Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இனவாத போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த 'மஹசோன் பலகாய' உறுப்பினர் இருவர் கைது..! (எம்.எப்.எம்.பஸீர்) 'மஹசோன் பலகாய' எனும் அமைப்பின் உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் இருவர் ஒரு தொகை இனவாத போஸ்டர்களுடன் அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 31, 26 வயதுகளை உடைய இருவரே இவ்வாறு கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இனவாத செயற்பாடுகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19006

  2. இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தை இன்று ஆரம்பித்தார் வவுனியா இளைஞர் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை வவுனியா இளைஞன் இன்று ஆரம்பித்துள்ளார். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இன்று ஆரம்பித்தார். சுமார் 11 நாட்கள் 1515 கிலோமீற்றர் தூரத்தினை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்யவுள்ளார். http://newsfirst.lk/tamil/2017/04/இலங்கையை-சைக்கிளில்-சுற்/

  3. மே மாதத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரிச் சலுகை வழங்குவது குறித்து ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் எதிர்வரும் 19ம் திகதி பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய விசேட கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள், தொழிலார் உரிமைகள் போன்றன குறித்து ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கைக்கு வந்துள்ள பிரதிநிதிகள் ஆராய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archive…

  4. தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் – இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். யுத்தத்தால் இடம்பெயர்ந்து, பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள 150 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். http://newsfirst.lk/tam…

    • 19 replies
    • 1.9k views
  5.  'ஹம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு எம்மிடமே உள்ளது’ டோக்கியோவிலிருந்து மேனகா மூக்காண்டி சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப் படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், இந்து சமுத்திரத்தின் நுழைவாயிலாக இலங்கையை மாற்றுவதே, தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள்” என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மூலோபாயத்தின் ஊடாக, ஜப்பானின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார். “அத்துடன், கொழும்புத் துறைமுகத்தின் வடக்குப் பிரிவை, 8 முதல் 10 மைல்கள் வரை (ஜா-எல பிரதேசம் வரை) நீடித்து, இந்து சமுத்திரத்தில் காணப்படும் பாரிய துறை…

  6. ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம்:‘காலம் குறையும் சாத்தியம்’ டோக்கியோவிலிருந்து மேனகா மூக்காண்டி “ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும்” என்று, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார். “அத்துடன், இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வருட குத்தகைக் காலத்தைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும்’ என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கான மூன்று நாட்கள் உத்தி…

  7.   ‘உயிரோடு இறந்த தலைவர் ரணில்’ ஜனனி ஞானசேகரன் “தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வியாபாரத்தின் அடுத்த இலக்கு, திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பக்கம் திரும்பியுள்ளது” என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “திருகோணமலை துறைமுகத்தில், எண்ணெய்த் தாங்கிகள் 102 காணப்பட்டன. ஆனால், அதில…

  8. பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு: 'முறையிட்டால் நடவடிக்கை’ பேரின்பராஜா திபான் “இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்று, சமூகவலைத் தளங்களிலும் இணையத் தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. …

  9. வடக்கு கிழக்கு சுகாதார அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபா: லைக்கா இலங்கையின் வடக்கு கிழக்கில், 200 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய சுகாதார அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளத் தயார் என லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், லைக்கா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியினையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களின் வீட்டுத் தேவையினை லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஊடாக பூர்த்தி செய்து வைத்…

  10. உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்!! – வீ.ஆனந்தசங்கரி அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு, உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள். எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு மாநகரசபை வேட்பாளனாக அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் பிறந்திருக்கவில்லை. 1991ம் ஆண்டு சட்டத்தரணியாக நீங்கள் சத்தியபிரமாணம் செய்தபோது அத்துறையில் நான் 27 ஆண்டுகளை கடந்துவிட்டேன். நான் ஒரு செல்வந்தன் அல்ல. பெரிய ஒரு குடும்பத்தில் உறுப்பினர் ஆகையால் அன்று எஸ்.எஸ்.சி இன்றைய க.பொ.த(சா.தரம்) வகுப்புக்கு மேல் எனது பெற்றோரால் கல்வியை தர முடியவில்லை. ஓர் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியனாகவும், பிரத்தியேக வக…

  11. கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன் – அமைச்சர் றிஷாட் கேப்பாபிலவு மக்களின் காணி மீட்புப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தகாணியை மக்களுடன் பெற்றுக்கொடுப்பதற்கான உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் றிஷாட் உறுதியளித்தார். இன்று காலை(11-04-2017) தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாதக சாலி, மற்றும் சட்டத்தரணி என்.எம் சஹீட் ஆகியோருடன் அந்த இடத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடினார். பிரச்சினைகளை கேட்டறிந்த பின் மக்கள் மத்தியில் கருத்துத்தெரிவித்த போது, நல்லாட்சியை கொண்டுவர உழைத்த சிறுபான்மை மக்களை இன்று நடுத்தெருவில் நின்று போராட்டம் நடாத்துவதற்கு புதிய ஆட்சி தள்ளியுள்ள…

  12. நுண்நிதி நிறுவனங்களால் நொந்து நுாலாகும் நிலை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள், ‘‘சிறுப்பிட்டியில் கில்லாடிப் பெண் கைது’’ என்ற தலைப்பில் உதயன் நாளி தழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதனை வாசித்தபோது 64 குடும்பப் பெண்களிடமிருந்து, ஒருவரிடமிருந்து 5000 ரூபா வீதம் என்ற ரீதியில் 3,20,000 ரூபாவை ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட ‘கில்லாடிப் பெண்’ ஒருவரைத் தாம் கைது செய்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருந்தனர் என விவரம் வௌியிடப்பட்டிருந்தது. அரச வங்கி ஒன்றில் வேலை பார்ப்பதாகப் பொய்யாகத் தம்மை இனம் காட்டிக் கொண்ட அந்தப் பெண், வங்கியில் இருந்து ஒவ்வொரு வருக்கும் 5,00,000ரூபா வரையில் கடன் பெற்றுத் தருவ தாகக் கூறியே ஒவ்வொருவரிடம் இரு…

  13. வடக்கில் இராணுவத்தினரிடம் உள்ள காணிகள் தொடர்பில் முற்றிலும் மாறுபட்ட தரவு வெளியிடும் நல்லிணக்க செயலணி அனு 4 hours ago தமிழீழம் 3 Views வட பகுதியில் மட்டும் இன்னமும் 65 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் படையினர் குந்தியிருக்கும் நிலையில் தற்போது வெறும் 27 ஆயிரத்து 230 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே வடபகுதியில் படையினர் நிலை கொண்டுள்ளதான தகவலை வேண்டுமென்றே கசிய விட்டு சர்வதேசத்தையும் சமூக ஆர்வலர்களையும் திசைதிருப்ப முயற்சிக்கின்றதா தேசிய நல்லிணக்க செயலணியின் அலுவலகம் .என்ற மிகப் பெரும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் முப்படையினரின் வசம் தற்சமயம் 27 ஆயிரத்து 230 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகள் உள்ளதாகவே குறித்த தேசி…

    • 0 replies
    • 237 views
  14. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 600 கோடி ரூபா உதவி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 600 கோடி ரூபா உதவியை வழங்க உள்ளது. நல்லிணக்கத்தை பலப்படுத்தல் மற்றும் விவசாய துறையை நவீனமயப்படுத்தல் ஆகிய திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 42 மில்லியன் யூரோக்களை வழங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக இலங்கையின் விவசாயத்துறை மேம்படுத்தப்பட உள்ள நிலையில் விவசாயத்துறை மேம்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 30 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளது. http://globaltamilnews.net/archives/23932

  15.  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு ரூ.7.6 மில். நட்டம் ஜனனி ஞானசேகரன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட ஆறு மாத காலப்பகுதியில், 7.6 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “திரட்டிக்கொண்ட கறுப்புப் பணத்தை, ஏதாவதொரு இலாபம் தரக்கூடிய வியாபாரத்தில் முதலிடுவது போலவே, இந்த கட்டுநாயக்க விமான நிலைய…

  16. என் சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்! - ஆனந்தசங்கரி [Monday 2017-04-10 06:00] தனது அறிவுரையைக் கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்- முன்னைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றக்கு வந்தனர். ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்…

    • 4 replies
    • 578 views
  17. வவுனியாவில் ரயில் கடவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : பொலிஸார் கடமையில்! பண்டிகைக் கால முற்கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கு ரயில் கடவை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என வடக்கு கிழக்கு ரயில் கடவை காப்பாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். எனினும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் ரயில் கடவை ஊழியர்கள் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/18964

  18. மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் 50 ஆவது நாளாக ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 50 தினங்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக தமக்கான நியமனங்களை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டத்தில் பட்டதாரிகள் ஈடுபட்டுவருகின்றனர். மத்திய அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் எங்களை ஏமாற்றாமல் நியாயமான தமது கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது பட்டதாரிகள் வலியுறுத்தினர். இதன்போது 'வெற்றிடங்கள் ஏராளம், பட்டதாரிகள் வீதியோரம், எதிர்க்கட்சி ஆளும் கட்சிக்கா எமக்கா?, தட்டித்திறக்கவில்லையாயின் முட்டித்திறப்போம், பட்டதா…

  19. புகையிரதக் கடவை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் : மக்கள் ஆபத்தில் மட்டக்களப்பில் புகையிரத கடவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் விதமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகின்றது. தங்களது சம்பள கோரிக்கையை முன்வைத்து இந்த பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதக் கடவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 8 மணி நேரம் வேலை செய்தல் 250 ரூபா சம்பளம் தருவதாகவும் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்றே இந்த பணி பகிஷ்கரிப்பில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் மிகுந்த அச்சத்துடன் புகையிரதக் கடவை வழியாக பயணிப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளமை குறிப்…

  20. ஒரு மாறுபட்ட அடக்குமுறை ஈழ நாட்டில் வேரூன்ற தொடங்கியுள்ளது. இதனை அடக்கு முறை என்பதை விடவும் அழிப்பு முறை என்று சொல்வதே பொருத்தம். இருந்த நிலை மாற்றப்பட்டு வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு, அங்கு ஓர் செயற்கையான கலாச்சாரம் ஏற்படுத்துவதனையும், உட்புகுத்துவதனையும் புதுவித ஆக்ரமிப்பு படலமாக மட்டுமே நோக்க முடியும். அப்படிப் பார்க்கும் போது இதனையும் கூட ஒரு வகையில் இன அழிப்பு பட்டியலுக்கும் அடக்கிவிட முடியும். அதற்கான ஓர் அடித்தளமாகவே பலவந்தமான ஓர் கலாச்சாரத் திணிப்பு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது இப்படியே தொடருமானால் “தமிழும் தமிழர்களும் இனி மெல்ல மெல்ல சாவார்கள்” என்ற பதம் மட்டும் உண்மையாகி விடக்கூடிய சூழலில் இலங…

  21. அடிப்படை வசதிகளின்றி மருதங்கேணி வைத்தியசாலை தாதியரின் பணிகளையும் வைத்தியர் பார்க்கும் அவலம் யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மிக மோசமான அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருவதாக நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை குடாரப்பு முதல் சுண்டிக்குளம் வரை பதினொரு கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய வைத்தியசாலையாக காணப்படுகிறது. ஆனால் அதற்குரிய போதுமான அடிப்படை வசதிகள் எவையும் செய்துகொடுப்படவில்லை, பிராந்திய சுகாதார திணைக்களம், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவு…

  22.  ‘தஹம்’ பரீட்சைக்கு 39 கைதிகள் தோற்றினர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 39 பேர், தஹம் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தஹம் பாடசாலை இறுதி சான்றிழதழ்ப் பரீட்சை 2016-2017, மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. இந்தப் பரீட்சைக்கு தோற்றிய கைதிகள், சிறை செல்வதற்கு முன்னர் ஒருநாளேனும், பாடசாலைக்குச் சென்றதில்லை என்றும் அறியமுடிகிறது. தஹம் பாடசாலை இறுதி சான்றிதழ் பரீட்சையில் இவர்கள் சித்தியெய்தி…

    • 0 replies
    • 235 views
  23. வடக்கு, கிழக்கு கடவைகளில் ‘நில்’ 11-04-2017 09:53 AM Comments - 0 Views - 30 கனகராசா சரவணன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் ரயில்க் கடவை காப்பாளர்கள், நேற்று (10) முதல் காலவரையறையற்ற பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால், கடவைகளை கடக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானதுடன் கடக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். புதுவருடம் மற்றும் ஏனைய பண்டிகை காலங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்,சிற்றூழிர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும் அல்லது வீதி அதிகார சபையில் வீதி பரமரிப்பாளர்களாக இருக்கும் வெற்றிடத்துக்குத் தங்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்…

  24.  ‘வழிமறித்தவரை விட்டு விடுங்கள்’ தன்னுடைய உத்தியோகபூர்வ வாகனத்துக்கு, அவருடைய காரின் மூலமாக வெட்டுப்போட்டுவிட்டு, வழிமறித்து ஓட்டிச்சென்ற சாரதியிடம், இனிமேல் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு ‘வெட்டுப் போட்டு’ காரை ஓட்டியவர், சீனாவில் வைத்திய பீடத்தில் கல்விபயிலும் இலங்கை மாணவன் என்றும் அவர் தவறான முறையில், காரை செலுத்தவில்லை என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 6ஆம் திகதியன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்திலிருந்து சுதந்திர சதுக்கத்துக்கு தன்னுடைய உத்தியோகபூர்வ காரில் பயணித்து…

    • 0 replies
    • 286 views
  25. மருத்துவ பீடத்துக்கு அனுமதி பெற உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு அவசியம் அரச மருத்துவ பல்கலைக்கழகம் அல்லது தனியார் மருத்துவ கல்லூரி என்பவற்றுக்கு ஒரு மாணவன் பிரவேசிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விஞ்ஞான துறையில் 2 ஏ, சித்திகளையும், 1 பீ. சித்தியையும் பெற்றிருக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது. மருத்துவ பீடமொன்று பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச தகைமைகள் அடங்கிய அறிக்கையில் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளது. வைத்திய பீடமொன்றுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் ஒருவர் பெற்றிருக்க வேண்டிய இந்த குறைந்தபட்ச தகைமை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நிபந்தனையிடப்பட்டிருந்ததாகவும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. இம்முறையும் இந்த சட்…

    • 0 replies
    • 159 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.