ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
வவுனியா அன்னை வேளாங்கன்னி ஆலயத்தின் மாதா சொரூபம் விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிக்குளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள குறித்த ஆலயத்தின் முன்றலில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அவ்வாலயத்தின் குரு ஜெயபாலன் குரூஸ் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்பு, குறித்த இடத்தை சென்று பார்வையிட்ட செட்டிகுளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். http://www.tamilwin.com/community/01/131163?ref=home
-
- 0 replies
- 410 views
-
-
ஜுனியர் மிஸ்டர் சிறிலங்காவாக தெரிவாகி புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். இலங்கை உடற்கட்டு சம்மேளத்தினால் நடாத்தபட்ட 2016 ஆம் ஆண்டு மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டியில் புஸ்ஸல்லாவயை சேர்ந்த இந்து தேசிய கல்லூரியின் மாணவன் மாதவன் இராஜகுமாரன் என்பவரே 2016 ஆம் ஆண்டிற்கான ஜுனியர் மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவாகியுள்ளார். குறித்த இளைஞன் இந்த பட்டத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக மலையக இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு சாதனைகளை மேற் கொண்டு வருகின்றனர். இருந்த போதும் அவர்களுக்கான சந்தர்ப்பங்களும், உதவிகளும்¸ வாய்ப்புக்களும் கிடைக்காத காரணத்தினால் பல சாதனையாளர்கள் தோட்டங்களில் முடங்கி கிடக்கின்ற…
-
- 0 replies
- 340 views
-
-
அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை நேற்றைய தினம் மல்லாவி நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் எட்டு சிலைகளில் ஒன்றாக மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை மல்லாவி நகரின் மத்தியில் அமைக்கப்பட்டு நேற்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. http://www.tamilwin.com/lifestyle/01/130383?ref=home
-
- 10 replies
- 1.7k views
-
-
தென் மாகாண சபையில் அமளி துமளி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் தென் மாகாண சபையில் இன்று அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தென் மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள், காணிகள் வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பியதாலேயே இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/15298
-
- 0 replies
- 351 views
-
-
கஞ்சாவில் ரொட்டி சுட்டு கடவுளுக்கு படைத்தோம் : சந்தேக நபர் நீதிமன்றில் வாக்குமூலம் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து ஆயிரத்து இருநூறு கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேக நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் கிளிநொச்சிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேக நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி இருந்தனர். இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மன்று சந்தேக நபரை வினவிய போது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றிற்கு முன்னால் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில…
-
- 4 replies
- 585 views
- 1 follower
-
-
விமல் கைது செய்யப்பட போகிறார் ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆருடம் பொதுமக்களை மட்டுமல்லாது பெளத்த தேரர்களையும் அடக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சி நடத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. பெளத்த மதத் தலைவர்களை கட்டுப்படுத்தினால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் பலமாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மிக விரைவிலேயே விமல் வீரவன்ஷ கைதாகப்போகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அம்பாந்தோட்டையில் அரசாங்கம் முன்னெடுத…
-
- 1 reply
- 259 views
-
-
-
- 0 replies
- 241 views
-
-
வசமாக மாட்டிய சைக்கிள் திருடன் யாழ் நகரப் பகுதியில் சைக்கிள் திருடிய நபரொருவரை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் போது அவரால் களவாடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 30 சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர் தொடர்பான இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்ததையடுத்து, சைக்கிள் ஒன்றினை பேருந்தின் மேல் பகுதியில் ஏற்றிக் கொண்டு வேலணையில் வந்திறங்கியவரை கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறைப் பொலிஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வேலணைப் பகுதியில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட துசைக்கிள்களை மீட்டனர். பல திருட்டுடன் தொடர்புடைய குறித்த சந…
-
- 0 replies
- 385 views
-
-
ஜாதிக ஹெல உறுமய வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயார் வடமாகாண சபை அவைத்தலைவர் பதிலடி (எம்.நியூட்டன்) வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமாகவே செயற்பட்டுவருகின்றது. எந்த காலத்திலும் இனவாதம் பேசவில்லை. நாம் இனவாதம் பேசுகின்றோம் என ஹெல உறுமய வழக்கு தொடர்ந்தால் நாம் வழக்கை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை இனவாதம் பேசுவதை நிறுத்தவேண்டும் இல்லையேல் வழக்குத் தொடருவோம் என ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர் பில் கேட்டபோதே அவர் இத…
-
- 0 replies
- 244 views
-
-
ஹம்பாந்தோட்டையில் கவச வாகனங்கள் அதிரடிப் படையினர் ரோந்து நிலைமைகள் கட்டுப்பாட்டில்: மேலும் பலரைக் கைது செய்ய நடவடிக்கை! (ரெ.கிறிஷ்ணகாந்) ஹம்பாந்தோட்டை - மிரிஜ்ஜவில, இலங்கை - சீன கைத்தொழில் மற்றும் பொருளாதார அபிவிருந்தி வலய நிகழ்வுகளின் போது நீதிமன்ற உத்தரவையும் மீறி கலகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. இச் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக தொலைக்காட்சிகளில் ஒளி பரப்பப்பட்ட காட்சிகள் மற்றும் பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்ட காட்சிகளைக் கொண்டு மேலதிக விசாரணைகளை …
-
- 0 replies
- 297 views
-
-
தேர்தலை தாமதப்படுத்துவது ஜனநாயகத்தை மீறுவதாகும் மஹிந்த தேசப்பிரிய கூறுகிறார் (ஆர்.யசி ) உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாது அரசாங்கம் காலத்தை கடத்துவது ஜனநாயகத்தை மீறும் செயற்பாடாகும். ஆகவே வெகுவிரைவில் அரசாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமை இப்போதைக்கு சாத்தியமில்லாத போதிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைமையை கொண்டுவரும் சாத்தியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற கருதரங்கின் பின…
-
- 0 replies
- 229 views
-
-
‘வீதியில் இறங்கும் மாணவர்களுக்கு அருணாச்சலத்தின் அருமை தெரியாது’ ஜே.ஏ.ஜோர்ஜ் ‘பல்கலைக்கழகங்களின் அருமை தெரியாததன் காரணமாகவே பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவது மட்டுமன்றி தமது காலத்தை வீணடிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறவேண்டும்’ என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…
-
- 0 replies
- 345 views
-
-
நல்லாட்சியில் இணையும் விவகாரம்: ஈ.பி.டி.பி; இ.தொ.கா விளக்கம் ப. பிறின்சியா டிக்சி நல்லாட்சி அரசாங்கத்துடன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி தொடர்பில், அவ்விரு கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், “அமைச்சுப் பதவியொன்றை ஏற்பதையோ அல்லது நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதையோ நான் தற்போதைக்கு விரும்பவில்லை. “எனக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. வெளியில் இருந்துகொண்டுதான் செ…
-
- 0 replies
- 234 views
-
-
கொதித்தது மங்கல அமர்வு அழகன் கனகராஜ் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மங்கல அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 9:30க்கு கூடியது. மங்கல அமர்வை, காலை 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், நேற்றைய அமர்வானது, 10:45க்கே நிறைவடைந்தது. சபையின் பிரதான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு அதிகளவான நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதான நடவடிக்கைகள் 9:45 வரையிலும் நீண்டு சென்றன. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஹம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து கேள்விகளைக் கே…
-
- 0 replies
- 580 views
-
-
வடக்கிலிருந்த இராணுவத்தைவிட அதிகமானவர்கள் அம்பாந்தோட்டையில் திருமலை, பலாலி, கொழும்பும் பறிபோகும் அபாயம் என்கிறார் மஹிந்த (ஆர்.யசி ) அம்பாந்தோட்டை மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் கையாண்ட விதம் ஜனநாயகத்துக்கு முரணானது. தமது நிலம் பறிபோகும் நிலையில் மக்களின் போராட்டம் நியாயமானது. அன்று வடக்கில் இருந்த இராணுவத்தை விடவும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸ் குவிக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். இன்று அம்பாந்தோட்டை சர்வதேச மயமானதை போல நாளை திருகோணமலை,பலாலி பின்னர் கொழும்பும் பறிபோகும் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் …
-
- 2 replies
- 651 views
-
-
மஹிந்த கடிதம் தந்தால் விட்டுக்கொடுக்க தயார் பிரதமர் ரணில் தெரிவிப்பு; சீன ஜனாதிபதி அழுத்தம் பிரயோகிக்கவில்லையா எனவும் மஹிந்தவிடம் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை கைச்சாத்திடுமாறு சீன ஜனாதிபதி தனக்கு அழுத்தம் பிரயோகத்தார் எனவும் சட்டவிரோதமான முறையிலேயே சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்றும் முன்னாள் ஜனாதிபதி எனக்கு கடிதம் தந்தால் உடனே துறைமுக ஒப்பந்தத்தை கைவிடுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபை யில் திட்டவட்டமாக அறிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த மாதம் சீனாவிற்கு சென்று என்ன பேசினார்? சென்செய் துறைமுகத்தை நல்லது எ…
-
- 0 replies
- 262 views
-
-
கொழும்பு ரோயல் கல்லூரியில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் கொழும்பு ரோயல் கல்லூரியில், தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் முரண்பாடுகள் காணப்படுவதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக கல்வியமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பேரில், கொழும்பு மற்றும் ஒரு சில பகுதிகளில் இயங்கும் புகழ்பெற்ற பாடசாலைகளில் கல்வி அமைச்சு அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகின்றனர். இதன்போது, கொழும்பு ரோயல் கல்லூரியில் மாணவர்களை இணை…
-
- 0 replies
- 193 views
-
-
பருத்தித்துறை சாரையடியில் விபத்து சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த லொறி ஒன்றினை மறிப்பதற்காக பொலிஸார் டயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும்,இதன்போது யாழ்_பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த லொறி மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை,மணல் ஏற்றி வந்தவர்கள் கயேஸ் வாகனத்திற்கே பொலிஸார் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதரா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். லொறி வாகன சாரதி கைதுசெய்யப…
-
- 0 replies
- 289 views
-
-
பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம் -எம்.றொசாந்த் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு ப…
-
- 41 replies
- 3k views
-
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்த வேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக மயக்கமடைந்துள்ளார். இன்றைய தினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டவேளையே மயக்கமுற்றுள்ளார்.அதனையடுத்து சிகிச்சைக்காக கொழும்பு ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/13184
-
- 6 replies
- 560 views
-
-
சந்திப்பு... ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். - See more at: http://www.tamilmirror.lk/189410/சந-த-ப-ப-#sthash.G3tgzNoR.dpuf
-
- 1 reply
- 264 views
-
-
மஹிந்த ராஜபக்ஸ எதற்காக சீனாவிற்கு பயணம் செய்தார்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதற்காக அண்மையில் சீனாவிற்கு பயணம் செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் எதற்காக பயணம் செய்தார் என்பதனை முடிந்தால் மஹிந்த அம்பலப்படுத்தட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு சென்று இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிய மஹிந்த தற்போது சீன முதலீடுகளை எதிர்த்து வருவதன் மர்மம் புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்ய இணங்கியமைக்காக சீன ஜனாதிபதி Xi Jinping க்கு நாட்டு மக்கள் நன்றி கூற வேண்டுமென தெரிவித்துள்ள அவர் இலங்கையில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்த சீனா தற்போ…
-
- 1 reply
- 264 views
-
-
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண அரசு அமைச்சுக்களுடன் இணைந்து 'இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு' என்ற சர்வதேச உயர்நிலை மாநாடு கனடாவில் நடைபெறவுள்ளது. நிறைவானதும், நிலையானதுமான வேலைத்திட்டங்களைக் கையாண்டு தாயகத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தை 21ஆம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரத்தோடு இணைத்துச் செல்லவும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் ஒரு வலுவான அடித்தளத்தை மீளக்கட்டுவதற்கு வழிகோலும் வகையிலும் இம் மூன்று நாள் மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்காபரோவிலுள்ள உயர்கல்வி நிலையமான Centennial College இல் 2017 ஜனவரி மாதம் 15ஆம் 16ஆம், 17ஆம் திகதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மூன்…
-
- 1 reply
- 277 views
-
-
மகளின் உதவியுடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய தாய் மகளின் உதவியுடன்படித்து 50 வயதில் தாயார் ஒருவர் உயர்தர பரீட்சை எழுதியுள்ளார்.சுபாஷினி விக்ரமசிங்க என்ற தாயாரே உயர் தரத்திற்காக உயிரியல் பாடத்தில் தோற்றியுள்ளார். 1986ஆம் ஆண்டு அவர் வீரகெட்டிய ராஜபக்ச மத்திய மகா வித்தியால மாணவியாக பரீட்சைக்கு ஆயத்தமாகியுள்ளார். பின்னர் பரீட்சைக்கு தோற்றாமல் அவர் திருமணத்தை தெரிவு செய்துள்ளார். படிப்பதற்கு ஆசை இருந்த போதிலும் பிள்ளைகள் இருவரும் பெரியவர்களாகும் வரை அவர் தனது ஆசையை மூடி மறைத்துள்ளார்.. குடும்பத்தில் இளைய மகள் கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகி யுள்ளார். …
-
- 2 replies
- 465 views
-
-
சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளனர். இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொ ண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்தார். இந்நிலையில் சமஷ்டி தீர்வை அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டுமென வலியுறுத்தினா…
-
- 0 replies
- 511 views
-