Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினர் விடுதலை நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பது குறித்து எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. அதன் பிரகாரம் சிறு சிறு குற்றசாட்டுக்களை கொண்ட சந்தேக நபர்கள்,இதுவரையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாது சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு விடுதலை அளிப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விஷேட கலந்துரையாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றிருந்தது. இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,நீதி அமைச்சர் விஜ…

  2. யாழ்ப்பாணம் - ஹம்பாந்தோட்டை இடையே நல்லிணக்க நடைப்பயணம் நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு நடைப்பயண பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பேரணிக்கான ஏற்பாட்டை இலங்கை மனித உரிமைகள் இயக்கம் செய்திருக்கின்றது. இரண்டாவது நாளாகிய இன்று இந்தப் பேரணி வவுனியாவை வந்தடைந்தபோது, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் அதனை வரவேற்றனர். மோசமான யுத்தத்திற்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்டுள்ள வட பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளை பேண வேண்டியது அவசியம் என்பதையும் இந்தப் பேரணி வலியுறுத்துவதாக மனித உரிமைகள் இயக்கத்தின் பொதுச் செயலர் ஜயந்த கலு…

  3. மாற்றுத் திறனாளிகளின் தேவையை `மறந்த' வீடுகள் இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் வழங்கப்படுகின்ற வீடுகளில் தங்களின் தேவைகள் பற்றி கவனம் செலுத்தப்படுவதில்லை என போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். போருக்குப் பின்னர் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற அமைப்புகளினாலும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர இந்தியா மற்றும் ஐரோப்பிய யுனியன் உதவி வீடுகளும் அரசாங்கத்தின் தெரிவு ஊடாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிடைத்துள்ளன. இந்த வீடுகளை பொறுத்தவரை கழிப்பறை,…

  4. சி.வி.க்கும் சி.வி.கே.வுக்கும் கொழுவல் எம்.றொசாந்த் 'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கொழுவல் இருப்பது உண்மை' என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று வியாழக்கிழமை (25) கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'எனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் ஏற்பட்டு, அதனால் கொழுவல் ஏற்பட்டது உண்மை. அதனை நான் மறைக்க விரும்பவில்லை. அதனை இந்த உயரிய சபையில் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/180504/ச-வ-க-க-ம-ச-வ-க-வ-க-க-ம-க-ழ-வல-#…

  5. த.தே.கூ. எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் முறைப்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றமையால் குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்படவுள்ளது. முறைப்பாட்டினை வெளிநாடுகளில் உள்ள இலங்கை வாழ் அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லிணக்க பொறிமுறைகளை மீறும் வகையில் செயற்படுவதாக கூறியே குறித்த முறைப்பாடு ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட்ராட் அல் ஹுசைனிடம் தெரிவிக்கப்படவுள்ளது. http://www.v…

  6. இரணைமடு புத்த விகாரை சிங்களக் குடியேற்றத்திற்கான திட்டம்! பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி!! கிளிநொச்சியின் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்படும் புத்த விகாரை திட்டமிட்ட குடியேற்றத்தை நோக்கமாக கொண்டது என்று கூறும் பெயர் குறிப்பிட விரும்பாத கிளிநொச்சி இராணுவ அதிகாரி ஒருவர், இதுவே தமிழ் - சிங்கள மக்களிடையே பாரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும் விளைவை கொண்டது என்று தாம் கருதுவதாகவும் குறிப்பிடுகிறார். கிளிநொச்சியின் இரணைமடு மற்றும் முறிகண்டியை அண்டிய பகுதியில் திட்டமிட்ட குடியேற்றம் ஒன்றை அமைக்கும் நோக்கத்திற்கான விதைகளை பரப்பும் முயற்சியை முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்…

    • 1 reply
    • 452 views
  7. முள்ளிவாய்க்கால் கிழக்கை மீண்டும் சுவீகரிக்க 1ஆம் திகதி காணி அளவீடு! உரிமை கோருபவர்கள் ஆவணங்களுடன் வருமாறு அழைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதியில் கோத்தபாய கடற்படை முகாம் என்ற பெயரில் இலங்கை கடற்படை தளம் அமைத்துள்ள பகுதி உள்ளிட்ட 617 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் மீண்டும் நில அளவை இடம்பெறவுள்ளதாக பிரதேச நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவித்தல் முள்ளிவாய்க்கால் கிழக்கில் ஒட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது விண்ணப்பத்திற்கு இணங்க, காணி சுவீகரிப்பு அதிகாரியின் கேட்டளையின் பிரகாரம் இந்த நில அளவை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகலில் தற்ப…

  8. யாழில் முஸ்லீம் மக்கள் போராட்டம் யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை(27) காலை 9 மணியளவில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப்பகுதியில் ஒன்று கூடிய முஸ்லீம் மக்கள் பல்வேறு சுலோகங்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் செயற்பாட்டிற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். இதன் போது கடந்த 7 வருடங்களாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கிதாக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இந்த போராட்டத்தை மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தது. இந்த போராட்டத்தின் போது கலந்து கொண்டவர்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினரின் செய…

  9. புத்தளத்தில் யானை தாக்கி யாழ்.வாசி மரணம் -கனடா செல்லசென்றவேளை துயரம் புத்தளம் - அநுராதபுரம் கருவலகஸ்வெவ பகுதியில் காட்டுயானை தாக்கி ஒரு வர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ள னர். கனடா செல்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த வான் மீதே காட்டு யானை தாக்கியுள்ளது. இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்து ள்ளதுடன் காயமடைந்தவர்களில் இரு பெண்களும் 08 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்க ப்பட்டுள்ளனர் http://onlineuthayan.com/news/1…

  10. முதல்வர் விக்கியை சந்திக்கார் பான் கீ மூன் தனது இலங்கை விஜயத்தின்போது ஐ.நா பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் வட மாகாண முதலமைச்சரைச் சந்திக்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா.செயலாளர் சந்திக்கும் இலங்கை அதிகாரிகளின் பட்டியலில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பெயர் உள்ளடங்கவில்லை என்றும் வடமாகாண ஆளுநர் கூரே, கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி சிறிசேனவை பொதுச்செயலாளர் செப்டெம்பர் முதலாந் திகதி சந்திக்கின்றார். அடுத்த நாள் அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதுடன் மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் பார்வையிடவுள்ளார். htt…

  11. மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு மிக அண்மையிலுள்ள தமிழருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படுகின்றதா எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிப்பதற்கு இருவார கால அவகாசத்தை புத்தசாசன அமைச்சு கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போது, கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதனே நீதி அமைச்சரிடம் மேற்படி வினாவைத் தொடுத்திருந்தார். "மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரம் கோவில் இந்து மக்களின் புனித வழிபாட்டுத் தலமாகும் என்பதையும், இந்தக் கோவிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கணபதிப்பிள்ளை விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான காணியில் ச…

    • 0 replies
    • 379 views
  12. இலங்கையில் தமிழருக்கெதிரான அநீதிகள் தொடர்கின்றன-ஐ.நா இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவ தாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து வருவதாகவும் இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரி வித்துள்ளது. ஐ.நா. சபையில் நடைபெற்று முடிந்த இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விட யம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் நிறைவடைந்து சமாதானம் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அநீதியை எத…

  13. முன்னாள் போராளிகளுக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங்கப்பட உள்ளது தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சலுகை அடிப்படையில் கடன் வழங்கப்பட உள்ளது. சுய தொழில் முயற்சிகளுக்காக முன்னாள் பேராளிகளுக்கு இவ்வாறு கடன் வழங்கப்பட உள்ளது. குறைந்த வட்டியின் அடிப்படையில் இவ்வர்று முன்னாள் போராளிகளுக்கு கடன் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 12000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135288/l…

  14. யாழில் அரியவகை வெள்ளை நாகம் (ஆர்.வி.கே.) யாழ் போலிகண்டி கிழக்கு பகுதியில் அரிய வகையிலான 6 அடி நீளமான வெள்ளை நாகம் ஒன்று பிடிபட்டுள்ளது. பொலி கண்டி கந்தவன கோவில் ஆதீன கர்த்தாவான செவாலியர் சிவஜோகநாயகி இராமநாதன் அவர்களது தோட்ட கிணற்றிலிருந்தே அரிய வகையிலான வெள்ளை நாகம் ஒன்று இன்று பிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றில் இருந்த பாம்பினை அப்பகுதி மக்கள் மீட்டு யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பகுதியில் கொண்டு சென்றுவிட்டுள்ளனர். சுமார் ஐந்தரை தொடக்கம் ஆறு அடி வரையிலான நீளம் கொண்டதாக இந்த வெள்ளை நாகம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/ar…

  15. பலாலி புனித ஆரோக்கிய மாதா தேவாலய வருடாந்த உற்சவத்தைக் கொண்டாட அனுமதி! யாழ்ப்பாணம், பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தைக் கொண்டாட, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 26 வருடங்களுக்கு மேலாக, அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து, பல்வேறு பிரதேசங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பலாலி வடக்கு ஜே-254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1,500 குடும்பங்கள், இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவர். புனித ஆரோக்கிய மாதா தேவாலய வருடாந்தத் திருவிழா, இம்மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி, திருவிழா தி…

  16. கடத்தப்பட்ட மாணவியை விடுவிக்க ரூபா 75இலட்சம் கப்பம் கோரல்! கடத்தப்பட்டு காணாமற் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். உடுவில் வீதி மானிப்பாயை சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சும்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பம்பலப்பிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி கடந்த 23 ஆம் திகதி காணாமற் போயுள்ளார்…

  17. தமிழ் அரசியல் கைதிகளின் விரக்தி நிலைக்கு அரசாங்கமே காரணம் தமிழ் அரசியல் கைதிகள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு அரசாங்கமே காரணம் என அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாது நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்ப ட்டுள்மையினாலேயே அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இராசையா ஆனந்தராஜா என்ற தமிழ் அரசியல் கைதி மருத்துவ சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து நேற்று முன்தினம் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  18. சுன்னாகம் பொலிஸ் நிலைய கொலை வழக்கு எட்டு பொலிஸாரை கைது செய்ய உத்தரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொட ர்பாக குற்றம் சாட்டப்பட்ட 8 பொலிஸாரை கைது செய்து, வழக்கு தொடர சட்டா மா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது. யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பிர தான பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் இதனை கூறியுள்ளார். யாழ். புன்னாலைகட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பான வழ…

  19. வடக்கு,தெற்கு மக்கள் நல்லவர்கள் அரசியல்தான் கெட்டது-என்கிறார் ஆளுனர் குரே பௌத்த விகாரைக்குள் எல்லா கடவுளும் ஒன்றாக இருக்கின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள மக்கள் ஏன் ஒன்றாக இருக்க முடியாது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேள்வியெழுப்பியுள்ளார். பௌத்த விகாரைக்குள் கணபதி, விஷ்ணு போன்ற இந்துக் கடவுள்கள் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விகாரைக்கு வழிபாட்டிற்கு செல்பவர்களே இனவாத சண்டை பிடிக்கின்றா ர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் கனகபுரம் பகுதியில் நீண்ட காலத்திற்கு முன்னர், கட்டி முடிக்கப்பட…

  20. ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில், நீதிமன்ற வளாகத்தினுள் செயற்பட்ட புலனாய்வாளர்கள் யாழில் நீதிமன்றில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து அச்சுறுத்தும் வகையில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் செயற்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் துன்புறுத்தப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யபப்ட்டார். படுகொலை செய்யப்பட்ட இளைஞரை கிளிநொச்சி இரணைமடுக் குளத்தினுள் வீசி , குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். பொலிசார் தெரிவித்து இருந்த நிலையில் , குறித்த இளைஞரோடு கைது செய்யப்பட்ட ஏனைய இளைஞர்களின் சாட்சியங்கள் மூலம் இளைஞர் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்தது. அதனை அடுத்து …

  21. சி.வி.யும், மாகாண சபையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனும் வடமாகாண சபையும் அரசாங்கதின் செயற்பாடுகளுக்கு இடையூறாக செயற்படுகின்றது. அரசாங்கதின் ஜனநாயக செயற்பாடுகளை தடுக்கின்றனர். இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் இலங்கை வருகை என்ன அடிப்படியில் அமைந்துள்ளது. இவர் வருவதன் பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த விட…

  22. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பௌத்தமதம் பரப்பப்படுகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2009 ற்கு பின்னபின்னரான காலப்பகுதியில் இருந்து படிப்படியாக மாணவர் உள்ளீர்ப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இன்று மிக பெரிதாக வியாபித்து சிங்களதேச பல்கலைக்கழகம் ஒன்றுக்கு ஒப்பான மாணவர் எண்ணிக்கையை கொண்ட பல்கலைக்கழகம் ஒன்றாக மாற்றம் பெற்றுவிட்டது. சிங்கள தேசம் ஒன்றின் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் எந்தளவு விகிதாசாரத்தில் உள்ளீர்க்கப்படுகிறார்களோ,அதே நடைமுறை பின்பற்றப்படும் பல்கலைக்கழகம் ஒன்றாக தமிழர்தேச பல்கலைக்கழகம் மாற்றமடைந்துவிட்டது. தற்போது கிழக்குப் பலகலைக்கழகத்தில் காணப்படும் அனைத்து பீடங்களிலும் மிக அதிகமான சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப் பட்டிருப்பதுடன் கலைப்ப…

  23. காணாமால் போனவர்களின் உறவுகளுக்காக வடமாகாண சங்கம் ஒன்றை உருவாக்க தீர்மானம்: வடமாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளுக்காக வடமாகாண சங்கம் ஒன்றை அமைக்க மூன்றுபேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், நீர்ப்பாசன துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபையின் உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் அடங்குகின்றனர். காணாமல் போனவர்கள் தொடர்பாக வடமாகாண சபையின் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகிய என்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர்கள் தலைமையில் ந…

  24.  “முல்லை., கிளி. விகாரைகளை சுவாமிநாதன் அகற்றுவாரா?” -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் விகாரைகளை தடுத்து நிறுத்த, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் அகற்ற முடியாது. எனினும், புதிதாக அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் தொடர்பில் தனக்கு அல்லது அரசாங்கத்துக்கு முறையிட்டால், நடவடிக்கை எடுப்…

  25. யாழ். பிரதான சந்திகளில் புதிதாக ஒளிரும் சமிக்ஞை விளக்குகள் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் நகரப்பகுதிகளில், வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், வீதி ஒழுங்குமுறைகளை சரியாகப் பேணி, வீதிப் போக்குவரத்தை இலகுபடுத்தி, விபத்துக்களை தவிர்க்கும் நோக்குடன், வீதி அதிகார சபையினால் யாழ். பிரதான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் தற்போது வாகன கொள்வனவுகளும் அதனை பாவனையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்துக் காணப்படும் வாகனங்களுக்கு ஏற்ப, வீதிகளின் அகலம் போதுமானதாக இல்லை இதனால் யாழ். நகரம் முழுவதும் வாகன நெரிசலால் தினமும் போக்குவரத்து சீரற்று காணப்படுகிறது. ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.