Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குற்றச்சாட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிா்ப்புத் தொிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் கிளி நொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்கள், ஒரு அங்கத்தவா் குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக …

  2. இலங்கை ஐக்­கிய குடி­ய­ரசு என பிர­க­டனம் செய்­யப்­பட வேண்டும் வழி­ந­டத்தல் குழு­வுக்கு முன்­மொ­ழிய நான்கு அரசியல் தரப்புக்கள் தயாரா­கின்­றன (ஆர்.ராம்) இலங்கை ஜன­நா­யக சோஷ­லிஸ குடி­ய­ரசு என்­பது இலங்கை ஐக் ­கிய குடி­யரசு என பிர­க­டனம் செய்­யப்­பட வேண்டும். நிறை­வேற்று அதி­கார முறை­மையில் சில மாற்­றங்கள் செய்­யப்­பட்­டாலும் நாட் டின் தலைவர் மக்­களால் தெரி­வு­செய்­யப்­படும் ஜனா­தி­பதி ஆவார். ஜனா­தி­பதி சார்ந்­தி­ருக்­காத ஏனைய மூன்று இனங்­களை பிர­தி­நி­தித்­துவப்­ப­டுத்தும் வகையில் மூவர் துணை ஜனா­தி­ப­தி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது உட்­பட முக்­கிய பரிந்­து­ரைகள் இலங்கை ... அடங்­கிய வரைபை புதிய அர­சி­ய­ல­மைப்பை…

  3. வீதியில் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியதால் கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரியை பொலிஸ் கூண்டில் 12 மணித்தியாலங்கள் அடைத்து வைத்த பொலிஸார் 2017-01-19 09:05:55 (எம்.எப்.எம்.பஸீர்) தனது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தத் தவ­றிய கொழும்பு பிர­தே­சத்தின் பொலிஸ் நிலையம் ஒன்றின் போக்­கு­வ­ரத்து பிரிவு பொறுப்­ப­தி­காரி ஒரு­வரை சுமார் 12 மணி நேரம் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் அடைத்து வைத்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இந்த சம்­பவம் குறித்து அறிய முடி­வ­தா­வது, கடந்த திங்­க­ளன்று இரவு பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்­துக்கு உட்­பட்ட பொலிஸ்­கு­ழு­வொன்று ரோந்துப் பணியில் ஈடு­பட்­டுள்­…

  4. Started by நவீனன்,

     சந்திப்பு சுவிற்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்மை இன்று (19) சந்தித்தார். - See more at: http://www.tamilmirror.lk/189979/சந-த-ப-ப-#sthash.VnsTyZLk.dpuf சந்திப்பு 19-01-2017 01:51 PM Comments - 0 Views - 25 சுவிற்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும், நிர்வாக தலைவருமான கிளவ்ஸ் ஷ்வாப்பை இன்று (1…

  5. மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ( ஆர்.வி.கே.) யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ ஒரு நாடு ஒரு அணி “ எனும் பொதுவான இலக்கின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் கிரிக்கெட் அரங்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மா…

  6. யாழிலும் மாலபே கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ். மருத்துவ பீட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, கையெழுத்துக்களையும் சேகரித்து வருகின்றனர். தனியார் மருத்துவ கல்லூரிகள் குறித்து அரசாங்கத்திற்கு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு உரிய தீர்வு கிடைக்காத ந…

    • 1 reply
    • 419 views
  7. சிறு­பான்மை மக்களுக்கு அநீதி தேர்தலுக்கு அவசரம் வேண்டாம் எல்லை நிர்ணயக்குழு அறிக்கை தொடர்பில் மு.கா. த.மு.கூ., ஈ.பி.டி.பி., ந.ம.இ. கூட்­டாக வேண்டுகோள் (ஆர்.ராம்) எல்லை நிர்­ணயக்குழுவின் அறிக்கை உள்­ளூராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்­ச­ரி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் உட­ன­டி­யாக வர்த்த­மானி பிர­சு­ரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான செயற்­பா­டா­னது சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கு இழைக்­கப்­படும் பெரும் அநீ­தி­யாகும். அத்­துடன், சிறு மற்றும் சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் வெகு­வாக பாதிக்­கப்­ப­டு­கின்ற வகையில் முன்­னெ­டுக்­கப்­படும் ஜன…

  8. உண்ணாவிரதம் இருக்க போவதாக வெளியான செய்தி பொய் என்கிறார் அனந்தி சசிதரன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது விடின் அனந்தி சசிதரன் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் , எதிர்வரும் 21ம் திகதி அவர் தனது போராட்டத்தை ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்து உள்ளதாக சில இனையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, தான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை எனவும் தெரி…

  9. ஆட்சி மாற்றத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து சுவிஸ் பாராட்டு இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஏற்படுத்தப்பட்ட சாதகமான படிமுறைகளை சுவிட்ஸர்லாந்து வரவேற்று ள்ளது. ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி பூபிஸ் லொய்ட்காட் தெரிவித்துள்ளார். டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். இதுவரை இலங்கைக்கு சுவிட்ஸர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின், ம…

  10. திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் சரத் பொன்சேகா திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. டெல்லி சென்றிருக்கும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, அங்கு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலை துறைமுகம் விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். “ஆழ்கடல் துறைமுகங்களில் திருணோகமலை துறைமுகம் முக்கியமான ஒன்று. அதை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சம அளவிலான உறவைப் பேண…

  11. பாழடைந்த காணிக்குள் புதைக்கப்பட்டிருக்கும் மர்மபொருள் : மட்டுவில் மக்கள் பரபரப்பு மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்நது பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொருள் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காணியானது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் டெங்கு உருவாகும் வகையிலும் மாசடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் இந்த காணி உரிமையாளர்கள் எந்தவித கவனம் செலுத்தாமல் உள்ளமையால் இந்த மர்ம புதையல் தொடர்பாக சுகாதார பரிசோதகர் கவனத்துக்கு மக்கள் கொண்டுச் சென்றுள்ளனர். குறித்த காணியில் புதைக்கப்பட்டுள்ள மர்மபொருள்ள என்ன என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கு கூடி நின்றுள்ளதோடு …

  12. நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமானது இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வாறு கையகப்படுத்தப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் இராணுவத்தினர் கூறியுள்ளனர். கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், கேப்பாப்பிலவு கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. …

  13. செங்கலடி பிரதேச செயலகத்தின் சவுக்கடி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தனியார் காணிகளை அத்துமீறி தன்வசப்படுத்தும் முயற்சியில் அங்கு வாழும் மற்றும் ஒரு இனத்தவர்கள் முற்பட்ட நிலையில் இன்றைய தினம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கிராம சேவகர் பிரிவிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அந்த பகுதியில் வாழும் வேறு இனத்தவர்கள் போலியான காணி உறுதிப் பத்திரங்களை வைத்துக் கொண்டு இரவோடு இரவாக தன்வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், தங்களின் காணிகளை பார்க்கச் சென்றால் துப்பாக்கியால் சுடுவேன் என அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும், பல தடவைகள் குறித்த காணி விடயம் தொடர்பாக பல்வேறு…

  14. வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுவத்தால் மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் இன்றைய தினம்(17) கையளிக்கப்பட்டது. கடந்த யுத்த காலத்தில் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் ஓமந்தைப்பகுதி காணப்பட்டது. மேலும் 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டது. இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் இக்காணியின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்தது. மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வச…

  15. தொல்பொருட்கள் ஒப்படைப்பு கடந்த ஐந்து வருடங்களாக, இலங்கை சுங்கத்திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டிருந்த தொல்பொருட்கள் அனைத்தையும் கொழும்பு மற்றும் ஊவா பல்கலைக்கழகத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுது.(படப்பிடிப்பு குஷான் பதிராஜ்) - See more at: http://www.tamilmirror.lk/189924/-த-ல-ப-ர-ட-கள-ஒப-பட-ப-ப-#sthash.KR1rPXwk.dpuf

  16. ஒட்டுசுட்டான் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க கோரிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்புக்களாலும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை கடந்த 2008 ஆம் ஆண்டு யுத்தம் உச்சம் பெற்றிருந்த நிலையில் செயலிழந்தது. மிகவும் தரமான ஓடுகளை உற்பத்தி செய்யும் பழமை வாய்ந்த தொழிற்சாலையாக ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை விளங்கியது. நூற்றுக்காணக்கானவர்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பையும் பெற்றிருந்தனர். இந் நிலையில் யுத்தம் முடிந்து 7 ஆண்டுகளுக்கு மே…

  17. இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஊரணி துறைமுகம் மக்களிடம் ஒப்படைப்பு : சந்தோசத்தில் மீனவர்கள் (ஆர்.வி.கே) நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடணப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள ஊரணி மீன் பிடி துறைமுக பகுதிகள் இன்று மக்களிடம் மீள கையளிக்கப்பட்டன. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் கடந்த 8ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 14நாட்களுக்கு நல்லிணக்க வாரமாக பிரகடணப்படுத்தி…

  18. புதிய அரசியலமைப்புக்கு மஹிந்தவே முட்டுக்கட்டை : அரசாங்கம் அறிவிப்பு புதிய அரசியலமைப்புக்கும் 13 பிளஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முட்டுக்கட்டையாக இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே வடக்கு, கிழக்கு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதரவு வழங்கியுள்ளனர். பத்தரமுல்லையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சபை முதல்வரும் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/

    • 2 replies
    • 332 views
  19. கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சலசலப்பு.! கிளிநொச்சியில் நேற்று விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பதில் முதலமைச்சருமான பொ.ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது. தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் என்பதனால் வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு வறட்சியினால் ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அதனை எதிர்க்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடா்பில் அறிக்கை ஒன்றை அனுப்புவதற்காகவும் விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்…

  20. வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கல்வி கற்றும் வரும் வெளிநாட்டு பௌத்த பிக்குகள் மற்றும் வேறும் பல்வேறு காரணிகளுக்காக இலங்கை வரும் வெளிநாட்டு பௌத்த பிக்குகள் நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பௌத்த சர்வதேசம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களை தெளிவூட்டும் நடவடிக்கையொன்று இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ளது. அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுத்ம், வீசா கட்டணங்களை வெகுவாக அதிகரித்தும், வேறும் காரணிகளினாலும் இவ்வா…

  21. மீள்குடியேற்றப்பட்ட முகமாலைப்பகுதியில் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் அதிருப்தி – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இம் மக்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ராணுவத்தினரின் வேலி காரணமாக அவற்றை அமைத்…

  22. நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நந்திக்கடல் பகுதியை விடுவிக்க முடியாதென ராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதி தமது படை நடவடிக்கைகளுக்கு அவசியமெனத் தெரிவித்துள்ள ராணுவத்தினர் இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்குர் பதிலராக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிப்பதாக குறிப்பிட்டுள்ள ராணுவத்தினர் கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை கடந்த திங்கட்கிழமை சந்தித்த வேளையிலேயே மேற்படி தெரிவித்துள்ளனர். அத்தோடு, படை முகாம் அங்…

  23. 27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலே ஜீ.எஸ்.பி வழங்கப்படும் – ஐரோப்பிய ஒன்றியம் 27 பிரகடனங்களையும் அமுல்படுத்தினாலேயே ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த வரிச் சலுகைத் திட்டத்தை மீளவும் வழங்குவதற்கு 27 சர்வதேச பிரகடனங்களையும் அமுல்படுத்த வேண்டுமென இன்றைய தினம் மீளவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கொழும்பு அலுவலகம் இது பற்றி அறிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் காரணிகள் மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்த பிரகடனங்களை இலங்கை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த…

  24.  பஸ் சேதம்: 12 பேருக்கு சிறை செல்வநாயகம் கபிலன் காரைநகர் போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து தாக்குதல் மேற்கொண்ட 12 பேருக்கு, தலா 4,000 ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 12 பேருக்கும் 1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதம் எற்படுத்தியமைக்காக, போக்குவரத்து சாலைக்கு 5,350 ரூபாயையும் நடத்துனரிடமிருந்து அபகரித்த பயணசீட்டு பணமான 25,076 ரூபாய் பணத்தினை மீளச் செலுத்துமாறும், வழக்கை கொண்டு நடத்திய காரைநகர் சாலைக்கு, தலா 5,000 ரூபாய் வீதம் 12 ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.