ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் வசம் இருந்து 3 கிலோ 650 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.virakesari.lk/article/15976
-
- 0 replies
- 390 views
-
-
ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது மஹிந்தவின் கண்ணீர் எங்கே இருந்தது.? ஊடகவியலாளர்கள் வீதிகளில் படுகொலைசெய்யப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்ணீர் எங்கே இருந்தது? என கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிசன் கேள்வி எழுப்பியுள்ளார். “நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ரணிலுடன் இணைவோம்” என்ற தொனிப்பொருளில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இப்போது கண்ணீர் வருகிறது. ஊழல் மோசடித் தொடர்பில் விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டார். இதன்போது அவரின் மகள் கண்ணீர் விட்டு அழுதார் என்று அவரின் மகளின் கண்ணீர் பற்றி பேசுகின்றனர். ஆனால், அந்த காலத…
-
- 0 replies
- 396 views
-
-
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்கள் கடற்படைக்கு அறிவித்துள்ளதாக அரச அதிபா் தெரிவிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத் தலைவரினால் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பாக கேட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். சமாசத் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கடற்படையினருக்கு தான் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவுக் கடலிலே இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு எதிராக கடற்றொழிலாளர்களினால் பல்வேற…
-
- 0 replies
- 258 views
-
-
ஓய்வுக்கு சென்ற என்னை மீண்டும் இழுத்து எடுத்தது மைத்திரிதான் : கொழும்பில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பை விற்க தீர்மானம் : வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் : நுகேகொடவில் மஹிந்த நான் அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற போது 'நீங்கள் தற்போது ஓய்வு பெற முடியாது, மீண்டு வரவேண்டும் என மக்கள் கூறியிருந்தாலும், ஓய்வு பெறச் சென்ற என்னை மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் இழுத்து எடுத்தார் என்பதை அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். துறைமுகங்கள் அரச நிறுவனங்கள் என அனைத்தையும் சர்வதேசதத்துக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியுள்ளனர். மேலும் கொழும்பு நகரில் 8 ஹெக்டேயர் நிலப்பரப்பையும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ள…
-
- 3 replies
- 362 views
-
-
பதுங்கு குழிகளை மூடித்தருமாறு கோரிக்கை.! இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அகற்றித் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போர் காலத்தில் போரில் ஈடுபட்டவர்களினாலும் தற்காப்பைத் தேடிய மக்களினாலும் ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள் இப்பகுதியில் அமைக்கப்பட்டன. அவற்றில் பல இன்று வரை மூடப்படாமல் இருப்பதன் காரணமாக குறித்த குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதுடன் டெங்கு போன்ற அபாய நோய்கள் ஏற்படுத்தும் வகையில் நுளம்புகளின் பெருக்கம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட மண் அணைகளின் காரணம…
-
- 0 replies
- 292 views
-
-
ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் கோரவுள்ள இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இல ங்கை அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29ஆவது அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கு பரிந்துரை க்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நடை முறை ப்படுத்தவில்லை. இந்த நிலையில், ஜெனிவா தீர்மானத்தை இ…
-
- 0 replies
- 214 views
-
-
ஊர்காவற்றுறை கர்ப்பிணி படுகொலை மேலும் இருவர் கைது ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவரை நேற்றுமுன்தினம் இரவு (27) யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வாகனமொன்றில் ஆடு வாங்குவதற்காக அந்த பகுதியில் நடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீவகப்பகுதியில் இவர்கள் மாடுகள் வாங்குவதற்கு சென்றதாகவும் குறித்த கொலை நடைபெற்ற போது யாழ்ப…
-
- 0 replies
- 323 views
-
-
வவுனியாவில் இடம்பெற்ற கையெழுத்து வேட்டை (வீடியோ இணைப்பு) அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்செயல்திட்டத்தை மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்செயற்திட்டத்தின்கீழ் நேற்று வவுனியா பல்பொருள் அங்காடிக்கு அருகே இவ்வாறான பிரச்சாரமும் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது. கடந்த 18…
-
- 0 replies
- 245 views
-
-
அமெரிக்காவின் யுத்த படைமுகாம் திருகோணமலையில்.! (எம்.சி.நஜிமுதீன்) அமெரிக்கா தனது யுத்த படைமுகாமை திருகோணமலையில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆகவே அங்கு அமெரிக்காவின் யுத்தக்கப்பல்களும் வரவுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது நாட்டின் சுதந்திரம் மற்றும் சுயாதிபத்தியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையை நெருக்கடியான நிலைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு செல்கின்றனர். தேசிய விடயங்கள் எதனையும் கருத்தில் கொ…
-
- 0 replies
- 320 views
-
-
கூட்டு எதிரணிக்கு அரசாங்கம் எச்சரிக்கை.! (லியோ நிரோஷ தர்ஷன்) வீதிகளில் கூச்சலிடுவதால் தேசிய அரசாங்கத்தின் திட்டங்களை முடக்க முடியாது எனவே கூட்டு எதிரணிக்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புகள் தற்போதும் உள்ளது. அதனால் உத்தேச அரசியலமைப்பு விவகாரத்தினை மக்களிடத்தில் திரிபு படுத்தி காட்டி தவறான அர்தங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை கூட்டு எதிரணி நிறுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். வீதிகளின் சந்திகளில் கூச்சலிடுபவர்களுக்கு அஞ்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்திற்கான திட்டங்களையோ அபிவிருத்தி இலக்குகளையோ விட்டு பின்வாங்காது. அனைவருக்கும் எம்முடன் இண…
-
- 0 replies
- 348 views
-
-
உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின் எதிர்பாராத நிலைமைகள் தோன்றலாம் – இரா.சம்பந்தன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின், அது நாட்டில் எதிர்பாராத நிலைமைகளை தோற்றுவிக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மறைந்த சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதுடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என எச்.எம்.மொஹமட் தீவிரமாக விரும்பியிருந்தார் என்பதனை ச…
-
- 1 reply
- 389 views
-
-
வடமாகாணத்துக்குத் தனியான நீரியல் கொள்கை அவசியம் – வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்- வடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்தெரிவித்துள்ளார். வடமாகாண நீர்வள அபிவிருத்தி தொடர்பான மூன்ற…
-
- 0 replies
- 336 views
-
-
இறுதிச்சமரில் ஆனந்தபுரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அந்த அமைப்பின் புலனாய்வுபிரிவின் அணியினரால் பலவந்தமாக பின் நகர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவல்கள் காலம் கடந்து வெளிவருகின்றதன் காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனித்த பின்னர் மகிந்தராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் மத்தியில் இலங்கைப் புலனாய்வாளர்கள் தமது வேலைத்திட்டங்களை பலவழிகளில் செயற்படுத்திக் கொண்டிருந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தொடர்பான ஆய்வுகளும் மற்றும் கலந்துபேசுதல் போன்ற விடயங்களை ஏன் வர்த்தக நிலையங்களில் பழப்புளி கேட்டுப்பெற்றுக் கொள்வதற்கு கூட அச்சமடையும் நிலையே அப்பொழுது காணப்பட்டது. ஆனால் தற்பொழுது நல்லா…
-
- 2 replies
- 444 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு - படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை(28) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம், கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி அருகில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்…
-
- 2 replies
- 442 views
-
-
வடக்கு, கிழக்கையும் பிரபாகரனையும் இணைத்துக்கொண்டு கூட்டாட்சி ஒன்றை அமைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்று அமெரிக்கா உத்தரவிட்டது. அந்த உத்தரவை உதாசீனம் செய்துவிட்டே மஹிந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார் என்றும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார். அவர் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பில் கருத்துக் கூறும்போதே இந்தத் தகவலையும் வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இந்த அரசியல் கலாசாரம் தொடர்பில் எனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே நான் எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளேன். இராஜிநாமாவைத் தொடர்ந்து அரசியல் அழுத்தக் குழுவொன்றை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன். அந்தக் குழு அரசுக்கு…
-
- 0 replies
- 390 views
-
-
கருங்கல்லை வைத்து குண்டெறிதல் பயிற்சி பெறும் மாணவி இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கலவான தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக இந்தப் பாடசாலையின் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குண்டெறிதல் பயிற்சியை பெறுவதற்கு இரும்பு குண்டு இல்லாத காரணத்தினால் கருங்கல்லைக் கொண்டு மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகின்றார். http://www.onlineuthayan.com/news/23238
-
- 0 replies
- 544 views
-
-
மட்டக்களப்பில் மழை வெள்ளத்தால் பத்தாயிரம் பேர் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக 2,834 குடும்பங்களைச் சேர்ந்த 10,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரவிக்கின்றன. கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,155 குடும்பங்களைச் சேர்ந்த 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக தரை வழி துண்டிக்கப்பட்ட மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சே…
-
- 0 replies
- 307 views
-
-
சிவப்பு விளக்கை கடந்து சென்ற பொலிஸார் -எம்.றொசாந்த் திருநெல்வேலி சந்தை பகுதியில் உள்ள வீதி சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரியும் போது, அதனை மீறி, போக்குவரத்து பொலிஸார் வீதியை கடந்து சென்ற சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ள நிலையில், வீதி ஒழுங்கை சரியாக பேணி, போக்குவரத்தை இலகுபடுத்தி, விபத்தை தவிர்க்கும் நோக்குடன், வீதி அதிகார சபையினால் யாழ். பிரதான சந்திகளில், வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் திட்டம், கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பிரதான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டன. சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதனை பின்பற்றி, …
-
- 0 replies
- 321 views
-
-
'ஒன்றுபடாவிட்டால் துரோகிகளாக பார்க்கப்படுவோம்' எஸ்.நிதர்ஸன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கருத்து முரண்பாடுகள் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டின் நலனுக்கான ஒன்றிணைந்து செயற்படுவது போன்று, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்படத் தவறுவோமாக இருந்தால் துரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாகவே பார்க்கப்படுவோம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 8ஆவது சர்வதேச வர்த்தக் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள், யாழ். பொது நூலக கேட்போர் க…
-
- 0 replies
- 413 views
-
-
'வட, கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது சிந்திக்க முடியாது' எஸ். நிதர்ஸன் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புத் தொடர்பில் இப்போது சிந்திக்க முடியாது என தெரிவித்துள்ள வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பல்வேறு கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய முடியாது. மாறாக பொருளாதார ரீதியில் மக்களுடைய அபிவிருத்திக்காக ஒன்றிணைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு, யாழ். பொது நூலகத்தில் நேற்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது அரசியல் தலைமைகள் மக்களுடைய அபிவிருத்திக்கா…
-
- 0 replies
- 328 views
-
-
மத்திய வங்கி மீதான தாக்குதல் 21 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வில்லை இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதி க்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வி யடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு மட்டுமே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி தாக்குதலால் மரணித்த மற்றும் ஊனமுற்றவர்களுக்கான சங்கத்தின் தலைவர் எல்.டி.எல்.ஏ.குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், இச் சம்பவத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு 55 வயதிலேயே …
-
- 0 replies
- 258 views
-
-
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர்கள் எனவும் இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகள் ஐரோப்பிய புலி வலையமைப்புடன் தொடர்பு பேணி வருவதாகவும்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முன்னாள் போராளிகள் வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்டிருப்பதாகவ…
-
- 0 replies
- 267 views
-
-
அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்துக்கு தவறான புரிதலே காரணம் சீனா தெரிவிப்பு (நமது நிருபர்) அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனாவின் தொழில் முயற்சிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒருபோதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும். அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். பீஜிங் நகரில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கை மக்கள் சரியான முறையில் அறிவுறுத்தப்படாமையின் காரணமாக குறித்த நில…
-
- 0 replies
- 266 views
-
-
முதல் அமர்வில் உரையாற்றவுள்ள கனடா, ஆஸி.,சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடு கள் மனித உரிமை பேரவையி ன் 34 ஆவது கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்திரேலியா, சுவீடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர் லாந்து, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள நிலையில் அவர் கள் இலங்கை விவகாரம் தொடர்பிலும் பிரஸ் தாபிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் 27 ஆம்தி…
-
- 0 replies
- 182 views
-
-
அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்! நுகேகோட வீதியில் பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியின் காரணமாகவே, குறித்த பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பவற்றை பிரதானப்படுத்தி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றள்ளமை குறிப்பிடத்தக்கது. http://ww…
-
- 7 replies
- 715 views
-