Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலை­யக மக்கள் குறித்தும் புலம்­பெயர் தமி­ழர்கள் கவனம் செலுத்த வேண்டும் (நமது நிருபர்) வடக்கு, கிழக்கில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி மலை­ய­கத்தில் வாழ்­கின்ற தமிழ் மக்­களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நட­வ­டிக்­கை­க­ளிலும் புலம்­பெயர் தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். லண்­டனில் சொறஸ்­ரி­றியன் மையத்தில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற பொதுக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இந்தக் கூட்­டத்தில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட புலம்­பெயர் தமி­ழர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். விக்கி­னே…

  2. "சட்டவிரோத வற்வரியை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் சூழ்ச்சி" : எதிரணி காளி கோவிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல் பெஷிஸ் வாதத்தின் உச்ச நிலையில் அரசாங்கம் செயற்படுகின்றது. சட்டவிரோதமான வற் வரியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் சூழ்ச்சி செய்வதாக தெரிவித்துள்ள கூட்டு எதிர்கட்சி, ஆட்சி மாற்றத்திற்கும் வற் வரி தோல்வியில் முடிவடையவும் காளி கோவிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்யப்பட்டது. முகத்துவாரம் காளி கோவிலில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கூட்டு எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சிசிர ஜயகொடி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். http://www.virakesari.lk/article/1273…

  3. பொலிஸ் காலவரணுக்கு தீ வைப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி டிப்போ சந்தி காவலரண் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், காவலரணின் சிறிய பகுதி தீயில் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ வைப்புச் சம்பவம், இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை வேளையில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் இரும்பு கம்பிகள் கொண்ட அந்த காவலரண் தீயால் எவ்வித சேதமும் அடையவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காவலரணில் நின்றே, போக்குவரத்துப் பொலிஸார், டிப்போ சந்தியின் கடமை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/184715/ப-ல-ஸ-க-லவரண-க-க-த-வ-ப-ப-

  4. சங்கானை இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்? சங்கானையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.ஆஸ்பத்திரி வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த தர்மபாலன் சுகிர்தன் (வயது – 25) என்ற இளைஞனை, கோப்பாய் டிப்போ விற்கும் உரும்பிராய் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து பொலிஸார் தாக்கியதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காரண மின்றி தன்னை தாக்கியதாகவும், தாக்கப்பட்டவர்களை கண்டால் அடையாளம் காட்டுவதாகவும் குறித்த இளைஞன் பொலிஸ் நிலை யத்தில…

  5. மாணவர்கள் மீதான சூட்டு சம்பவம் பொலிஸார் தவறிழைத்துள்ளனர்- பகிரங்கமாக ஏற்றார் பொலிஸ்மா அதிபர் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தில் பொலிஸ் தர ப்பில் தவறுகள் காணப்படுவதை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். துப்பாக்கிப் பிரயோகம் நடத்தும் அளவிற்குச் செல்லாமல் குறைந்தளவு அதிகாரத்தை இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் பயன்ப டுத்தி தீர்வு கண்டிருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸ்மா அதிபர், இடம்பெற்ற சம்பவத்தை உடனடியாக அறிக்கையிடாமல் தாமதித்தமை பொலிஸார் இழைத்த பெருந்தவறு என்றும் சுட்டிக்காட்டினார். பொலிஸாரின் 150ஆவது நிறைவ…

  6. மாணவர் கொலைக்கு பின்னரான சூழலில் அனைவரும் பொறுமை காப்பது அவசியம் -முதல்வர் விக்கி அறிக்கை யாழ் .பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒத்த வேறு சம்பவங்கள் இடம்பெறாத வகை யில் நாம் பார்த்துக்கொள்வது நமது கடமையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட வடமாகாண முதல மைச்சர், பதட்டமான சூழலில் எமது இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என வலியுறு த்தியுள்ளார். யாழ்ப்பாணம் - கொக்குவில் குளப்பிட்டிச்…

  7. தனித்துப் பேசி­விட்டுத் தான்­தோன்­றித்­த­ன­மான அர­சியல் யாப்­பொன்றை திணிக்­கக்­கூ­டாது நெருக்குதல் இருந்தால்தான் அரசு தரும் என்கிறார் முதல்வர் விக்கி (நமது நிருபர்) நெருக்­குதல் இருந்­தால்தான் மத்­திய அர­சாங்கம் எத­னையும் கொடுக்க முன்­வரும். தலை­வர்கள் தரு­வ­தாகக் கூறி­னாலும் சிலர் எத­னையும் தர விட­மாட்­டார்கள். ஆகவே, ஜன­நா­யக முறைப்­படி எமது உரி­மைகளை வென்­றெ­டுப்­ப­தாகில் நாங்கள் எங்­கள் குறை­களை ஊர­றிய, உல­க­றியச் செய்ய வேண்டும் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் லண்­டனில் தெரி­வித்தார். தனித்துப் பேசி­விட்டுத் தான்­தோன்­றித்­த­ன­மாக அர­சியல் யாப்­பொன்றை எம்­மீது திணிப்­பதால் எந்த நன்­மையும் கிடைத்­து­வி…

  8. மாணவர்களின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடங்கியது வடக்கு யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றையதினம் வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. யாழ்நகர், திருநெல்வேலி அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்க…

  9. அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய பரிந்துரை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸை கைதுசெய்யுமாறு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது. அத்தோடு, PERPETUAL TREASURES நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு எதிராவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப் குழு, இவர்களை கைதுசெய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பரிந்துரைத்துள்ளது. அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆள…

  10. வடக்கில் பௌத்த சின்னங்களை பாதுகாக்க கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு வடக்கில் காணப்படுகின்ற புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த தலங்கள், சின்னங்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள், சேதங்களை தடுத்து நிறுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பிரியசாத் டெப், உபாலி அபேரத்ன மற்றும் நலின் பெரேரா ஆகியோர் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தின் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த என். தர்ஷன வேரதுவகே என்ற சட்டத்தரணி இந்த மனுவை …

  11. "இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும்" இனப்பிரச்சினை இதய சுத்தியோடு தீர்க்கப்படவில்லை என்றால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும் என்ற யதார்த்தத்தை நாங்கள் உரத்துக் கூறாமலிருக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய கிழக்கு முதலமைச்சர், “இந்த நல்லாட்சிக் காலகட்டத்திலே புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான சிறந்ததொர…

  12. புற்­றுநோய் வைத்­தி­ய­சாலை அமைப்­ப­தற்­காக பருத்­தித்­து­றை­யி­லி­ருந்து மாத்­தறை நோக்கி ஆரம்­பித்த 670 கி.மீ.Trail பாத­யாத்­திரை நாளை கொழும்பை வந்­த­டை­கி­றது 2016-10-24 08:52:41 காலி, கரா­பிட்­டி­யவில் புதிய புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லை­யொன்றை அமைப்­பதற்­காக நிதி சேக­ரிக்கும் Trail பாத­யாத்­திரை நாளை செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பு நகரை வந்­த­டை­ய­வுள்­ளது. 50 மில்­லியன் ரூபா நிதி சேக­ரிக்கும் இலக்­குடன் யாழ்.பருத்­தித்­து­றை­யி­லி­ருந்து மாத்­தறை தேவேந்­தி­ர­முனை வரை 670 கிலோ­மீற்றர் தூரம் Trail பாத­யாத்­திரை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. கடந்த 6 ஆம் திகதி பருத்­தித்­து­றையில் ஆரம்­பித்த பாத யாத்…

  13. பம்பலப்பிட்டியில் தீ பம்பலப்பிட்டி, காலி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் ஏற்படவிருந்த பாரிய தீ விபத்து, தீயணைப்புப் படை வீரர்களின் துரித செயற்பாட்டினால் தடுக்கப்பட்டதாக, பம்பலப்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த உணவகத்துக்கு, மின்சாரம் வழங்கும் பிரதான மின் ஆழியிலிருந்து, இன்று காலை 6.45 மணியளவில் பாரியளவிலான புகை எழுந்து, அப்பகுதியெங்கும் புகைமண்டலமாகக் காட்சியளித்துள்ளது. இதனையடுத்து, உணவக ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மருதானை தீயணைப்புப் படைப் பிரிவினரின் 3 வாகனங்கள், சுமார் 30 நிமிடங்களில் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மின் ஒழுக்கின் காரணமாகப் பிரதான மின் ஆழியிலிருந்து …

  14. யாழில் பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர் - சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்தில் கடந்த 21ஆம் திகதி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் பொலிஸார் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்;களாக விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். வழமையாக ஹர்த்தால் உள்ளிட்ட சம்பவங்களின் போது, பொலிஸார் பூரண பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், இன்று ஹர்த்தால் நடைபெறும் போது பொலிஸார் எவ்விதப் பாதுகாப்பையும் வழங்கவில்லை. கடந்த 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்…

  15. உரும்பிராய் சந்தியில் இளைஞன்மீது பொலிஸார் தாக்குதல்? -எம்.றொசாந் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில், இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன், உறவினர்களுடன் சென்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் இரண்டு மணியளவில், அலைபேசி சிம் அட்டை விற்பனை செய்யும் தன்னை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த, பொலிஸார் இருவர் தாக்கியதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். முறைப்பாடு செய்யச் சென்ற இளைஞனிடம், தங்கள் பொலிஸ் நிலைய அதிகாரிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்ற…

    • 1 reply
    • 312 views
  16. லண்டனில் புலம்பெயர் அமைப்பால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளின் கொடி ஏந்தப்படுவதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். கிங்ஸ்டன் நகரம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வடக்கு முதலமைச்சர் லண்டன் சென்றிருந்தார். குறித்த உடன்படிக்கை கிங்ஸ்டன் மாநகரத்தில் கடந்த 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதேவேளை, முதல்வரை வரவேற்கும்முகமாக லண்டன் வாழ் தமிழர்களால் சிறப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விடுதலை புலிகளின் கொடி ஏந்துவதே குறித்த சந்திப்பின் முக்கிய குறிக்கோளாக இருந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு விடுதலைப் புலிகளின் கொடியை ஏ…

  17. இந்திய துறைமுகத்தில் இலங்கைக் கப்பல்கள் பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கடற்படை கப்பல்களான “சயுர“ மற்றும் “சுரநிமல” ஆகியவை இன்று திங்கட்கிழமை, இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தன. இந்தியா கடற்படையினரால் இந்த இரண்டு கப்பல்களும் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் வரவேற்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் கெப்டன்களான பிரசன்ன அமரதாச மற்றும் பூஜித விதான ஆகியோர், இந்திய தெற்கு கடற்படை கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜெயந்தி நட்கார்னியை கொச்சி தலைமையகத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது பரஸ்பர நற்புறவு மற்றும் இரு…

    • 2 replies
    • 566 views
  18. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவருக்கு தென்னம்மட்டையால் 100 அடிகளை வழங்கிய குற்றச்சாட்டில் முஸ்லிம் பள்ளி வாசல் ஒன்றின் பரிபாலன சபையை சேர்ந்த 4 பேர் கால வரையறையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளம் நல்லன்தெழுவ ஜூம்மா பள்ளி வாசலின் பரிபாலன சபையை சேர்ந்த நால்வரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் பந்துல குணரத்னகே உத்தரவிட்டுள்ளார். குறித்த பெண் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் இருந்த போது, வீட்டுக்குள் வந்த நபர் ஒருவர் பலவந்தமாக பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பான பெண் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளார். ம…

  19. தமிழ் மக்கள் நிறைந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை கடமையில் அமர்த்துகின்றனர் : கேள்வியெழுப்புகிறார் விக்கிரமபாகு (ந.ஜெகதீஸ்) மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்களை பொலிஸார் இடைநிறுத்தக்கோரிய போது மாணவர்கள் தடுப்புக்காவலில் நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் வாள் வெட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் என கருதி மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவத்தின் போது கடமையில் இருந்த ஐந்து பொலிஸாரும் சிங்களவர்களே. இவர்களின் மொழி தெரியாமல் மாணவர்கள் குறித்த இடத்தில் நிறுத்தாமல் சென்றிருக்கலாம். தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை அதிகமாக கடமையி…

  20. அரை நூற்றாண்டாக எரிந்து கொண்டு இருக்கும் பெற்ற வயிறுகளுடன் கஜனின், சுலக்ஷனின் அம்மாக்களின் வயிறுகளிலும் தீ பரவிக் கொண்டது – நடராஜா குருபரன்:- யுத்தம் காவுகொண்ட தமிழ்ப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் கல்விக் கனவில் மிதந்த, நடராஜா கஜன், மற்றும் பவன்ராஜ் சுலக்ஷனும் துப்பாக்கிச் சன்னத்தில் மாண்டு போனார்கள். மோட்டார் உந்துருளி விபத்தாக இறுதியாக்கப்பட்ட மரணங்களை, வைத்தியசாலைப் பிரேத பரிசோதனை படுகொலைகளாக நிறுவிச் சென்றுவிட்டன.. பெற்றாரும், உடன்பிறப்புகளும், சுற்றத்தாரும், பல்கலைத் தோழர்களும் துவண்டு போயினர்… கஜனும், சுலக்க்ஷனும் வாழ்ந்த, தவழ்ந்த, உலாவித்திரிந்த கிளிநொச்சி பாரதிபுரம், யாழ் கந்தரோடை, அளவெட்டிப் பகுதிகளை துயரம் சூழ்ந்திருக்கிறன….. …

  21. சிகை அலங்காரம் எனும் போர்வையில் மாணவியரை பயன்படுத்தி விபசாரம் மட்­டக்­க­ளப்பு நகரில் சிகை அலங்­கார நிலை­யங்கள் என்ற பெயரில் மாண­வி­களை விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்தி வரு­வது தொடர்­பாக உட­னடி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு மட்­டக்­களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் கணே­ச­ராசா உத்­த­ர­விட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு நகர் பகு­தியில் சிகை அலங்­கார நிலை­யங்கள் என்ற போர்­வையில் சில இடங்­களில் பாட­சாலை மாண­வி­களை பயன்­ப­டுத்தி விப­சார நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக மாண­வர்கள் பெற்றோர் மத்­தி­யி­லி­ருந்து கிடைத்த முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­க…

  22. இரசாயன பகுப்பாய்வாளர்களால் விசாரணைகள் ஆரம்பம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்ப வம் தொடர்பாக இரசாயன பகுப்பாய்வாளர்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்றையதினம் விசேட இரசாயன பகுப்பாய்வுத் திணைக்கள அதிகாரிகளும், இரகசிய பொலி ஸாரும் யாழ்ப்பாணத்திற்கு சென்று சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணை களை முன்னெடுத்தனர். http://onlineuthayan.com/news/19354

  23. முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட 7பேர் கைது வா.கிருஸ்ணா மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபசாரம் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/184517/ம-ன-ன-ள-ம-யர-ச-வக-த-உள-ள-ட-ட-ப-ர-க-த-

  24. ஏ9 வீதியை மறித்து மாணவர்கள் போராட்டம் (2ஆம் இணைப்பு) யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்திற்கு நீதி கோரி யாழ் செயலகம் மற்றும் ஆளுனர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் தங்போது ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை. http://onlineuthayan.com/news/19324

  25. இந்த நாட்டில் எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது - இரா. சம்பந்தன் இந்த நாட்டில் எவரும் எவரையும் ஏமாற்ற முடியாது என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார். இன்று (24.10.2016) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். ஐரோப்பிய ஒன்றியம் இந்த விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தை அமைப்பதற்கென உணவு விவசாய ஸ்தாபனத்தின் மூலமாக 81.4 மில்லியன் ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளது. 10 மாத காலத்தில் கட்டி முடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.