ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
நாடுகளை கைப்பற்றவும், வல்லரசுகளாக உருவாகவும் நாடுகளிடையே அன்றாடம் போட்டித்தன்மை நிலவிக்கொண்டே இருக்கின்றது. இலங்கையை பொறுத்த மட்டில் இன்று நேற்றல்ல, இலங்கையின் வரலாறு ஆரம்பித்த காலப்பகுதியிலே இலங்கையை கைப்பற்றுவதற்கான போட்டித்தன்மை உருவாகி விட்டது. ஆனாலும் இலங்கைத்தமிழர்களை பொறுத்தமட்டில் தொடர்ச்சியாக இந்நாட்டிலேயே வாழ்ந்தவர்கள் என்றில்லாமல் வாழ்வாதாரத்திற்காக பிற நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டதாகவே வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் எமக்கெல்லாம் தெரிந்திடாத முக்கியமான ஒரு விடயத்தினையே இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதாவது இலங்கைத்தமிழரின் வரலாறு எங்கு, எப்போது ஆரம்பமானது என்று எமக்கு தெரியுமா? இலங்கைத்தமிழரின் பிறப்பி…
-
- 1 reply
- 720 views
-
-
நாளை உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்து உயிரை மாய்ப்போம் : கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை நாளை (07,02,2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் தமது போராட்ட வடிவம் மாறும் எனவும் தங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கடந்த 31.01.2017 தொடக்கம் முன்னெடுத்துள்ள …
-
- 2 replies
- 391 views
-
-
கிளிநொச்சியில் வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை தாக்கி ஆயுதங்களை பறித்து செல்ல புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வந்த திட்டம் ஒன்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல முறை இந்த தாக்குதலை நடத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. புலிகளை மீளுருவாக்க முயற்சித்து வரும் இந்த நபர்கள் விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் புதைத்துள்ள ஆயுதங்களை தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப பிரிவினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இதில் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவர்கள் இரவு நேரத்தில் எவ்வித தடைகளும் இன்றி ஆயு…
-
- 0 replies
- 449 views
-
-
இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதம் -எம்.றொசாந்த் யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை இனந்தெரியாதோரால் ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/191089/இந-த-ய-த-ண-த-த-தரகத-த-ன-ப-யர-ப-பலக-ச-தம-#sthash.iSblkMFV.dpuf
-
- 2 replies
- 409 views
-
-
எமது பவனி “எழுக தமிழர்” என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது “எழுக தமிழ்” என்று பெயர்பெற்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எழுக தமிழானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ் பேசும் சகல மக்களையும் “எழுக தமிழ்” நடைபவனியில் பங்குபற்ற அழைக்கின்றேன். எம்மக்கள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அண்டையில் இருந்து நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடலுக்கு இம் மாதம் 10 ஆம் திகதி காலை பவனி வரக் காத்திருக்கின்ற…
-
- 0 replies
- 439 views
-
-
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த ஊறணி பகுதியில் மேலும் 500 மீற்றர் நீளமான கரையோரப்பகுதி இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மக்களிடம் வழங்கப்பட்ட கரையோரப்பகுதி நிலப்பரப்புக்கு மேலதிகமாக இன்றும் மற்றுமொரு பகுதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த தை மாதம் 14ம் திகதி ஊறணி பகுதியில் கரையோரமாக 2 கிலோ மீற்றர் நீளமான பகுதியும் தரையில் 2 ஏக்கர் நிலமும் மக்களுடைய கோரிக்கைக்கு இணங்க தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தது. மேற்படி ஊறணி பகுதியில் கடந்த வருடம் இறுதியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டபோதும், மக்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை செய்வ…
-
- 1 reply
- 617 views
-
-
பத்திரிகை கண்ணோட்டம் 06 -02 -2017
-
- 0 replies
- 435 views
-
-
'கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் நாம் முடிவெடுக்க முடியாது' ஜே.ஏ.ஜோர்ஜ் “முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்பாக போராட்டம் நடாத்தும் மக்களுக்கான தீர்வு குறித்து விமானப்படையினர் தீர்மானிக்க முடியாது” என, விமானப்படையின் ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரட்ன தெரவித்தார். விமானப்படை முகாம் அமைந்துள்ள காணியானது, வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமானது. உரிய அனுமதியுடனேயே அந்தப் பகுதியில் முகாம் இயங்கி வருகின்றது. வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் அனுமதிப் பெற்று வந்தால் குறித்த காணி திருப்பி வழங்கப்படும் என்று ஏற்கெனவே கூறியுள்ளோம். …
-
- 4 replies
- 412 views
-
-
சைட்டம் நிறைவேற்று அதிகாரியின் வாகனத்துக்கு சூடு தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்தின் (சைட்டம்) பிரதான நிறைவேற்று அதிகாரியான டொக்டர் சமீர சேனாரத்னவின் வாகனத்துக்கு துப்பாக்கிச் கூடு நடத்தப்பட்டுள்ளது. முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இருவரால், சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் வைத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதில், அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/191107/ச-ட-டம-ந-ற-வ-ற-ற-அத-க-ர-ய-ன-வ-கனத-த-க-க-ச-ட-#sthash.vB1jRVC1.dpuf
-
- 0 replies
- 305 views
-
-
திருமணம் முடித்து 6 நாள் ; விபத்தில் கணவன் பலி, மனைவி படுகாயம் - யாழில் சம்பவம் (வீடியோ இணைப்பு) யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் இடம்பெற்ற டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் திருமணம் முடித்து 6 நாட்களான இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இச் சம்பமானது இன்று காலை 11 மணியளவில் வேலணை அராலி சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள…
-
- 3 replies
- 1.2k views
-
-
சுமந்திரன் படுகொலை முயற்சி திட்டம் பிரான்சில் தீட்டப்பட்டதாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரா ன்சில் தீட்டப்பட்டதாக, விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தனர் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், இந்த திட்டத்தை இலங்கை புலனாய்வு அமைப்புகள் முறியடித்துள்ளன. இந்தச் சதித் திட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, நான்கு முன்னாள் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர…
-
- 0 replies
- 381 views
-
-
காணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சி காணாமல் போன உறவுகள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த மட்டக்களப்பு பெண்கள் முயற்சித்து வருகின்றனர். காணாமல் போன தங்களது உறவுகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கான ஓர் கருவியாக தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா என மட்டக்களப்பு பெண்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர். பல்வேறு ஆணைக்குழுக்களின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளதுடன், பல்வேறு மகஜர்களும் காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தருமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என காணாமல் போனவர்களின் உறவினர்கள…
-
- 1 reply
- 367 views
-
-
யாழ்.அரசடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு : 4 பேர் சிக்கினர் யாழ்.அரசடிப் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு மற்றும் பெற்றோல் குண்டு வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.அரசடிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (30) வர்த்தக நிலையமொன்றின் மீது, 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 10 இளைஞர்கள் பெற்றோல் குண்டு வீசியதுடன், வர்த்தக நிலையத்தில் நின்ற இளைஞர்கள் மீது வாளால் வெட்டித் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும் கடைக்குப் பொருட்கள் வாங…
-
- 1 reply
- 319 views
-
-
மீன் வாடிகள் தீ வைப்பு : தென்னிலங்கை மீனவர் இருவர் கைது முல்லைத்தீவு - நாயாறுப் பகுதியில் இருந்த தென்பகுதி மீனவர்களின் மீன் வாடிகளை தீயிட்டுக் கொழுத்தியதான சந்தேகத்தின் பேரில் தென்னிலங்கை மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விபரம் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக இரு வேறு இடங்களில் அமைந்திருக்கும் தென்பகுதி மீனவர்களின் மீன் வாடிகளை வேண்டுமென்றே தீயிட்டுக் கொழுத்தியதான சந்தேகத்தின் பேரில் இரு தென்னிலங்கை மீனவர்கள் நேற்று முன்தினம் மாலையில் முல்லைத்தீவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 333 views
-
-
போர்க்குற்ற விவகாரத்தில் அமெரிக்காவிடம் ஆதரவு கோரும் இலங்கை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப், சர்வதேச அநீதிகளை உதாசீனம் செய்யும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். எனினும் அமெரிக்காவின் முன்னைய நிர்வாகம் உலகளாவிய சிறுபான்மை இனங்கள் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலப்பு பொறிமுறை விசாரண…
-
- 0 replies
- 257 views
-
-
வடக்கின் மத ஸ்தலங்களை பாதுகாக்க புதுத் திட்டம் வடக்கிலுள்ள தொல்லியல் மதிப்புக்கொண்ட ஸ்தலங்கள் மற்றும் கலாசார மரபுரிமைகளை பாதுகாக்கும் பணிகள் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். “30 வருட போர் சூழலை அடுத்து, வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், தேசிய நல்லிணக்கத்தையும், வடக்கிலுள்ள கலாசார மரபுரிமைகளை கொண்ட வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/191090/வடக-க-ன-மத-ஸ-தலங-கள-ப-த-க-க-க-ப-த-த-த-ட-டம-#sthash.R2v9al62.dpuf
-
- 0 replies
- 286 views
-
-
காரைதீவு மயானத்தில் வெளிக்கிளம்பும் சடலங்கள்..! காரைதீவு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பாரிய அசொளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் நிலவும் சீரற்ற காலநிலையின் போது மயானத்தில் உள்ள சடலங்கள் வெளியே தென்படும் நிலை ஏற்படுகின்றனது என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று தற்போது குறித்தப் பகுதியில் சடலங்களும், எலும்புகளும் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஒரு தீர்வை பெற்றுத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். http://www.virakesari.lk/article/16282
-
- 0 replies
- 359 views
-
-
ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கேப்பாப்பிலவு செல்வார்களா? – காணிகள் விடுவிக்கப்படுமா? படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஒரு வார காலமாக இரவு பகலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிலிருந்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. படையினர் வசமுள்ள காணிகளில், விடுவிக்கப்படக்கூடிய பகுதிகளை விடுவிப்பதற்கு, அங்குள்ள விமானப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 354 views
-
-
பிரபாகரன் ஒரு முட்டாள் என்று கூறிய ஜே.ஆர் ஜயவர்தன : புதிய தகவல்களை கசிய விட்டது அமெரிக்கா இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அக்காலத்தில் முன்னெடுத்த பல நடவடிக்கைகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் அமெரிக்காவினால் கசிய விடப்பட்டுள்ளது. இது குறித்த ஆவணங்கள் அமெரிக்க இராஜதந்திரியான பீட்டர் கல்பிரைத் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து மீட்பதற்கு இரண்டு தடவைகள் இலங்கை இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் தமக…
-
- 0 replies
- 438 views
-
-
புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர். பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகள் நுழைவதை தடுத்து புதுக்குடியிருப்பில் போராட்டம் தொடர்கிறது:- ராணுவத்தின் வசமுள்ள…
-
- 0 replies
- 390 views
-
-
யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பீட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட புத்த கோவிலும், மறுக்கப்படும் பிள்ளையாா் கோவிலும்:- யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் ஒன்றை அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது ஒர் உயா் கல்வி நிலையத்தில் காணப்படவேண்டிய பன்மைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியது எனவும் மாணவா்கள் குறிப்பிட்டுள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ் பல்கலைகழக …
-
- 0 replies
- 356 views
-
-
தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் வெளியானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், சிறிலங்கா மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து, இந்தச் சட்டத்தின் கீழ் இந்த விபரங்களைத் தாம் பெற்றிருப்பதாக, சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், சிசிர ஜெயக்கொடி, முத்துக்குமாரண, சமல் ராஜபக்ச, சிவமோகன், புத்திக பத்திரண, ஜனக பண்டார தென்னக்கோன், வசந்த…
-
- 2 replies
- 644 views
-
-
சுதந்திர தின நிகழ்வை ஏன் புறக்கணித்தேன்? விளக்கமளிக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ (ஆர்.யசி) நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டு சுதந்திர தினம் கொண்டாடிய அரசாங்கத்தின் அழை ப்பை ஏற்கமுடியாத காரணத்தினாலேயே அதனை நிராகரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நாம் போராடி அழித்த ஆயுத காலாசாரம் மீண்டும் நாட்டில் உயிர்ப்பெற்றுள்ளது. வடக்கில் மீண்டும் ஆயுத வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி நேற்று குருநாகல் பகுதியில் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் சந்திப்பின் பின்னர் ஊடகங்க…
-
- 0 replies
- 719 views
-
-
அரசாங்கத்தின் முகத்திரையை கிழிக்கவே சர்வதேச நீதிபதிகள் விவகாரத்தை கூறினேன் (ரி.விரூஷன்) இலங்கை அரசாங்கமானது போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதில்லை என்ற எண்ணத்தில் தான் உள்ளது. இத்தகைய அரசாங்கத்தினதும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டவே நான் வடக்கு மாகாணசபைக்கு போர்க்குற்ற விசாரணையை செய்வதற்கு சட்டத்தில் இடமுள்ளதாக என ஆராய்ந்து பார்க்கும்படி கூறினேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் நான் என்ன நிணைந்தேனோ அதுவே தற்போது நடாந்த…
-
- 0 replies
- 310 views
-
-
காணாமல்போன 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு காங்கேசன்துறையில் சம்பவம் (எம்.எப்.எம்.பஸீர்) நண்பர்களுடன் விளையாடச் சென்று நேற்று முன் தினம் முதல் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த காங்கேசன்துறை, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை குறித்த சிறுவனின் சடலத்தை கங்கேசன்துறை பொய்ட்டி பகுதியில் உள்ள சீமந்து உற்பத்தி நிலையத்துக்கு சொந்தமான தண்ணீர் தாங்கியில் மிதந்துகொண்டிருந்த நிலையில் மீட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். காங்கேசன் துறை மேற்கு, காங்கேசந்துறை - நல்லிணக்கபுரம் பகு…
-
- 0 replies
- 382 views
-