ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
நல்லிணக்க செயற்பாட்டில் பின்வாங்கிவிட வேண்டாம் யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் ஆகப்போகின்ற நிலையில் இன்னும் இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்று நாடு பேசிக்கொண்டிருக்கின்றதே தவிர நல்லிணக்கப் பொறிமுறையில் வெற்றிபெற முடியாமல் இருக்கிறது. குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டின் இனங்களுக்கும் சமூகங்களுக்குமிடையில் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு தேசிய ஒற்றுமையும், புரிந்துணர்வும் கட்டியெழுப்பப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறான நிலைமையை உருவாக்க முடியவில்லை. அதற்கு மாற…
-
- 0 replies
- 294 views
-
-
களுவாஞ்சிக்குடி கடற்கரையில் கரையொதுங்கியது விமானமா? ; மர்மம் வெளியானது (படங்கள் இணைப்பு) களுவாஞ்சிக்குடி - களுதாவெளி கடற்பரப்பில் கரையொதுங்கிய சுமார் 15 அடிய நீளமுடைய உலோகப் பொருள் விமானமொன்றின் பாகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பாசிக்குடா கடற்பரப்பில் மர்ம பொருள் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த விமானத்தின் பாகம் என நம்பப்படும் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த உலோகத்தினை கண்டுபிடித்த மீனவர்கள், அப்பொருள் விமானத்தின் பாகம் என தெரிவித்துள்ள நிலையில், குறித்த உலோகப் பொருள் விமானத்தின் பாகம் என்பதனை கடற்படையினர் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறா…
-
- 2 replies
- 498 views
-
-
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை நிராகரித்தது வடமாகாண சபை அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்றைய மாகாண சபையின் அமர்வின் போது குறித்த சட்டமூலத்தை நிராகிரிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சட்டமூம் ஊவா மாகாண சபையில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14677
-
- 0 replies
- 163 views
-
-
விரட்டியடித்த மனைவி, பிள்ளைகளுக்காக வவுனியாவில் குடும்பஸ்தர் உண்ணாவிரதம் (சதீஸ்) வவுனியா - பர்நாட்டான்கல் பிரதேசத்தில் 38 வயதுடைய குடும்பஸ்தவர் ஒருவர் இன்று காலைமுதல் (23) உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியை மீட்டு தருமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார். கடந்த திங்கட்கிழமை (19) குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை விரட்டியுள்ளார். மனைவியும், பிள்ளைகளும் இதுவரை வீடு திரும்பாததையடுத்து சி.சிவகுமார் (38) என்ற குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகள் வரும்வரை தான் சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என உண்ண…
-
- 0 replies
- 328 views
-
-
'3 மாதத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும்' கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் 3 மாதத்துக்கு, புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இந்தப் பிரதான ஓடுபாதையானது, எதிர்வரும் 3 மாதங்களுக்கு, காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரையான 8 மணிநேரம் வரையான காலப்பகுதிக்கு மூடப்பட்டிருக்கும் என்று அவர் அறிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, கடந்த 1986ஆம் ஆண்டு நிர…
-
- 0 replies
- 289 views
-
-
நடராஜா ரவிராஜ் படுகொலையை தேசிய உளவுத்துறை முன்கூட்டியே அறிந்திருந்தது சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் யோசனை முன்வைப்பு சாட்சிக் கூண்டிலிருந்தவாறு மறுத்தார் உளவுத் துறை பணிப்பாளர் (எம்.எப்.எம்.பஸீர்) யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையை அல்லது அதனுடன் தொடர்புடைய தகவல் ஒன்றினை தேசிய உளவுத்துறை முன்கூட்டியே அறிந்திருந்தது என அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ரொஹந்த அபேசூரிய மேல் நீதிமன்றில் யோசனை முன்வைத்தார். அது தொடர்பில் மேலதிகாரிகளுடன் அப் போதைய உளவுத்துறையின் பிரதி பணிப்பாளரும் தற்போதைய பணிப்பாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நில…
-
- 2 replies
- 394 views
-
-
புதிய அரசியலமைப்பில் அவசரம் வேண்டாம் எச்சரிக்கிறது ஹெல உறுமய; மீறி செயற்பட்டால் அரசின் தலைவிதியை தீர்மானிப்பதாக அமையும் என்கிறது (எம்.ஆர்.எம்.வஸீம்) "சிங்கள மக்களின் மனதை வெற்றிகொள்ளாமல் எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் பெறமுடியாது" நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களின் உள்ளத்தை வெற்றிகொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்கள் அரசியல் தீர்வோ வேறு எந்த தீர்வோ பெற்றுக்கெள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்தார். அத்துடன் நாட்டின் ஒற்றையாட்சிக்கு ஆபத்து ஏற்படும் விதத்திலோ பெளத்த மதத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கு…
-
- 1 reply
- 678 views
-
-
தமிழ் பேசும் பகுதிகளுக்கு முன்னுரிமை நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன், இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. அதனையொட்டி, ‘நிலையான அபிவிருத்தி யுகம் - மூன்றாண்டு ஆரம்பம்’ எனும் தொனிப்பொருளில் பல்வேறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதில், தமிழ்பேசும் பகுதிகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதன் தேசிய வைபவம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்குப்பற்றலுடன், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறும். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.…
-
- 0 replies
- 199 views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக ‘நாம் போராடவில்லை’ “மக்கள் தந்த ஆணைகளின் அடிப்படையில், எங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை எட்டுவதற்காக உழைப்பது தான், எமது நோக்கம்” என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகத்தில், புதிய கட்டடத்திறப்பு விழா நிகழ்வு, நேற்று (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜா, மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சுப் பதவிகளுக்காகப் போராடியவர்கள் அல்லர். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பூநகரி பிரதேசம் கடும் பாதிப்புக்குள்ளான பிரதேசம். வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள், அதிகம் உள…
-
- 0 replies
- 276 views
-
-
சூப்பர் அமைச்சர் ‘இந்நாட்டை பிளவுபடுத்துவார்’ “எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள “சுப்பிரி” (சூப்பர்) அமைச்சர் தொடர்பில், அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு நாடகமாடி வருகின்ற போதிலும், அவ்வாறான அமைச்சர் நியமனமொன்று இடம்பெறவுள்ளது உண்மையே” என, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இந்த சூப்பர் அமைச்சர் பதவி மூலம், அதிகாரம் பாரியளவில் பகிரப்படவுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு சமமான பலத்தின் மூலம் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் அதிகாரமும் கூட இவர்களுக்கு பேஸ்புக் பக்கம், நேற்று (22), உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பீரிஸ், பேஸ்புக் மூலம், நாட்டில் நடக்கும் அனைத்து …
-
- 0 replies
- 212 views
-
-
மீனவர் தாக்குதல் குறித்து ‘பேச முடியாது’ “தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து, ஆந்திராவில் பேச முடியாது” என, திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்துவிட்டுத் திரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் முடித்து திரும்பிய பிரதமர் விக்ரமசிங்க, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவேண்டிப் பிரார்த்தனை செய்தேன்” என்று கூறினார். இதன்போது, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இது ஆந்திர மாநிலம், தமிழக மீனவர்கள் குறித்து இங்கே பேச இயலாது. மேலும், இ…
-
- 0 replies
- 212 views
-
-
வடமாகாண சபையில் கடும் கூச்சல் குழப்பம். வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்களை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்க முற்பட்டதை அடுத்து சபையில் கடும் குழப்பம் ஏற்பட்டு சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. வடமாகாண சபை வரவுசெலவுத்திட்ட விவாதம் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் கே.சயந்தன் முதலமைச்சர் மீது குற்றம் சாட்டும் வகையில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதனை அடுத்து சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் கருத்து மோதல் இடம்பெற்றது. அதன் உச்சகட்டமாக ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபை நடுவில் சென்று குழுக்களின் தலைவர் முன்பாக நின்று அவைத்தலைவருடன் கருத்து மோதலில் ஈடுபட…
-
- 10 replies
- 764 views
-
-
நத்தார்,புதுவருட விற்பனை யாழில் அமோகம் எதிர்வரும் 25ம் திகதி கொண்டாடப்படவுள்ள நத்தார் அதன் பின்னரான புது வருட பண்டிகைக்கான ஆடைகள் மற்றும்,கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்கள் என்பன யாழில் மும்முரமாக விற்பனையாகின்றன.கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு வியாபாரம் அதிகளவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலங்கார மின் குமிழ்கள்,நத்தார் மரங்கள் என்பன மக்களால் அதிகம் கொள்வனவு செய்யப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.கிறிஸ்தவ மக்களால் கொண்டாப்படும் பண்டிகையாக இருந்தாலும், அனைத்து மக்களும் தமது வீட்டினை அழகுபடுத்துவதற்காக குறித்த அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். …
-
- 1 reply
- 369 views
-
-
இலங்கையில் முதற்தடவையாக பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்கள் ; அர்ஜூன (பா.ருத்திரகுமார்) இலங்கையின் முதலாவது பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்களை வெகு விரைவில் இலங்கை துறைமுக அதிகாரசபை அறிமுகப்படுத்துமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பு கடல்சார் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அர்ஜுண மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை துறைமுக அதிகார சபையின் மாபொல பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுகின்ற பெண் கிரண்டி கிரேன் இயக்குனர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்கள். சாதரணமாக ஆண்களே கிரண்டி கிரேன்களை இயக்குகின்றார்கள். நாம் அம்முறையை …
-
- 0 replies
- 273 views
-
-
ரவிராஜ் கொலை வழக்கு: முதலாவது சாட்சியாளரை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு முதலாவது சாட்சியாளரான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரியை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க தலைமையில் விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. ரவிராஜ் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ப்ரிதிவி ராஜ் மனப்பேரி கடந்த 20 மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிர…
-
- 0 replies
- 453 views
-
-
திருகோணமலை சீன துறைமுகத்தில் அமைந்துள்ள எண்ணெய் தொட்டி தொகுதியில் 84 எண்ணெய் தொட்டிகள் குத்தகைக்கு பெற்றுக் கொண்டதாக கூறும் இந்திய நிறுவனம் சட்டவிரோதமாக செயற்படுதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு தற்போது இலங்கை அரசாங்கத்தின் ஒருவரையும் அந்த பகுதிக்குள் நுழைய இடமளிக்காமல் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியுள்ளதாக இலங்கை பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்ததிற்கமைய 6 மாதத்திற்குள் குத்தகை ஒப்பந்தம் செயற்படாமையினால் இந்திய நிறுவனத்திற்கு அந்த பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு எண்ணை தொட்டியையும் கையாள முடியாதென அந்த சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல தெரிவித்துள்ளார். இந்த முறையில் சட்ட…
-
- 1 reply
- 270 views
-
-
ஜனாதிபதியை பான் கீ மூன் தொலைபேசியில் அழைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பதவியிலிருந்து விடைபெறும் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (22) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய பான் கீ மூன் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி செயலக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் இலங்கையை புதிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு ஜ…
-
- 0 replies
- 372 views
-
-
உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய இரும்பாயுதங்களை உருவாக்க கோரிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர்:- பயங்கரமான, கூரிய, உயிராபத்தை ஏற்படுத்த கூடிய ஆயுதங்களை உருவாக்க கோரியதாக அச்சுவேலி காவல் நிலையத்தை சேர்ந்த தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த குற்ற சாட்டு தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் வியாழக்கிழமை குறித்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப் பட்டது. அதன் போது குற்றம் சாட்டப்படும் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் சட்டத்தரணியுடன் மன்றில் முன்னிலை…
-
- 0 replies
- 366 views
-
-
'பிள்ளைகளுக்கு கொப்பி வாங்க முடியவில்லை' தனது பிள்ளைகளுக்கு பாடசாலைக் கொப்பிகளை வாங்கொடுக்க முடியவில்லை என்று கூறி, நில்வலா ஆற்றின் நடுவில் நடந்துச் சென்ற பெண்ணை, பொலிஸார் காப்பாற்றியுள்ளர். மாத்தறை, கன்தர, நாவோதுன்ன பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே, இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு புதிய வகுப்புச் செல்லவுள்ள தன்னுடைய 6 பிள்ளைகளுக்கும் கொப்பிகளை வாங்கிக்கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்தே, இவர் ஆற்றுக்கு நடுப்பகுதியில் நடந்துச் சென்றுள்ளார். இவருக்கு 6,9,11,13,15 மற்றும் 17 வயதுகளை உடைய பிள்ளைகள் இருப்பதாக தெரியவருகின்றது. அவர், ஆற்றின் நடுப்பகுதிக்கு நடந்துச் செல்லும் போது, 'போக வே…
-
- 1 reply
- 389 views
-
-
இலங்கையின் உச்ச நீதிமன்றின் இளைப்பாறிய நீதியரசரும் முதலாவது வடமாகாண முதல் அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் கனடா வருகை தொடர்பான ஊடக மாநாடு நடைப்பெற்றுள்ளது. இந்த மாநாடு நேற்று மாலை ரொரண்டோவில் இடம் பெற்றது. முதல்வரின் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுக்குழுவினர் கனடியத் தமிழ் ஊடகங்களுக்கான சந்திப்பினை ஒழுங்குபடுத்தியிருந்தனர். இதில் கனேடிய தமிழ் ஊடகத்தினைச் சார்ந்தோரும், சில ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர். முதல்வர் பயணம் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான உத்தியோகபூர்வான அறிவிப்பை முதன்முதலாக வெளியிடும் நிகழ்வாக இது அமைந்தது. முதல்வருடனான நிகழ்வுகளை கனேடிய தமிழ் சமூகமாக ஒன்றிணைந்து பணியாற்றும் வகையில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து முதல்வர் நிகழ்வுகளுக்கான ஏ…
-
- 0 replies
- 470 views
-
-
அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே எம்.றொசாந்த் இன்று இடம்பெறுகின்ற வடமாகாண சபை அமர்வில் உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும் என அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் வரவு - செலவுதிட்டம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (20) முதல் இடம்பெற்று வருகிறது. இதன்படி, இன்று வியாழக்கிழமை (22) விவசாய அமைச்சு தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது. இன்று அமர்வுகள் ஆரம்பமாகியபோது, இன்று உரையாற்றுகின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் 5 நிமிடங்கள் மாத்திரமே உரையாற்ற வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தெரிவிக்கவேண்டிய கரு…
-
- 0 replies
- 192 views
-
-
நீதி அமைச்சரின் நீதியற்ற செயல் – ஈ.பி.ஆர்.எல்.எவ் அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் ஒரு சூழ்நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரையில் தேசிய நல்லிணக்கவாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள சூழலில் நீதி அமைச்சரின் செயற்பாடுகள் என்பது கேலிக்குரியதாகவும் கண்டனத்திற்குரியதாகவும் இருக்கின்றது. மட்டக்களப்பில் 21.12.2016ஆம் திகதியன்று நீதியமைச்சர் ஆற்றிய உரை தொடர்பில் கருத்து தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ். க.பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவரது அறிக்கையின் முமுவிபரம் வருமாறு: மட்டக்களப்பு மா…
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதியில் சுவாமி தரிசனம் திருமலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி (இடது). இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது குடும்பத்தாருடன் நேற்று திருமலைக்கு வந்து ஏழு மலையானைத் தரிசனம் செய்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே, இலங்கை அமைச்சர்கள் பழனி திகம்பரம், சுவாமிநாதன் மற்றும் உறவினர் களுடன் நேற்று இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங் கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். …
-
- 1 reply
- 352 views
-
-
காணிகளை விரைவாக மீள ஒப்படையுங்கள் யுத்தகாலத்தில் பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெறமுடியாது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக திண்டாடி வருகின்றனர். மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கூட காணிகள் விடுவிப்பில் விரைவுத்தன்மையை காணமுடியவில்லை. யுத்தகாலத்தில் இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் தமது காணிகளைய…
-
- 0 replies
- 286 views
-
-
'ஒன்றுதான் உள்ளது என்றால் அது இலங்கை அல்ல' 'இருபது இனங்களையும் நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை மறந்தால், ஒரே இலங்கை என்பதை மறந்து விட வேண்டியதுதான்' என்று, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற, சிங்கள அரச ஊழியர்களுக்கான, தமிழ் பேச்சு மொழி பயிற்சி வகுப்பு நிறைவு சான்றிதல் வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒரே மொழி, மதம், இனம் என்று தெற்கில் கூறினால், அந்த…
-
- 0 replies
- 414 views
-