ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
'மாகாணங்களுக்காக அடிபடாதீர்கள்' -சொர்ணகுமார் சொரூபன் பிரித்தானியரால் இலங்கையில் 9 மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களின் நிர்வாகத்தை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மாகாணத்துக்காக, நாங்கள் ஒவ்வொருவரும் அடிபடக்கூடாது. ஒரே நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 'விளையாட்டும் நல்லிணக்கமும் உலகின் பொதுவான மொழி. இந்த விளையாட்டில் அனைவ…
-
- 1 reply
- 403 views
-
-
‘சம்பந்தனுக்குப் புகழாரம்’ நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துக்கு வருகைதந்துள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், ஒக்லண்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து, கடந்த சனிக்கிழமை (01) மாலை, சந்தித்துக் கலந்துரையாடினார். அங்கு உரையாற…
-
- 1 reply
- 345 views
-
-
யாழ். பல்கலையில் ஜனாதிபதி... யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இரண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுத் திங்கட்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டன. (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) - See more at: http://www.tamilmirror.lk/183110/ய-ழ-பல-கல-ய-ல-ஜன-த-பத-#sthash.PkvsuYGL.dpuf
-
- 1 reply
- 452 views
-
-
இரு இலங்கையர் உட்பட மூவர் டுபாயில் கடலில் மூழ்கி உயிரிழப்பு டுபாயில் இரண்டு இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.டுபாயின் Umm Suqeim கடலில் வெள்ளிக்கிழமை நீராடச் சென்ற போதே இரு இலங்கை பிரஜைகளும் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் காப்பாற்றும் முயற்சி தோல்வியில் நிறைவ டைந்துள்ளது.கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் நீராடச் செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்ப ட்டிருந்ததாகவும் இந்த எச்சரிக்கைகளை மீறி இவர்கள் நீராடச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 338 views
-
-
மஸ்கெலியாவில் பதற்றநிலை சம்பள உயர்வு கோரி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததையடுத்து, மஸ்கெலியா நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முயற்சித்தமையால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11971
-
- 2 replies
- 616 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் மார்ச்சில் மாறும்; அச்சம் தேவையில்லை நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் இலங்கையில், ஜனநாயக ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பயங்கரவாதத் தடைச்சட்டமானது, அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் திருத்தியமைக்கப்படும் என்றும் கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலருக்கு எதிராக, குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதுடன், மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் அறிவித்தார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் தலைமையில…
-
- 0 replies
- 221 views
-
-
நிதிக் கேந்திரமாக மாற்றமடையும் இலங்கையில் முதலீடு செய்யுங்கள் : நியூசிலாந்தில் அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில் இந்து சமுத்திரத்தின் நிதிக் கேந்திர நிலையமாக மாற்றமடையவுள்ள இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு நியூசிலாந்து, இலங்கை வர்த்தக சமூகத்தினருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்புவிடுத்திருக்கின்றார். நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் நியூசிலாந்தின் ஒக்லேன்ட் நகரின் வர்த்தக மற்றும் முயற்சிகள் தொடர்பான நிலையத்தில் இடம்பெற்ற இலங்கை, நியூசிலாந்து வர்த்தக சமூக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையி…
-
- 0 replies
- 172 views
-
-
சீனா செல்ல கோட்டாவுக்கு அனுமதி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை சீனாவுக்குச் செல்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதி வழங்கியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ உட்பட சந்தேகநபர்களுக்கு, செப்டெம்பர் 30ஆம் திகதி, வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்நிலையிலேயே, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மேலதிக சரீரப்பிணையில் இந்தப் பயணத்தடை அவருக்கு நீக்கப்பட்டுள்ளது - See more at: http://www.tamilmirror.lk/183109/ச-ன-ச-ல-ல-க-ட-ட-வ-க-க-அன-மத-#sthash.VR0vWj3x.dpuf
-
- 0 replies
- 193 views
-
-
தெற்கில் தேர்தலில் தோற்று , சிறை செல்லவேண்டியவர்கள், எம்மை வைத்து அரசியல் செய்கிறார்கள்:- 02 அக்டோபர் 2016 சி.வி. குற்றசாட்டு:- தெற்கில் தேர்தலில் தோற்ற சிலர், சிறைத் தண்டனைக்கு இலக்காக வேண்டிய சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இறுதிநாள் நிகழ்வுகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.00 மணியளவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் , விளையாட…
-
- 2 replies
- 504 views
-
-
இலங்கையில் சமாதானம் நீடித்துநிலைபெற அனைவரும் ஒன்றுபடவேண்டும்-வடக்கு ஆளுனர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக இணைந்து நாட்டிற்கு சாந்தியும் சமாதானமும் கிடைக்க ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 42ஆவது தேசிய வியைாட்டு விழா இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இந்த உலகத்தில் பல்வேறு இன, மத, மொழி…
-
- 0 replies
- 237 views
-
-
அனைத்து இனமக்களும் சமத்துவமாக வாழும் அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும் சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயhட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் பெரும்பா…
-
- 0 replies
- 304 views
-
-
வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றித் தெரியவருவதாவது, வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும் அவர் தற்போது அங்கிருந்து 10ஆம் திகதி மாற்றலாகி ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நியமிக்கப்படவுள்ள கிராமசேவகர் தமிழ் மொழியில் அவ்வளவு பரிச்சயமற்றவராகவே உள்ளார் எனவும், தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ள ஒருவரே எமது பிரதேசத்துக்கு கிராமசேவகராக நியமிக்கப்படவேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 316 views
-
-
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு மதகு வைத்த குளம் பகுதி நிலத்தினை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து விடுவிப்பதற்கான அனுமதிப்பத்திரம் கடந்த வாரம் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத் தெரிவு நடைபெற்ற வேளையில் பல இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு, பொருளாதார மத்திய நிலையம் சிங்கள இடத்திற்கு மாற்றப்படவிருக்கும் வேளையிலும், இறுதியில் மதகு வைத்த குளம் தெரிவுசெய்யப்பட்டது. இப்பிரதேசமும், நீண்டகால குத்தகை அடிப்படையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை இரத்துச்செய்து வழங்கும் அமைச்சரவை அனும…
-
- 0 replies
- 431 views
-
-
தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமது உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதோடு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் பு…
-
- 6 replies
- 452 views
-
-
இலங்கையில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சர்வதேச தரத்திலான பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமொன்றை கொண்டுவருவதற்கு தயாராகிவரும் அரசு, இது தொடர்பில் முப்படைத் தளபதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு துறைசார் நிபுணர்களுடன் பேச்சு நடத்தி ஆலோசனைகளைப் பெறவுள்ளது. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முப்படைத் தளபதிகளுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும், இதற்காக விசேட பாதுகாப்புச்சபைக் குழு கூட்டமொன்று நடைபெறவுள்ளது என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதை இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். ஆனால் …
-
- 0 replies
- 289 views
-
-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திக்கவுள்ளார். இதேவேளை இந்தியாவில் இடம்பெறவுள்ள பொருளாதார சம்மேளனத்திலும் பிரதமர் மற்றும் பிரதமருடன் சென்றுள்ள பிரதிநிதிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். http://www.virakesari.lk/article/11995
-
- 0 replies
- 207 views
-
-
வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது சூரியன், சந்திரன் வேண்டுமென அழுதால் அது கிடைக்காது. வடக்கில் சிலர் சூரியன், சந்திரன் வேண்டுமென கேட்டு அழுதால் அது கிடைக்காது என வட மாகாண ஆளுனர் ரெஜிணோல்ட் குரே தெரிவித்துள்ளார். இலங்கை தினமின பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136560/language/ta-IN/article.aspx
-
- 8 replies
- 745 views
-
-
வடக்குக்கு வருகை தரும் அமைச்சர்கள் இங்கு தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்குறித்து தெற்கு மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். எமது மக்களின்விவசாய நிலங்கள் பல இன்னும் இராணுவத்தினர் வசமே உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தைஇழந்து மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். விவசாயிகளுக்கான சலுகைக் கட்டணம் வழங்கும் தேசிய அங்குரார்ப்பண விழாநீர்வேலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- கடந்த ஆட்சி மாற்றத்துடன் நாம் சில இராஜதந்திர ந…
-
- 4 replies
- 397 views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எம்மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.எமது நிலைப்பாடே எழுக தமிழ் பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதைவிட எமது இலக்கு சரியானதாகத்தான் இருக்கின்றது என தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச விசாரணை முடிவுறறதை யாரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் \\\\\\\'இலங்கை அரசியல் யாப்பு” நூல் வெளியீடும் ஆய்வரங்கமும் நேற்றைய தினம் யாழ் சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை அற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் தமிழ் மக்…
-
- 3 replies
- 511 views
-
-
யாழில் இடம்பெற்ற ''இலங்கை அரசியல் யாப்பு'' நூல் வெளியீட்டு விழாவில் மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசியல்வாதிகள்
-
- 0 replies
- 196 views
-
-
எழுக தமிழும் தெற்கின் அதிர்வலைகளும்! தென்னிலங்கை அரசியல் களத்தில் இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தான் பிரதான கதாநாயகனாக மாறியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் கடந்த 24ம் திகதி நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வு மற்றும் அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்களை முன்னிறுத்தி கட்சி வேறுபாடின்றி தெற்கிலுள்ள எல்லா அரசியல்வாதிகளும் இப்போது அவரைத் தான் பந்தாடுகின்றனர். மிகப் பிரமாண்டமான பல எழுச்சி நிகழ்வுகளைக் கண்டது வடக்கு மாகாணம். அவற்றுடன் ஒப்பிடுகையில் எழுக தமிழ் ஒன்றும் மிகப்பெரிய நிகழ்வு இல்லாவிடினும், இப்போதைய சூழலில் எழுக தமிழ் என்பது முக்கியமானதொரு நிகழ்வாக அமைந்திருந்தது. எழுக தமிழ் நிகழ்வின் நோக்கம் தமிழ் மக்களின் பிர…
-
- 0 replies
- 371 views
-
-
இலங்கை தமிழரசு கட்சி தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்பாக உருவாக்கப்பட்டது அல்ல. அது மனிதர்களின் மனித உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 173வது ஜெயந்தி தின நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கே.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், காந்தியின் காலத்தில் வெள்ளையர்களை இந்தியாவில் இருந்து வெள…
-
- 0 replies
- 292 views
-
-
தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில். யாழில்.மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , புளெட் அமைப்பி…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஒற்றையாட்சி முறைமையைத் தொடருமாறும் பௌத்தத்தின் முதன்மைத்தன்மையை பேணுமாறும் கோரியுள்ள மல்வத்தை பீட மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் இதேவேளை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரகசியக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசமைப்பு சீர்திருத்த குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க ஊடாகவே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட இரகசியக் கடிதத்தை வழங்கிய வேளை தற்போதைய அரசியலமைப்பில் காணப்படும் சிறந்த அம்சங்களைத் தொடர்ந்து பேணுவது அவசியம் என தேரர் தெரிவித்துள்ளார். மக்களால் பெரிதும் ஏற்கப்பட்ட ஒற்றையாட்சி முறைமை மற்றும் பௌத்தத்துக்கு முதன்மை அளிப்பதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றை தொடர்…
-
- 0 replies
- 287 views
-
-
மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகளின் அடுத்த கட்டமாக முன்னாள் கணக்காய்வாளர் ஒருவரை நிதி மோசடி விசாரணை பிரிவினர் அழைத்திருந்தனர். முன்னாள் அமைச்சர் பசிலின் அறிவுறுத்தலுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு சீட்டு குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கணக்காய்வாளர் அமைதியாக இருந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் குணமடையும் வரை அவரின் விசாரணைகளை ஒத்திவைத்த நிதி மோசடி விசாரணை பிரிவினர், மக நெகும திட்டத்தின் தற்போதைய கணக்காய்வா…
-
- 0 replies
- 284 views
-