Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் 34 கிலோ கேரள கஞ்சா மீட்பு கிளிநாச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு காவல்துறையினரால் 34 கிலோ கேரள கஞசா மீட்கப்பட்டுள்ளது, நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரலா கஞ்சாவும் மீட்கப்பட்டது, குறித்த சம்பவத்தின்போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மமற்றும் அதி வலு கொண்ட இஞ்சின் இரண்டும் காவல்துறையினரால் மீட்க…

  2. கேப்பாபுலவில் தமது காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இன்று 12 ஆவது நாளாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு அந்த இடத்திற்கு சென்ற ஊடகம் ஒன்று மக்களின் போராட்டம் தொடர்பாக செய்திகள் சேகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஊடகம் அங்குள்ள மக்களிடம் நேர்காணல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்போது மக்களிடம் அந்த ஊடக செய்தியாளர் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டதினால் அவர்கள் ஊடகப்போர்வை விசாரணை நடத்தியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்த நிலையில் குறித்த ஊடகத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு கண்டனமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. …

  3. அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கின் களநிலை குறித்து ஆய்வு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இலங்கையின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தில், தெற்காசியப் பிராந்திய விவகாரங்களுக்கான நிபுணராகப் பணியாற்றும் ஜோன் ஹில்ஸ் என்ற அதிகாரி கடந்தவாரம் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடற்படை ஆலோசகராக உள்ள லெப்.கொமாண்டர் பிரையன் பேஜுடன் இணைந்து வடபகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். கடந்த 8ஆம் நாள் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்…

  4. வல்வெட்டித்துறையில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது கேரள கஞ்சாவுடன் யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து கடல் வழியாக படகு ஒன்றில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சாவுடனே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக ஏனைய மாவட்டங்களுக்குக் கேரள கஞ்சா கடத்தல் நடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை தொடர்ந்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். http://www.virakesari.lk/article/16525

  5. யாழில் வெடிபொருட்கள் மீட்பு.! யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேசத்தில் நேற்று மாலை பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு கைக்குண்டுகள் ஆர்.பி.ஜி-10, கிரனைட்-34, மிதிவெடி மற்றும் மோட்டார் ஆகியன அடங்குகின்றன. இவை வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னர் இராணுவம் இருந்த குறித்த வீட்டின் கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/

  6. வறட்சியான காலநிலை : நீரில் மூழ்கிய மதஸ்தலங்கள் மீண்டும் உயிர்த்தன, விரையும் பக்தர்கள் மலையகத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது. இந்நிலையில் மவுசாகலை நீர் தேக்கத்தால் மூடப்பட்ட பௌத்த விகாரை, இந்துக் கோவில் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் வற்றியதில் அவை மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றன. மஸ்கெலியா பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை, இந்து கோவில், முஸ்லிம் பள்ளி ஆகியன மவுசாகலை நீர் தேக்கம் ஆரம்பிக்கும் போது குறித்த மூன்று வழிபாட்டுத்தலங்களும் நீரினால் மூடப்பட்டன. இந்நிலையில் மலையகத்தில் தொடரும் வறட்சியால் நீர் குறைவடைந்து குறித்த வழி…

  7. 12ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம், 12ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது. கடந்த 31ஆம் திகதி, மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமுக்கு முன்பாகக் கூடாரம் அமைத்து இரவு, பகலாகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போரட்டத்துக்குப் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந் நிலையில், மக்கள் தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, நேற்றைய தினம் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக…

  8. வடக்கு கிழக்கு இணைவதை எதிர்க்கவில்லை-ருக்மலே தம்மகீர்த்தி தேரர் வடக்கு, கிழக்கு ஒன்றிணைந்து செயற்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.சமஷ்டி என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முய ற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் இலங்கையின் நிலைமை எதிர்காலத்தில் பயங்கரமாகிவிடும் எனவும் அவ்வாறு நாட்டைப் பிரிப்பதாயின் தங்களது உயிர் பிரிந்த பின்னரே நிகழும் என்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். …

  9. குமாரபுரம் படுகொலைச்சம்பவ 21ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு குமாரபுரம் படுகொலைச் சம்பவம் எமக்கு நன்கு பரீட்சயமுள்ள இராணுவத்தினரால்தான் நிகழ்த்தப்பட்டது என குமாரபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை - குமாரபுரம் படுகொலையின் 21ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, இன்று குமாரபுரத்தில் இடம்பெ ற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 26 பேருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நினைவுத் தீபம் ஏற்றி பூக்கள் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் 26 பேரின் பெயர்கள் அடங்கிய கல்வேட்டு ஒன்றும் திறைநீக்கம் செய்து வைக்கபட்டது. அத்துடன் ´குமுறல் மாறாத குருதிம…

  10. ஜனாதிபதியின் இல்லத்துக்குள் நுழைய முயன்றவர் கைது கொழும்பு-07 இல் உள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர் இல்லத்துக்குள் நுழைவதற்கு முயன்ற ஒருவரை, இல்லத்திலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் கைதுசெய்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேகநபர், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஊழியர் என்றும், அவர் எவ்விதமான அங்கிகாரம் இன்றி, ஜனாதிபதியை சந்திப்பதற்கே, இவ்வாறு முயன்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/191373/ஜன-த-பத-ய-ன-இல-லத-த-க-க-ள-ந-ழ-ய-ம-யன-றவர-க-த-#sthash.j8uJcjnc.dpuf

  11. சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து வவுனியாவில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து தாண்டிக்குளம் பகுதியில் நின்று கொண்டுள்ளது. பின்னால் வந்த டிப்பர் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துடன் மோதியுள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்த நடேசபிள்ளை கமலாகரன் வயது 36 கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நபரும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் வயது 38 வவுனியா ஆகிய இருவரும்…

  12. கிழக்கின் எழுக தமிழ் பேர­ணியில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் பங்­கேற்பு வடக்கு, கிழக்கு இணைப்பு உட்­பட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கா­ணு­மாறு கோஷம் (பட்­டி­ருப்பு, காங்­கே­ய­னோடை நிரு­பர்கள்) தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் மட்­டக்­க­ளப்பில் நேற்று நடத்­தப்­பட்ட மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்­வான 'எழுக தமிழ்' நிகழ்வில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்டு தமது உள்ளக் குமு­றல்­களை வெளிப்­ப­டுத்­தினர். மட்­டக்­க­ளப்பில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை நடை­பெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் மூவா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் கலந்­து­கொண்­டனர். சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தை திணிக்க வேண்டாம், விடு­தலை செய் விடு­தலை செய் அர­சி…

  13. தமிழ் மக்­களின் அதி­ருப்­தியும் கூட்­ட­மைப்­பி­னரின் நிலைப்­பாடும் யுத்­தத்தில் பெரும்­பா­திப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­வ­தனால் பாதிக்­கப்­பட்ட அந்த மக்கள் தற்­போது வெறுப்­ப­டைந்­துள்­ளனர். தமது பிர­தி­நி­தி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் கருத்­துக்­களை கூறும் நிலையும் அவர்­க­ளது கொடும்­பா­வி­களை எரிக்கும் சூழ்­நி­லையும் தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பாதிக்­கப்­பட்ட மக்கள் பொறு­மை­யி­ழந்து போராட்­டங்­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­க­ளிலும் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ளனர். கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் வட­மா…

  14. கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றது இன்றைய தினம் காலை 9.30 மணியளவில் ,சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் ,இளையோர் அமைபுக்கள் இணை ந்து குறித்த போராட்டத்தினை நடாத்தியிருந்தனர் மேலும் குறித்த போராட்டத்தினை அடுத்த 11 மணியளவில் கேப்பாபுலவு மக்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவிக்க உள்ளனர். http://onlineuthayan.com/news/23728

  15.  புலி பூச்சாண்டி எதற்காக: எழுக தமிழில் சி.வி.ஆவேசம் 'விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த பின், புலிகள் திரும்பவும் வந்துவிட்டார்கள் அல்லது வரப் போகின்றார்கள் என்று, பூச்சாண்டி காட்டுவது என்ன காரணத்துக்;காக' என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக்கழகத் திடலில் தற்போது நடைபெற்றுவரும் எழுக தமிழ் பேரணி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், 'எழுமின், விழ…

  16.  இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்: புதுக்குடியிருப்பு மக்கள் சண்முகம் தவசீலன் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம், இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது. 19 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் என்பவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள், கடந்த 8 வருடங்களாக வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு …

  17. ஊழல், மோசடி குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­ப­ண­மானால் கோத்தா கைதாவார் ; அர­சாங்கம் கூறு­கின்­றது முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ மீது காணப்­ப­டு­கின்ற ஊழல், மோசடி உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆதா­ரங்கள் நிரூ­பிக்­கப்­பட்டால் அதற்­க­டுத்த நட­வ­டிக்­கை­யாக அவர் கைது செய்­யப்­ப­டுவார் என்று சுற்­று­லாத்­துறை மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தெரி­வித்தார். கொழும்பு கங்­கா­ராம விகா­ரையின் வரு­டாந்த பெர­ஹரா நிகழ்வு நேற்று முன்­தினம் தினம் ஆரம்­ப­மா­னது. அதன் இரண்டாம் நாள் ஊர்­வ­லத்­துக்கு சுற்­று­லாத்­துறை மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்சர் ஜோன் அம­ர­துங்க கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கங்­கா­ரா…

  18. எழுக தமிழ் பேரணியை நியாயப்படுத்தும் காணி மீட்பு, காணாமல்போனோர் விவகாரம் உரிமைக்குரலாக மாற்றமடைகின்றது : அமைச்சர் மனோ கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­மீட்பு போராட்­டமும் காணாமல் ஆக்­கப்­பட்டுள்ள­வர்­களின் உற­வினர்களின் எதிர்ப்­பார்ப்பும் கிழக்கில் நடை­பெறும் எழு­க ­தமிழ் பேர­ணியை நியா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே இப்­பே­ரணி தொடர்பில் விமர்­சிப்­ப­தற்கோ அல்­லது வேண்டாம் என கூறு­வ­தற்கோ எவ­ருக்கும் உரிமை கிடை­யாது என தேசிய சக­வாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கனேசன் தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்­தி­லேயே காணா­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் அனைத்தும் நடை­பெற்­ற­…

  19. வன்னியில் பன்றிக் காய்ச்சலால் மூவர் பாதிப்பு வன்னியில் பன்றிக் காய்ச்சல், பீடிக்கப்பட்ட மூன்று பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கிளிநொச்சி சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டகச்சி சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு றெட்பானா, மாங்குளம் மற்றும் பெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் சிறுவர்கள் மூவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள், அருகில் உள்ள அரச வைத்தியசாலையை உடனடியாக நாடி, உரிய பரிசோதனை மற்றும் சிகிசை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். - S…

  20. கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்) வவுனியா மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (10) காலை 9.30 மணியளவில் ஒன்றிணைந்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மைத்திரி-ரணில் அரசு ஏன் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் உள்ளது என்பது பற்றி உரிய தரப்புக்கள் வாய் திறந்து கேள்வி எழுப்புதல் வேண்டும் என்று தெரிவித்து இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை வவுனியாவில் நடாத்தியுள்ளார்கள். கேப்பாப்புலவு மக்களுக்கு நீதிவேண்டும், வேண்ட…

  21. சாவகச்சேரிப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு சாவகச்சேரி - சரசாலை, கனகம்புளிச்சந்திக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பாவனை நிலையில் உள்ள கைக்குண்டு 2, மிதிவெடி 2, கிளைமோர் 1, செல் 1 என்பன கைப்பற்றபட்டுள்ளன. இன்றைய தினம் நண்பகல் வேளையில் வீட்டுக் கிணறு ஒன்றிலிருந்தே மேற்கண்ட வெடி பொருட்க்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் ஆரம்ப காலத்தில் இராணுவம் இருந்ததாகவும் தற்போது வீட்டு கிணற்றினை துப்பரவு செய்யும் போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.onlineuthayan.com/news/23711

  22. மகிந்த அரசு செய்யாத மிக மோசமான செயலை நல்லாட்சி அரசு செய்கிறது : வடக்கு விவசாய அமைச்சா் ஐங்கரநேசன் நாசுக்கான முறையில் இனிப்பு தடவிய நஞ்சுகளாக அபிவிருத்தி என்று சொல்லி சொல்லி எங்களிடம் இருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும் பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசு தயாராகி வருதுடன் பறித்துக்கொண்டும் இருக்கின்றாா்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சா் பொ. ஜங்கரநேசன் தெரிவித்தார். இரணைமடு பாரிய நீா்பாசன திட்ட முகாமைத்துவ அலுவலக கட்டிட திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு திருத்தம் பற்றி பேசப்பட்டுக்கொண்டே, எம்மிடம் இருக்கின்ற அதிகாரங்…

  23. கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் தாயுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 2.00 மணியளவில் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதிக்கு இராணுவச் சிவில் அதிகாரியாக இருந்த லெப்டினன் சுரங்க என்னும் இராணுவ அதிகாரி அப்பகுதி மக்கள் வீடுகளுக்குச் சென்று மக்கள் தொடர்பான குடும்ப விபரங்களைப் பெற்றுள்ளார். அவ்வேளை பாதிக்கப்பட்ட மேற்படி யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசிப்பதைத் தெரிந்து அந்த யுவதிக்கு தாம் உதவுவதாக நாடகமாடி அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். …

  24. மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ''எழுக தமிழ்'' எழுச்சிப் பேரணி தொடர்பான ஊடக சந்திப்பு

  25. முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இரண்டு ஏக்கர் காணியில் ஹோட்டல் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக 99 வருடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்போதுநிதி முறைக்கேடு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நிதி குற்ற விசாரணை பிரிவு விசாரணை மேற்கொள்வதான நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நலின் ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த ஹைட் ஹோட்டல் தொகுதி நிர்மாணிக்கும் நிகழ்விற்கு மாத்திரம் 70 இலட்சம் செலவிடப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.