ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
-
- 0 replies
- 415 views
-
-
சட்ட விரோத ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை கலைக்க பொலிஸ் கலத்தடுப்புப் பிரிவுக்கு மேலதிகமாக பொலிஸ் குதிரைப்படைப் படை மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சுவீடன் மற்றும் ஸ்கொட்லன்ட்யார்ட் ஆகியவற்றின் கலத்தடுப்பு விஷேட நிபுணர்கள் பொலிஸ் மோப்ப நாய்களுக்கு அது தொடர்பிலான அடிப்படை பயிற்சிகளையும் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி பொலிஸ் மோப்ப நாய் தலைமையகத்தில் 30 மோப்ப நாய்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லட்யார்ட் பொலிஸார் செயற்படும் பிரதேசங்களிலும் சுவீடனிலும் சட்ட விரோத பேரணிகளை கலைப்பதில் குதிரைகளும் மோப்ப நாய்களும் வெற்றிகரமாக கலைக்கும் நடவடிக்கைகளை செய்துள்ளதாகவும் அதனை…
-
- 0 replies
- 254 views
-
-
எமது மகனின் கொலையுடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என கட்டுகஸ்தோட்ட இளைஞனின் பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை, செனரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தக்க கெலும் அலுகொல்ல என்ற 32 வயது இளைஞன், இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கைகள் கட்டப்பட்ட நிலையில், இளைஞனின் சடலம், கண்டி - கொழும்பு வீதி, பஸ்யாலையிலிருந்து கடந்த வௌ்ளிக்கிழமை (10) மீட்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் இளைஞனின் பெற்றோர் தெரிவிக்கையில், “எங்களது மகன், எவருக்கும் எவ்வித இன்னல்களையும் கொடுத்ததில்லை. அவர் அமைதியானவர். தொழில் நிமித்தமே பஸ்யாலை பிரதேசத்துக்கு சென்றார். அவர் த…
-
- 0 replies
- 417 views
-
-
சட்டத்தரணி ராமநாதன் கண்ணன் என்பவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நியமனத்தை வழங்குவதற்கு நீதித்துறைசார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென, இலங்கை மனித உரிமை மையம் மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கோரியுள்ளார். பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரிடமே, தெளிவுபடுத்துமாறு அவர் கோரியுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 373 views
-
-
வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற பிரதேசங்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவ தாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 33 ஆயிரத்து 584 ஏக்கர் காணிகளை ராணுவம் விடுவித்துள்ளதென குறிப்பிட்ட அவர், மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன.குறித்த விசாரணைகள் ந…
-
- 0 replies
- 258 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 2015ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த காலஅவகாசம் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார். அதேவேளை, ஐ.நாவிடம் 18 மாத காலஅவகாசத்தைக் கோருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமெரிக்கா, இந்தியாவிடம் பேச்சு நடத்தவுள…
-
- 0 replies
- 385 views
-
-
கில்லாடி என்று தமிழிலும் பயன்படுத்தப்படும் ஹிந்தி வார்த்தைக்கு போக்கிரி என்ற ஒரு அர்த்தமும் உள்ளது. போக்கிரி என்றால் அதில் நல்ல போக்கிரியும் இருக்கின்றார்கள். தீய போக்கிரிகளும் இருக்கின்றார்கள். போக்கிரி என்பதைவிட கில்லாடி என்றால் ஒரு கெட்டிக்காரன் என்ற அர்த்தமும் தமிழில் புரிந்துக்கொள்ளப்படுகிறது. கோபியரின் வெண்ணையை திருடி தின்னும் கிருஷ்ணனும் ஒரு கில்லாடிதான். அவன் பகவான் விஷ்ணுவின் அவதாரமான ஒரு நல்ல கில்லாடி. மகாபாரதத்திலே திரெளபதையிடம் தர்மசங்கடமான கேள்வியை எப்போதும் போல கேட்கும், நாரதரும் ஒரு கில்லாடிதான். அவரது கலகம் நன்மையில் முடியும் என்பதால் அவரும் ஒரு நல்ல கில்லாடிதான். கம்பன் கழக காப்பாளர் கம்பவாரிதியும் ஒரு கில்லாடிதான். ஒரு…
-
- 0 replies
- 547 views
-
-
தீர்வுத்திட்ட அரசியல் நிறைவுபெறும் தறுவாயில்-சுமந்திரன் எமது மக்களின் அபிலாசைகள் மற்றும் புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் உள்ளது. அது பலராலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலான ஒரு அரசியல் தீர்வாக அமையும் என்பது எல்லோரினதும் எதிர்ப்பார்ப்பாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் ரீதியான சட்டசபையின் உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாறிவரும் சமகாலத்தில் புதிய அரசியல் ரீதியான மாற்றத்திற்கு எதிர்கா லத்தின் வகிபாகம் எனும் கருப்பொருளில் சட்டத்தரணிகள், மற்றும் …
-
- 1 reply
- 422 views
-
-
இலங்கை கடற்பரப்பில் நடப்பதென்ன? : இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா : இருநாட்டு உறவை துண்டிப்பதற்கான சதியா? இலங்கையை மையமாக கொண்டு, இந்தியக் கடற்பரப்பில் தனது ஆக்கிரமிப்பை சீனா விரிவுப்படுத்தி வருவதாக அமெரிக்கா, இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இலங்கையில் சீனா தமது இராணுவ மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் சீனாவின் கடற்சார் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதை இந்தியாவிற்கு எச்சரிக்கும் வகையிலான கடிதம் ஒன்றை அமெரிக்காவின் வெளியுறவு துறை நிபுணரும், ஆசிய பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் தலைவருமான ஜெப். எம். ஸ்மித் எழுதியுள்…
-
- 2 replies
- 597 views
-
-
1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் கல்வி, தொழில் வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக் …
-
- 0 replies
- 358 views
-
-
மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களை பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டடங்களுக்கான திட்டங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு அனுமதி அளித்தல், எரிபொருள் நிலையங்கள், மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை கட்டுதல்…
-
- 0 replies
- 381 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டத பின் வழங்கிய செய்திக்குறிப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, 2002ஆம் ஆண்டு தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசாங்கத்தின் அணுசரணையுடன் சமாதனப் பேச்சுவார்த்தை இடம்பெற்றமையை உலகம் அறியும். இவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் கிளிநொச்சிக்கும் முருகண்டிக்கும் இடையில் குறித்த பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நிதித்த…
-
- 0 replies
- 454 views
-
-
எரிகாயங்களுடன் பெண்ணின் சடலம் சாவகச்சேரியில் கண்டுபிடிப்பு சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மர்மமான முறையில் எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதியம் 12 மணியளவில் அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது கணவருடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே இவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். http://www.onlineuthayan.c…
-
- 0 replies
- 268 views
-
-
நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள்! - ஜனாதிபதி [Sunday 2017-02-12 09:00] நாட்டின் நல்லிணக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டித்துள்ளார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைககள் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ளஇலங்கையர்களும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள், நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களாகவே கருதப்படுவர் என்று மைத்திரிபால சுட்டிக்காட்டியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=176093&categ…
-
- 0 replies
- 208 views
-
-
தமிழ் மக்கள் பேரவையால் மட்டக்களப்பில் 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியும், மாநாடும் (படங்கள்) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன…
-
- 9 replies
- 2.1k views
-
-
அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான 'பூகோள போர்' விடுதலைப் புலிகளை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டது முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவிப்பு லியோ நிரோஷ தர்ஷன் விடுதலைப் புலிகளின் கடுமையான எறிகணைத் தாக்கு தல்கள், இராணுவத்துக்கு பேர ழிவை ஏற்படுத்தியது. ஆட்டி லறி மற்றும் மோட்டார்களி னால் பாதுகாப்பு தரப்பு கடுமை யான இழப்புகளைச் சந்தித்தது. இது 50 வீதத்துக்கும் அதிகமாவே காணப்பட்டது என முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இதனால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத மற்றும் வெடிபொருள் வழங்கலை துண்டிக்க வேண்டியது மிகவும் முக்கியமா னதாகவுமிருந்தது. எனவே அமெரிக்காவின் தீவி…
-
- 1 reply
- 265 views
-
-
பொறுப்புக்கூறல் விடயத்தில் பின்வாங்குகிறது அரசு-சம்பந்தன் விசனம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச குற்றங்கள் தொடர்பான பொறுப்பு கூறல் விடயத்தில் அரசா ங்கம் பின்வாங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்து ள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிக்கு மாறான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானத்தை அமுல்ப…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென எச்சரிக்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால், குறித்த சலுகையை இலங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை விடயங்களை காரணங்காட்டி, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜீ.எஸ்.பி.வரிச்சலுகையை இடைநிறுத்தியிருந்த ஐரோப்பிய ஒன்றியம் நல்லாட்சியில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களைத் தொடர்ந்து சில நிபந்தனைகளுடன் அதனை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகளை பாதுகாத்தல், நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தல், ஊழல் மோ…
-
- 1 reply
- 282 views
-
-
13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம் கடற்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற் கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை குறித்து கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது தாம் அவுஸ்திரேலிய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தார். http://www.virakesari.lk/
-
- 9 replies
- 1.2k views
-
-
சித்திரம் வரைந்த ஜோடிக்கு மறியல் காலி புகையிரத நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து, ரயில் பெட்டிகளில் சித்திரம் வரைந்த பிரான்ஸ் நாட்டு ஜோடியை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு, காலி பிரதான நீதவான், சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பெட்டிகளில் வரைந்ததன் காரணத்தினால், ரயில்வே திணைக்களத்துக்கு 64,440 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக, நீதவானிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் பெட்டிகளில் வரையப்பட்ட சித்திரங்களை அழிக்க முடியாது என்றும் சித்திரம் வரையப்பட்ட பெட்டிகளுக்கு முற்றாக வர்ணப்பூச்சு பூச வேண்டும் என்றும் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror…
-
- 0 replies
- 307 views
-
-
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபைக்கு கடந்த ஆண்டு 400 மில்லியன் வருமானம் கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை கடந்த 2016ல் 400 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்கப் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினார். சங்கத்தின் தலைவர் என்.பி.ரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சங்கத்தின் செயலாளர் வீ.பிரதீபன் பாபு உட்பட கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை நிருவாகிகள் மாவட்ட கிரிக்கட் சபை …
-
- 0 replies
- 261 views
-
-
கொலை முயற்சி தொடர்பில் 'பொலிஸார் சொல்லும் தகவல்கள் பொருந்துகின்றன' எஸ்.நிதர்ஸன் “எனது கொலை முயற்சியில், யார் ஈடுபட்டார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்களையும் பொலிஸார் கூறும் தகவல்களையும் பார்க்கின்ற போது, எல்லாமே பொருந்துகின்றது” என, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். சுமந்திரனிடம் அவர் மீதான கொலை முயற்சி தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “என் மீது கொலை முயற்சி இடம்பெற்றது என, சில சம்பவங்களை எனக்குக் கூறியிருக்கின்றனர். அந்தச் சம்பவங்களுடன் அன்றைக்கு நான் எங்கே இருந்தேன், எங்கு செல்ல இருந்…
-
- 0 replies
- 256 views
-
-
கிளிநொச்சியில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு கிளிநாச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு காவல்துறையினரால் 34 கிலோ கேரள கஞசா மீட்கப்பட்டுள்ளது, நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரலா கஞ்சாவும் மீட்கப்பட்டது, குறித்த சம்பவத்தின்போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மமற்றும் அதி வலு கொண்ட இஞ்சின் இரண்டும் காவல்துறையினரால் மீட்க…
-
- 0 replies
- 486 views
-
-
கேப்பாபுலவில் தமது காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று 12 ஆவது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு அந்த இடத்திற்கு சென்ற ஊடகம் ஒன்று மக்களின் போராட்டம் தொடர்பாக செய்திகள் சேகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஊடகம் அங்குள்ள மக்களிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது மக்களிடம் அந்த ஊடக செய்தியாளர் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதினால் அவர்கள் ஊடகப்போர்வை விசாரணை நடத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் குறித்த ஊடகத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு கண்டனமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. …
-
- 4 replies
- 432 views
- 1 follower
-
-
அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி கடந்தவாரம் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். கடந்த 8ஆம் நாள் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்…
-
- 0 replies
- 355 views
-