ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
காங்கேசன்துறை கடற்கரையில் 29 ஏக்கர் காணி ஏப்ரலில் விடுவிப்பு யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைப் பகுதியில் கடற்கரையோரமாக படையினர் வசம் உள்ள 29 ஏக்கர் காணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னதாக உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளர் நேற்றைய தினம் கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: காங்கேசன்துறையில் கடற்கரையோர மாக படையினர் வசமுள்ள நிலங்களில் மேலும் 29 ஏக்கர் நிலம் எதிர்வரும் ஏப்பிரல் 10ஆம் திகதிக்கு முன்பாக மக்களிடம் ஒப்படை…
-
- 0 replies
- 222 views
-
-
‘மெசெய்ல் புலியின் ஒப்புதல் சரியானது’ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால், வில்பத்து சரணாலயத்தில் வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பாக, அவ்வமைப்பின் மெசெய்ல் பிரிவின் உறுப்பினர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலம் சட்டரீதியானது என, கம்பஹா மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதி அறிவித்துள்ளார். இந்த ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில், 2017 ஜனவரி 12ஆம் திகதி முதல் இடம்பெற்ற விசாரணையின் தீர்ப்பை நேற்று (06) அறிவிக்கும் போதே மேற்கண்டவாறு அறிவித்தார். இ…
-
- 0 replies
- 404 views
-
-
2 வாளிகளால் சங்கடம்: வீரவன்ச தொகுப்புரை பேரின்பராஜா திபான் சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு காலை 6 மணிக்கே திறக்கப்படும். அக்காலப்பகுதிக்குள் இரண்டு வெற்று வாளிகளே வழங்கப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, தான் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம். பியுமான விமல் வீரவன்ச, நீதிமன்றத்தில் தெரிவித்தார். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு அஞ்சியே, ஒவ்வொருநாளும் இரவு உணவைத் தவிர்த்துவருகின்றேன். குறைவாகவே தண்ணீர் அருந்துகின்றேன் என்றும் நீதிமன்றின் கவனத்துக்கு விமல் கொண்டுவந்தார். 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்…
-
- 0 replies
- 336 views
-
-
சி.வியிடம் குசலம் விசாரித்தார் கெஷாப் நெஞ்சுவலி காரணமாக, கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அப்துல் கெஷாப், சந்தித்து குசலம் விசாரித்துள்ளார். நெஞ்சுவலி காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் 16 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 26ஆம் திகதியன்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.tamilmirror.lk/192768/ச-வ-ய-டம-க-சலம-வ-ச-ர-த-த-ர-க-ஷ-ப-#sthash.ReMuI8fE.dpuf
-
- 0 replies
- 254 views
-
-
மக்கள் உண்மையானவர்களை தற்போது இனங்காணவேண்டும் வடக்கு,கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்கிறார் சுமந்திரன் எம்.பி. (வடமராட்சி நிருபர்) புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக் கோரிக்கையை நாம் கைவிடவில்லை. இருந்தும் தமிழ் மக்களுக்காக பெறக்கூடிய அனைத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி பருத்தித்துறைக் கிளை கட்சி அலுவலகத்தில் கட்சிக்கு புதிய இளைஞர்களை, அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு நேற்றைய …
-
- 1 reply
- 406 views
-
-
சொந்த அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் வந்தார் சுமந்திரன் -எஸ்.நிதர்ஸன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன், அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பலத்த பாதுகாப்புடன் கலந்து கொண்டிருந்தார். அவரது அலுவலகத்திற்குள்ளும் அலுவலகத்துக்கு வெளியிலும் சீருடை மற்றும் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இளைஞர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, பருத்தித்துறையிலுள்ள சுமந்திரனின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது. எனினும், சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருக்கின்ற…
-
- 3 replies
- 592 views
-
-
நரேந்திர மோடியினால் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை கட்டிடம் திறந்து வைக்கப்படும் : ரஞ்சித்சிங் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ், நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை பார்வையிடுவதற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் த. ரஞ்சித் சிங், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மேலும் குறித்த விஜயத்தின் போது புதிய கட்டிடத்தை, மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அத்தோடு இந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட இரு…
-
- 0 replies
- 230 views
-
-
சிங்கள தேசத்தை பங்குபோடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியாது : மஹிந்த ஆவேசம் சிங்கள தேசம் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டை நேசிக்கும் நாம் எவ்வாறு நாட்டை துண்டாடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டை துண்டாடும் பௌத்தத்தை அழிக்கும் அரசியல் அமைப்பிற்கு எம்மால் எந்த சந்தர்ப்பத்திலும் கை தூக்க முடித்து. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் துணை போகும் கொள்கையில் நாம்…
-
- 1 reply
- 310 views
-
-
இலங்கை தம்பதியினரை கைது செய்துள்ள இந்தியாவின் கியூ பிரிவு காவல் படையினர்..! இலங்கையிலிருந்து, இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு கடல் மார்க்கமாக சென்ற தம்பதியினரை தமிழக கியூ பிரிவு காவல் படையினர் கைது செய்துள்ளனர். மேலு சம்பவம் தொடர்பாக இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலானது, மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான தர்மகுமார் மற்றும் 33 வயதான நைன்னுருஷா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். குறித்த தம்பதியினர் சட்டவிரோதமான முறையில், படகொன்றின் மூலம் ராமநாதபுரத்திலுள்ள தங்கச்சிமடத்தில் இறங்கியுள்ளநிலையில், இருவரும் திருமங்கலத்திலுள்ள உச்சபட்டி இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழக கியூ பிரிவு காவல் படையினரால் கைத…
-
- 0 replies
- 413 views
-
-
யாழ் நெல்லியடி குழு பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் இரண்டு எதிரிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திங்களன்று தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் மூன்றாம் எதிரி ஆரம்பத்தில் இருந்தே கைதாகாமல் தலைமறைவாக இருந்ததையடுத்து, அவர் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் த…
-
- 0 replies
- 331 views
-
-
ஜனாதிபதியின் நன்றிக்கடன் இதுவா? -எஸ்.நிதர்ஸன் “போராடிக் கொண்டிருக்கும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளையும், வேலையற்ற பட்டதாரிகளையும் ஜனாதிபதி, யாழ். விஜயத்தில் சந்திக்காமை கண்டிக்கத்தக்கது. தன்னை பதவிக்குக் கொண்டுவந்த தமிழ் மக்களின் பிரச்சினையில் அவரது கரிசனை கேள்விக்குட்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் அச்சுறுத்தல்களையும் தாண்டி, வாக்களித்த சமூகங்களுக்கு, ஜனாதிபதி செய்யும் நன்றிக்கடன் இதுவா?” என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். காணாமற் போனோரின் உறவினர்கள் மற்றும் வேலையற்ற பட்தாரிகளை , கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்துக்கு வ…
-
- 0 replies
- 370 views
-
-
கிளிநொச்சியில் இறுதி 21 நாட்களில் 244 பேர் பன்றிக் காச்சல் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் கிளிநொச்சி மாவட்டப்பொதுவைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்திக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சார்ந்தவர்களாவர். இவர்களுள் 25 கர்ப்பவதிகளும் 9 சிறுவர்களும் அடங்கலாக 37 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளமை கொழும்பு ம…
-
- 1 reply
- 205 views
-
-
நாவலடி கடலில் பெருமளவு நெத்தலி மீன்கள் : மகிழ்ச்சியில் மீனவர்கள் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசமான நாவலடி கடலில் பெருமளவு நெத்தலி மீன்கள் இன்று காலை பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தினால் மீன்பிடித் தொழிலின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று இவ்வாறு அதிகளவில் மீன்கள் பிடிப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி தெரிவித்தனர். பிடிக்கபட்ட அதிகமான நெத்தலி மீன்களை உடனடியாக விற்பனை செய்யமுடியாமையினால் கடற்கரையேரத்தில் கருவாடாய் மாற்றும் நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இம் மாவட்டத்தில் வழமைக்கு மாறாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரண…
-
- 0 replies
- 238 views
-
-
கால அவகாசத்தை வழங்காதீர்கள் ஜெனிவாவில் இன்று பாரிய பேரணி (நமது விசேட நிருபர்) இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இலங்கையின் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கொண்டு வரப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் பாரிய பேரணி இடம்பெறவுள்ளது. ஜெனிவா நகரின் பிரதான புகையிரத நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள இப்பேரணியானது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறும் வளாகத்தை நோக்கிச் செல்லவுள்ளது. அங்கு நீதிக்கான நியாயமான கோஷத்தை பேரணியில் கலந்து கொள்பவர்கள்…
-
- 0 replies
- 322 views
-
-
வட-க்கு,கிழக்கு இணைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல புதிய நகர அபிவிருத்தித் திட்டம் ஒருதலைப்பட்சமாக நடக்காது கல்முனை தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஹக்கீம், ஹரீஸ் ஒப்புதல் (காரைதீவு நிருபர் ) வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு நாம் எதிரானவர்களல்ல.கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் எதிரானவர்கள் அல்ல. எனினும் கரையோர மாவட்டம் நிலத்தொடர் பற்ற முஸ்லிம் அலகு தொடர்பில் நிபந்த னையுடன் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர் பாக சம்பந்தன் ஐயாவோடு பேசிவருகின் றோம். அதற்கான நியாயமான தீர்வு எட்டப் படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்…
-
- 0 replies
- 740 views
-
-
‘அம்மாவை விற்போர் உள்ளனர்’ “மனித நேயம் இல்லாமல் போய்விட்டது. விசேடமாக, அரசியல்வாதிகள் தங்களுடைய அம்மாவை கூட தட்டில் வைத்து விற்பனை செய்வதற்கு தயாராகும் யுகமொன்று உருவாகியுள்ளது” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மனித நேயத்தையே விழுங்கும் சமூகமே இன்று உருவாக்கியுள்ளது. பணத்துக்கும், இன்னுமின்னும் பணத்துக்காகவும் எவற்றையும் காட்டிக்கொடுப்பதற்கு தயாரானவர்கள், நமது நாட்டில் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நிட்டம்புவ, ஹொரகொல், ஒடிச்சிவத்த முஸ்லிம் வித்தியாலயத்தின் 25ஆவது வருடநிறைவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலைநி…
-
- 1 reply
- 509 views
-
-
தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்ற முதியவர் காப்பாற்றப்பட்டார் யாழ். இந்து மகளிர் கல்லூரி சாலையில் உள்ள தொடருந்துக் கடவையில் நேற்றைய தினம் தொடருந்தில் வீழ்ந்து உயிர் துறக்க முற்பட்டதாகக் கூறப்படும் முதியவர் ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ். இந்து மகளிர் கல்லூரி சாலையில் உள்ள தொடருந்துக் கடவையில் நேற்றுக் காலை 10 மணியளவில் தொடருந்தில் வீழ்ந்து உயிரை மாய்க்கும் நோக்கினில் 72 வயது முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அந்த முதியவரை பாதுகாப்புக் கடவைக் காவலாளி அவதானித்துள்ளார். உடனே ஓடிச் சென்று சாலையால் பயண…
-
- 0 replies
- 296 views
-
-
வடமாகாண அவைத் தலைவர் சிவஞானத்தை எதிர்த்து போராட்டம் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்துக்கு எதிராக இன்று காலையில் கொக்குவில் இந்துக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உனது உறவினருக்காக கல்லூரியை சீரழிக்காதே எனக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும் பழைய மாணவர் சங்கத்தினருமாகச் சிலர் இணைந்து கல்லூரிக்கு முன்பாக பதாதைகளைத் தாங்கியபடி போராட்டம் நடத்தினர். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் நியமனத்தை இடை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண கல்விக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தற்போது பதவியில் உள்ள அதிபரை அந்தப் பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் பல பெற்றோர…
-
- 0 replies
- 336 views
-
-
தமிழ்க் கிராமத்தில் சிங்களப் புள்ளடிகள் - க. அகரன் வவுனியா- வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெடிவைத்தகல் கிராமம் 100 சதவீதம் தமிழ் மக்களுக்குரிய கிராமமாகும். இந்தக் கிராமத்தில், சிங்கள வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் கி. தேவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 221ஏ வெடிவைத்தகல், 221பி மருதோடை, 221 சி பட்டிக்குடியிருப்பு என்ற எல்லையோர கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்திருந்த நிலையில், தற்போது மீளக்குடியேறியுள்ளனர். …
-
- 0 replies
- 292 views
-
-
கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதி நிதிகள் முன்னாள் ஜனாதிபதியுடன் தீடீர் சந்திப்பு கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதி நிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் முன்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்கால அரசியல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழ…
-
- 0 replies
- 165 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருக்கின்றது. 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை 2ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது. இதனடிப்படையில், இந்த கூட்ட தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் ஒன்றாக இருக்கின்றது. எனினும், புலம் பெயர் அமைப்புகளினது அழுத்தங்களினாலும், தமிழர்களின் கேள்விகளினால் இலங்கை தற்போது நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக போர் குற்றம், மனித உரிமை மீறல்கள், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் இலங்கை பிரதிநிதிகளிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்...... 01. தமிழர் பகுதியின் காணிகளின் நிலை …
-
- 6 replies
- 721 views
-
-
கேப்பாபுலவு இராணுவ பாசறை அல்ல! அது நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி!எம் சொந்த மண்ணில் நாம் வாழ ஏன் இந்த தடை? 5வது நாளாக தொடரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண் மீட்பு போராட்டம்.! கேப்பாபுலவு மண் எமது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி அந்த மண் இராணுவத்தின் பாசறை என எமது ஊரின் பிரதான வீதியை மறித்து பிரம்மாண்டமாக வாசல் அமைத்து பாரிய படைத்தலைமையகத்தை அமைத்து அங்கே பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை நிலை நிறுத்தி எமது மண்ணில் உள்ள வருமானம் தரும் வளங்களை எல்லாம் சூறையாடி வருகின்றனர். நாமோ மாதிரிகிராமம் என்னும் போர்வையில் அகதிமுகாமில் வாழ்ந்து வருகின்றோம். எமது சொந்த மண்ணில் என்ன வளம் இல்லை ஏன் இப்படி எம்மை இந்த அரசும் இராணுவம…
-
- 0 replies
- 231 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்க சென்று, பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கி வந்த காவல்துறை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகளின் போராட்டத்திற்கு யாழ்.காவல்துறையினர் தடையுத்தரவு வாங்கி இருந்தமை தெரிய வந்துள்ளது. யாழ்ப்பணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக மாவட்ட செயலகம் முன்பு வேலைகோரி பட்டதாரிகளும் . காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூற கோரி அவர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஜனதிபதி தம்மை சந்திக்காது மாற்று பாதையூடாக சென்றமையால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்…
-
- 0 replies
- 242 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, சுழற்சி முறையில் தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் அ றிவித்துள்ளனர். இன்றையதினம் காலை 9 மணி முதல், கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தின் முன்னால், இன்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளது https://globaltamilnews.net/archives/20110
-
- 0 replies
- 179 views
-
-
சில நிமிடங்கள் பேசிவிட்டு ஆதரவளிப்பதாக கூறிவிட்டுச் செல்வது ஏமாற்றமளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று(05) பதின்நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு அ ரசியல் தரப்பினர்களும் தங்களிடம் வந்து சில நமிடங்கள் பேசிவிட்டு உங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்றோம் எனக் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர்இது தமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நாம்அவர்களிடம் எதிர்பார்த்தது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையே ஆனால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …
-
- 0 replies
- 1.2k views
-