Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமானது இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கேப்பாப்பிலவு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. …

  2. செங்கலடி பிரதேச செயலகத்தின் சவுக்கடி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தனியார் காணிகளை அத்துமீறி தன்வசப்படுத்தும் முயற்சியில் அங்கு வாழும் மற்றும் ஒரு இனத்தவர்கள் முற்பட்ட நிலையில் இன்றைய தினம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கிராம சேவகர் பிரிவிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அந்த பகுதியில் வாழும் வேறு இனத்தவர்கள் போலியான காணி உறுதிப் பத்திரங்களை வைத்துக் கொண்டு இரவோடு இரவாக தன்வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தங்களின் காணிகளை பார்க்கச் சென்றால் துப்பாக்கியால் சுடுவேன் என அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும், பல தடவைகள் குறித்த காணி விடயம் தொடர்பாக பல்வேறு…

  3. வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுவத்தால் மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் இன்றைய தினம்(17) கையளிக்கப்பட்டது. கடந்த யுத்த காலத்தில் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் ஓமந்தைப்பகுதி காணப்பட்டது. மேலும் 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டது. இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் இக்காணியின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்தது. மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வச…

  4. தொல்பொருட்கள் ஒப்படைப்பு கடந்த ஐந்து வருடங்களாக, இலங்கை சுங்கத்திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டிருந்த தொல்பொருட்கள் அனைத்தையும் கொழும்பு மற்றும் ஊவா பல்கலைக்கழகத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுது.(படப்பிடிப்பு குஷான் பதிராஜ்) - See more at: http://www.tamilmirror.lk/189924/-த-ல-ப-ர-ட-கள-ஒப-பட-ப-ப-#sthash.KR1rPXwk.dpuf

  5. ஒட்டுசுட்டான் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க கோரிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்புக்களாலும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தம் உச்சம் பெற்றிருந்த நிலையில் செயலிழந்தது. மிகவும் தரமான ஓடுகளை உற்பத்தி செய்யும் பழமை வாய்ந்த தொழிற்சாலையாக ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை விளங்கியது. நூற்றுக்காணக்கானவர்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பையும் பெற்றிருந்தனர். இந் நிலையில் யுத்தம் முடிந்து 7 ஆண்டுகளுக்கு மே…

  6. இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள் (ஆர்.வி.கே) நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடணப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன் பிடி துறைமுக பகுதிகள் இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14நாட்களுக்கு நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தி…

  7. புதிய அரசியலமைப்புக்கு மஹிந்தவே முட்டுக்கட்டை : அரசாங்கம் அறிவிப்பு புதிய அரசியலமைப்புக்கும் 13 பிளஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முட்டுக்கட்டையாக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே வடக்கு, கிழக்கு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதரவு வழங்கியுள்ளனர். பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/

    • 2 replies
    • 331 views
  8. கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சலசலப்பு.! கிளிநொச்சியில் நேற்று விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பதில் முதலமைச்சருமான பொ.ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் என்பதனால் வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு வறட்சியினால் ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அதனை எதிர்க்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடா்பில் அறிக்கை ஒன்றை அனுப்புவதற்காகவும் விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்…

  9. வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கல்வி கற்றும் வரும் வெளிநாட்டு பௌத்த பிக்குகள் மற்றும் வேறும் பல்வேறு காரணிகளுக்காக இலங்கை வரும் வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பௌத்த சர்வதேசம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுத்ம், வீசா கட்டணங்களை வெகுவாக அதிகரித்தும், வேறும் காரணிகளினாலும் இவ்வா…

  10. மீள்குடியேற்றப்பட்ட முகமாலைப்பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் அதிருப்தி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இம் மக்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தினரின் வேலி காரணமாக அவற்றை அமைத்…

  11. நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமெனத் தெரிவித்துள்ள ராணுவத்தினர் இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்குர் பதிலராக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிப்பதாக குறிப்பிட்டுள்ள ராணுவத்தினர் கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை கடந்த திங்கட்கிழமை சந்தித்த வேளையிலேயே மேற்படி தெரிவித்துள்ளனர். அத்தோடு, படை முகாம் அங்…

  12. 27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலே ஜீ.எஸ்.பி வழங்கப்படும் – ஐரோப்பிய ஒன்றியம் 27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதற்கு 27 சர்வதேச பிரகடனங்களையும் அமுல்படுத்த வேண்டுமென இன்றைய தினம் மீளவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கொழும்பு அலுவலகம் இது பற்றி அறிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் காரணிகள் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த பிரகடனங்களை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த…

  13.  பஸ் சேதம்: 12 பேருக்கு சிறை செல்வநாயகம் கபிலன் காரைநகர் போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து தாக்குதல் மேற்கொண்ட 12 பேருக்கு, தலா 4,000 ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 12 பேருக்கும் 1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதம் எற்படுத்தியமைக்காக, போக்குவரத்து சாலைக்கு 5,350 ரூபாயையும் நடத்துனரிடமிருந்து அபகரித்த பயணசீட்டு பணமான 25,076 ரூபாய் பணத்தினை மீளச் செலுத்துமாறும், வழக்கை கொண்டு நடத்திய காரைநகர் சாலைக்கு, தலா 5,000 ரூபாய் வீதம் 12 ப…

  14. ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த 22 ஏக்கர் காணி இராணுவத்தால் விடுவிப்பு வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுத்தால் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்தது. மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வசமுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணி…

  15. விளக்க மறியலில் இருந்து கொண்டு நூல் எழுதும் விமல் வீரவன்ச மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருவதாக வெலிக்கடை சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து இந்த நூலை விமல் வீரவன்ச எழுதி வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளன. அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பாரியளவில் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாரியளவில் வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டு அண்மையில் இது தொடர்பிலான விசாரணைகளின் போது விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார். வ…

  16. இந்திய பாதுகாப்பு கரிசனைகளை உதாசீனம் செய்ய முடியாது – சரத் பொன்சேகா இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை உதாசீனம் செய்ய முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு மற்றும் புவியியல்சார் அரசியல் போன்ற காரணிகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் பிராந்திய வலயத்தின் பலம்பொருந்திய நாடு இந்தியாவே என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பாதுகாப்பு விவகாரம் என்றால் இந்தியாவே பிராந்திய வலயத்தின் முதன்மை நாடு எனவும் அதில் மாற்றமில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்திய பாதுகாப்பு விவகாரங்களை உதாசீனம் செய்துவிட முடியாது எனவும் இந்த விட…

  17.  'ஓரினச்சேர்க்கை ஒத்துவராது: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு மனித உரிமைகள் தொடர்பிலான செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்ற உறுப்புரை உள்ளிட்ட சர்சைக்குரிய உறுப்புரைகள் பலவற்றுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்; தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த அமைச்சர்களில் பலர் இந்த யோசனைக்கு, தங்களுடைய கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது. வெளிவிவகார அமைச்சினாலேயே இந்த யோசனைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டி…

  18. வாட்டி வதைக்கும் வறட்சி : குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.! நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் …

  19. நல்லி­ணக்­கத்தை குழப்­பு­வ­தற்கு அடிப்­ப­டை­வா­திகள் பாரிய சதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­கிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வருகின்­றது. எனி னும் அதனை குழப்­பு­வ­தற்கு அர­சியல் விரோ­தி­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் சூழ்ச்சி செய்து வரு­கின்­றனர். இவ்­வா­றா­ன­வர்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் மக்கள் புரிந்­து­கொண்டு செயல்­ப­ட­வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன தெரி­வித்தார். முஸ்லிம் சமய பண்­பாட்டு திணைக்­க­க­ளத்தின் புதிய கட்­ட­டத்­தொ­கு­தியின் திறப்பு விழா நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் …

  20. நிறை­வேற்ற முடி­யாத நிபந்­த­னை­களை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளாது ஜி.எஸ்.பி. பிளஸ் நிபந்­த­னை­களில் சாத்­தி­ய­மற்ற விட­யங்கள் உள்­ளன என்­கி­றது அர­சாங்கம் (க.கம­ல­நாதன்) ஜி.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்ள எமக்கு விதிக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னை­களில் எம்மால் முடி­யாத விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த மாட்டோம் என ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு அறி­விப்போம் என்று நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார். ஆகவே, எமது நாட்டின் மீது விதிக்­கப்­படும் நிபந்­த­னை­களில் எவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். நிதி இரா­…

  21. த.மு.கூ., மு.கா., ஈ.பி.டி.பி., அ.இ.ம.கா. ஆகிய கட்சிகள் இன்று கூடுகின்றன 50க்கு50 கோரிக்கை உள்­ளிட்ட வரைவை இறுதி செய்யத் திட்டம் (ஆர்.ராம்) ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்கை உள்­ளிட்ட வரைவை இறுதி செய்­வ­தற்­காக நான்கு சிறு­பான்மை கட்­சிகள் இன்று புதன்கி­ழமை கூட வுள்­ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் இன்று மாலை 4.30மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய நான்கு கட்­சி­களின் தலை­வர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இச்­சந்­திப்­பின்­போது குறித்த நான்கு கட்­சி­களும் …

  22. ஜூன் மாதத்­துக்கு முன்னர் எந்த தேர்­த­லையும் நடத்த முடி­யாது எதிர்­வரும் ஜூன் மாதத்­திற்கு முன்னர் எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்த முடி­யாது. எந்­த­வொரு தேர்­தலும் குறிப்­பிட்ட தினத்­திற்குள் நடத்­தப்­ப­டா­விட்டால் அது ஜன­நா­யக விரோதச் செய­லா­கி­விடும் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்­தல்கள் செய­ல­கத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து அவர் குறிப்­பி­டு­கையில், எந்­த­வொரு தேர்­தலும், குறிப்­பிட்ட தினத்­திற்குள் நடத்­தப்­ப­டா­விட்டால் அ…

  23. ஜெனிவா செல்ல தயா­ராகும் உயர்­மட்ட தூதுக் ­கு­ழு­வினர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­ மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் அக்­கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­வ­தற்கு தயா­ரா­கி­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ ஆகியோர் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் தலை­மை­ வ­கித்து கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­க­ப்ப­டு­கி­றது. அத்­துடன் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும…

  24. சி.ஐ.டி. எனத் தெரிவித்து நகை கொள்ளை : வவுனியாவில் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சி.ஐ.டி. யினர் என தம்மை தெரியப்படுத்திச் சென்ற இருவர் வீட்டை சோதனை செய்வதாக தெரிவித்து 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம், பாம்- 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் சென்ற இருவர், தாம் சி.ஐ.டி. யினர் எனவும் உங்களது வீட்டில் கசிப்பு மற்றும் டைனமைற் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவே வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். வீட்டு உரிமையாளர் சோதனையிட அனுமதித்த போது, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.