247 views
-
-
முல்லைத்தீவு புதுகுடியிடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எம். சதீஸ்குமார் எனபவரே காச்சால் காரணமாக கிளி நொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்படுவதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கீழ்குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாகவைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி சுhகதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர் உடம்பு உளைச்சல், …
-
- 0 replies
- 324 views
-
-
யாழ். சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி காயம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சுற்றுச் சுவர் ஏறிப் பாய்ந்து தப்பியோட முற்பட்ட கைதி சுவரிலிருந்து தவறி விழுந்து இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றுமுற்பகல் இடம்பெற்றது. மகிந்தன் என்றழைக்கப்படும் குறித்த கைதிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றங்களில் திருட்டு மற்றும் கொள்ளை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சிறைச்சாலைத் தரப்புத் தெரிவித்தது. “சிறைச்சாலையின் சுற்றுச் சுவர் மிக உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு வழியில் அவர் சுவரின் குறிப்பிட்ட உயரத்துக்கு ஏறிய நிலையில் தவறி விழுந்தார். அதன…
-
- 0 replies
- 178 views
-
-
கிளி.மத்திய கல்லூரி மைதானத்தில் வெசாக் தின நிகழ்வுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலீஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிளிநொச்சி வெசாக் வலயத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து மத வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர். வெசாக் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி படைகளின் தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் 2561 வது வெசாக் நிகழ்வினை முன்னின்டு கிளிநொச்சி…
-
- 0 replies
- 702 views
-
-
சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது நீதி அமைச்சர் விஜேதாஸ திட்டவட்டம் (ஆர்.யசி) இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைக்கும் காரணிகள் நியாயமானவையேயாகும். எனினும் ஒரு தரப்பினர் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமென கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும் இவர்களின் கோரிக்கையை சாதகமாக பயன்படுத்தி நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சிக்கின்றன. எவரையும் தனிப்பட்ட முறையில் திருப்திப்படுத்த சர்வதேச விசாரணைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரி…
-
- 0 replies
- 311 views
-
-
மோடிக்கான ஜனாதிபதியின் விருந்தில் சம்பந்தன்,விக்கினேஸ்வரன் பங்கேற்பு (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதரும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இரவு விருந்துபசாரமொன்றை அளிக்கவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த இரவுவிருந்துபசாரமானது இரவு 8.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 318 views
-
-
கடுங்காற்றால் வீடுகள் சேதம் -ரொமேஸ் மதுசங்க கிளிநொச்சி பெரியபரந்தன் பிரதேசத்தில் நேற்று மாலை நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காலநிலையால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் தெரிவித்துள்ளது. மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசித்து வந்த தற்காலிக மற்றும் நிரந்தர வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/196411/கட-ங-க-ற-ற-ல-வ-ட-கள-ச-தம-#sthash.RsztCfUx.dpuf
-
- 1 reply
- 396 views
-
-
பாரத பிரதமர் இன்று வருகிறார் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் வரவேற்புக்கு ஏற்பாடு (ரொபட் அன்டனி) இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை மாலை இலங்கைக்கு வருகை தருகின்றார். வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் ஆகியோரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த…
-
- 1 reply
- 502 views
-
-
‘இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும்’ “இந்தியாவுக்குத் தடிமல் பிடித்தால் இலங்கைக்குக் காய்ச்சல் அடிக்கும் என்பது, படித்தவர்களும் பரம்பரைச் சரித்திரம் தெரிந்தவர்களும் அறிந்த உண்மையாகும்” என்று குறிப்பிட்டுள்ள சௌமிய இளைஞர் நிதியம், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடியைப் பறக்கவிடுமாறு, ஒப்பாரி ஓலமிடுவது நகைப்புக்குரியதாகும்” என்றும் தெரிவித்துள்ளது. “1988 மற்றும் 1989 களில் இந்தியப் பொருட்களை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று கூச்சலும் கோசமும் போடுகின்றனர்” என்றும் க…
-
- 1 reply
- 342 views
-
-
மைத்திரியை எதிர்க்க யாருக்கும் அருகதை இல்லை?-சரவணபவன் கேள்வி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கி வருகிறது. கூடவே அது தொடர்பான சர்ச்சைகளும் கிளம்புகின்றன. அன்றைய தினத்தில் முல்லைத்தீவுக்கு மைத்திரி வருகை தருவதற்கு இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாக வருகையை கைவிடவேண்டும் என அறிக்கை விட்டார் அதற்கு பதிலளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ளதோடு அது தொடர்பாக ஜெனாதிபதியை எதிர்ப்பதற்கு இவர்களுக்…
-
- 0 replies
- 330 views
-
-
கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வடக்கு - கிழக்கில் 6000 பொருத்து வீடு - அனுமதி வழங்கியது அமைச்சரவை வடக்கு - கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட - பொருத்து வீட்டை அமைப்பதற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 லட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளன. முன்நிர்மாணிக்கப்பட்ட - பொருத்து வீட்டை, வடக்கு - கிழக்கில் அமைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப் …
-
- 0 replies
- 321 views
-
-
நீளமான புத்தர் மணற் சிற்பம்: பத்தரமுல்லையில் உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள தியவன்ன ஓயாவுக்கு அண்மையிலேயே இந்த மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மணற் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிற்பத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை, காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் பார்வையிடலாம். புத்தர் பெருமான் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வகை வடிவங்களுள் மிகவும் பிரசித்தமானதொரு நிலையே சயன நிலையிலுள்ள புத்தர் சிற்பமாகும். இந்த …
-
- 0 replies
- 572 views
-
-
மோடியின் நிகழ்வில் மஹிந்த (க.கமலநாதன்) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை முன்னிலைப்படுத்தி வெளியாகும் கறுப்புக்கொடி செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் வெசாக் தின நிகழ்வுகளில் நானும் கலந்துகொள்வேன். எனக்கு எந்த தடையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல, கோனகல்தெனிய, அரியசிந்தாசிரம விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 0 replies
- 365 views
-
-
மோடியின் நேரடி பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி. சிறப்புப் படையணி (எம்.எப்.எம்.பஸீர்) சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்க இன்று இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு களும் பூரணப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாதுகாப்பானது, இந்தியாவில் இந்திய பிரதமருக்கு பாதுகாப்பளிக்கும் எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் தேவையான எஸ்.பி.ஜி. சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தலை…
-
- 0 replies
- 411 views
-
-
அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். தெரிவிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று யாழ். ஆயர் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்திருக்கிறார் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். ஆயரின் கருத்தைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜாவுக்கு துணைவேந்தர் பதவியை அரச தலைவர் மைத் திரிபால சிறிசேன வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சில…
-
- 0 replies
- 335 views
-
-
மலையகத்தில் கற்பிக்க விரும்பும் பட்டதாரிகள் உடனடியாக வாருங்கள் நியமனம் வழங்கத் தயார் - அமைச்சர் இராதாகிருஷ்ணன் கணித, விஞ்ஞான உயர்தர மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடிய பட்டதாரிகள் நாட்டில் எங்கிருந்தாலும் பரவாயில்லை. மலையகத்தில் உங்களுக்கு ஆசிரியர் தொழில் செய்ய விருப்பம் என்றால் உடனடியாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கான நியமனத்தை நான் பெற்றுத் தருகின்றேன். இந்தியாவிலிருந்து பட்டதாரிகளைக் கொண்டு வருவதை விமர்சிப்பவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன். முடிந்தால் அறிக்கை விடாமல் உயர்தரக் கணித, விஞ்ஞான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக் கூடிய பட்டதாரிகளைக் கொண்டு வந்து தாருங…
-
- 2 replies
- 360 views
-
-
யாழ்ப்பாண நகரில் மழை யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று மாலை மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக மழை தொடர்ந்து பொழிகின்றமை குறிப்பிடத்தக்கது. http://uthayandaily.com/story/2134.html
-
- 2 replies
- 553 views
-
-
இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு ஹெலிகொப்டர் ஒத்திகை! (படங்கள்) ஹட்டன் டன்பார் மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி மலையகத்துக்கு வருகைத்தரவுள்ள இந்திய பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஹெலிகொப்டரில் தரையிறங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன் போது இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஹெலிக்கொப்டர்கள் டன்பார் மைதானத்தில் தரையிறக்கப்பட்டன. டன்பார் மைதானத்துக்கு யாழப்பாணத்துக்கான இந்திய தூதுவர் நடராஜன் , கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் , இந்திய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். Tags http://www.virakesari.lk/article/19861 …
-
- 3 replies
- 533 views
-
-
சக்தி டிவி செய்திகள் 10th May 2017, 8PM
-
- 0 replies
- 210 views
-
-
சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டத்தை வடக்கு முதலமைச்சர் நடத்தாதது ஏன்? சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி மாவட்டச் செயலரால் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாகவும் சட்ட ஒழுங்கு தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடிகிறது. அதேபோன்று மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னால் சட்ட ஒழுங்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஏன் கலந்துரையாட முடிய வில்லை? இவ்வாறு வடக்கு மாகாண சபையில் கேள்வியெழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் உறுப்பினர் லிங்கநாதனால், வடக்கிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பசு மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்க அவ…
-
- 2 replies
- 361 views
-