ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143374 topics in this forum
-
தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,இந்நிகழ்வில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் தடுப்பு காவல் கைதிகளுக்கும் பிணை வழங்குமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றை பெற்று தரும்படி கோருகிறார்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்க சட்ட மாஅதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து சாத்தியமாகியது. இந்நிலையில் பல வருடங்களாக நீண்ட கால தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த காலங்களை விட , இன்று தமிழ் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது …
-
- 1 reply
- 231 views
-
-
தினேஷ் – மைத்திரி இரகசிய சந்திப்பு? ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன உட்பட மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத் தில் நடைபெற்றுள்ளது. தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமலவீர திசாநாயக்க ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18888
-
- 0 replies
- 237 views
-
-
ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் ஐ.நா. தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள 2 வருட கால அவகாசத்தினுள் அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்த கால அட்டவணை ஒன்றை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறித்த அட்டவணையை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்குதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 163 views
-
-
விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.8 எக்கர் மக்களின் நிலம் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காணி விடுவிப்பதற்கான உறுதிப்பதிரத்தை யாழ் மாவட…
-
- 0 replies
- 260 views
-
-
சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளது சர்ச்சைக்குரிய நீலப்படையணி மீளவும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்த நீலப்படையணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, இந்தப் படையணியின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த போதும் தற்பொழுது மீளவும் இந்த படையணியின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஸவின் பிறந்த நாளைத் தொடர்ந்து இந்தப் படையணியின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. நீலப்படையணி பல்வேறு மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 341 views
-
-
இலங்கையிலிருந்து ஓமானிற்கு தினமும் நேரடி விமானச்சேவை..! இலங்கையிலிருந்து ஓமான் வரை தினமும் நேரடி விமான சேவை ஒன்றை தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான் மற்றும் இலங்கையிற்கிடையிலான பயணத்தை இலகுவாக்கு முகமாக, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, மஸ்கட் விமான நிலையம் வரையான நேரடி விமானசேவையை தொடங்கவுள்ளது. மேலும் குறித்த விமான சேவையானது வாரத்தில் 5 தடவைகள் இடம்பெறவுள்ளதாகவும், குறித்த பயண சேவையின் மூலம், ஓமானிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு …
-
- 0 replies
- 153 views
-
-
10 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் கொள்ளை : களுவாஞ்சிக்குடியில் சம்பவம்! களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பெரியகல்லாற்றில் நேற்று இரவு வீடு புகுந்து திருடர்களால் தங்கநகைகள், பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பெரியகல்லாறு மூன்றாம் குறிச்சியில் உள்ள திருமதி ராஜேந்தினி ஞானசேகரம் என்பவரின் வீட்டிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. தங்கநகைகள், மூவாயிரம் ரூபா ரொக்கப்பணம், 11 முக்கால் பவுண் தாலிக்கொடி ஒன்றும், ஒரு பவுண் அளவில் இரண்டு காப்புக்களும், மூன்றரை பவுண் மாலை ஒன்றும் உள்ளிட்ட 17 1/4 பவுண் நகைகளையும் அபகரித்துச்சென்றுள்ளார்கள் இச்சம்பவம் அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட…
-
- 0 replies
- 240 views
-
-
எனது பிள்ளை ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் – தாயொருவரின் கதறல் இராணுவத்திடம் சரணடைந்த தன்னுடைய மகன் வேறு எங்கே போவது? அவன் ஏதோ ஒரு முகாமில்தான் இருப்பான் என தாயொருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவன ஈர்ப்பு நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மீட்பை வலியுறுத்தி கிளிநொச்சியில் பெப்ரவரி 20 தொடங்கப்பட்ட போராட்டம் இன்று 49ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின்போது, இராணுவத்திடம் சரணடைந்த, போரின் இறுதியில் காணாமல் போன தம்முடைய பிள்ளைகளின் விடுதலையை வலியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 277 views
-
-
நீதிமன்ற செயற்பாடுகளில் பிரதமர் தலையிடுகின்றார் – அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஜே.என்.பி. கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நீதிமன்ற செயற்பாடுகளில்; தலையீடு செய்துள்ளார் என என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை ஜனாதிபதியும், பிரதமரும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அவ் அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை ம…
-
- 0 replies
- 167 views
-
-
ஜேர்மனி இளம் விஞ்ஞானிகள் போட்டியில் மன்னார் மாணவன் பங்கேற்கிறார்! [Saturday 2017-04-08 08:00] ஜேர்மனியில் ஸ்டுட்கார்ட்டில் இடம்பெறும் 24வது தேசிய இளைஞர் விஞ்ஞானிகள் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டி எதிர்வரும் 16ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் ரகிது விக்ரமரத்ன மற்றும் மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் ஜிதேந்திரன் ஜீட் சஜித் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கான விமான டிக்கட்டுகள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் வழங்கப…
-
- 2 replies
- 411 views
-
-
ஆவா குழுவைச் சேர்ந்த ஐவர் கைதடியில் கைது - மறைந்திருந்தவேளையில் மடக்கினர் யாழ். பொலிஸார் ஆவா எனப்படும் வாள்வெட் டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 5 பேர் யாழ்ப்பாணம், கைதடியில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்கள் மறைந் திருப்பதாகப் பொலிஸா ருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கைதடியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் களமிறங்கிய பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர் என யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரெனிஸ்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் ஆ…
-
- 1 reply
- 277 views
-
-
அதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு – ஒருவர் கைது கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இன்று மாலை பரந்தன் சிவபுரம் உண்டியல் சந்திக்கு அருகில் வைத்து கஞ்சாவுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள்ளார் கறுப்புநிற பை ஒன்றினுள் கஞ்சாவினைக் கொண்டு குறித்த பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர.; குறித்த இளைஞன் வயல் வெளியினூடு ஓடுவதற்கு முற்ப்பட்ட வேளை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாவும் அவரிடம் இருந்து சுமார் நான்கு கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் …
-
- 0 replies
- 378 views
-
-
உணவு விஷமானதில் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதி - 3 பேர் உயிரிழப்பு அம்பாறை பகுதியில் உணவு விஷமானமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர். அம்பாறை - தமன - வானேகமுவ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு விஷமானமையினால் மேலும் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 120 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அம்பாறை, சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை - இறகாமம் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.ஹலீமா (45), மொஹமட் காசிம் (53) மற்றும…
-
- 2 replies
- 323 views
-
-
கடற்படை கப்பக்குழு வெள்ளைவேன் கடத்தல்களின் சூத்திரதாரி எங்கே? கொலையாளியை விட அவனைப் பாதுகாப்பவன் மிக ஆபத்தானவன்' என்பார்கள். ஆம், உண்மைதான். நாட்டில் இடம்பெற்ற பல கொடூரமான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் போது அதனை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகிறது. அதுவும் சட்ட ரீதியான மதிக்கத்தக்க உத்தியோகபூர்வ சீருடைக்குள் பதுங்கி, கீழ்த் தரமான, மிருகத்தனமான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையும் அதனை அரங்கேற்றியவர்கள் தேசத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்தோர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையிலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் தலைமைகள் மிக மிக ஆபத்தானவை. நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள்,…
-
- 0 replies
- 484 views
-
-
பாபுல், பீடா விற்றால் ஒரு வருட சிறையாம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலை தூள், இலத்திரனியல் சிகரெட், பேன் மசாலா, குட்கா பாக்கு வகைபோன்றவைகளை விற்பதற்கும் இறக்குமதி செய்வதற்குமான தடைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் மேற்குறித்தவற்றை விற்பனை செய்தால் 2000 ரூபா தண்டப்பணம் அல்லது ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசார மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதி சட்டமூலம் நேற்று விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக …
-
- 1 reply
- 499 views
-
-
சமுர்த்தி அபிமானி -2017 -எஸ். பாக்கியநாதன் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, 'சமுர்த்தி அபிமானி -2017' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து சமுர்த்தி பயனாளிகளின் கைப்வினைப்பொருட்களின் கண்காட்சி, இன்று சனிக்கிழமை (08) நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. - See more at: http://www.tamilmirror.lk/194516/சம-ர-த-த-அப-ம-ன-#sthash.Gbg7NZUn.dpuf
-
- 0 replies
- 174 views
-
-
பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்க…
-
- 56 replies
- 5.5k views
-
-
கபொத சாதாரண தரப்பரீட்சையில் கடைசி இடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்! - அதிர்ச்சித் தகவல் [Saturday 2017-04-08 08:00] தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த, சாதாரணதர பரீட்சையிலும் மாகாண மட்டத்தில் கடைசி இடங்களில் உள்ளன. இது கவலையளிக்கும் விடயம் என, தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2012ஆம் ஆண்டு முதல் வடக்கு மாகாணம் ஒன்பதாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் எட்டாம் இடத்திலும் கல்வியில் உள்ளமை பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நாம் அனைவரும் பொறுப்புக்கூ…
-
- 0 replies
- 270 views
-
-
வடக்கு மாகாண சபையின் வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த 90 ஆவது அமர்வு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நியமனங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை உறுப்பினர்கள் கதைத்துக்கொண்டு இருக்கின்ற போதிலும் அவற்றுக்கு ஒரு தீர்க்கமான தீர்வைக் கண்டதாக இல்லை. வடக்கு மாகாண சபையின் ஒவ்வொரு அமர்விலும் ஏதோவொரு வகையில் நியமனங்கள் தொடர்பாகக் பேசப்படுகின்ற போதிலும் அதில் அக்கறை செலுத்தி தீர்வைக் காணமுடியாத நிலையே காணப்படுகின்றது. சுகிர்தனின் கோரிக்கை …
-
- 0 replies
- 223 views
-
-
பொலிஸார் கேட்காமலேயே இலஞ்சம் கொடுக்கிறார்கள் யாழ்ப்பாணச் சாரதிகள் - மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் சில பொலிஸார் இலஞ்சப் பணத்தைக் கேட்பதற்கு முன்னரே சாரதிகள் தாமாக முன்வந்து இலஞ்சம் கொடுக்க முயல்கிறார்கள். ஆயினும் பொலிஸார் இலஞ்சம் வாங்கும் செயலில் ஈடுபடக்கூடாது என யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்தார். போக்குவரத்துப் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப் பணத்தின் வெகுமதித் தொகையை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இ…
-
- 0 replies
- 282 views
-
-
விமான நிலையம் தொடர்பில் எத் திட்டமும் அரசிடம் இல்லை - ஹர்ஷ டி சில்வா கொழும்பு - கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்பதற்கோ அல்லது மறுசீரமைப்பதற்கோ எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை இவ்வாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே பிரதியமைச்சர் இவ் விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்காக தேசிய கொடியையைப் பயன்படுத்துவது பண்பாடல்ல. கடந்த அரசின் காலத்தில் சட்ட நடைமுறை சீர்குலைந்திருந்தது என்பதை இன்று சிலர் மறந்து பேசுகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட…
-
- 0 replies
- 179 views
-
-
வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை செல்வநாயகம் கபிலன் விடுவிக்கப்பட்ட வலிவடக்கு உறணி பகுதியில் மக்களின் துரித மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த வகையில் இந்தப் பிரதேசத்தில் 400 குடும்பங்கள் வாழ்வதற்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட உங்கள் காணிகளை இன்றில் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குட்ட ஊறணி கிராமத்தில் 28.8 ஏக்கர் காணி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் மீள்குடியேற்றத்துக்காக, நேற்று வெள்ளிக்கிழமை (07) விடுவிக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 277 views
-
-
யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளன அமைச்சர் ராஜித நிலைப்பாட்டை மாற்றுகிறார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யாழ்.விஜயத்தின் போது நான் கூறாத விடயங்களே ஊடகங்களில் அறிக்கை இடப்பட்டிருக்கின்றன. ஊடக செய்தி அறிக்கைகளில் உள்ளவாறு நான் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள் ளிக்கிழமை மதுவரிக் கட்டளை சட்டத்தின் கீழான அறிவித்தல், புகை யிலை மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ஆகிய சட்ட மூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய…
-
- 0 replies
- 222 views
-
-
பட்டதாரிகளின் போராட்டத்திற்கு மாகாண சபைகளே தீர்வுகாணலாம் சபையில் இராஜாங்க அமைச்சர் இராதா விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களுக்கு மாகாணசபைகளாலேயே தீர்வு காண முடியும். அதற்கான அதிகாரம் 13ஆவது திருத்தச்சட்டத்திலேயே உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வௌ்ளிக்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித…
-
- 0 replies
- 162 views
-