Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  ஜி.எஸ்.பி சலுகை அடுத்தவாரம் கிடைக்கும்: ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் வழங்கப்பட்ட, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, அடுத்த வாரமளவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/189271/ஜ-எஸ-ப-சல-க-அட-த-தவ-ரம-க-ட-க-க-ம-ஜன-த-பத-#sthash.32tMAxBn.dpuf

    • 1 reply
    • 310 views
  2. பாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படப்பிடிப்பாளருடன் சென்ற பிரதேச சபை செயலாளரை எச்சரித்த நீதிமன்றம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மாவீரா்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகளால் பொது நினைவுச் சமாதி அமைக்கு பணிகள் நேற்று வியாழக்கிழைமை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கரைச்சி பிரதேச சபையின் அனுமதியின்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை தடுக்க மாவீரா் துயிலுமில்லத்திற்கு பிரதேச சபையின் வாகனத்தில் கடமை நேரத்தில் சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலாளா் க.கம்சநாதன் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினா் ஒருவரின் புகைப்படப்பிடிப்பாளரையும் அழைத்துச் சென்றுள்ளார். இது இன்று நீதிமன்றின் கவனத்திற்கு பொது நினைவுச் சமாதி அமைக்கும்…

  3. மாவீரா் துயிலுமில்லத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என்ற காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மாவீரா் துயிலுமில்லங்களுக்கு எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என கிளிநொச்சி காவல்துறையினர் மன்றில் கோரிக்கை விடுத்த போது கிளிநொச்சி நீதவான் நீதி மன்றும் அதனை நிராகரித்துள்ளது. குற்றவியல் சட்டத்திற்கு கீழ் உள்ள வழக்கு ஒன்றின் கீழ் அவ்வாறு தடை விதிக்க முடியாதும் என்றும் இறந்த தங்கள் உறவுகளை நினைவு கூர அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்தோடு பொதுச் சமாதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஜந்து பேரையும் 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு, வ…

  4. ஜனாதிபதியும் பிரதமரும் வில்பத்துக்கு நேரடியாக விஜயம் செய்யவேண்டும் : தீர்வின்றேல் நீதிமன்றம் செல்வதாக எச்சரிக்கை (ஆர்.ராம்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து மாறுபட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிpள் கூட்டாக வலியுறுத்தினார்கள். தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கூட்டாக எதிர்ப்பை வெளியிட்டதோடு பிச்சைக்காரன் …

    • 5 replies
    • 525 views
  5. 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் சந்­தே­க­ந­பர்கள் கடற்­படை அதி­கா­ரி­களே பெயர்ப் பட்­டி­யலும் நீதி­மன்­றிடம் ஒப்­ப­டைப்பு (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகு­தி­களில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல்போகச் செய்­யப்பட்­டுள்ள விவ­கா­ரத்­துக்கு பொறுப்புக் கூற வேண்­டிய, கைது செய்­யப்­பட வேண்­டிய சந்­தேக நபர்கள் யார் என்­பதை ஒரு மாத காலத்­துக்குள் மன்றுக்கு அறி­விக்க வேண்டும் என்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன நேற்று சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்தார். இது தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது, இக்­க­டத்­த­லுடன் கடற்­ப­டை­யி­னரே தொடர்பு ப…

  6. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கொழும்பில் இன்று கூடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து இச் சந்திப்பின்போது ஆராயப்படுமென கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தமிழ் மக்களின் கோரிக்கைகளை புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் முரண்படுமாயின் அரசமைப்பு தொடர்பான வழிநடத்த…

    • 1 reply
    • 208 views
  7. தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை (க.கிஷாந்தன்) இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் இன்றைய தினம் விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவர்கள் இன்னும் ஒரிரு நாட்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை கடற்பரப்பில் வைத்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்ட 51 தமிழக மீனவர்களும் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி இலங்கை – இந்திய மீன்பி…

    • 1 reply
    • 262 views
  8. யாழ் பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் யாழ் - பல்கலைக்கழகத்தின் இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் முற்பகல் 9.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயெ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஐனவரி 10, 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், பத்தாம் திகதி ஐந்து அமர்வுகளாகவும் பதினொராம் திகதி நான்கு அமர்வுகளாகவும் நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட…

  9. யார் இந்த அண்ணாச்சி? தேடி திருமலை விரைந்தது சி.ஐ.டி.குழு (எம்.எப்.எம்.பஸீர்) வெள்ளை வேனில் கடத்­தப்­பட்ட தமி­ழர்­களின் குடும்­பத்­தாரை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு கப்பம் பெற்­ற­தாக கூறப்­படும் கடற்­ப­டையின் வீர­ராக இருக்க வேண்டும் என சந்­தே­கிக்­கப்­படும் ' அண்­ணாச்சி' எனும் நபரை அடை­யாளம் காணவும் அவரைக் கைது செய்­யவும் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரே இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இது தொடர்பில் விஷேட ஆதா­ரங்­களைத் தேடி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி ச…

  10. அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே – ஜனாதிபதி அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது வெறும் கனவு மட்டுமே எனவும் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்த கனவு வெறும் கனவாகவே நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2017ம் ஆண்டில் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது இலக்கு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வு நிகழ்வில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில்…

  11. அரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு அழகன் கனகராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெறவிருந்த அரசியலமைப்பு சபையின் கூட்டம், மறுஅறிவித்தல் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை. - See more at: http://www.tamilmirror.lk/189202/அரச-யலம-ப-ப-சப-ய-ன-க-ட-டம-ஒத-த-வ-ப-ப-#sthash.VW0Qa1Ee.dpuf

  12. நம்­ப­கத்­தன்­மையை கட்­டி­யெ­ழுப்­பவே சர்­வ­தேச நீதி­ப­தி­களை பரிந்­து­ரைத்தோம் அறிக்­கை­யை­கொண்டு அனைத்து தரப்­பி­னரும் அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கலாம் என்­கி­றது நல்­லி­ணக்க செய­லணி (ரொபட் அன்­டனி) பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் பொறி­முறை நம்­ப­க­ர­மா­கவும் இய­லு­மை கொண்­ட­தா­கவும் அமை­ய­வேண்டும் என்­ப­தற்­காகவே மக்­களின் கருத்­துக்­க­ளுக்கு அமை­வாக சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்­டு­மென நாம் பரிந்­துரைசெய்தோம். விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்டும் என்ற கோரிக் கையை வடக்கு, கிழக்கு மக்கள் மட்­டு­மன்றி தென்­னி­லங்கை மக்­களும் முன்­வைத்­தனர் என்று நல்­லி­ணக்க பொறி­முறை தொடர…

  13. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் பொய்யானவை : ஜனாதிபதி ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அது தொடர்பாக எந்தவொரு குழு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ, அரசியலமைப்புக்கு புறம்பான முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ அல்லது நிறுவனத்துடனோ அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அவ்…

  14. கனடாவின் சர்வதேச மாநாட்டில் முதலமைச்சர் வடகிழக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடகிழக்கில் இருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரமளவில் கனடா நாட்டிற்கு பயணமாகவுள்ளனர். 15, 16, 17 ஆம் திகதிகளாக 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆராம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கருத்தது தெரிவிக்கையில், வடமாகாண சுகாதார அமைச்சின் வேண்டுதலுக்கு அமைய கனடாவில் உள்ள பல அமைப்புக்கள் மற்றும் மருத்துவர்கள் சார்ந்த அமைப்…

  15. செட்டிகுளம் பிரதான வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தின் அவல நிலை வவுனியா மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பகுதியிலிருந்து மெனிக்பாம் செல்லும் பிரதான வீதியிலிருக்கும், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் பாடசாலை பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தின் இன்றைய நிலைதான் இதுவாகும். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இப்படியாக காட்சியளித்து கொண்டிருக்கின்றது. குறித்த வீதியினைப்பயன்படுத்தி செட்டிகுளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சென்றுவருகின்றார்கள். அருவித்தோட்டப் பாடசாலையில் 538 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், மாணவர்கள் இப்பேரூந்து தரிப்பிடத்தில் மழை, வெயில் நேரங்களில் காத்திருக்கின்ற நிலையில் இல்ல…

  16. மாங்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.! முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 5.6 கிலோக்கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாங்குளம் பொலிஸ்நிலைய சிறுகுற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்துபுரம் பகுதியில் வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மற்றும் அளவிடுவதற்காக வைத்திருந்த தராசு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு வீட்டு உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

  17. கன்னியமர்வு கலைந்தது அழகன் கனகராஜ் அரசியலமைப்புச் சபையின் ஆறு உப-குழுக்களும், சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் மீதான விவாதத்துடன் 2017ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு ஆரம்பமாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான சாத்தியக்கூறுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. புத்தாண்டுக்கான நாடாளுமன்ற அமர்வு, எதிர்வரும் 9ஆம் திகதியன்று காலை 9:30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகவிருந்தது. அன்றிலிருந்து, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு, அதாவது எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் உப-குழுக்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந…

  18. அமைச்சர்கள் இருவர் விட்டோடினர் வி.நிரோஷினி ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், திணறிப்போன அமைச்சர்கள் இருவர் கேள்விநேரம் முடிவடைவதற்கு முன்னரே மிகவேகமாக எழுந்து, தங்களுக்கு முன்பாக இருந்த கோவைகளையும் அள்ளியெடுத்துக்கொண்டு, வெளியேறிவிட்டனர். ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில், நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் இருவரிடமும் சரமா…

  19. வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 ஆவது நபரின் விளக்கமறியலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவில் மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 12 நபர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2015 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 ஆவது எதிரியாக கலகே பேபிகே கமகே ராஜ்குமார் என்ற நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும்படி அரச சட்டத்தரணி நிசாந்த் நீதிமன்றில் மனு ஒன்று முன்வைக்கப்பட்டது. 1997ஆம் ஆ…

    • 3 replies
    • 336 views
  20. ஐம்பதாவது முறையாக இலங்கை வந்த சுற்றுலாப் பயணிக்கு வரவேற்பு ஐம்பதாவது முறையாக இலங்கைக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டு வந்த 72 வயதுடைய ஒருவருக்கு இலங்கை சார்பில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. சாண்டர் ஜேஸன் (72) என்பவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். இவர் 1974ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார். அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் ஒரு முறை அல்லது இரண்டு முறை வருவதை வழக்கமாக்கிக்கொண்டார். தற்போது ஓய்வு பெற்ற கணக்காளரான ஜேசன், இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் தன்னை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகவும், அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என்பதனாலேயே மீண்டும் மீண்டும் இலங்கை வந்…

  21. யாழ்தேவி சிதைவுகள்... -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் தரித்து நின்ற நிலையில், 1990ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில், ரயில் திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபட்ட யாழ்தேவி ரயில், 1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி முறிகண்டியில் வைத்து விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகியதையடுத்து, வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. - See more at: http://www.tamilmirror.lk/189216/ய-ழ-த-வ-ச-த-வ-கள-#sthash.t6XFA6DA.dpuf

  22. நாவற்குழியில் குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கு இவ்வாண்டு வீடமைப்புதிட்டம் நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமை ப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபி விருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி க்கையில் 2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.இதன்படி ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3,50000 ரூபா வீதம் வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது...மேலும் 3000 க…

  23. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரித்து வந்த ஊழல், மோசடிகள் தொடர்பான 76 சம்பவங்கள் பற்றிய ஆவணங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால், நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் 14 ஆவணங்களே எஞ்சியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர பிரேமசாந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொனராகலை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிரேமசாந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பதவிக்கு தகுதியானவர் எனவும் அவரை அந்த பதவியில் நீடிக்குமாறு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அத…

  24. இலங்கையில் பாரிய தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அண்மைய நாட்களில் ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலைக்காக 11 பில்லியன் ரூபா நிதி நந்தன ஜயதேவ லொக்குவிதான என்ற உள்ளூர் வர்த்தகரினால் முதலீடு செய்யவுள்ளதாக கூறப்பட்டது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் வைக்கும் நிகழ்விற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வதால் ஜனாதிபதி கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. ராஜபக்சர்கள் தவறான முறையில் சம்பாதித்த கோடிகணக்கிலான பணத்தை நந்தன லொக்குவித்தானவி…

  25. இந்தியாவுக்கான விமான பயணச்சீட்டு கட்டணங்கள் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக ஐயப்பன் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமய விரதங்களில் ஒன்றாகிய ஐயப்பன் விரதம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரதம் அனுஸ்டிப்பவர்கள் தமது நேர்த்தியை நிறைவு செய்ய இந்தியாவின் சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் இலங்கையில் உள்ள ஐயப்பன் பக்தர்கள் இந்தியாவின் சபரி மலைக்கு செல்லும் இந்த நேரத்தில் சிறிலங்கன் எயார் லைன்ஸ் இந்தியாவுக்கான விமான பயணச்சீட்டு கட்டணத்தை சடுதியாக உயர்த்தியுள்ளது. சாதாரணமாக 25 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்த இந்திய விமானச்சீட்டு கட்டணம் தற்போது ஐயப்பன் விரத காலத்தில் 40 ஆயிரத்திற்கு மே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.