ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
மயிலிட்டியில் ஆயுதக் கிடங்கு முழுப் பொய் - அப்படி ஒன்றுமே இல்லை என்கிறார் ராணுவத் தளபதி மயிலிட்டியில் ஆயுதக் கிடங்கு இருப்பதாகச் சொல்லப்படுவது முழுப் பொய். அப்படி ஒன்றும் அங்கே இல்லை. இவ்வாறு இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்றுத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டித் துறைமுகத்துக்குத் தனியார் வர்த்தக கப்பல்கள் வந்து செல்கின்றன. ஆனால் பொதுமக்களின் பாவனைக்கு அதனை ஏன் கையளிக்க மறுக்கின்றீர்கள் என்று கடற்படையி…
-
- 0 replies
- 317 views
-
-
வடக்கு காணி விவகாரம்: இருநாள் கள விஜயம் பேரின்பராஜா திபான் வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று காணிப் பிரச்சினைகளை அக்குழு ஆராயவுள்ளது. இந்த தகவலை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்…
-
- 1 reply
- 342 views
-
-
“தனித்த பயணத்தை ஆரம்பிக்க தயார்” : எஸ்.பி.திசாநாயக (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து செயற்பட தயாரில்லாத நபர்களை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தனித்த பயணத்தை ஆரம்பிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயார் என அமைச்சர் எஸ்.பி.திசாநாயக தெரிவித்தார். இம்முறை மே தினக் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/19100
-
- 0 replies
- 159 views
-
-
சிவில் பாதுகாப்புப் பண்ணையில் பணியாளர்களிடம் பணம் அறவீடு : அதிகாரிகள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பண்ணைப் பணியாளர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறிவிடப்படுகின்றது என்று செய்யப்பட்ட முறைப் பாட்டை அடுத்து பண்ணையின் அதிகாரிகள் விசாரணைக்காகக் கொழுப்புக்கு அழைக்கப்பட்டனர் என்று தெரியவருகின்றது. போர் நிறைவடைந்த பின்னர் மக்களும், மறுவாழ்வு வழங்கப்பட்ட போராளிகளும் மீள்குடியமர்த்தப்பட்ட னர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் இந்தப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. அங்கு பணியாற்றுபவர்…
-
- 0 replies
- 318 views
-
-
ஹய்ட்டியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றியபோது அங்குள்ள சிறுவர்க ளைத் துர்நடத்தைக்கு உட்படுத்தினர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹாலே வலியுறுத்தினார். ‘ஹெய்ட்டியில் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றியபோது, சிறுவர்களை பாலியல் துர்நடத்தைக்கு உட் படுத்திய இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹெய்ட்டியில் ஐ.நா.வினால் அமைதிகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்ட 900 பேர் கொண்ட இராணுவ பற்றாலியனைச் சேர்ந்தவர்களில் 134 பேர் மீதே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 448 views
-
-
எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் வேலையற்ற பட்டதாரிகள்..! மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டத்தில் குதித்து இன்றுடன் 55 நாட்கள் கடந்தும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் அரசோ அதிகாரிகளோ எடுக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் எத்தனையோ பெயர் வந்து வாக்குறுதிகளை வழங்கினார்கள் அவைகள் அனைத்தும் வெறும் வாக்குறுதிகளாவே இருக்கின்றது. ஆனாலும் தங்களது தொழில் உரிமை கிடைக்கும் வரை போராட்டங்களை கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையுடன் தங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/19064
-
- 8 replies
- 843 views
-
-
நயினாதீவில் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினாதீவுக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். தனது பாரியாருடன் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினை நாகபூசணி அம்மான் ஆலய தரிசனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19092
-
- 1 reply
- 512 views
-
-
பஸ்ஸில் பயணித்த சிறுபான்மையினத்தவர் மீது கொலை வெறித்தாக்குதல் : பொலநறுவையில் சம்பவம் பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டிய என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே நிறுத்தி பேருந்தை சுற்றி வளைத்த ஏழுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோரே வவுனியாவிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் பிரயாணித்த சிறுபான்மைனித்தவர் ஒருவரை இவ்வாறு பலவந்தமாக அடித்து இழுத்துச் சென்று தாக்குதலை மேற்கொண்டுவி…
-
- 0 replies
- 391 views
-
-
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களது உறவுகளை மிரட்டும் பாணியில், தம்மை சி.ஐ.டி எனக் கூறி அவர்களைப் புகைப்படம் பிடித்த இனந்தெரியாதவர்களைச் மடக்கிப் பிடித்த காணாமல் போனவர்களது உறவினர்கள் அவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். காணாமல் போனவர்களது உறவினர்களின் போராட்டம் 54வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய தினம் புதுவருட தினத்தில் கறுப்புடை அணிந்து கண்ணீர் விட்டுக் கலங்கினார்கள். கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என்று கலங்கி நிற்கிறார்கள் அவர்கள். ஆனாலும் அரசாங்கம் எங்களின் போராட்டத்தை கண்டும் காணாதது போல இருக்கிறது என்று பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள். இந்நிலையில் போராட்…
-
- 3 replies
- 640 views
-
-
இலங்கையின் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் குற்றம் சுமத்தும் வகையில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பில் பல முக்கிய சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அவற்றின் பல செய்திகளில் முறைசாரா கழிவு முகாமைத்துவம் காரணமாக இலங்கை ஒரு அசுத்தமான நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. கழிவுகள் மறுசுழற்சி மேற்கொள்ளப்படாமல் உள்ளமை தொடர்பில் ஆச்சரியமடைவதாக அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் இலங்கையை ஏளனம் செய்யும் வகையில் சர்வதேச ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கழிவு முகாமைத்துவம் இல்லாமையினால் பல்வேறு நோய்கள் ஏற்பட கூடும் என்பதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்க…
-
- 0 replies
- 419 views
-
-
இழுவைமடி தொழிலை தடுக்கும் நோக்கில் வடக்கு மீனவருக்கு ஆழ்கடல் படகுகள் - கொழும்பு மீன்பிடி அமைச்சு தீர்மானம் இழுவைமடித் தொழிலைத் தடை செய்யும் நோக்கில் ரோலர் படகுகளுக்கான மாற்றீடாக நீண்ட நாள் தொழில்ப் படகுகளை வடக்கு மாகாண மீனவர்களுக்கு வழங்க கொழும்பு மீன்பிடி அமைச்சுத் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாண மீனவர்கள் இழுவைமடித் தொழிலால் தொடர்ச்சியாகப் பிரச்சி னைகளை எதிர்கொண்டுள்ளனர். அதற்கு மாற்றீடாக ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு ஏற்ற வகையில் 100 நீண்ட நாள் படகுகளை வழங்க கொழும்பு அரசு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் படகுகளை விநியோகிப்பதற்கு…
-
- 0 replies
- 234 views
-
-
யாழ்ப்பாண வணிக வளாகத்தை நகரின் மையத்தில் நிறுவவேண்டும் - வடக்கு மாகாண சபையிடம் வலியுறுத்து “யாழ்ப்பாணத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள வணிக வளாகத்தை நகரின் மையத்தில் அமைப்பதற்கு வடக்கு மாகாண சபை முன்வர வேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். “யாழ்ப்பாணத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாவில் அமைக்கப்படவுள்ள வணிக வளாகத்தை யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைப்பது தொடர்பில் ஆராய மாகாண சபையினர் முன்வர வேண்டும். யாழ்ப்பாணம் நகரச் சந்தை மற்றும் அதனுடன் தொடர்புபட்டதான வெற்றிலைக்கடை, பழக்கடை, சந்தை,…
-
- 0 replies
- 372 views
-
-
சூரியனின் நேர் உச்சம் விலகியது - வளிமண்டலவியல் அலுவலகம் தகவல் “சூரியன் கடந்த சில தினங்களாக இலங்கைத் தீவில் நேர் உச்சம் கொடுத்திருந்தது. மாவிட்டபுரம், வல்லிபுரம், கல்கிசை பகுதிகளில் நேற்றுமுன்தினம் நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் நேர் உச்சம் கொடுத்து, பின்னர் இலங்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் யாழ்ப் பாணப் பிராந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன். “யாழ்ப்பாண மாவட்டத்தின் அதியுச்ச வெப்பநிலை கடந்த 13ஆம் திகதி 34.9 செல்சியசாகவும், 14ஆம் திகதி 34.3 செல்சியசாகவும், நேற்றுமுன்தினம் 34.4 செல…
-
- 0 replies
- 420 views
-
-
புத்தாண்டுக் காலத்தில் ரயிலில் பயணிக்க யாழ்ப்பாண மக்கள் ஆர்வம் காட்டவில்லை - யாழ். தொடருந்து நிலையம் தெரிவிப்பு “தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடருந்து போக்குவரத்தில் யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தற்போது நிலவும் கடும் வெயில் காராணமாக மக்கள் தொடருந்துப் பயணத்தை விரும்புவது குறைவு” இவ்வாறு யாழ்ப்பாண தொடருந்து நிலையத்தின் பயணச்சீட்டு கருமபீடம் தெரிவித்தது. யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் குளிரூட்டிய நகர்சேர் கடுகதி தொடருந்துக்கான ஆசனங்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே முற்பதிவு செய்யப்பட்டன. வழமையாக குளி…
-
- 0 replies
- 220 views
-
-
'பதவி விலகத் தயங்கோம்' எஸ்.நிதர்ஷன் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சமகால நிலமைகள் தொடர்பில் மாவை சேனாதிராசா எம்.பியிடம் நேற்றுச் சனிக்கிழமை (15) வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜே.ஆர்.ஜெயவ…
-
- 1 reply
- 423 views
-
-
விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் வாகன தகர்பு வெடிபொருள் மீட்பு வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு வெடிபொருள் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் 04 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடென்றில் குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. புதுவருடத்தினை முன்னிட்டு வீடு மற்றும் வீட்டின் வளவினை துப்பரவு செய்யும் போது மண்னில் புதையுண்ட நிலையில் குறித்த 15 கிலோ நிறையுள்ள வெடிபொருள் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர் பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வெட…
-
- 1 reply
- 511 views
-
-
புலித் தங்கத்தைக் கையளிக்க ஏற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பில் தேடியராந்து பார்ப்பதற்காக, நியமிக்கப்பட்ட குழுவானது தங்களுடைய பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது என்றும் அவ…
-
- 0 replies
- 360 views
-
-
கூட்டமைப்பின் எதிர்காலம்! இதனை வாசிக்கும் ஒருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தப் பத்தியாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா?இது நியாயமான கேள்விதான். ஆனால் கூட்டமைப்பு என்பது வெறும் கட்சிகளின் கூட்டல்ல, மாறாக அது பெரும்பான்மை தமிழ் மக்களின் உணர்வுநிலையின் வடிவம். எதிர்கால தமிழ்த் தலைமுறைக்கு சரியான வழியை காண்பிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு மக்கள் தலைமை. எனவே தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கேள்வி எழும் போது, அது முதலில் கூட்டமைப்பின் மீதான கேள்வியாகத்தானே இருக்க முடியும். இதன் காரணமாகவே அவ்வப்போது இப்பத்தியாளர் கூட்டமைப்பை முன்னிறுத்தி எழுத நேர்கிறது. தமிழில் ஒரு பழமொழியுண்டு காய்க்கி…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழர் பிரச்சினையை தீர்க்க பதவியை துறந்தும் போராடத் தயார் - மாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவதுதான் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கு மென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்கமாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல என தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சமகால நிலமைகள் தொடர்பில் மாவை சேனாதிராசா எம்.பியிடம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ்.ஊடகவியளாளர்கள் சிலர் சந்தித்து வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 338 views
-
-
சற்றுமுன் இலங்கையில் பூமியதிர்ச்சி நாட்டின் தென்பகுதியில் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூமியதிர்ச்சி காலி பிரதேசத்திலிருந்து 1500 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19075
-
- 2 replies
- 609 views
-
-
தமிழர்கள் ஒற்றுமைப்படாவிட்டால் இனமானத்தின் கூர்மை எதிரிகளால் முறிக்கப்படும் பிறந்திருக்கும் ஹேவிளம்பி வருடத்தை இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டாடவில்லை. யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ்மக்களின் வாழ்விடங்களில் நாளாந்தம் மரணம் நிகழ்ந்தது. வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. அகதி முகாம்களில் ஒருவேளை உணவுக்காக நீண்ட வரிசைகளில் தமிழர்கள் கையேந்தி நின்றார்கள். நல்ல நேரம்,ராசியான வர்ண உடை, மருத்து நீர் குளியல் எல்லாமும் தமிழ் மக்களுக்கு பல ஆண்டுகளாக பொருந்திப்போகவில்லை. மருத்து நீர் தேய்த்து குளித்து,ராசியான நிறத்தில் உடை அணிந்து, சுப நேரத்தில் ஆலயம் சென்று வழிபட்டால்தான் படைத்தவன் அருள் புரிவான் என்றால்,தமிழ் மக்…
-
- 0 replies
- 379 views
-
-
கிளிநொச்சி பூனகரி 10- கட்டடைப்பகுதியில் விபத்து ஒருவர் உயிழப்பு இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு:- கிளிநொச்சி பூனகரி 10- கட்டடை, பூநகரி முட்கொம்பன் சந்தியில் இடம் பெற்ற வீதிவிபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையிலும் மற்றயவர் யாழ்ப்பாண வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக தனது சொந்த வாகனத்தில் பயணித்த யாழ் போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியின் வாகனம் பூநகரி பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு த…
-
- 0 replies
- 523 views
-
-
வாள்கள், பொல்லுகளுடன் வந்த இனம்தெரியாத நபர்கள் இளம் பெண் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக குறித்த பெண்ணின் தாயாரால் முறைப்பாடு ஒன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொன்னாலை வீதி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்தியுடன் வந்த 8 பேர் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று கலவரம் செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த 20 வயதுடைய இளம் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளார். அவரை துரத்திச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அப் பெண்ணை பலவந்தமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தனது மகளை மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் தாயாரால் முறைப்பாட…
-
- 7 replies
- 624 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பகுதி யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இப்பிரதேசத்து மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இறுதியாக 2017ஆம் ஆண்டு அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இடம்பெயர்ந்து, அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்து பல நெருங்கடிகளையும் சந்தித்து, சொந்த இடங்களுக்கு குடியமர்த்தும் போது, ஏற்கனவே இருந்த வீடுகளும் உடைக்கப்பட்டு, வீடுகளில் இருந்த சொத்துடமைகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறுமையாகவே காணப்பட்டன. இதனால் மீண்டும் தாம் வாழ்வதற்கான வீடுகளை அமைத்து, வீட்டிற்கான பொருட்களை தேடி பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். மக்களை குடியேற்றிய நல்லாட்சி அரசாங்கமும், அவர்களுக்கான அடிப்படை …
-
- 5 replies
- 653 views
-
-
காணி, அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை – சம்பந்தனிடம் ஒப்புக்கொண்ட மைத்திரி தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்குமாறு ஒரு வருடத்திற்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டபோதும் இதுவரையில் ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந…
-
- 2 replies
- 627 views
-