ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143370 topics in this forum
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிரூபமா ராஜபக்ஷ, காலி முகத்திடலில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்துக்குச் சென்றிருக்கவில்லை. அவர், கண்டி- கெட்டம்பேயில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே பங்கேற்றிருந்தார். அவருக்கு, மூன்றாவது வரிசையிலேயே ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த பிரியங்கர ஜயரத்னவும் கண்டிக் கூட்டத்துக்குச் சமுகமளித்திருந்தார். இதேவேளை, முன்னாள் பிரதமர் தி.மு ஜயரட்ன, முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் தயாசித்த திசே…
-
- 0 replies
- 262 views
-
-
ஜனாதிபதிக்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 17ம் திகதி இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பிற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார். பலவந்த காணாமல் போதல்கள், தனியார் காணிகள் விடுவிக்கப்படாமை, வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்டன குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் வேறும் எவரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தனித்தனியாக இந்தப் பேச்…
-
- 0 replies
- 199 views
-
-
இலங்கை கடற்படைக்கு இந்தியாவின் இரண்டு ஆள்கடல் அவதானிப்பு கப்பல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. கடல் பாதுகாப்பு, கடல் உயிரின பாதுகாப்பு, கடல் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆழ்கடலில் இடம்பெறும் கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்தல் போன்றவற்றுக்கு இந்தக் கப்பல்கள் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கோவா நகரில் உள்ள கப்பல் கட்டுமான நிலையத்தில் இந்தக் கப்பல்களை கட்டும் பணிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கப்பலை பார்வையிடுவதற்காக இலங்கை கடற்படை அதிகாரிகள் தலைமையிலான குழுவொன்று இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களின் கட்டு…
-
- 1 reply
- 325 views
-
-
கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை: கொமாண்டர் மாபாவின் விளக்கமறியல் நீடிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு சந்தேக நபராக கருதி கைது செய்யப்பட்டுள்ள வெலிசறை கடற்படை வைத்தியசாலையின் நிறைவேற்று அதிகாரம் கொன்ட லெப்டினன் கொமாண்டர் தம்மிக அனில் மாபாவின் விளக்கமறியல் நீடிக்கப்ப்ட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி …
-
- 1 reply
- 399 views
-
-
சக்தி டிவி செய்திகள் 2nd May 2017, 8PM
-
- 0 replies
- 170 views
-
-
அதிகாரப் பகிர்வில்லாத அரசியல் தீர்வு உப்பில்லாத பண்டத்தைப் போலாகும் – கிழக்கு முதலமைச்சர் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள காணிகளையாவது பாதுகாக்க முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார். சிறுபான்மையினர் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள காணிகளில் பேரினவாதிகள் அத்துமீறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர்இதனைக் கூறின…
-
- 0 replies
- 285 views
-
-
முல்லைத்தீவு பிரதேசத்தில் இராணுவ முகாமுக்கு சொந்தமான இடத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கத்தை தேடி கண்டுபிடிக்கப்பதற்காக வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர், பொலிஸ் பரிசோதகர் உட்பட 10 பேர் மீது குற்றம் சுமத்தி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், தோண்டும் பணிகளில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஜகத் விஜேகுணவர்தனவை ஈடுபடுத்தியுள்ளார். அத்துடன் அந்த பொலிஸ் அதிகாரி இராணுவ அதிகாரிகளை திட்டி விட்டு கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் சென்று விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் வவுனிய…
-
- 0 replies
- 397 views
-
-
கடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பானது ஜனவரி 2015ல் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பானது மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது என்பதற்கான சான்றாக அமைகின்றது. இவ்விரு நாடுகளின் தலைவர்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும், சிறப்பு பொருளாதார வலயங்களுக்கு சக்தி மற்றும் கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நீண்ட கால ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாட…
-
- 0 replies
- 186 views
-
-
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் சைக்கிளையா ஓடுகிறார்கள் - கூட்டாட்சியை எதிர்ப்பபவர்களைப் பார்த்து சம்மந்தன் கேள்வி “கூட்டாட்சி (சமஷ்டி) கோரிக்கையை செல்வா முன்வைத்தபோது, அதனை ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார். தொடர்ச்சியாக பொன்னம்பலம் எதிர்த்துக்கொண்டிருந்தார். நாம் தந்தை செல்வாவின் தடத்தில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனையும் எதிர்ப் பவர்கள் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் அமரர் பொன்னம்பலத்தின் வாரிசுகளா? பொன்னம்பலத்தின் சைக்கிள்களில் ஓடிக்கொண்டிருப்பவர்களா ?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். …
-
- 3 replies
- 499 views
- 1 follower
-
-
திருட்டு நகைகளில் பங்கு பெற்ற போலீசார் , நீதிவானுக்கும் பங்கு கேட்டுள்ளனர். திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வடக்கில் இடம்பெறும் திருடப்பட்ட மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை யாழ் நகரில் உருக்கி கட்டியாக்கும் மற்றும் இந்தியாவுக்கு நகைகளை கடத்தும் குழுக்களுடன் …
-
- 2 replies
- 427 views
-
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி யாழில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் முகமாக உதயன் குழுமத்தின் ஏற்பாட்டில் உதயன் வளாகத்தில் இன்று காலை அஞ்சலி நிகழ்வொன்று நடத்தப்பட்டது. ”வேட்கை” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் பொதுச் சுடரினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஏற்றி வைக்க, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் திருவுருவப்படங்களுக்கு அவர்களின் உறவினர்கள், நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்கள் மற்றும் பத்திரிகை பணியாளர்கள் என அனைவரும் சுடரேற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். …
-
- 0 replies
- 373 views
-
-
ஈழத்தின் மாபெரும் ஊடகப் படுகொலை தினம் இன்று ஈழத்தின் மா பெரும் ஊடகப் படு கொலை நிகழ்ந்த 11ஆம் நினைவு நாள் இன்றாகும். 2006 மே 2ஆம் நாள் ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் ஊழியர்கள் இருவரைக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மேலும் மூவரைக் காயப்படுத்தினர். பெரும் தொகைச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர். எனினும் இதுவரையில் இந்தக் குற்றங்களைச் செய்த எவரும் தண்டிக்கப்படவேயில்லை. இன்றைய நாளில், தமிழ் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் ‘உதய…
-
- 0 replies
- 354 views
-
-
படகிலிருந்து மீட்கப்பட்ட 30 மியன்மார் நாட்டவர்களை மிரிஹான முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து படகொன்றில் இருந்து மீட்கப்பட்ட 32 பேரில் 30 மியன்மார் நாட்டவர்களையும் உடனடியாக மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, படகோட்டிகளான ஏனைய இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் அனுமதிபெறும் வரை தடுத்துவைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து அத்துமீறி உள்நுழைந்த படகொன்றை கடந்த 30 ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இந்நிலையில்…
-
- 0 replies
- 198 views
-
-
ஐ.தே.க அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, யானை சின்னத்துக்குச் சேதம் விளைவித்த கான்ஸ்டபிள் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/195815/ஐ-த-க-அல-வலகம-ம-த-த-ப-ப-க-க-ச-ச-ட-#sthash.FhjgH78i.dpuf
-
- 1 reply
- 259 views
-
-
ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமத்தின் அல்லது சமூகத்தின் சனத்தொகை செறிவைக் குறைப்பதற்கு ஒன்றில் இனச் சுத்திகரிப்பை அல்லது சட்டவிரோதக் குடியேற்றத்தை ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்துவது அவர்களின் நீண்ட கால அரசியல் தந்திரோபாயமாகும். அதன் மூலம் குறிப்பிட்ட சமூகத்தின் நிலத்தொடர்ச்சியை இல்லாதொழித்து அவர்களுடன் பேரினத்தை கலப்பதன் மூலம் சனத்தொகையை ஐதாக்கி, அரசியல் பலத்தை சிதைப்பது ஏகாதிபத்தியவாதிகளின் உள்நோக்கமாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பல நாடுகளில் இந்தத் தந்திரத்தை ஏகாதிபத்திய அரசுகள் மிக இலாவகமாகக் கையாண்டுள்ளன. அயர்லாந்தில் பிரிட்டன் மேற்கொண்ட குடியேற்றங்களும் போல்…
-
- 16 replies
- 1.1k views
-
-
பலத்தை காண்பிப்பதற்கு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்ட கட்சிகள் கொழும்பிலும் கண்டியிலும் கரைபுரண்ட மக்கள் வெள்ளம் (நமது அலுவலக, பிராந்திய நிருபர்கள்) தொழிலாளர் தினமான நேற்று தமது மக்கள் பலத்தை காண்பிக்கும் நோக்கில் பிரதான அரசி யல் கட்சிகள் உட்பட தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் என்பன கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டன. அரசியல் கட்சிகள் மாபெரும் பேரணிகளை யும், பிரதான கூட்டங்களையும் நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் நடத்தியிருந்தன. அரசியல் கட்சிகளின் பேரணிகளிலும் கூட்டங்களிலும் தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நாடாளவிய ரீதியில் உள்ள தமது ஆதரவாள…
-
- 1 reply
- 659 views
-
-
நீதிமன்ற உத்தரவை மீறி கொக்கிளாயில் சிங்களமீனவர்கள் உழவு இயந்திரத்தினால் கரைவலை இழுப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் வாடி அமைப்பது தொடர்பான வழக்கினையடுத்து தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் குறித்த பகுதியில் தொழில்புரிய முலைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி சிங்கள மீனவர்கள் நேற்று தொழிலில் ஈடுபட்டுள்ளனர். உழவு இயந்திரம் மூலம் வலையினை இழுத்து தொழில் செய்யும் முறை தடை செய்யப்பட்ட தொழிலாக இருகின்ற போதிலும் நேற்று இரண்டு உழவு இயந்திரங்களை பயன்படுத்தி சிங்கள மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டிற…
-
- 0 replies
- 266 views
-
-
ஒன்றிணைந்த எதிரணியின் பேரணிக்கு வந்த இருவர் உயிரிழப்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தின பேரணியில் கலந்துகொள்ள வந்த இருவர், சுகயீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிவித்திகல மற்றும் கண்டி ஆகிய பிரசேதங்களைச் சேர்ந்த இவருரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். உயிரிழந்தவரில் ஒருவரின் வயது 63, மற்றையவரின் வயது 80 என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/195823/ஒன-ற-ண-ந-த-எத-ரண-ய-ன-ப-ரண-க-க-வந-த-இர-வர-உய-ர-ழப-ப-#sthash.FQZsbK7m.dpuf
-
- 1 reply
- 296 views
-
-
தரமுடியாதென்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும் தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார். அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின் மனதிலும் தரமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அத்துடன் தனித்துப் போராடாது ஒற்றுமையுடன் சேர்ந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம் என்பனவே அந்தப் பாடங்கள். காந்திஜி தனது அ…
-
- 0 replies
- 258 views
-
-
48 மணித்தியால யுத்த நிறுத்தத்தை கடுமையாக எதிர்த்தேன் – சரத் பொன்சேகா கடந்த 2009ம் ஆண்டில் 48 மணித்தியால யுத்த நிறுத்த அறிவிப்பினை தாம் கடுமையாக எதிர்த்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொரளையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 48 மணித்தியால யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல வேண்டாம் என தாம் அரசாங்கத்தை கோரியதாகவும் எனினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யுத்த நிறுத்தத்ததை அமுல்படுத்தியதாகவும் அதன் போது புலிகள் சற்றே முன்நகர…
-
- 0 replies
- 324 views
-
-
‘தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோற்றது நல்லாட்சி’ எஸ்.நிதர்ஷன் தமிழ் மக்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிட்டது என்று தெரிவித்த சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, வடக்கிலுள்ள மக்களின் உரிமைகளுக்காகப் போராடவுள்ளதாகவும் உறுதியளித்தார். ஜனநாயக தேசிய முன்னணி, முற்போக்குத் தமிழ்த் தேசிய முன்னணி ஆகியன இணைந்து, “வடக்கும் தெற்கும் சங்கமிக்கும் மனிதநேய மே தினம்” எனும் தொனிப்பொருளில், உழைப்பாளர் தினம் கொண்டப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நேற்று இது இடம்பெற்றது. …
-
- 0 replies
- 247 views
-
-
தனித்தனி விசாரணைக்கு த.தே.கூ வலியுறுத்தல் ‘போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு, உடனடியாகக் காணப்பட வேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப, அரசாங்கத்தா ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல், உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு தர்மசங்கதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின…
-
- 0 replies
- 317 views
-
-
வடக்கு, கிழக்கில் துக்க தினம் சண்முகம் தவசீலன், வா.கிருஸ்ணா சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்களால், துக்க தினமாகவே அனுஷ்டிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நேற்றைய மே தினத்தைப் புறக்கணித்து துக்கதினமாக அனுஷ்டித்தது மாத்திரமன்றி, கறுப்பு நிறப் பட்டிகளை அணிந்து, தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதேவேளை, தொழிலாளர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த நாளில், தாங்கள் தொழில் உரிமைக்காக வீதியில் போராடி வருவதனால், மே தினமான நேற்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்ததாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மு…
-
- 0 replies
- 439 views
-
-
‘பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்’ புதிய அரசியல -மைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தகவல் அறிக்கை, விரைவாகத் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கையளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பிளவுபடுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து, ஒற்றுமையைப் பாதுகாத்துக்கொண்டு, இந்நாட்டை முன்னோக்கி நகர்த்துவது எவ்வாறு என்பது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதசவின் 24ஆவது நினைவு தினம், கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது உருவச்சிலைக்கு அருகில், …
-
- 0 replies
- 269 views
-
-
‘ராஜபக்ஷக்களுக்கு இனி இடமில்லை’ “இரண்டு வெசாக் பௌர்ணமி -களுக்குள், இந்த நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். 2 வெசாக் பௌர்ணமிகள் அல்ல, 20 வெசாக் பௌர்ணமிகள் வந்தாலும், ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு வர, நாம் ஒருபோதும் இடமளியோம்” என, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். “ராஜபக்ஷக்களின் பௌர்ணமி கதைகள் தற்போது மாற்றமடைந்துள்ளன. இரு பௌர்ணமி தினங்களுக்குள் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றவர்கள், இப்போது, இரு வெசாக் பௌர்ணமி கதைகள் பற்றிப் பேசுகிறார்கள். இனி உங்களால் ஆட்சிக்கு வரவே முடியாது என்பதை உறுதிப்படக் கூறுகிற…
-
- 0 replies
- 318 views
-