ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
கேப்பாபுலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாபுலவில் தொடர்ந்து எட்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கவனயீர்ப்பு நிகழ்வொன்றை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்னே வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பதினோரு மணி வரை அமைதி வழியில் நிகழ்த்துவதற்கானதும் அதனைத் தொடர்ந்து கேப்பாபுலவிற்கு செல்வதற்கானதுமான நிகழ்விற்கு கேப்பாபுலவு மக்களிற்காக ஒன்றிணையும் சமூக வலைத்தள இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். விரும்பியவர்கள் ஒன்றுகூடல் முடிந்த பின் கேப்பாபுலவிற்கு செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கேப்பாபுலவுக்கு செ…
-
- 0 replies
- 293 views
-
-
பனிக்குளிரில் குழந்தைகள் வீதிக்கு வந்திருப்பதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இப்போது இலங்கை அரசாங்கம் நல்லாட்சி செய்கிறதாம். ஆம். சிங்கள அரசின் நல்லாட்சியில் ஈழத் தமிழ் மக்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். கடும் பனியில் கடும் குளிரில் குழந்தைகளும் முதியவர்களும் வீதிக்கு வந்திருப்பதுதான் நல்லாட்சியின் வெளிப்பாடு. கேப்பாபுலவிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மேற்கொள்ளப்படும் சதி என்று சொல்கிறார் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி. இது அரசியல் பின்புலத்துடன் நடைபெறும் போராட்டம் என்றும் அவர் கூறியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. அந்த மக்கள் இராணுவத்தினதோ, அரசினதோ …
-
- 0 replies
- 319 views
-
-
சிரமங்களுக்கு ஊடாகவே சிறந்த தலைவா்கள் உருவாகின்றனர் – யாழ் பேதானா வைத்தியசாலை பணிப்பாளா் சத்தியமூர்த்தி பல சிரமங்கள் மற்றும் வறுமைக்கு ஊடாக நல்ல கல்வியை பெற்றே சிறந்த தலைவர்கள் உருவாகின்றனா்.எனவே பின்தங்கிய பாடசாலை என்ற மனநிலையை விடுத்து மாணவர்கள் நல்ல கல்வியை பெறவேண்டும் என யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளா் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளாா். இன்று 08-02-2017 கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினரா கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது எல்லாப் பாடசாலைகளிலும் இல்ல மெய்வல்லுநா் திறனாய்வு போட்டிகள் இ…
-
- 0 replies
- 378 views
-
-
யாழ். குளப்பிட்டி சந்தியில் கோர விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண் (படங்கள்) யாழ். குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்து உள்ளது. குறித்த விபத்து இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து காங்கேசன்துறை வீதிவழியாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று குளப்பிட்டி சந்தியால் ஆனைக்கோட்டை பக்கமாக திரும்பியுள்ளது. இதன் போது பின்னால் வந்த முச்சக்கர வண்டி வேன் திரும்பும் வரையில் வீதியில் தரிந்து நின்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டிக்கு பின்னால் மிக வேகமாக வந்த படிரக வாகனம் தரித்து நின்ற முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது. இந்நிலையில் படிரக வாகனம் மோதியதி…
-
- 0 replies
- 359 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தி ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார். உயர்மட்டப் புலனாய்வு அறிக்கைகளின் படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட அதேவேளை, வடக்கில் இதுதொடர்பாக நான்கு விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு…
-
- 17 replies
- 1.3k views
- 2 followers
-
-
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் அமைப்பினை ஊரவர்கள் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கோரி போராடினார்கள். அதேவேளை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ .எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/1675…
-
- 0 replies
- 532 views
-
-
முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனி போடும் வேதனையான நிலை காணப்படுகிறது! : புத்தளத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2017-02-08 11:27:38 இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும் அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும் தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும் இறைவன் எம்முடன் இருப்பதால் எடுத்த முயற்சிகளை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.. புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா …
-
- 0 replies
- 215 views
-
-
போக்குவரத்து சமிக்ஞைகள் இல்லாமையே யாழில் விபத்துகள் ஏற்பட காரணம் யாழ் குடாநாட்டில் போக்குவரத்து சமிக்ஞைகள் இல்லாத காரணத்தால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படு கின்றது. யாழ் குடாநாட்டில் 30 வருட காலமாக நிலவிய யுத்தம் காரணமாக போக்குவரத்து சமிக்ஞைகள் இல்லாமல் போயுள்ளது. இதன் கார ணமாக மக்கள் மத்தியில் நெடுஞ்சாலை வீதிகள் தொடர்பான அறிவு இல்லாமல் போயுள்ளது. இதனால் அதிக வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் 64 முக்கிய வீதி சந்திப்புகள் உள்ளதாகவும், அவற்றில் மூன்றில் மாத்திரமே போக்குவரத்து சமிக்ஞைகள் உள்ள தாகவ…
-
- 0 replies
- 254 views
-
-
யாழில் வாள்வெட்டு சந்தேகநபரான இளைஞன் பொலிஸில் சரண் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர் யாழ் பொலிஸில் நேற்று சரணடைந்துள்ளார். யாழ் நல்லூர் அரசடி வீதியிலுள்ள கடை ஒன்றில் பெற்றோல் குண்டு வீசியும் அங்குநின்றிருந்த நபர்களையும் வெட்டி அட்டகாசம் புரிந்த கும்பல்களை யாழ் பொலிஸார் தேடி வந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத்தெர்டர்ந்து ஏனையோரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.இதன்போது சுண்ணாகம் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞனை பொலிஸார் தேடி வந்த நிலையில் குறித்த நபர் நேற்று யாழ் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளார். இவர் யாழ் நல்லுர் அர…
-
- 0 replies
- 314 views
-
-
புலிகளின் தங்க கிடங்கை தேடிய ஆசிரியர்களும், வியாபாரிகளும் சிக்கினர் : அதிநவீன ஸ்கேனர் எவ்வாறு கிடைத்தது என தீவிர விசாரணை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்க கிடங்கு தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஐந்து பேரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் ஆசிரியை ஒருவரும் மற்றும் தம்புத்தேகமவைச் சேர்ந்த 3 வியாபாரிகளும் வவுனியா செட்டிக்குளம் பகுதிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தங்க கிடங்கு தொடர்பாக நேற்று மாலை சோதனை செய்துள்ளனர். குறித்த நபர்கள் தமது சோதனைகளை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், வவுனியா இ…
-
- 0 replies
- 387 views
-
-
யாழுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2016ம் ஆண்டு அதிகளவான சுற்றுலா பயணிகள் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக சுற்றுலாத் துறைப் பிரிவின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. நீண்டகால யுத்த நிறைவிற்கு பின்னர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சுற்றுலாத் துறையும் அதிகளவான அபிவிருத்தியை கண்டுள்ளது. 2011-2012ம் ஆண்டு 11582 சுற்றுலா பயணிகளும்,2012-2013ம் ஆண்டு 15256 சுற்றுலா பயணிகளும் ,2013-2014ம் ஆண்டு 20054 சுற்றுலா பயணிகளும்,2014-2015ம் ஆண்டு 25580 சுற்றுலா பயணிகளும், வருகை தந்துள்ளனர்.அவற்ற…
-
- 3 replies
- 528 views
-
-
அரபு நாடுகளின் சர்வாதிகளுக்கெதிராக அரபுலகின் இளையசமுதாயத்தினர் ஜனநாயகக்காற்றை தாமும் சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென்ற ஆவலுடன் ஓன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்வது மட்டுமன்றி பல முஸ்லீம் நாடுகளில் வெற்றியும் கண்டுள்ளனர்.(அந்தக் காரணத்தால் சவூதி அரேபியாவில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள்செய்வதையே அண்மையில் தடை செய்தனர்). இதற்கு மாறாக, இஸ்லாத்துக்கு மதம்மாறிய பூர்வீக தமிழர்கள், மதச்சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டையும், இந்திய ஜனநாயகநாட்டின் சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்குப் பதிலாக, அரபுக்களின் கலாச்சாரத்தையும்அவர்களது பண்பாட்டையும், நடையுடை பாவனைகளையும் ஏற்றுக் கொண்டுஅரபுமயமாக்கப்பட்டு தமது முன்ன…
-
- 0 replies
- 514 views
-
-
யுவதிகளை மோதிய பொலிஸ் வாகனம் ; மட்டு. நகரில் சம்பவம் (சி.சி.ரி.வி. காணொளி இணைப்பு) பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செலுத்தி வந்த வாகனம் வீதியில் நடந்து வந்த இரு யுவதிகளின் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகன சாரதியான பொலிஸ் உத்தியோகத்தர் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பு திருமலை வீதியில் பொலிஸ் தலைமையக விடுதிக்கு முன்னால் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த வீதியின் வலது பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த வவுணதீவைச் சேர்ந்த கந்தசாமி நிசாந்தினி (2…
-
- 0 replies
- 254 views
-
-
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சட்ட தொகுதி நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு முதற்தடவையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சட்ட தொகுதி நூல்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் குறித்த சட்டத் தொகுதி நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதிய இலங்கைக்கான நிலையான வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்கோலி ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16387
-
- 0 replies
- 185 views
-
-
கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்கவேண்டும்-சுமந்திரன் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறு தியை சரியாக நிறைவேற்றவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் சபை ஒத்திவைப்புவேளை குறித்த பிரச்சினை தொடர்பாக பிரேரணை சமர்ப்பித்து உரையா ற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அங்கு உரையாற்றிய அவர், வடமாகாணத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகளை 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுற்றதன்…
-
- 1 reply
- 280 views
-
-
தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் உருவெடுப்பு : நீதிமன்ற தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது - யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 2017-02-08 08:56:39 (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் தற்போது உருவெடுத்துள்ள புதிய வாள்வெட்டு கலாசாரமானது நீதிமன்றங்களுக்கும் நீதிமன்றங்களின் தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ள நிலையில் இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தண்டனைகளை வழங்குவதன் மூலமே இவற்றைக் கட்டுபடுத்த முடியும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றங்களால் வழங்…
-
- 0 replies
- 232 views
-
-
தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதான பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது தம்புள்ளை ரங்கிரி சர்வதே கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் பணியாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கின்றது. தம்புள்ளை மைதானத்தின் 11 பணியாளர்கள் மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் கூரையின் மீது ஏறி நின்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை இவர்கள் நேற்று (07) ஆரம்பித்திருந்தனர். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த மைதானத்தில் பணிபுரியும் தம்மை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை காலமும் ஒப்பந்தம் அடிப்படையிலேயே தாங்கள் பணிபுரிந்து வருவதாக இவர்கள் சுட…
-
- 0 replies
- 363 views
-
-
அரசியலில் இலங்கை ‘புலி’ அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான உப செயலாளர் புறூஸ் வாட்டன், இலங்கையின் இந்த வல்லமை பற்றி ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை எனக் கூறினார். “ இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப்புலி இலங்கையாகும். அதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது. என அமெரிக்காவில் நடந்த இலங்கையின் சுதந்திர தின கொண்டாத்தின் போது அவர் கூறினார். “வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் வணிகத்தை முன்னேற்றவும் உதவுவதன் மூலம் இலங்கையின் சிறிய நடுத்தர முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுகின்றது என அவர் …
-
- 0 replies
- 326 views
-
-
‘தேர்தலில் குதித்தால் கோட்டா தோற்பார்’ இக்பால் அலி “2020ஆம் ஆண்டு நடைபெற்றவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்டால் சந்தேகத்துக்கு இடமின்றித் தோல்வி அடைவார்” என, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். புஹதஹேவாஹெட்டவில், அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ தோல்வியடைவார். எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா …
-
- 0 replies
- 264 views
-
-
‘அகதிகளை அகதியாக்காதீர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “1995ஆம் ஆண்டு அகதிகளாகி, வவுனியா பூந்தோட்டம் முகாமில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்ற மக்களை அங்கிருந்து 30 கிலோமீற்றருக்கு அப்பால், குடியமர்த்தி அவர்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் நேற்று, இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள வவுனியா பூந்தோட்டம் முகாம் தொடர்பில், கேள்வியெழுப்பியிருந்த சுனில் ஹந்துநெந்தி எம்.பி , குறுக்கு கேள்வியை எழுப்பியே மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னதாகக் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.…
-
- 0 replies
- 466 views
-
-
‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ ஜே.ஏ.ஜோர்ஜ் ‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கு புலிகள் மீண்டும் மீளெழுகின்றனர் என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா” என்றும் வினவியது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கிகரிப்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கூட்டமைப்பு எம்.பியான சிறிதரன் மேற்கண்டவாறு வினவினார். அங்கு அவர் தொடர்ந்த…
-
- 0 replies
- 321 views
-
-
யாழில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் உருவ பொம்மை எரிப்பு மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) எதிராக, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன் போது ‘நாட்டில் தற்போது இலவசக் கல்வி, சுகாதாரம் உள்ளதா?’, ‘எமது உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இதன்போது விநியோகிகக்கப்பட்டன. அதேவேளை மாலை போராட்டக்காரர்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. h…
-
- 1 reply
- 322 views
-
-
கேப்பாப்புலவு மக்களுக்கான நீர்கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம் இராணுவம் கையகப்படுத்தியுள்ள கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த எட்டுநாட்களாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நாளை நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்க்கான நடவடிக்கைகளை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/16349
-
- 0 replies
- 374 views
-
-
கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆதரவு முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள் , முதியவர்கள் ,பெண்கள், என கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றுவரை தொடர்கின்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இந்த போராட்டத்துக்கு இன்னும் பல இளைஞர்களை திரட்டி ஆதரவு வழங்கும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றைய தினம் கேப்பாபுலவு மற்றும் …
-
- 0 replies
- 247 views
-
-
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவு கேப்பாபுலவுக்கு வருகைத்தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பர்னாந்து ஆகியோர் கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அத்தோடு இனிவரும் நாட்களில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தென்னிலங்கை மக்கள் வருகைத்தர இருப்பதாகவும் தெரிவித்தனர். அதுமாத்திரமின்றி இந்த மக்களின் போராட்டம் நியாயமானது எனவும் விரைவில் இவர்களின் நிலங்களை இராணுவம் விடுவிக்கவேண்டுமெனவும் தெரிவித்தனர். இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட கிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேச…
-
- 0 replies
- 302 views
-