Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாழடைந்த நிலையில் தையிட்டி கணேசா வித்தியாலயம் யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பொதுமக்களின் பார்வை க்காக விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் பாழடைந்த நிலையில் பாடசாலை ஒன்று காணப்படுகிறது. காங்கேசன்துறைச் சந்தியில் இருந்து கிழக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்தில் தையிட்டி கணேச வித்தியாலயமே முற்றுமுழுதாகச் சிதைவடைந்த நிலையில், காணப்பட்டது. தமது காணிகள் மற்றும் வீடுகளை கடந்த 27 வருடங்களின் பின்னர் ஆர்வத்துடன் பார்வை யிட்ட மக்கள், பாடசாலை இடிந்து தரைமட்டமாக்கப்பட்டதை கண்டு கவலையடைந்துள்ள னர். குறித்த பாடசாலை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், கூரைகள்…

  2. வலிவடக்கில் பாழடைந்த நிலையில் தையிட்டி பிள்ளையார் ஆலயம் யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இன்றையதினம் பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்பட்ட தையிட்டி பகுதியில் பாழடைந்த நிலையில் ஆலயம் ஒன்றும் காணப்படுகிறது. தையிட்டி வடக்கு பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலே முற்று முழுதாகச் சிதைவடைந்த நிலையில் இடிந்து பற்றைகளால் சூழப்பட்டு காணப்பட்டதாக அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்கள் குறிப்பிட்டனர். தமது காணிகள் மற்றும் வீடுகளை கடந்த 27 வருடங்களின் பின்னர் ஆர்வத்துடன் பார்வையிட்ட சென்ற அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்தையும் பார்வையுற்றுள்ளனர். குறித்த பிள்ளையார் ஆலயத்த…

  3. கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையின் கேட்போர் கூடத்தில் தீ விபத்து மியூஸியஸ் கல்லூரியின் கொழும்பு 7இல் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அம்பியுலன்ஸ் வண்டிகளும் அங்கு விரைந்துள்ளதுடன், இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/185374/க-ழ-ம-ப-ல-ள-ள-ப-ரபல-ப-டச-ல-ய-ன-க-ட-ப-ர-க-டத-த-ல-த-வ-பத-த-#sthash.2HkCoAyI.dpuf மியூஸியஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் தீ... 04-11-2016 04:28 PM …

  4. வடக்கு முதலமைச்சர் தான் முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்திரம் ஏற்படத்தப்படாது வடக்கில் இருந்தும் நல்லிணக்கத்தின் பயணம் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் நல்லிணக்கதை தடுக்கும் வகையிலான கருத்துக்களையே விக்னேஸ்வரன் முன்வைத்து வருகின்றார். தான் முன்வைக்கும் கருத்தக்கள் தொடர்பில் விக்கினேஸ்வரன் கூடிய கவனம் எடுக்க வேண்டும் என வடமாகான ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள வடமாகாண ஆளுனர் காரியாலையதில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், நல்லிணக்கம் என்பது தெற்கில் மாத்திரம் பேசுவது பொருத்தமற்றது. …

  5. இலங்கையின் பிரபல நாயக்க தேரர் ஒருவர் பதிவு செய்யப்படாத டிபென்டர் வாகனம் ஒன்றில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பொலிஸாரினால் குறித்த வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது. கடவத்த நோக்கி செல்ல கெலனிகம பகுதிக்கு நுழையும் போது இந்த வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், பின்னர் அந்த வாகனம் பிரபல மாஹாநாயக்க தேரருக்க சொந்தமானதென பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தினுள் பிரபலமான மாஹாநாயக்க தேரர் ஒருவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் டிபென்டர் வாகனத்தை பதிவு செய்துக் கொள்ளுமாறு தேரரிடம் கூறுங்கள் என அந்த வாகனத…

  6. மஹிந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏற வேண்டுமென சீனா விரும்புகின்றது – எகனமி நெக்ஸ்ட் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மீளவும் ஆட்சிப் பீடம் ஏற வேண்டும் என சீனா விரும்புவதாக எகனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் நிதி அமைச்சரை சீனத் தூதுவர் நேரடியாக ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பல தடவைகள் விமர்சனம் செய்தமை வழமைக்கு மாறான ஓர் விடயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை பயன்படுத்தி மூன்று தடவைகள் விமர்சனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கொழும்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை சீனா விரும்புவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றன…

  7. கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறையினர் பணி இடைநிறுத்தம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா். நேற்று புதன் கிழமை அதிகாலை ஒரு மணியளில் கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் சட்டசிரோதமாக வெட்டிய பதினாறு முதிரை மரக்குற்றிகளை கிளிநொச்சி நகருக்கு கொண்டுவரவதற்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் தொடா்பில் மேலதிக விசாரணைகள் தொடா்ந்தும் இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி அக்கராயன்…

  8. யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்தது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.…

  9. சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்கவும் -செல்வநாயகம் கபிலன் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பிணை கருத்தில் கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைக்க சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆலாசனை வழங்கினார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த மூவர் காவல்கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியினை தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (03) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தினை நிராகரித்த நீதவான், குறித்த மூவரையும் தொடர்ந்தும் 14 நாட்…

  10. பம்பலபிட்டி தீ கட்டுப்பாட்டுக்குள்! பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசை மற்றும் அதன் அருகில் இருந்த கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸார், கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இதேவேளை, இந்த சம்பவத்தால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பம்பலபிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.adaderana.lk/news.php?nid=85035

    • 0 replies
    • 262 views
  11.  கண்ணீர் மல்கினார் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஹொங்கொங் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரபல பாடகர் பண்டித் அமரதேவவின் மரணம் குறித்து, பேரதிர்ச்சிக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ள பிரதமர், அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஹொங்கொங் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் என்னையும் எனது பாரியாரையும் சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாகவே, பண்டித் அமரதேவவின் மரணம் அமைந்துள்ளது. இலங்கையில் கடந்த பல தசாப்தங்கள், பண்டித் அமரதேவவின் அடையாளங்…

  12. வெள்ளை வான் கடத்தலில் ‘சனல்-4க்கு தொடர்பு’ வெள்ளை வான் கடத்தலானது, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினதும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும் கட்டுக்கதை என, ஒன்றிணைந்த எதிரணியின் நடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினரின் ஏற்பாட்டில், கொழும்பில், நேற்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி காரணமாக ஏற்பட்ட நட்டத்தின் முழுத் தொகை தொடர்பில், நிதிச்சபை அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார். அத்துடன், கடந்த ஆட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளை வான் கடத்தல் என்பது உண்மையான சம்பவமல்ல என்றும், புலம்பெயர் அமைப்பு மற்றும் சனல் 4…

  13.  ‘மாயக்கல்லிமலை வேண்டும்’ -ரீ.கே.றஹ்மத்துல்லா தீகவாபிக்குச் செல்லும் யாத்திரிகர்கள், மாணிக்கமடு, மாயல்கல்லி மலையில் இளைப்பாறி, தேநீர் அருந்திச் செல்வதற்கு இடமளிக்குமாறு, அம்பாறை கிரிந்திவெல விகாரையின் விகாராதிபதி சோமரத்ன தேரர், வேண்டுகோள் விடுத்துள்ளார். “இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில், புராதன அடையாளங்கள் காணப்படுவதாக 19 இடங்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும், மேற்படி இடத்தை மாத்திரமே புனரமைக்கவுள்ளோம். இதன் காரணமாக, அங்கு வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. பெரும்பான்மையினக் குடியேற்றத்தை மேற்கொள்ளவோ, காணிகளைப் பிடித்துக்கொள்ளவோ நாம் ம…

  14. திக்குமுக்காடினார் ஜீ.எல் பீரிஸ் “புதிய கட்சியொன்றின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள முன்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிவிட்டீர்களா?” என்று, கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸிடம், ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியால், அவர் சில நிமிடங்கள் திக்குமுக்காடிப்போனார். கொழும்பு, புஞ்சிபொரளையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராம பௌத்த மத்தியஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற, ஒன்றிணைந்த எதிரணியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவினது செய்தியாளர் மாநாட்டின் போதே, இச்சம்பவம் இடம்பெற்றது. “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி…

  15. ஈ.பி.டி.பி,புளொட் போன்ற அமைப்புகள் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டன -ஒத்துக் கொள்கிறார் கோத்தா முன்னைய அரசாங்க காலத்தில் ஈ.பி.டி.பி,புளொட் போன்ற அமைப்புகள் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கை இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை. முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் துணை ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட ஈபிடிபி, புளொட் போன்றவற்றிடம் இருந்து ஆயுதங்களை களைந்த எமக்கு புதிய குழுக்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. …

  16.  நாடு திரும்பினார் அர்ஜுன் மகேந்திரன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜீன் மகேந்திரன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, இன்று பிற்பகல் 4.10 மணியளவில், நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/185320/ந-ட-த-ர-ம-ப-ன-ர-அர-ஜ-ன-மக-ந-த-ரன-#sthash.JkpKadJc.dpuf

  17. வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது46) எனும் நபரே இவ்வாறு மரணித்தவர் என்று கூறப்படுகின்றது நேற்றைய தினம் உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்காக படுக்கைக்காக சென்ற வேளை திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த வேளையிலேயே மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் நாங்கள் இவர் மயக்கத்துடன் தான் இருக்கின்றார் என நினைத்து புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். அங்கு சென்றதும் தான் தெரியவந்தது மரணமடைந்து விட்டாரென்று. தமக்கு இதில் பலத்த…

  18. நாட்டில் முறைக்கேடான முறையில் சொத்துக்களை குவித்து, நிலங்களை கையகப்படுத்திக் கொண்ட சிரந்தி ராஜபக்ஸ மற்றும் அவரின் மகன்கள் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தின் ஊழல் குறித்த ஆதாரங்கள் இருந்த போதிலும் அவர்களை நல்லாட்சி அரசாங்கம் பாதுகாத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். “மோசடியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள்” என்ற தலைப்பின் கீழ் கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஸ குடும்பத்தின் தவறுகளுக்கு எதிராக ஆதாரம் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைகாட்சி நிகழ…

  19. விசேட தேவையுடைய இராணுவத்தினரின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஒல்கோட் மாவத்தையில் பாரிய ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 12 வருடங்கள் இராணுவ சேவையாற்றாத விசேட தேவை உடையோருக்கும் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கக் கோரி இந்த போராட்டம் கடந்த 4 தினங்களாக முன்னெடுக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/13069

  20. வவுனியா ஓமந்தை புதிய வேலர் சின்னக்குளத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டரை வயதுடைய ஆண்குழந்தையுடன் கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை அயல் ஊராகிய ஒமந்தை பன்றிக்கெய்தகுளம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நுண்கருத் திட்டம் என்றழைக்கப்படுகின்ற நுண்கடன் திட்டத்தின் கீழ் நிதி நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்ற கடனை தவணை தினத்தன்று திருப்பிச் செலுத்துவதில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருந்தது. இந்தத் தகராறின் பின்னர், முதல் நாள் கட்ட வேண்டிய கடனை மறுநாள் கட்டுவதற்காக இரண்டரை வயது மகனுடன் செவ்வாய்க்கிழமை வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்ற மனைவியே மறுநாள் இவ்வாறு சடலமாக கிணற்றிலி…

  21. கிராமசேவகருக்கு நட்டஈடு வழங்கிய இராணுவ வீரர் -செல்வநாயகம் கபிலன் ஆபத்தான முறையிலும் கவனக்குறைவாகவும் வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தி, கிராம சேவகருக்கு காயத்தை ஏற்படுத்தினார் என்று குற்றச்சாட்டுக்கு இலக்கான இராணுவ வீரருக்கு 9ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்த மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், விபத்தில் பாதிக்கப்பட்ட கிராம சேவகருக்கு 1 இலட்சம் ரூபாயை, நட்டஈடாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார். கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதியன்று, காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ கெப் ரக வாகனம், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த கிராம சேவகரை மோதிவிட்டுச் சென்றது. …

  22. ஓமானில் இலங்கைப்பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓமானில் இலங்கைப்பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக இலத்திரனியல் மற்றம் அச்சு ஊடகங்களில் கடந்த சில தினங்களாக செய்தி வெளியாகியிருந்தது. அது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கவனம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சருக்கு கிடைக்கப்பெற்ற தனிப்பட்ட தகவல் ஒன்றுக்கமைய உடனடியாக செயற்பட்டு சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்படும் ஓமானில்…

  23. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் லிங்கநாதன் அவர்கள் சிடி ஒன்று ஒப்படைத்துள்ளதாக 13-10-2016 அன்று வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் அவர்கள் எனது முகநூல் உள்பெட்டியில் தெரிவித்தார். ஆனால் இன்று சக்தி ரிவியில் தான் அந்த சிடி கொடுக்க இன்று (03-11-2016) போனதாகவும் அங்கே விசாரணைக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல அப்படி ஒரு அலுவலகமே இல்லை என்கிறார். அந்தப் பேட்டியிலேயே விசாரணைக்குழு தனது செயற்பாட்டை 03-10-2016 அன்று ஆரம்பித்துவிட்டதாக பேரவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தாகவும் சரியாக ஒரு மாதம் கழித்து தான் இன்று இந்த ஆதாரங்களைக் கொடுப்பதற்காக வவுனியாவிலிருந்து வந்ததாகவும் ஆனால் தன்னால் அதைச் சமர்ப்பிக்க முடியவ…

  24. முஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்கக் கூடாது ; தவ் ஹீத் ஜமா அத் அமைப்பு (கா.சந்திரன்) ஜி. எஸ்.பி வரிசலுகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்க கூடாது என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா தவ் ஹீத் ஜமா அத் அமைப்பு, முஸ்லிம் தனியார் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர் . இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு தனியார் சட்டத்தை நிறைவேற்றுகின்ற உரிமை நல்லட்சிக்கோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ இல்லை எனக் கூறி இன்று கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் பாரிய கண்டன ஆர்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது . குற…

  25. இனப்பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பது நாட்டை அதள பாளத்துக்கு தள்ளும் – கிழக்கு முதலமைச்சர்: கிழக்கு மாகாணத்தில் பாரிய ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகையில் மாகாண ஆசிரியர்களை வெளி மாகாணங்களில் நியமிப்பதனை கிழக்கு மாகாணத்தை கல்வியில் புறக்கணிப்பதாகவே கருத வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்திலேயே நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார். இம்முறையும் மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்துக்கு உள்ளே நியமிப்பதற்கு பல போராட்டங்களை முன்னெடுக்க வேண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.