Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்த கோத்தாவுக்கு பயந்தே செயற்பட்டார் : இரகசியத்தை அம்பலப்படுத்தினார் ராஜித (காணொளி இணைப்பு) கோத்தபாய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இல்லை. கடந்த ஆட்சியில் கோத்தபாய போட்ட விளையாட்டுக்களை இந்த ஆட்சியில் முன்னெடுக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு பயந்துகொண்டே செயற்பட்டார். இதற்கு என்னிடம் சிறந்த உதாரணம் உள்ளது என சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 'ஒரு நாள் இராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளை அழைத்து மஹிந்த ராஜபக்ஷ கலந்துரைடிக் கொண்டிருந்தார். அதாவது யுத்தம் நிறைவடைந்துள்ளமையால் எவ்வாறு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்தார…

  2. வவுனியாவில் தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு! வவுனியா பிரதான மணிக்கூட்டுப் கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (26) காலை 9 மணியளவில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகத்தின் 40 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வர்த்தகர் சங்கத் தலைவர் ரி. கே. இராஜலிங்கம், தமிழரசுக்கட்சி வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரது நினைவு தூபிக்கு மலர் …

  3. இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் திடீர் மாற்றம் எதிர்வரும் 27ம் திகதி இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் விமான சோதனை ஓட்டம் காரணமாக இலங்கை விமான சேவை அதன் பயண நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. இந்நிலையில், பயணிகள் இலங்கை எயார் லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு இலக்கமான 0094197331979க்கு தொடர்பு கொண்டு அல்லது www.srilankan.com என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/19422

  4. மஹிந்தவுக்கு ரணில் வைத்த பாரிய பொறி (லியோ நிரோஷ தர்ஷன்) புனித பாப்­ப­ரசர் இலங்கை வந்த போது கூட காலி முகத்­தி­டலை மக்­களால் நிரப்ப முடி­யாமல் போனது. இந்­நி­லையில் கூட்டு எதிர்க்கட்­சியின் மே தின கூட்­டத்­திற்கு அவ்­விடம் வழங்­கப்­பட்­ட­மை­யா­னது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு வைத்­துள்ள பொறி­யே­யாகும் என தெரி­வித்­துள்ள கூட்டு எதிர் கட்சி , ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மே தின கூட்டம் கண்­டியில் அல்ல கொழும்பில் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தலை­மையில் வெற்­றி­க­ர­மாக நடை பெறும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது. கூட்டு எதிர்க் கட்­சியின் விஷேட ஊடக சந்­திப்பு பொர­ளையில் அமைந்­துள்ள ஸ்ரீ வஜி­ராஷ்­ரம பௌத்த மத்­திய நிலை­யத…

  5. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்தார் பிரதமர் ரணில் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரணில் விக்ரமசிங்க, இன்றைய மதியம் மதிய போசன வேளையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார். http://www.virakesari.lk/article/19416

  6. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வழங்குவது மனித உரிமை மீறல்களுக்கு விருது வழங்குவதற்கு நிகரானது இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதானது, மனித உரிமை மீறல்களை உதாசீனம் செய்து , விருது வழங்குவதற்கு நிகரானது என சில மனித உரிமை நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இலங்கை அரசாங்கம் மனித உரிமை விவகாரங்களில் உரிய முனைப்பு காட்டத் தவறினால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் தி;ட்டம் வழங்கப்படக்கூடாது என அவை தெரிவித்துள்ளன. சில மனித உரிமை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன. உரிய காலத்தில் இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியம் சலுக…

  7. சிவனொளிபாதமலையில் பதற்றம்: சிலையை வைக்க சிங்ஹ லே முயற்சி காமினி பண்டார சிங்ஹ லே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை வீதிவரை, பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்ஹ லே அமைப்பின் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில், புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சிவனொளிபாதமலையின் இதிகட்டுமானப் பகுதி வரை புத்தர் சிலை கொண்டு செல்லப்பட்டதாகவும…

  8. இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு இக்குழுவின் தீர்மானங்களுக்கமையவே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு மேலும் தகவல் தருகையில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி, மீன்பிடித்த இந்திய மீனவர்களின் 132 க்கு மேற்பட்ட படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை விடுவிப்பதற்கு வடபகுதி மீனவ சமாஜங்களும் மீனவர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியப் படகுகள் விடுவிக்கப்பட்டால் மீண்டும் கடல் எல்லை மீறப்படும். எனவே எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கும் வடபகுதி மீனவர்கள் படகுகளை விடுவிப்பதை கடுமையாக எதிர்க்கின்றனர். …

  9. இந்­தி­யாவில் பயிற்­சியின் இடை­ந­டுவே இலங்கை கடற்­படை சிப்பாய் உயி­ரி­ழப்பு இந்­தி­யாவின் கொச்சி கடற்­படை பயிற்சி தளத்தில் பயிற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்த இலங்கை கடற்­படை வீரர் ஒருவர் பயிற்­சியின் இடை நடுவே உயி­ரி­ழந்­துள்ளார். குரு­ணாகல் பகு­தியைச் சேர்ந்த 39 வய­தான வை.பி.என்.ஆர். வீர­சிங்க எனும் கடற்­ப­டையின் ' டைவிங்' வீரரே இவ்­வாறு நேற்று முன் தினம் மாலை வேளையில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கடற்­படை ஊடகப் பேச்­சாளர் லெப்­டினன் கொமாண்டர் சமிந்த வலா­கு­லுகே தெரி­வித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, கொச்சி கடற்­படை தளத்­துக்கு உட்­பட்ட கேரளா - எர்­னா ­குளம் கடற்­படை பயிற்சி மையத்தில் வழ­மை­யாக இடம்­பெறு…

  10. ரணிலின் இந்திய விஜயத்தின் இரகசியம் வெளியாகியது..! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது திருகோணமலை குதங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார். எனினும் எட்கா குறித்தான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினைக்கு முன்னைய ஆட்சியும் நல்லாட்சியும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article…

  11. புலிகளின் நிதியை உள்வாங்கவா... பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலம்.? (லியோ நிரோஷ தர்ஷன்) சீன முதலீடுகளை விட புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளே இலங்கைக்கு உகந்தது என்று நோர்வேயின் எரிக் சொல்ஹிம் இந்திய ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார். இதனை அங்கீகரிக்கும் வகையில் விடுதலை புலிகளின் நிதியை சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே அரசாங்கம் பணமாற்று கட்டுப்பாட்டு சட்டமூலத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜீஎஸ்பி வரி சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதாயின் தேசிய பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால்…

  12. கொடிகாமம் பகுதியில் இருவருக்கு வாள்வெட்டு -செல்வநாயகம் கபிலன் மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். “திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மந்துவில் பகுதியினை சேர்ந்த நந்தகுமார் லிங்கேஸ்வரன் (வயது 24), மற்றும் அதே பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோபர் தினேஷ் (வயது 28) ஆகிய இருவருமே வாள் வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்” என, பொலிஸார் குறிப்பிட்டனர்…

    • 2 replies
    • 529 views
  13. சக்தி டிவி செய்திகள் 25th April 2017, 8PM

  14. முல்லைத் திவில் இரு கிராமங்கள் சோகத்தில் ; முகவர்களை நம்பி வெளிநாடு சென்ற இரு இளைஞர்கள் மரணம் வெளிநாடு செல்வதற்காக முகவரை நம்பி சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்த துர்ப்பாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாக ஐரோப்பியநாடு ஒன்றுக்கு செல்வதற்காக பணம்செலுத்தி 11-12-2016 அன்று உள்ளுர் முகவர் ஒருவர் ஊடாக லண்டன் நாட்டிற்கென உள்ளூர் முகவர் வெளிநாட்டில் அதாவது லண்டனில் உள்ள முகவர் ஊடாக அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். …

  15. "தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது" (ஆர்.யசி ) புதிய அரசியல் அமைப்பு மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர். தமது உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது என புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக தெரிவித்தார். ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையொன்று விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு தமது இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நாடளாவிய ரீதியில் மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றது. இந்தவாரம் வடக்கில் தமது வேலைத்திட்டங்களை முன்னெடு…

  16. வடக்கு மாகாண அலுவலகங்களில் இனிமேல் பிளாஸ்ரிக் பைகள் இல்லை – உத்தியோகத்தர்கள் உறுதிமொழி ஏற்பு வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அலுவலகங்கள் யாவற்றிலும் பிளாஸ்ரிக் பைகளை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழி இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வின்போது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 47ஆம் இலக்க இலங்கை தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் 20 மைக்குரோன்கள் அல்லது அதற்குக் குறைவான தடிப்புக் கொண்ட பிளாஸ்ரிக் பைகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் விதிக்கப்பட்ட தடையை பூமி தினமான 22 ஆம் திகதியில் இருந்து வடக்கு மாகாணத்தி…

  17. நெடுந்தீவில், அமெரிக்காவின் 5 வது கப்பல் படையணி. தியாகோ கார்ஷியா தீவுகளில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 5வது கப்பல் படையணியை நெடுந்தீவுக்கு மாற்ற தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ராஜதந்திர தலையீடுகளை அமெரிக்க விரைவில் மேற்கொள்ளும் என அந்த தகவல்கள் கூறுகின்றன. 2007 ஆம் ஆண்டு அமெரிக்கா இலங்கையுடன் செய்து கொண்ட (The Acquisition and Cross – Services Agreement) (ACSA) உடன்படிக்கைக்கு அமைய நெடுந்தீவை கோரவுள்ளதாக கூறப்படுகிறது. தியாகோ கார்ஷியா தீவுகளில் இருந்து அமெரிக்காவின் 5வது கப்பல் படையணியை திரும்ப பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்காவுக்கு இந்து சமுத்திர பகுதியில் படையணியை நிலை ந…

  18. தகவல் அறியும் சட்டமூலத்தை அறிந்து கொள்வதற்காக மக்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவங்கள் மொழிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு தகவல்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் விபரங்கள், அரச இரகசியங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்களை தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு அமுலுக்கு வந்த தகவல் அறியும் சட்டமூலம் மூலம் பலர் தகவல்களை பெற்றுக்கொண்டதுடன், சில தகவல்கள் வழங்குவதற்கும் மறுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், மக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அச்சுப்பிரதியானது வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக சிங்கள மொழி என்றால்- 21 ரூபா என்றும், தமிழ் மொழி என்றால் -54 ரூ…

    • 2 replies
    • 605 views
  19. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு உத்தரவு !! ஊடகவியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் மந்தகதியில் செயற்படுகின்றனரா? என்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் மன்றில் பொலிஸாரிடம் கேவியெழுப்பியுள்ளார். கல்குடாவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்ய வேண்டிய ஏனைய சந்தேகபர்களையும் கைது செய்யுமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற சுதந்திர ஊடகவியலாளர் சசிகரன் மற்றும் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் நித்தியானந்தன் ஆகியோர் மீதே கும்புறுமுலை வேம்பு பகுதியில் தாக்குதல் …

  20.  கிழக்கு மாகாண சபையின் முன்பாக பதற்றம் வடமலை ராஜ்குமார் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக, முன்னெடுக்கப்பட்டு வரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் காரணமாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், போராட்டத்தை முன்னெடுக்கவேண்டாமென, நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை கிழித்தெறிந்ததன் காரணமாக, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195393/க-ழக-க-ம-க-ண-சப-ய-ன-ம-ன-ப-க-பதற-றம-#sthash.akcAPmeE.dpuf

  21. பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது முனியப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில், நாளையதினம் அவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளதாகவும், அவர் சொந்த நாடான இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் சூதாட்டக்காரரான பாஸ்கர் முனியப்பா என்பவர் சக்தி வாய்ந்த ஆன்மீகவாதி மற்றும் மாய மந்திரத்தை அழித்து காதல் பிரச்சினைகளை சரி செய்ய கூடிய சர்வதேச புகழ்பெற்ற ஜோதிடராவார். முனியப்பாவிடம் வருகைத்தந்தவரின் உடல்களில் சுண்ணாம்பு துண்டுக…

    • 0 replies
    • 554 views
  22. குப்பை மலையை அகற்றுவதற்கு ‘3 ஆர்’ முறை மீதொட்டமுல்ல குப்பை மலையை அப்புறப்படுத்துவதற்கு, குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால யோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை, ஜப்பானிய நிபுணர்குழு கையளித்துள்ளது. Reduce -குறைத்தல், Reuse -மறுபயன்பாடு மற்றும் Recycle - மீள்சுழற்சி ஆகிய, 3 ஆர் (R) பரிந்துரை மிகவும் முக்கியமானது என்றும் அந்த நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. மீதொட்டமுல்ல, குப்பைமலை சரிந்து அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பான் அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட நிபுணர்குழு, அந்த குப்பைமலையில், பல்வேறான மட்டங்களில், சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்தச் சோதனைகளின் பின்னர், அந்த நிபுணர் குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள…

  23. அரசியல் தலையீடுகளால் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி அரசியல் தலையீடுகளால் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள போதிலும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தற்காலிகமாக அவரை சேவையில் நீடிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக 2017 பெப்ரவரி 26ஆம் நாள் நடத்தப்பட்ட தேர்தலில், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களான, பேராசிரியர் எஸ்.சிறீஸ்கந்தராஜா, பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வர…

    • 0 replies
    • 252 views
  24. கேப்­பா­ப்பு­லவு இரா­ணுவ முகாம் மாற்­றத்­திற்கு உரிய நிதி விரைவில் வழங்­கப்­படும் முள்­ளிக்­கு­ளத்­திற்கு இம்­மாத இறுதிக்குள் நேரில் செல்­லவுள்ளேன் என்­கிறார் அமைச்சர் சுவா­மி­நாதன் (ஆர்.ராம்) கேப்­பா­ப்பு­லவில் உள்ள இரா­ணுவ முகாமை மாற்­று­வதற்­கான நிதி­வ­ச­திகள் வழங்­கப்­பட்டு ஆறு வாரங்­களில் அப்­ப­குதி விடு­விக்­கப்­ப­டும்­ என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்­து­ச­மய விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். அத்­துடன் உள்ள மன்னார் முள்­ளிக்­கு­ளத்தில் விவ­சாய காணி­களை விடு­விப்­ப­தற்­கு­ரிய அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்கும் முக­மாக இம்­மாத இறு­திக்குள் நேரில் செல்­ல­வுள்­ள­தாக தெரி­வித்­துள்ள அமை…

  25. சீனா, இந்தியா, ஜப்பானின் மிகப்பெரிய விளையாட்டுக் களமாகும் சிறிலங்காவின் துறைமுகங்கள் சிறிலங்காவில் இடம்பெற்ற பல பத்தாண்டு கால யுத்தம், 2009ல் நிறைவு பெற்ற பின்னர் நாடு தற்போது தன்னை அபிவிருத்தி செய்து வரும் தருணத்தில் இந்திய மாக்கடல் மீதான அனைத்துலக சமூகத்தின் அக்கறை அதிகரித்துள்ளது. இலங்கைத் தீவானது பல்வேறு பாரிய சக்தி வாய்ந்த நாடுகளின் கவனத்திற்கு உட்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கும் மலாக்கா நீரிணைக்கும் இடையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளதன் காரணமாக உலக நாடுகளின் கவனமானது இதன் மீது குவிந்துள்ளது. இவ்வாறான பல்வேறு வாய்ப்புக்கள் சிறிலங்காவிற்கு வந்துள்ள போதிலும், இத்தீவானது சில பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏ…

    • 0 replies
    • 167 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.