Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாரும் கண்டுகொள்ளாத பரிதாபம்..! :கொட்டும் மழையிலும் கடும் குளிருடன் காரிருளில் தொடர்ந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் குளிர் மற்றும் மழைக்கு மத்தியிலும் காரிருளில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்றிரவு முழுவதும் மேற்கொண்டிருந்தனர். எனினும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் எவரும் நேரில் சென்று பார்வையிடவில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள், நீராகாரம் எதுவுமின்றி தமக்கு நீதி வேண்டி சாகும் வரை உண்ணாவிரதத்தில் நேற்று(23) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமது போராட்டத்தை இன்றைய தினம் (24) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளனர். நேற்று இரவு போராட்டக்காரார்கள் அமர்ந்…

  2. வவுனியாவில் படம் பிடிக்கும் புலனாய்வாளர்கள் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கமராவுடன் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் வருகை தந்து அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்கள் தெரிவித்தனர். வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தனர். தமது காணாமல் போன பிள்ளைகள் மற்றும் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் தர வேண்டும் எனவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்ய வேண்டும் எனவும் கோரி இத் தொடர் உண்ணாவிரதப் போராட்…

  3. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் கொழும்பில் காணாமல்போனோர் தொடர்பான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டோரை கருப்பொருளாகக் கொண்டு 'காணாமல் போகச் செய்த அன்புக்குரியவர்களின் பிரவேசம்' (Appearing The Disappeared) எனும் கண்காட்சி மற்றும் 'மௌனிக்கப்பட்ட நிழல்கள்' (Silence Shadows) என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா என்பன இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபையினால் (Amnesty International) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில் கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 'காணாமல் போகச் செய்த அன்புக்குரியவர்களின் பிரவேசம்' எனும் கண்காட்…

  4. 10 கோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் 7 பேர் கைது.! சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை மட்டக்களப்பு கல்குடாவில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது. புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து பொத்துவில் பாணமை சாஸ்திரவெல விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எம்.ஐ.இப்றாஹீம் தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளதுடன் வலம்புரி சங்கையும் கைப்பற்றியுள்ளனர். விசேட அதிரடிப்படை கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.எம்.ஆர்.லெத்தீபின் பணிப்புரையின் பேரில் அதிரடிப்படை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கேசர ரத்னவீர…

  5. ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கியமை துர்ப்பாக்கிய நிலைமை. – சி.வி ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உழவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவல், போட்டிகளில் மக்கள் ஈடுபடுவதுடன் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களுக்கு அதற்கென விசேட ப…

    • 3 replies
    • 735 views
  6. ராஜபக்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் துணிந்து அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறும் முக்கிய நபரே சரத் பென்சேகா.அந்தவகையில் கடந்த ஆட்சியின் போது நாட்டுக்கு மிக முக்கிய புள்ளியாக இருந்த சரத் பொன்சேகா மகிந்தவினால் தண்டிக்கப்பட்டு அரசியலிலும், மக்களிடத்திலும் அநாதையாக்கி விடப்பட்டார். பின்னர் அவருக்கு ஆதரவும் பதவி கொடுத்து காத்து வருபவர் ரணில் விக்ரமசிங்கவே என்பது அனைவரும் அறிந்த விடயமே. இப்போதைய நிலையில் நாட்டில் அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் மகிந்த, கோத்தபாய போன்றோர் பொன்சேகாவினால் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்நோக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மகிந்தவை அடக்க ரணில் தரப்பிடம் இருக்கும் முக்…

  7. வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் எதிர்வரும் நான்காம் நாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் எனவும் அவரை அங்கு செல்லவேண்டாம் எனவும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், மார்க்கம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியினதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களோ அழைக…

    • 17 replies
    • 1.5k views
  8. இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஐ.நா இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அவரை சந்திப்பதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா. விசேட அறிக்கையாளர், குறித்த பயணத்தின்போது சேகரித்த விடயங்களை தொகுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயத்தைக் க…

  9. ஏன் இந்த வாள்வெட்டு..? யாழ் - கொக்குவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கு குடிபோதையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே காரணம் என தெரியவந்துள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியில் நேற்று மாலை வேளையில் ஆயதங்களுடன் வந்த கும்பல் 5 வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியது. இது குறித்து பாதிக்கப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை இளைஞர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதன்போது அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது…

  10. விஞ்ஞானத்திற்கு ஏற்றவாறு நாமும் மாற வேண்டும் - எதிர்கட்சி தலைவர் நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று ஒன்றும் இல்லை. எமது நாட்டிற்கு வரும் நல்ல திட்டங்களை நாம் ஏற்போம். விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி விட்டதோ அதுபோல நாமும் அதுக்கு ஏற்றால் போல மாற வேண்டும். ஆனால் மக்கள் இதனை விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றார்கள் என எதிர்கட்சி தலைவர் தவராசா தெரிவித்துள்ளார். யாழ் பொது நூலகத்தில் இன்று நடைபெற்ற இணையம் மூலமான வாகன அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், …

  11. கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி இன்று பகல் மாணவர்கள் பல்கலைக்கழத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன. நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்னதாக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிருவாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் நிருவாக கட்டிடத்த…

  12. மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்கள் தொடர் போராட்டம் (ஆர்.வி.கே) மருத்துவ கல்வியை கேள்விக் குறியாக்கும் மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்யக் கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்களால் பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏழைகளின் மருத்துவக் கல்வியை கேள்விக் குறியாக்கும் மாலபே தனியார் கல்லூரியை தடைசெய்ய கோரி யாழ் மருத்துவ பீட மாணவர்களால் 8 ஆவது நாளாக இன்றும் வகுப்பு மற்றும் வைத்தியசாலை கல்வி பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி மாணவர்கள் மருத்துவ பீட முன்றலில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வர, ஏனைய மாணவர்கள் பல்வேறு ச…

  13. பிரதேச மக்கள் பெரும் அச்சத்தில்கண்டி மாவட்­டத்தைச் சேர்ந்த கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் தக்­கியா ஒன்­றுக்குப் அருகி­லுள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணிக்கருகில் ஒதுக்­கப்­பட்­டுள்ள பகு­தியில் நேற்று முன்­தினம் இர­வோ­டி­ர­வாக பெரும்­பான்மை இனத்­த­வர்கள் புத்தர் சிலை­யொன்­றினைக் கொண்டு வைத்­துள்­ள­மையால் அப்­ப­கு­தியைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பீதி­ய­டைந்­துள்­ளனர்.முஸ்­லிம்­களே நூறு வீதம் வாழும் இப்­ப­கு­தியில், முஸ்­லிம்கள் அரு­கி­லுள்ள பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுடன் நல்­லு­ற­வுடன் வாழ்ந்­து­வரும் சூழ்­நி­லையில் இவ்­வாறு சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை இன முறு­கலை உரு­வாக்கும் நிகழ்­வாக அவர்கள் கரு­து­கின்­றனர்.இது தொடர்பில் நிவ்­எல்­பிட்டி கிராம ம…

    • 0 replies
    • 561 views
  14. அதி சொகுசு காரில் கொண்டு சென்ற 35 கிலோ கஞ்சா மீட்பு தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்பிற்கு அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் நேற்று இரவு மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, காரில் மறைத்து வைத்திருந்த நிலையில், சுமார் 35 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகளை மீட்டுள்ளதோடு சந்தேகநபர்கள் மூவரும…

  15.  மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்துக்கு 250 பேர் தெரிவு -அ.அரசரட்ணம் நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடுகளுக்கான 250 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, இம்மாதம் 30 ஆம் திகதி வீடமைப்பு அமைச்சரினால் வீடுகளுக்கான அத்திவாரம் இடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நாவற்குழியில் 5 இலட்சம் ர…

  16. அரச காணிகளை சுவீகரிப்பதில் அரசியல்வாதிகள் மும்முரம் சகோதர இனமான முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களது பலத்தைப் பயன்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச காணிகளை விலைக்கு வாங்குவதிலும், சுவீகரிப்பதிலும் மும்மூரமாக ஈடுப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அரச காணிகளை இரவோடு இரவாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்பொழுது இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர், சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் திருநாள் உழவர் விழா வந்தாறுமூலை அம்பலத்தடி உழவர் சிலை அருகில் அருகில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …

  17. முல்லைத்தீவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 39 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் வைத்தியசாலையில்.! முல்லைத்தீவு விஸ்வமடு விஸ்வநாதர் வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள, வளாகத்திலிருந்த குளவிக்கூடு இன்று கலைந்து, கொட்டியதில் 46 பேர் பாதிக்கப்பட்டு தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கடுமையான காற்றுக்காரணமாக கலைந்து, விசுவநாதர் ஆரம்வித்தியாலய 30 மாணவர்கள் உட்பட 5 ஆசிரியர்கள் மற்றும் விஸ்வமடு மகா வித்தியாலய 9 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் இருவர் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொ…

  18. தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை இன்று காலை பொலிஸார் கைது செய்தனர். இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய். பீட்டாவை தடை செய். எங்கள் கலாச்சாரத்தை அழிக்காதே. தமிழ் நாடு தனிநாடாகும் போன்ற கோசங்களை எழுப்பி மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் தமிழக இளைஞர்களுக்கு ஆதரவ…

    • 24 replies
    • 3.7k views
  19. புத்தர் சிலைகளை உடைத்தவர்களை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழு பொன் ஆனந்தம் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைக் கைதுசெய்யும் நோக்கில், எட்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இக் குழுக்களில் நான்கு குழுக்கள் சிவில் உடையிலும் ஏனைய நான்கு குழுக்கள் சீருடையிலும் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய திருகோணமலைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் ப…

    • 1 reply
    • 311 views
  20. ஜோதி­டத்­தினால் ஆட்­சியை ஒரு­போதும் மாற்ற முடி­யாது ஜனா­தி­பதி தேர்­தலில் ஏற்­பட்ட கதியே 27 இலும்­ ஏற்­படும் என்­கிறார் சஜித் பிரேமதாஸ (எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் ஆட்­சியை ஜோதி­டத்­தினால் ஒரு­ போதும் மாற்­ற ­மு­டி­யாது. சனி பெய ர்ச்சி என்று கூறி எதிர்­வரும் 27 ஆம் திகதி நுகே­கொ­டையில் பொது எதி­ர­ணி­யினர் போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.எதி­ர­ணிக்கு சாத­க­மான நாள் என்­ப­த­னா­லேயே இந்த தினத்தில் பேர­ணியை வைத்­துள்­ளனர். எனினும் ஜனா­தி­பதி தேர்­தலில் இதே தரப்­பி­னர்தான் சோதி­டரை நம்பி தோல்வி அடைந்­தனர். இந்த குழு­வி­ன­ருக்கு 27 ஆம் திகதி இருக்கும் பலம் கூட இல்­லாமல் போகும் என வீட­மைப்பு மற் றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரே­ம­தா…

  21. லசந்த படு­கொலை : விரைவில் கோத்­தா­விடம் வாக்கு மூலம் (எம்.எப்.எம்.பஸீர்) சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­ கொலை குறித்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி தற்­போது யாழ். பகு­தியில் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள, தற்­போ­தைய அமைச்­சரும் முன் னாள் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான பீல்ட் மார் ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு நெருங்­கிய புல­னாய்வு அதி­கா­ரிகள் பலரை விசா­ரணை வல­யத்­துக்குள் விசா­ர­ணை­யா­ளர்கள் கொண்­டு­வந்­துள்­ளனர். எதிர்­வரும் நாட்­களில் அவர்­க­ளிடம் லசந்­தவின் கொலை தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க குற் றப் புல­ன­ாய்வுப் பிரிவு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­…

  22. லசந்த கொலை தொடர்பில் எனக்கு தெரிந்த உண்­மை­களை கூறி­யுள்ளேன் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை தொடர்பில் பொன்சேகா (ஆர்.யசி) சண்டே லீடர் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்­க­விற்கும் இரா­ணு­வத்­திற்கும் தனிப்­பட்ட முரண்­பா­டுகள் இருக்­க­வில்லை. இரா­ணு­வத்தின் தனிப்­பட்ட நபர்கள் ஒரு­ சிலர் முரண்­பட்­டனர். லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை தொடர்பில் எனக்கு தெரிந்த உண்­மை­களை முழு­மை­யாக விசா­ர­ணை­களில் முன் ­வைத்­துள்ளேன் என முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். லசந்த விக்­ர­ம­துங்க கொலை­யுடன் என்னை இணைப்­ப­தற்கு முன்னாள் ஆட்­சி­யா…

  23. நல்­லாட்சி என்று கூறிக் கொண்டு அரா­ஜகப் பாதையில் அர­சாங்கம் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க குற்­றச்­சாட்டு (ஆர்.யசி ) நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு அர­சாங்கம் அரா­ஜகப் பாதையில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. கொலை, கொள்ளை , அடக்­கு­முறை மூல­மாக தமது அர­சியல் நகர்­வு­களை கையாண்டு ஆட்­சியை தக்­க­வைக்­கவே ரணில் – -மைத்­திரி அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க குற்றம் சாட்­டினார். அடுத்த தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­ன­னியின் ஆட்­சியை உரு­வாக்க சகல நட­வ­டிக்­கையும் எடுக்கும். தேர்­த­லுக்கு முன்னர் ஆட்­சியை கைப்­பற்ற முடியும் என்றால் அதையும் செய்ய முயற்­சி…

  24. மஹிந்த – முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி ஜனாதிபதி மைத்திரியை பேச்சுக்கு வருமாறும் அழைப்பு (ஆர்.யசி ) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கும் வடக்கு,கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கும் இடையில் நேற்று நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பா­டுகள் இன்றி தோல்வியில் முடி­வ­டைந்­துள்­ளது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது அதி­காரம் இல்­லாத நபர்­க­ளை பேச்சுக்கு அனுப் ­பாது ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன பேச்­சு­வார்த்­தைக்கு வரவேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஐக்­கிய தேசியக் கட்சியை எதிர்க்கும் எந்­த­வொரு கட்­சி­யினருடனும் பேச்­சு­வார்த்­தை­களை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.