ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
பாராளுமன்ற விவாதத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடன் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் , நிதி அமைச்சர்களை நோக்கி திரு வியாழேந்திரன் பேசியபோது!
-
- 0 replies
- 181 views
-
-
பரராஜசிங்கம் கொலை வழக்கு: குற்றப்பத்திரம் தாக்கல் எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் முன்னிலையில், நேற்று (08) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திர…
-
- 0 replies
- 465 views
-
-
‘தீர்ப்பை மாற்ற மாட்டேன்’; ‘சண்டித்தனத்துக்கு சளைக்கேன்’ ஜே.ஏ.ஜோர்ஜ் சபாநாயகர் கடும் உத்தரவுகளையும் கட்டளைகளையும் பிறப்பித்தார். அவைக்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதேவேளை, நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன, அவையிலிருந்து வெளியேற்றுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டமை போன்றவை இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பதிவாகியிருந்தன. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போது, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை நாடாளுமன்றத்துக்கு தனிக்கட்சியாக அங்கிகரிக்கமுடியாது என்று பல உதாரணங்களையும் விளக்கங்களையும் அளித்து தனது தீர…
-
- 0 replies
- 431 views
-
-
மீனவர் மீதான துப்பாக்கிசூட்டு விவகாரம் : ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை நாடும் மீனவர் அமைப்பு..! இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்க வந்தபோது, கடற்படையால் சுடப்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, இந்திய மீனவர் அமைப்பு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடொன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர் பிரிட்ஜோ என்பவர் கடந்த 6 ஆம் திகதி, இலங்கை கடற்படையால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில், இரு நட்டு அரசாங்கங்களும் குறித்த விடயம் தொடர்பாக, தமது மௌனத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது தாம் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடவுள்ளதாக தேசிய மீனவத்தொழிலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட…
-
- 0 replies
- 213 views
-
-
பஸ்ஸில் ஏற்றிச் சென்ற மகனுக்கு நடந்தது என்ன..? : அரசு பதில் கூற வேண்டும் முல்லைத்தீவு வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் வைத்து 2009.05.19 அன்று இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த எனது மகனும் மருமகளும் இராணுவத்தினரால் பஸ்ஸில் ஏற்றிச்செல்லப்பட்டனர். அவர்கள் எங்கே.? தயவு செய்து இருவரையும் மீட்டுத்தாருங்கள்.. என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஒருவரான கிருஸ்ணகுட்டி கலாவதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்வர்களின் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட 63 வயதான தாயொருவர் தனது கண்ணீர் கதையை கூறும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர்…
-
- 0 replies
- 326 views
-
-
கடலில் மிதந்து வந்த கஞ்சா : யாழில் சம்பவம்..! கடற்பரப்பில் மிதந்து வந்த ஒருதொகை கேரள கஞ்சாவினை ஊர்காவற்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் நயீனாதீவு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்கள் சிலர், கடலில் பொதியொன்று மிதந்து வருவதை கண்டநிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பொதியை கைப்பற்றி சோதனையிட்ட போது, அதனுள் கேரள கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நீர் சுமையுடன் கைப்பற்றப்பட்ட சுமார் 52 கிலோ கிராம் கஞ்சாவை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக போலீசார…
-
- 1 reply
- 316 views
-
-
கால அவகாசத்திற்கான சுமந்திரனின் நியாயப்படுத்தலை நிராகரிக்கின்றோம் 3 கட்சிகளின் கருத்துக்களை கூட்டமைப்பு புறக்கணிக்கின்றது என்கிறார் சிறிகாந்தா (எம்.நியூட்டன்) அரசியல் தீர்வைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது உடனடிச் சாத்தியம் இல்லை என்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை நியாயப்படுத்தியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.சிறிகாந்தா தெரிவித்து…
-
- 2 replies
- 487 views
-
-
தினேஸ் குணவர்தனவுக்கு ஒரு வாரத்துக்கு தடை : வாக்கெடுப்பு நிறைவேறியது (ஆர்.ராம், மின்ஹாஹ்) பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் உறுப்பினருமான தினேஷ் குணவர்தனவுக்கு எதிரான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் பாராளுமன்றில் நிறைவேறியுள்ளது. தினேஸ் குணவர்தனவை பாராளுமன்ற சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 85 பேரும் எதிராக 22 பேரும் வாக்களித்ததோடு 114 பேர் சமூகமளிக்கவில்லை. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை. இதனையடுத்து தினேஷ் குணவர்தன பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 241 views
-
-
ஐ.நா.வுக்கான கடிதத்தில் மூன்று எம்.பி.க்கள் கைச்சாத்திடவில்லையாம் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிக்கை (நமது நிருபர்) அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு அறிவித்துள்ளதாக அதன் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி. ஸ்ரீநேசன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மற்றும் கே. கோடீஸ்வரன் ஆகிய மூவருமே ஐ.நா. மனித உரிமை ஆணைக்கு…
-
- 2 replies
- 371 views
-
-
விமல் வீரவன்ச சுயாதீனமாக செயற்படலாம் : ஆனால் கட்சியை அங்கீகரிக்க முடியாது : சபாநாயகர் (ஆர்.ராம்) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐந்து பேர் சுயாதீனமாக செயற்படலாம் என்றாலும் பாராளுமன்றத்தில் தனிக்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டம் மற்றும் பாராளுமன்ற நியதி சட்டங்கள் அடிப்படையில் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரை தனிக் கட்சியாக அங்கீகரிக்க முடியாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னண…
-
- 0 replies
- 262 views
-
-
பாராளுமன்றத்தில் பதற்றம் : சபை நடவடிக்கை ஒத்திவைப்பு (ஆர்.ராம்) பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஐந்து பேர் சுயாதீனமாக செயற்படலாம் என்றாலும் பாராளுமன்றத்தில் அவர்களின் கட்சியை தனிக்கட்சியாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்ததை தொடர்நது பாராளுமன்றத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடத்துக்கு ஒத்திவைத்துள்ளார். கூட்டு எதிரணியினர் கோஷம் எழுப்பியதால் ஏற்பட்ட பதற்றநிலையை தொடர்ந்தே சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/17518
-
- 0 replies
- 354 views
-
-
ஏழு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஒருவர் ஆகியோருக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 49 கோடியே 49 இலட்சத்து 62 ஆயிரத்து 790 ரூபா நிதி கோரி குறைநிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆளும்தரப்பு பிரதம கொறடாவும் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலகவே இந்த குறைநிரப்பு பிரேரணையை நேற்று சபையில் சமர்ப்பித்துள்ளார். இதில் எதிர்க்கட்சித் தலைவருக்காக வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 3,74,73,540 ரூபாவும் இந்த குறைநிரப்பு பிரேரணையின் மூலம் கோரப்பட்டுள்ளது. விசேட செயற்திட்டங்கள் அமைச்சருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக 4,26,00,000 ரூபாவும், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் …
-
- 0 replies
- 585 views
-
-
‘கைவிலங்கு’ கேக்கை மஹிந்த ஊட்டினார் -அழகன் கனகராஜ் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவின் 47ஆவது பிறந்தநாள் நேற்றாகும்(07). அவருடைய பிறந்த நாள் கேக், மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த கேகில், கைவிலங்கு உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதிலொரு வலயத்தில், விமலுக்கு இனிய பிறந்தநாள் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதற்கு கீழே, அன்பான விமலுக்கு இனிய பிறந்தநாள் என்று சிங்கள மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. அவரின் பிறந்த நாள் வைபவம், நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான உணவகத்தில் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்…
-
- 1 reply
- 478 views
-
-
மாகாண முறைமையே அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படையான அம்சம் : நேற்றைய வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் அனைத்துத் தரப்புகளும் அதற்கு இணக்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் அடிப்படையிலேயே தீர்வை எட்டுவது என்பதில் அனைத்து அரசியல் தரப்புகளும் இணக்கம் கண்டுள்ளன. புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் இந்த இணக்கம் நேற்று எட்டப்பட்டது. கட்சிகளுக்கு இடையில் குறிப்பாக ஆட்சியின் பங்காளிக் கட்சியான சுதந்திரக் கட்சியின் போக்கில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்திருந்…
-
- 0 replies
- 182 views
-
-
வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கருணா கோரிக்கை வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், புலனாய்வுப் பிரிவினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு நேரடியாக தாம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு ம…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பில் தமிழர் கோரிக்கைக்கு இடமுண்டா? தீபச்செல்வன் (ஸ்ரீலங்கா அரசின் புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பான அரச உத்தியோகத்தர்களுடான கலந்துரையாடலில் பதிவு செய்த கருத்துக்கள்) இன்று கிளிநொச்சியில், ஸ்ரீலங்கா அரசின் புதிய அரசியலமைப்பு யாப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு தமது அறிக்கையை முன்வைத்து கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மக்கள் கருத்தறியும் குழுவின் செயலாளர் வின்சன் பத்திராஜா, உறுப்பினர் எஸ். இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் மேகலை மதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரச உத்தியோகத்தர்களி…
-
- 1 reply
- 378 views
-
-
தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் திருமலையில் வழிபாட்டிடங்கள் அபகரிப்பு (ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதோடு தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் அவை அபகரிக்கப்படுவதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டினார். இவ்வாறான செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனங்கள் அதிகரிப்பதோடு தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதில் இடைவெளிகளே எனவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில்…
-
- 0 replies
- 338 views
-
-
சிவாஜிலிங்கத்திற்கு பேசியது தொடர்பில் அலட்டிக்கொள்ளாத மாகாண சபை வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கடந்த 4ஆம் திகதி யாழ்.மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகர் மிகவும் மோசமான சொற்களால் பேசி இருந்தமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சபையில் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன் போது வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்- கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்…
-
- 0 replies
- 365 views
-
-
யாழ் கொம்படி விமான ஏவுகணை தாக்குதல் வழக்கில் எதிரி விடுதலை – யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு யாழ்குடாநாட்டின் கொம்படி பகுதியில் விமானப்படை விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிகாரி ஒருவர் உட்பட 4 விமனாப்படையினரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்ற எதிரியை செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதப்பகுதியில் நடைபெற்றது. விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் டிரோன் டெஸ்மன் சுதந்த சிவப்புள்ளே, விமானி அந்துநெத்தி சிந்தக்க பிரச்சன்ன டிசொய…
-
- 0 replies
- 381 views
-
-
சுன்னாம் நிலத்தடி நீர் தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்யவில்லை என எதிர்க்கட்சி தலைவர் குற்றசாட்டு வடமாகாண விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து உள்ளதா என்பதனை ஆய்வு செய்வதனை விடுத்து , மற்றைய குழுக்களின் ஆய்வு அறிக்கைகளில் தவறு கண்டு பிடித்துள்ளார்கள். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா குற்றம் சாட்டியுள்ளார். வடமாகாண சபையில் இன்றைய தினம் வடமாகாணத்தில் உள்ள நீர் பிரச்சனை தொடர்பில் விவாதிப்பதற்கான விசேட அமர்வு நடைபெற்றது. அதன் போதே எதிர்க்கட்சி தலைவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 0 replies
- 294 views
-
-
சர்வதேச நீதிபதிகளுக்கு பயப்பட வேண்டியதில்லை ஆலோசனை மட்டுமே வழங்க வேண்டி வரும் என்கிறார் ஜெஹான் பெரேரா (ரொபட் அன்டனி) ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பான தனது அறிக்கையில் கலப்பு நீதிமன்றத்தையும் சர்வதேச நீதிபதிகளையும் பரிந்துரை செய்திருந்தாலும் அதனை அரசாங்கம் ஏற்கவேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக இம்முறை இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையில் முன்வைக்கப்படும் பரிந்துரையை இலங்கை ஏற்றாகவேண்டும் என்று ஜெனிவாவிற்கான அரச தூதுக்குழுவின் உறுப்பினரும் தேசிய சமாதானப் பேரவையின் தலைவருமான ஜெஹான் பெரேரா தெரிவித்தார். மேலும் இலங்கையில் ஐ…
-
- 0 replies
- 561 views
-
-
இலங்கையில் தொடர்கிறது மனித உரிமை மீறல்கள்! - அமெரிக்கா அறிக்கை [Tuesday 2017-03-07 07:00] இலங்கையில் மோசமான மனித உரிமை சம்பவங்களிலும், சித்திரவதையில் ஈடுபட்ட படையினர் தண்டனையிலிருந்து விலக்குப்பெறும் கலாச்சாரம் தொடர்ந்தும் நிலவுவதனால் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனர்வாழ்வுக்குள்ளான முன்னாள் போராளிகள் பலர் படையினரதும், பொலிசாரினதும் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஈனத்தனமான சித்திரவதைகளுக்க…
-
- 0 replies
- 351 views
-
-
-
2 காணிகளை விடுவிக்கவும்: சம்பந்தன் கடிதம் “யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கில் உள்ள காணிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவில் உள்ள காணிகள் ஆகியவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படையினர் தங்கியிருக்கும் தனியாருக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான இரண்டு விடயங்கள் பற்றி தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறே…
-
- 1 reply
- 327 views
-
-
புனர்வாழ்வு பெறாத எல்.ரீ.ரீ.ஈ.யினரால் அச்சுறுத்தல் ரொமேஸ் மதுசங்க புனர்வாழ்வு பெறாத, தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் (எல்.ரீ.ரீ.ஈ), அவர்களால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள், சேவையிலிருந்து தப்பிச் சென்ற பாதுகாப்புத் தரப்பு உறுப்பினர்களாலேயே, நாட்டுக்குள் அச்சுறுத்தலான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன், பாதாள உலகக் கோஷ்டியை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்துக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் மற்றும் பொலிஸைக் கட்டுப்படுத்த, ஒருவருக…
-
- 0 replies
- 286 views
-