ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143420 topics in this forum
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக, தொழிலாளர் சங்கத்துக்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சுக்கும் இடையில் நேற்றுப் புதன்கிழமை (05) இடம்பெற்ற 11ஆவது பேச்சுவார்த்தையில், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்ற நிலையில், இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்காக, நேற்றுப் புதன்கிழமை கூட்டப்பட்ட பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சருமான அருள்சாமி, தொழிலாளர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கும் நிலைப்பாடே இன்னும் காணப்படுகின்றது …
-
- 0 replies
- 364 views
-
-
2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால் அது உறுதியான விடயம் என குறிப்பிட்டுள்ளார். சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கினால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார் என அவர் கூறியுள்ளார். சமகால பிரதமர் ரணில…
-
- 1 reply
- 366 views
-
-
தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, பொலிஸ் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்று, விக்னேஸ்வரனுக்கு பொலிஸ் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு கோரும்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தாம் கோரியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன், அடிப்படைகள் இல்லாமல் இத்தகைய குற்ற…
-
- 0 replies
- 211 views
-
-
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சட்டவிரோதமான முறையில் தனது சகாக்களுக்கு பிரபு பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பினை பெற்றுக் கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இவ்வாறு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்ட ரீதியாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படக்கூடிய எந்தவிதமான அடிப்படைத் தகுதியும் அற்ற, தேசிய சுதந்திர முன்னணியின் நான்கு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேருக்கும் ஆயுதம் தாங்கிய பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலச…
-
- 0 replies
- 208 views
-
-
தமிழர்கள் மீதான இராணுவ அத்துமீறல் தொடர்வதால் உயிருக்கு பயந்து இலங்கை திரும்ப தமிழகத்தில் உள்ள முகாம் அகதிகள் தயங்குகின்றனர் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் போது ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். உயிருக்கு பயந்த தமிழர்கள் பலர் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி தமிழகம் உள்பட இந்தியாவிற்குட்பட்ட பல மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவர்களுக்காக தமிழகத்தில் 114 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு லட்சத்திற்கு மேலான அகதிகள் தங்கியுள்ளனர். இலங்கையில் தற்…
-
- 0 replies
- 238 views
-
-
இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச வர்த்தக சஞ்சிகையான போர்பஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் மொத்தக் கடன் சுமை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையின் மொத்தக் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இதில் 8 பில்லியன் டொலர் கடன் சீனாவிற்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தேசிய உற்பத்தியில் 75 வீதமான பகுதி கடன் செலுத்துகைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், இது நாட்டின் மொத்த வருமானத்தில் 95.4 வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமர்ஜின் மார்கட்ஸ் ஒப் ஏசியா என்னும் நூலை எழுதிய டெட் செபர்டினால் ப…
-
- 3 replies
- 493 views
-
-
இலங்கைக்கு சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டு பெண்ணின் கைத்தொலைபேசியை திருடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் கான்ஸ்டபிளே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல புகையிரத நிலையத்தில் வைத்து குறித்த பெண்ணின் 79,000 பெறுமதியான கைத்தொலைபேசி உள்ளிட்டவைகள் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளால் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/community/01/119906
-
- 1 reply
- 371 views
-
-
சம்பள உயர்வை வலியுறுத்தி மலையத்தின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பத்தாவது நாளாகவும் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் 4 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 300 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று காலை முதல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஸ்டோனிகிளிப் தோட்டத் தொழிலாளர்கள், ஹற்றன் - நுவரெலியா பிரதான வீதியை மறித்து, கொட்டகலை நகரில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது தொழிலாளர்கள் தங்களின் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கோஷம் எழுப்பியதுடன், சுலோகங்களையும் ஏந்தியிருந்தனர். பத்தனை …
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பு - கண்டி அதிக வேக வீதியின் மூன்றாம் கட்டத்தை நிர்மாணிப்பதற்கான கேள்விப் பத்திரத்தை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தெரிவு செய்துள்ள ஜப்பானின் டைய்செய் கோர்பரேஷன் நிறுவனத்தின் கேள்விப் பத்திரத்திற்கமைய சமர்ப்பிக்கப்பட வேண்டி ஏல பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த அதிவேக நெடுஞ்சாலை, பொத்துஹெரயில் இருந்து கண்டி வரை மூன்றாம் கட்டத்தின் கீழ் நிர்மாணிப்பிற்காக ஜப்பான் கடன் உதவியுடன் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு ஏலம் விடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்காக ஜப்பான் நிர்மாணிப்பு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தியிருந்த போதிலும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட ஆலோசகரின் நிறுவ…
-
- 0 replies
- 264 views
-
-
மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது. பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம். அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்? இவ்வாறு பல வினாக்கள் எழும். இதற்கான தீர்வுகளையே இப்போது உங்களுக்காக நாம் கொண்டுவந்துள்ளோம். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ எடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள். 1. அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171 2. அம்புலன்ஸ் (கொழும்பு) - 110 3. பெண்களிற்க…
-
- 0 replies
- 296 views
-
-
வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது விதிக்கப்படும் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்குவது குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கு காணி வழங்கும் போது 15 வீத வரி அறவீடு செய்யப்பட்டு வந்தது. 2013ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் வரையில் இது தொடர்பிலான சட்ட மூலம் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு வரி அறவீட்டை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. http://www.tamilwin.com/pro…
-
- 0 replies
- 246 views
-
-
கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கதிர்காமம் கோவிலை சுற்றியுள்ள காட்டு பகுதியில் ஒருவருக்கு 15 ஏக்கர் என்ற ரீதியில், 15 நீதிபதிகளுக்கு காணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரபல நீதிபதிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய காணிகள் வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காணி வழங்கல் தொடர்பில் நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, காணிகளை பெற்ற நீதிபதிகள் தொடர்பில் முழு நாட்டிற்கும் தகவல் வெளியாகும் என…
-
- 1 reply
- 323 views
-
-
புதுடில்லி: மீனவர்கள் எல்லை தாண்டுவதால்தான் கைது செய்யப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பிரதமருடன்சந்திப்பு: டில்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று இலங்கை பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். ஐதராபாத் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரணில் விக்ரமசிங்கே எடுத்துரைத்தார். மேலும் இரு நாட்டு உறவு, மீனவர் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரணில், இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பல மூத்த அத…
-
- 1 reply
- 234 views
-
-
சிறுநீரக நோயை கட்டுப்படுத்த உதவ முன்வந்தது ஜேர்மன் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவ ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான ஜேர்மனியின் புதிய தூதுவர் ஜோர்ன் ரோட் அவரது நியமனக் கடிதத்தை இன்று (05) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்த போதே இதனை தெரிவித்தார். இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயை தடுப்பதற்கான நிகழ்ச்சித்திட்ட ங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட தூதுவர் ரோட், ஜேர்ம னிக்கும் இல ங்கைக்கும் இடையிலான கூட்டுறவு மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் கடந்த வருடம் ஜனாதிபதி சிறிசேனவின் ஜேர்மனிக்…
-
- 0 replies
- 292 views
-
-
“நானும் கடும் அதிருப்தியில் இருக்கின்றேன்” : ராஜித்த பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கப்படாமை தொடர்பில் நானும் கடும் அதிருப்தியில் இருக்கின்றேன். அதாவது சிறிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்துகின்றது. ஆனால் மிக பெரிய சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதில்லை. இது தொடர்பில் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அதாவது சிறிய விடயங்களை விடுத்து மிகப் பெரிய விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாம் கோருகின்றோம். வெறுமனே சிறிய விடயங்களுக்காக அதிகாரிகளை விசாரிப்பதில் அர்த்தமி…
-
- 1 reply
- 395 views
-
-
வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை திருப்பி அனுப்பும் அளவிற்கு இன்னமும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்து நீதி மற்றும் காவற்துறை அமைச்சர்களுடன் வருகை தந்துள்ள ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்புமளவுக்கு நாட்டில் நிலமை மாற்றமடையவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து நடாத்தும் ஆட்சியிலும் 17 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனத் …
-
- 8 replies
- 493 views
-
-
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் ஒன்பது மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவினர் இன்றைய தினம் முன்னாள் கடற்படைத் தளபதியிடம் இவ்வாறு விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் ஒன்பது மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் 13 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்டமை மற…
-
- 0 replies
- 338 views
-
-
அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து சிறீலங்காவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது. நாடு கடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான உடன்பாட்டிலேயே கையெழுத்திடப்பட்டுள்ளது. அத்துடன் தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கை அகதிகள் சித்திரவதைக்குட்படுவார்கள் என்ற கருத்தை சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் நிராகரித்துள்ளார். முன்பு போலவும், இந்த உடன்பாட்டுக்கமையவும் ஒவ்வொருத்தரும் பரிசீலிக்கப்படுவார்கள். இதன்படி யாருக்கு உதவி தேவை, …
-
- 2 replies
- 531 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை விமான சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள புனர்நிர்மான பணிகளின் நிமித்தம் குறித்த விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். http://www.virakesari.lk/article/12080
-
- 0 replies
- 527 views
-
-
விக்கிப்பீடியாவில் தமிழீழம்:தலைநகராக திருகோணமலை விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் Tamil Eelam (தமிழீழம்) என்ற பெயரில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பக்கத்தில், இன்று 5ஆம் திகதி இறுதியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் ஒவ்வொருவருக்கும் பக்கங்களை அமைத்து பராமரிக்க முடியும். குறித்த பக்கம் தொடர்பில் விக்கிப்பீடியா தலைமையகத்துக்கு இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்ய முடியும். AddThis Sharing Buttons Share to FacebookShare to TwitterShare to Goog…
-
- 0 replies
- 522 views
-
-
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற 'எழுக தமிழ்' பேரணியின் போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாகச் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் கருத்துக்கள், அவரால் பேசப்பட்டிருக்கவில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04) சபையில் விளக்கமளித்தார். எழுக தமிழ் நிகழ்வில் போது, பௌத்த சாசனத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணான வகையிலுமான கருத்துக்களை விக்னேஸ்வரன் முன்வைத்தார் என்று சுட்டிக்காட்டிய, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, 23/2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே, சம்பந்தன…
-
- 1 reply
- 475 views
-
-
புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமாக அமையலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கவலை வெளியிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவரப்போவதாக அண்மையில் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்தது புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் பயங்கரவாதத்துக்கு எதிராக தீவிரவாத முடியடிப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 460 views
-
-
வடக்கில் இராணுவத்தின் பிடியில் காணப்படும் சகல காணிகளும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுமென காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். காணி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமை ச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் குறித்து அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்- ”நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக, தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டே வடக்கில் படையினர் நிலைகொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது சுமுகமான சூழல் நிலவுவதால் கடந்த காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள கையளிக்கவேண்டியது அவசியமாகும். வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களி…
-
- 1 reply
- 427 views
-
-
வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் இறப்பையடுத்து அவரது கதிரைக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமக்குள் முட்டிமோதிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரே நியமிக்கப்படவேண்டுமெனவும் குரல்கள் வலுத்துள்ளன. இருப்பினும், பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியரத்தினத்தை நியமிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தி வருகின்றார். ஏற்கனவே முன்னாள் கல்வியதிகாரியான அரியரத்தினம் தனக்கு கல்வியமைச்சர் பதவி வேண்டுனெ கோரிக்கைவிடுத்திருந்தபோது…
-
- 3 replies
- 328 views
-
-
பௌத்த சமயத்தை உருவாக்கிய புத்தபெருமானே இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு வந்தவர். அவர் இலங்கைக்குவர முன்பு இங்கிருந்த மதம் என்னவென்று ஞானதேரருக்குத் தெரியுமா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பகிரங்கமாக கேள்வியெழுப்பியுள்ளார். திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் நடாத்திய கவிந்திரன் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில் பூர்வீகமாக இருந்துவந்த தமிழ்மக்களை இந்தியாவிற்குப் போ என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. முன்னைய காட்டுமிராண்டித்தனமான அரசின் …
-
- 6 replies
- 1.1k views
-