Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. eral 2009 மேயில் முடிவுக்கு வந்த முப்பது வருட கால யுத்தத்தின் போது இருந்ததிலும் பார்க்க யாழ்ப்பாணம் இன்று பாரிய மாற்றத்தைக் கண்டிருக்கின்றது. யுத்த காலத்தில் கூரைகள் அற்ற வீடுகள், ஷெல் துவாரங்களுடனான சுவர்கள், குன்றும் குழியுமான வீதிகளுடன் காணப்பட்ட அந்தப் பிரதேசம் இப்போது பகட்டான கட்டிடங்களுடனும் பொருட்கள் நிறைந்த கடைகளுடனும் ஹோட்டல்களுடனும் காபெட் போடப்பட்ட வீதிகளுடனும் காட்சி தருகின்றது. ஆனால் இந்தப் பிரகாசமான வெளிப்புறத் தோற்றம் வெளியிலிருந்து வந்த பணத்தின் மூலமே தோற்றுவிக்கப்பட்டிருப்பதுடன் இதற்குள் முடக்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரம் ஒளிந்திருக்கின்றது. வட மாகாண சபை பொருளாதார அபிவிருத்தியிலும் பார்க்க தீவிரவாத அரசியலில் அதிக ஆர்வத்தைக் கொண்டிருப்ப…

  2. ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய 17 வயது மாணவனின் நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய 17 வயதுடைய பாடசாலை மாணவனை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப்பிரிவினர் இன்று (29) கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவன் கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்தவரென குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். ஜனாதிபதியின் இணையத்தளம் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மாணவனிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், மாணவனை நாளை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். http://www.vi…

  3. பிரசாந்தனுக்கும் அவரது சகோதரருக்கும் பிணை -எம்.எஸ்.எம்.நூர்தீன் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனுக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனுக்கும் பிணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இ…

  4. கொழும்பு துறைமுகத்தில் தீ : தீயணைப்பு படையினர் விரைவு கொழும்பு துறைமுக பகுதியில் தீடீரென தீ பரவியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். துறைமுகத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள இறங்கு துறைக்கு அருகிலுள்ள இறப்பர் தொகுதியில் திடீரென தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவளை, தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியப்படாத போதிலும் தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/10753 கொழும்பு துறைமுகத்தில் தீ 29-08-2016 02:02 PM Comments - 0 Views - 67 …

  5. மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை-ஐ.நா.செயலர் கோரிக்கை கடந்தகால மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்து நம்பகத்தன்மை மிக்க பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பது உண்மையை கண்டுபிடித்து குற்றவாளிகளை பொறுப்பாளிகளாக்குவது இலங்கை சமூகத்திற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகவும் முக்கியமானது என ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கைக்கான விஜயத்தின் முன்னதாக கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் தீர்மானம் குறி த்து அர்ப்பணிப்புடன் விளங்கும், அதனை நடைமுறைப்படுத்தும், என எதிர்பா ர்க்கிறேன் எனவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய…

  6. 1937ஆம் ஆண்டு ஆனையிறவில் ஆரம்பிக்கப்பட்ட உப்பளமானது தொடர்ந்து செயற்பட்டவேளையில் கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தத்தினால் செயலிழந்த நிலையில், இன்று மீண்டும் ஆனையிறவு உப்பளத்தில் உப்பு அறுவடை வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு மக்களுக்கு புதிய வாழ்வாதாரத்திற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 100 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் உப்பு அறுவடை ஆரம்பித்துள்ளதுடன், உப்பளத்திற்கான கட்டடத் தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன், மற்றும் கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கல…

    • 0 replies
    • 500 views
  7. அமிர்தலிங்கம் அவர்களின் துரதிர்ஸ்ட வசமான அகால மரணம், நல்லதொரு தலைவனை எடுத்துச் சென்றுவிட்டது: 27 ஆகஸ்ட் 2016 அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரையில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்:- அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் 89வது பிறந்தநாள் நினைவுப் பேருரை யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடம் 27.08.2016 சனிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் பிரதம விருந்தினர் உரை குருர் ப்ரம்மா...................... தலைவரவர்களே, விசேட அதிதிகளே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே, அரசியல் பிரமுகர்களே, அரசியல் தொண்டர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, இன்றையதினம் தமிழரசு…

  8. 50 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து 50 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கேரள கஞ்சாவினை கொண்டு கடத்திச் செல்ல பயன்படுத்திய படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/10739

  9. எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளை தமிழ் பாடசாலை அமைக்கப்படும் எத்தனை தடைகள் வந்தாலும் வத்தளையில் தமிழ் பாடசாலை அமைக்கப்படும். அத்திட்டம் கைவிடப்பட மாட்டாது என உறுதியுடன் தெரிவித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க தேசிய நல்லிணக்கமே அரசின் இலக்கு. அதனை சீர்குலைக்க இடமளிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார். வத்தளை ஒலியமுல்லையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வத்தளை தமிழ் பாடசாலை அமைப்பது நிச்சயமாகும். எத…

  10. கூட்டமைப்புடனான பான் கீ மூனின் சந்திப்பு மிகவும் முக்கியமானது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது விஜயம் நாட்டின் மீதான சர்வதேச அழுத்தங்களுடன் எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது…

  11. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்களை நேரடியாக பார்வையிடுவார் பான் கீமூன் அமைச்சர் மங்கள தெரிவிப்பு 2நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம்மாதம் 31ஆம் திகதி இலங்கை க்கு வருகை தரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீமூன் இலங்கைக்குள் உருவா க்கப்பட்டிருக்கும் பாரியளவிலான மாற்றங்களை அவருடைய கண்களாலேயே பார்ப்பார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்து ள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் வலி,வடக்கில் காணி இல்லாத மக்களுக்கு கீரிமலை பகுதியில் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளையும், வீட்டுதிட்டத்தையும் பார்வை யிட்ட துடன், மல்லாகம்- கோணப்புலம் நலன்புரி நிலையத்திற்கும் விஜயம் ம…

    • 2 replies
    • 287 views
  12. விஷ ஊஷி விவகாரம்; வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து மோதல் விஷ ஊஷி விவகாரம் வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து மோதல் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊஷி ஏற்றப்பட்டதாக சிலர் கூறுவது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் தாம் பிரபல்யம் அடைவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதாக வேறு சில உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக சர்வதேச வைத்தியர்கள் குழு அவசியம் என்று கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இந…

    • 11 replies
    • 1.1k views
  13. எதிர்க்கட்சியின் கடமையிலிருந்து தவறிவிட்டது கூட்டமைப்பு-ஜே.வி.பி குற்றச்சாட்டு எதிர்க்கட்சியின் கடமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாக முன்னெடுக்கத் தவறி விட்டதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்திருந்த அவர், கட்சி அலுவ லகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கை யிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ”வட மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாதுள்ளதோ, அதேபோன்றே நாடாளுமன்றத்திலும் கூட்டமைப்…

  14. சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி என்னிடமிருந்து பதவி பறிக்கப்பட்டது – மஹிந்த ராஜபக்ஸ: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு வரையில் தாம் கட்சியின் தலைவராக கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி தேர்தலி;ல் தோல்வியைத் தழுவியதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தமது பதவியை பறித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியின் தலைமைப் பொறுப்பினை தாம் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சீர்குலைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தாம் இரண்டு தடவ…

  15. திருக்கோவில் சாகாமம் பிரதேசத்துக்குள் நுழைந்த 40 காட்டு யானைகள் அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாகாமம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் படையெடுத்து வந்தன. இதன்காரணமாக அந்தப் பிரதேச மகக்ள் அச்ச நிலைக்கு உள்ளாகினர். இது தொடர்பில் திருக்கோவில் பிரதேச வன ஜீவராசிகள் அலுவலக பொறுப்பாளர் டி.ஜெகதீஸனிடம் கேட்டபோது தற்போது யானை வேலி அமைக்கும் பணிகள் தாண்டியடி பிரதேசத்தில் நடைபெறுவதாகவும் அந்தப் பணிகள் இரண்டு மாதங்களில் பூர்த்தியடையும் எனவும் அதுவரைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். - See more at: ht…

    • 4 replies
    • 917 views
  16. வெளிநாட்டு அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவவேண்டும்-முதல்வர் விக்கி கோரிக்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவி னால், அங்குள்ள மக்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள க்கூடியதாக இருக்குமென்றும் இதுகுறித்து துறைசார் அமைச்சர் கவ ன த்திற்கொள்ள வேண்டுமெனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னே ஸ்வரன் கோரிக்கையொன்றை முன்வைத்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்ட, ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கான தேவைகளை உடைய பொதுமக்களுக்கான ஆலோச னைகளும் வழிகாட்டுதலுக்குமான நடமாடும் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழ மை) நல்லூரில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே முதலமைச்சர் இவ்வ…

  17. கலவரங்களின் பின்னணியில் செயற்பட்ட அரசு கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களின்போது அப்போது இருந்த அரசாங்கங்கள் அதனை தடுக்காமல் அதற்கு பின்னணியாக இருந்து செயற்பட்டுள்ளன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பினூடாக அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு அளுத்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக புத்திஜீவிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/10727

  18. நாளை வருகிறது அமெரிக்க கப்பல் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான, யூஎஸ்எஸ் பிராங் கேபிள் (ஏஎஸ்-40) கப்பல், நாளை திங்கட்கிழமை (29) கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காகவும் சாதாரண துறைமுக விஜயத்துக்காகவுமே கப்பல் வரவுள்ளது. குறித்த கப்பலானது, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவுகளில் நிலைநிறுத்தப்பட்டு, இந்து.ஆசிய-பசுபிக் வலயத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கப்பலாகும். - See more at: http://www.tamilmirror.lk/180595/ந-ள-வர-க-றத-அம-ர-க-க-கப-பல-#sthash.mLqUlrpD.dpuf

  19. "நமது கிராமம் நமது மக்கள் "புகைப்படக்கண்காட்சி "நமது கிராமம் நமது மக்கள் " எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலு க்கான புகைப்படக்கண்காட்சி இன்று ஞயிற்றுக்கிழமை காலை 10.00மணி யள வில் நாவலர் கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமானது யோ.ஜெஸ்டின் தலைமையில் நடந்த நிகழ்வில் புகைப்படக்கண்காட்சியை அருட்தந்தை டேமிட் ஆரம்பித்து வைத்தார் இங்கு கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் நீர் மாசடைதல் பற்றியும் கலந்தாலோசித்ததாக எற்பாட்டளர்கள் தெரிவித்தனர். இப் புகைப்படக்கண்காட்சி தொடர்ந்து நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது http://onlineuthayan.com/news/16843

  20. விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிட உரிமையாளர்கள் சென்றனர் யாழ்.வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள காணிகளை அடையாளப்படுத்துவதற்காக, அதன் உரிமையாளர்கள் இன்றைய தினம் அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 26 வருடங்களுக்கு மேல் இராணுவத்தினரின் பிடியில் காணப்படும் வலி வடக்கின் 233, 234, 235, 236 மற்றும் 250 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 460 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக அண்மையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலையடுத்து, இராணுவத்தின ரால் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர…

  21. எமது நிலமே எமக்கு வேண்டும்-மயிலிட்டி மக்கள் அமைச்சர் மங்களவிடம் எடுத்துரைப்பு எங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம். எங்கள் சொந்த நிலங்கள் மட்டுமே வேண்டும். எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நில மீட்புக்கான அந்தப் போராட்டத்தில் உயிரை விடவும் நாங்கள் தயாராக உள்ளோம் என மல்லாகம்-கோணப்புலம் நலன்புரி முகாமில் தங்கியிருக்கும் மயிலிட்டி மக்கள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நேற்று தெரிவித்துள்ளனர். எங்கள் நிலங்களை இனியும் விட மறுத்தால் பாராளுமன்றம் முன்பாகவும் வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்களை நடத்துவோம் எனவும் அந்த மக்கள் கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 326 views
  22. வடக்கில் புத்தர்சிலை அமைப்பு,சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளிப்பு வடக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும்,இது தொடர்பில் துரித மான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட ப்பட்டு ள்ளது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் …

    • 1 reply
    • 407 views
  23. யாழ் - கொழும்பு : ஆசனப் பதிவுகள் நிறைவு யாழிலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளில் இம் மாத ஆசனப் பதிவுகள் யாவும் பூர்த்தியாகி உள்ளதாக ஆசனப் பதிவுகளுக்கு பொறுப்பாக உள்ள ஒருவர் தெரிவித்தார். இதுபற்றி மேலும் அவர் தெரிவிக்கையில், யாழப்பாணத்தில் தற்போது நல்லுர் திருவிழா ஆரம்பித்திருப்பதால், வெளிநாட்டவர்கள் மற்றும் அதிகமான புலம்பெயர் தமிழர்களின் வருகையாலும் யாழிலிருந்து கொழும்பு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறைக் காலமாக இருப்பதால் வெளிநாட்டவர்களும் , நம்மவர்களும் சுற்றுலா செல்வது வழமையாகி விட்டது. …

  24. பௌத்­த­ வி­காரை விவ­காரம் தொடர்பில் பிர­த­ம­ருடன் அடுத்த வாரம் கலந்­து­ரை­யாடல் தமிழர் தாயக பிர­தே­சங்­களில் கட்­டப்­பட்டு வரும் பௌத்த விகா­ரைகள், குடி­யேற்­றங்கள், மீள்­கு­டி­யேற்­றங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் பிர­த­ம­ருடன் அவ­சர கலந்­து­ரை­யாடல் ஒன்றில் அடுத்த வாரம் ஈடு­ப­ட­வுள்­ள­துடன் மேற்­கண்ட பிரச்­சி­னை­க­ளுக்குத் தெளி­வான முடிவு எட்­டப்­படும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­துள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில் அவர் தெரி­வித்­த­தா­வது, வடக்கு கிழக்கு உள்­ளிட்ட தமிழர் தாயகப் பிர­தே­சங்­களில் பெளத்த மேலா­திக்க சிந்­த­னையில் …

  25. மரணச்சான்றிதழ் பெற்ற 7200 குடும்பங்களும் காணமல்போனோர் சான்றிதழை பெறமுடியும் தமது உறவுகளைத் தொலைத்த 7200 குடும்பங்கள் மரணச்சான்றிதழைப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவருக்கும் காணமல்போனேர் சான்றிதழைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள். அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகளும் உள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இவ்விடயம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத்தில் இறப்புக்களின் பதிவு(தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்த) சட்டமூலம் கடந்த வியாழக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திருத்தச்சட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முக்கிய திருத்தமொன்று கொண்டுவரப்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.