ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143427 topics in this forum
-
'இராணுவம் தனக்கு காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கவேண்டும். மாறாக அடாத்தாக பிடித்து வைத்து, சுவீகரிக்க முயலக்கூடாது' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்கவின் கடிதத்துக்கமைய, 'வலிகாமம் வடக்கில் விடுவிக்க முடியாத மற்றும் இராணுவம் தொடர்ந்து வைத்திருக்கவுள்ள காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்படும்' என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன், மக்களிடம் தெரிவித்தமை தொடர்பில் சபையில் விவாதம் நடைபெற்றபோது, அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இராணுவ முகாமுக…
-
- 1 reply
- 539 views
-
-
142 ஏக்கர் காணிகள் கிளிநொச்சியில் விடுவிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் சுமார் 142 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கரைச்சி பிரதேசத்தில் கனகாம்பிகைகுளம், திருவையாறு, ஆனந்தபுரம், செல்வாநகர், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதியில் 108 ஏக்கரும், கண்டாவளை பிரதேசத்தில் கல்மடுநகர், புளியம்பொக்கனை ஆகிய கிராமங்களைில் 24 ஏக்கர்களும் பூநகரி பிரதேசத்தில் முழங்காவில் பொன்னாவெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சுமார் 6 ஏக்கர் காணியும் கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபரிடம் கையளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடுவிக்கப்பட்ட காணியில் ச…
-
- 1 reply
- 358 views
-
-
நாமலின் அதிசொகுசு கார் சிக்கியது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். போர்டு மஸ்ட் டெகன் வகையைச் சேர்ந்த காரே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தக் கார், 2010ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அன்றிலிருந்து சுமார் 6 வருடங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டதன் பின்னர் மற்றொருவருக்கு அக்கார் விற்கப்பட்டுள்ளது. காரின் தற்போதைய உரிமையாளரிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே, அக்காரை கைப்பற்றியுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/181213/ந-மல-ன-அத-ச-க-ச-க-…
-
- 3 replies
- 578 views
-
-
'சந்தேகநபர்களின் பெயர்களை வெளியிடாது இரகசியம் காக்கவும்' வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், நேற்றுத் திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. 'சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை அவர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டாம்' எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆ…
-
- 0 replies
- 294 views
-
-
தாஜுடீனின் கொலை வழக்கு காணொளி தெளிவில்லை-கனேடிய நிபுணர்கள் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை வழக்கு தொடர்பில் ஆய்வுக்காக வழங்கப்பட்டிருந்த காணொளி தெளிவற்ற ஒன்றாக காணப்படுவதாக கனேடிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த காணொளி தொடர்பில் தீர்மானமொன்றுக்கு வரமுடியாதுள்ளதாக பிரிட்டிஸ் கொலம்பியாவிலுள்ள ஆய்வுகூட நிபுணர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். சி.சி.ரி.வி காணொளி தரம் மிகக்குறைவாக காணப்படுவதாகவும் அதிலுள்ள காட்சிகள் தெளிவற்று உள்ளதாகவும் கனேடிய ஆய்வு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சி.சி.ரி.வி காணொளிகள…
-
- 0 replies
- 303 views
-
-
'பிரபாகரனும் இல்லை மஹிந்தவும் இல்லை' -அழகன் கனகராஜ் 'யுத்தத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. அதேபோல, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால், பிரச்சினைகளை என்னுடன் இலகுவாகப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரிவினைவாதக் குழுக்கள், வடக்கிலும் தெற்கிலும் இருப்பதனால், சிற்சில பிரச்சினைகள் எழுகின்றன. வடக்கில், புத்தர் சிலைகள் வைக்கப்படுவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பிரபாகரனையும் சந்தோஷப் படுத்துவதற்காகவும்…
-
- 2 replies
- 490 views
-
-
“விக்கினேஸ்வரனுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது” வடக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தினரின் பிரசன்னம் அங்கு அவசியமாகும் என வலியுறுத்தும் மஹிந்த அணி ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார, விக்னேஸ்வரனுக்கு தமிழ் மக்களின் ஆதரவு இல்லை அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவிலேயே தங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் மஹிந்த அணி ஆதரவு எம்.பி. யுமான வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்; இன்றைய அரசாங்கம் இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் சர்வதேச விசாரணை தேவையை நிறைவேற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தயாராகவே உள்ளனர். …
-
- 8 replies
- 857 views
-
-
வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டும் - அர்ஜூன ரணதுங்க வடக்கின் அபிவிருத்தியை துரிதப்படுத்த வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யும் போது சிங்களமா, முஸ்லிமா அல்லது தமிழா என பார்க்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வடக்கின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்யும் போது தெற்கு என பிரிக்கப்படாது நாட்டின் அனைத்து பகுதிகளும் அபிவிருத்தி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் பிரச்சினைகள் காணப்பட்டதாகவும் நாடு கடன் தொல்லையில் உழன்றது எனவும் அவர் தெரிவி…
-
- 4 replies
- 512 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட மேலதிக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் 02.06.2016 இல் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட தீர்மானத்திற்கு அமைய மீன்பிடித்துறை சார்பான மேலதிக கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மீனவ சங்கங்களின் சமாசங்களின் தலைவர் உள்ளிட்ட பலர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் மாகாணசபை உறுப்பினர் கௌரவ அன்றனி ஜெகநாதன் அவர்களும் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டனர…
-
- 0 replies
- 496 views
-
-
கோப்பாய் சந்தியில் சமிக்ஞை விளக்குத் தொகுதி இன்றுமுதல் இயககம் கோப்பாய் சந்தியில் பொருத்தப்பட்ட சமிக்ஞை விளக்குத் தொகுதி இன்று இயங்கத் தொட ங்க யுள்ளது. யாழில் 6 இடங்களில் சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் வேலைகள் இடம்பெற்று முடிவ டைந்து தற்போது செயற்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. வேம்படிசந்தி,ஆரியகுளம், திருநெல்வேலிச்சந்தி, கோப்பாய்சந்தி, சுன்னாகம்சந்தி, நெல்லி யடிச்சந்தி ஆகிய முக்கிய சந்திகளில் இந்த வீதிச் சமிக்ஞை விளக்குகள் பொருத்த ப்பட்டு ள்ளன. பச்சை விளக்கு- 20 செக்கன்களும் . சிவப்பு விளக்கு- 76 செக்கன்களிலும் செயற்படுத்தப்பட்டு ள்ளது. http://onlineuthayan.co…
-
- 1 reply
- 441 views
-
-
இனப்படுகொலை பற்றிய ஐ.நா.வின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது-பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை ருவாண்டா சேர்பியா படுகொலைகளுடன் ஐ.நா ஒப்பிட்டுப் பேசுவது உண்மையாகவே அதிர்ச்சியைத் தருவதாக முன்னாள் அமைச்சரும் சமாதானச் செயலகத்தின் முன்னாள்; தலைவருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க விசனம் வெளியிட்டுள்ளார். இலங்கை சம்பவத்தை ருவாண்டா, சேர்பியாவுடன் ஒப்பிடுவது அரிஸ்டோட்டில் வகுத்த முதல் விதிகளில் ஒன்றை மீறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டு;ளளார். எதைப்பற்றியாவது குறைவான அறிவோடு பேசுவது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எமத…
-
- 1 reply
- 519 views
-
-
மது,புகைத்தல் பொருட்களின் வரியை அதிகரிக்க கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் மது மற்றும் புகைத்தல் பொருட்கள் மீதான அதிகரிக்கப்பட்ட வரியை உடனடியாக நடை முறைப்படுத்தக் கோரி இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் - சங்கானை பஸ் தரிப்பிடத்தில் கவன ஈர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வும் நடைபெற்றது. ஜனாதிபதியும் பிரதமரும் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் ஏன் இன்னும் நடைமுறை ப்படு த்தப்படவில்லை எனவும் அங்கு வினா எழுப்பப்பட்டது. வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனம் ஏற்பாடு செய்த இப் போராட்டத்தில் சமூக நலன் விரு ம்பிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் சிகரட் வரியை அதிகரிக்க எண்ணிய சுகாதார அமைச்சருக்கு தடை…
-
- 0 replies
- 283 views
-
-
கஞ்சா பிடிபட்டதன் எதிரொலி நயினாதீவில் பொலிஸ் சோதனை அதிகரிப்பு யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பகுதியில் கஞ்சா பிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் சோத னை அதிகரித்துள்ளது. என அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்தார் . இது பற்றி தெரியவருவதாவது நயினாதீவுப்பகுதி சுற்றுலா தலமாக காணப்படுகின்றது. இங்கு அதிகளவான தென்னி ல ங்க யர்களும் , வெளிநாட்டவர்களும் நாளாந்தம் வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன் கஞ்சா பொதி ஒன்று கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பொலிஸாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நயினாதீவில் காணப்படும் வணக்கஸ்தலங்களின் புனிதத்தை ப…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ். பல்கலைகழக முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது மூன்றாவது தடவையாக தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளரும் சமூக சேவகருமான ரொசான் தமீம் தெரிவித்துள்ளார். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இத்தாக்குதலினால் எழுந்துள்ள பதற்ற நிலை தொடர்பாக முஸ்லீம் மாணவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் சகோதரத்துமாக கல்வி கற்று வரும் இவ்வேளையில் அதை விரும்பாத தீய சக்திகள் இவ்வாறான அநாகரீகமான செயலில் ஈடுபட்டு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றமை ஏற்கமுடியாது. எமது மாணவர்கள் இந்த நிலைமையில் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தாக்குதல் தொடர்பாக பல…
-
- 1 reply
- 407 views
-
-
சட்டத்தரணிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த இளஞ்செழியன் மறுப்பு சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்திக் கட்டளை பிறப்பிக்குமாறு கோரி, யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார். அத்துடன், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் தள்ளுபடி செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்குப் பணிந்து முதலில் அதனை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மல்லாகம் நீதிமன்றப் பதிவாளரை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தியாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு…
-
- 0 replies
- 390 views
-
-
கிராமின் வங்கித் திட்டத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நோபல் பரிசு பெற்ற நேபாளப் பேராசிரியர் யூனுசை சிறீலங்காவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கு வருகை தந்து, அங்கே பெருமளவான வளங்கள் காணப்படுகின்றன எனவும் அவற்றை வைத்து அங்கே ன் வங்கித் திட்டத்தினை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் அழைத்துள்ளார். வடக்குக் கிழக்கில் இளைஞர்கள், யுவதிகள், விதவைகள் எனப் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும், அவர்களுக்கு சுயமாகத் தொழில் செய்யக்கூடிய வகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க உதவுமாறும் றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் மக்களின் பொருளாதாரத்தை மேம…
-
- 1 reply
- 427 views
-
-
நோர்வே அரசின் உதவியுடன் ஆராய்ச்சி ஆரம்பம்..! இலங்கை கடற்பரப்பிலுள்ள மீன் வளங்கள் தொடர்பில் 38 வருடங்களுக்கு பிறகு அடுத்த வருடம் ஜனவரியில் நோர்வே அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது என கடற்தொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதன்போது அருகிவரும் மீன்கள், கடல்வளங்கள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/10994
-
- 0 replies
- 547 views
-
-
'புலி எதிர்ப்புக்கு நான் அஞ்சேன்' 'புலிப் பயங்கரவாத ஆதரவாளர்களினால், எனக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று, மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்னரே நான் அறிந்திருந்தேன்' என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'புலிகளின் எதிர்ப்புக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்' என்றும் தெரிவித்துள்ளார். மலேஷியாவிலுள்ள இலங்கைப் பிரஜைகள் சிலரைச் சந்தித்ததன் பின்னர், அங்குள்ள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபலமான அமைப்பாளர்க…
-
- 1 reply
- 494 views
-
-
ஒரு பொருளின் மீது அளவிற்கும் அதிகமான விசையினைப் பிரயோகிக்கும் போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது அதனை பிரயோகித்தவர் மீதே அந்த அழுத்தத்தினை அப்பொருள் திருப்பிச் செலுத்துவதைப் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவ்வாறே மக்கள் மீது ஆளும் அதிகார வர்க்கம் மேலும் மேலும் தனது அதிகாரத்தைச் செலுத்தி அடக்க விளையும்போது அந்த அதிகாரவர்க்கத்திற்கு எதிராகத் தமது எதிர்ப்பினைக் காட்ட வேண்டிய கட்டாயத் தேவை அங்குள்ள மக்களுக்கு எழுகின்றது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து காலத்திற்குக் காலம் அடக்கு முறைகளிற்கும் ஆக்கிரமிப்புகளிற்கும், அநீதிகளுக்கும் எதிராக பல வெகுஜனப் போராட்டங்கள் நடாத்தப்பட்டு வந்திருக்கின்றன. தம்மை சிறந்த முறையில் ஒழுங்கமைத்து முன்னெடுக்கப்பட்டு வந்த…
-
- 0 replies
- 490 views
-
-
யுத்தம் இல்லாத சூழ்நிலையை அமைதி என்று பார்க்கின்ற சர்வதேச நாடுகள் ஈழத்தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியோ இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அவர்களின் வகிபாகம் பற்றியோ இம்மியும் கவலை கொள்ளவில்லை. யுத்தம் நின்று விட்டது. மகிந்த அரசு இப்போது ஆட்சியில் இல்லை. நல்லாட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆகையால் தமிழர்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்ற சர்வதேசத்தின் நினைப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு நல்லாட்சியும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறதென்பதே உண்மை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை தனிப்பட்ட மைத்திரி மிகவும் நல்ல மனிதர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மனிதநேயம், இரக்கம், சமத்துவம், ஆடம்பரம் அற்ற எளிமையான வாழ்வு என்பன மைத்திரிபால சிறிசேனவின் அணிகலன்கள் …
-
- 1 reply
- 428 views
-
-
மோசமான விமான நிலையமாம் கட்டுநாயக்கா ஆசிய நாடுகளிலுள்ள மோசமான விமான நிலையங்களின் பட்டியலில், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம், 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இது தொடர்பில் செய்தியொன்றை வெளியிட்டு வெளிநாட்டு ஊடகமொன்று, நேபாளின் காத்மண்டு நகரில் அமைந்துள்ள த்ரிபுவான் சர்வதேச விமான நிலையமே, மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/181168/ம-சம-ன-வ-ம-ன-ந-ல-யம-ம-கட-ட-ந-யக-க-#sthash.v92gqeFO.dpuf
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கையில் ஆட்சி செய்து வரும் சிங்கள அரசுகளும் அந்த அரசுகளை வழிநடத்தி வரும் பௌத்த மகாசங்கங்களும் தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த ஒடுக்குமுறைகளும் பாரபட்டங்களினால் தமிழர் சமூகம் கடந்த 60வருட காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர் சமூகம் அகிம்சை வழியிலும் ஆயுத ரீதியிலும் போராட்டங்களை நடத்தினர். வடக்கு கிழக்கில் தங்களின் பூர்வீக நிலங்களை காப்பாற்றி தக்க வைத்து கொள்வதற்காக போராடி வந்தனர். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடிய தமிழ் மக்கள் இன்று தங்கள் நிலங்களையும் வளங்களையும் காப்பாற்றி கொள்வதற்காக தன்னுடைய சகோதர இனமாக கருதி வாழ்ந்த முஸ்லீம் இனத்துடனும் மோத வேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் மிக சாதுரியமாக …
-
- 0 replies
- 448 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் போன 158 பேரின் நினைவு தின நிகழ்வுகள் நாளை நடைபெறவுள்ளன. இந்நிலையில், இதனை அனுஷ்டிப்பதற்கு கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி தர மறுத்து விட்டதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன், கடந்த நினைவு தினத்தை கூட வீதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் விளக்கு வைத்தே அனுஷ்டித்ததாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு அமைவாக இம்முறையாவது கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி தரப்படவேண்டும். அத்துடன், அதற்கான நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கும் இடம் ஒதுக்கித்தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை காணாமல்…
-
- 0 replies
- 301 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.குருணாகல் மாளிகாகந்த மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து முன்னோக்கி நகர்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் முதல் வேட்டு குருணாகலில் தீர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.மீளவும் சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் எண்ணத்திலேயே தாம் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.புறச் சக்திகளின் அழுத்தங்களுக்கு தாம் அடி பணியப்போ…
-
- 0 replies
- 293 views
-
-
வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை நபரொருவர் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணப் பண்ணை பாலத்தடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.இதில் நல்லூர் அரசடியைச் சேர்ந்த சிவபாலன் அபின் (வயது 24) என்ற இளைஞனே படுகாயமடைந்தவராவார். இது தொடர்பாக தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த இனந்தெரியாத ஒருவர் அவரது கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்.இதில் படுகாயமடைந்த பிரஸ்தாப இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ்ஸில் முறையிட்டதனை தொடர்ந்து பொ…
-
- 0 replies
- 330 views
-