ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள காணாமல்போனோரின் உறவினர்கள் குறித்த அலுவலகத்தினால் தமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்ற நிலையிலேயே உள்ளதாக அலுவலகம் உட்பட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பிலான மக்களின் கருத்துக்களை அறிந்த அரசாங்கத்தின் விசேட செயலணி தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அரசாங்கம் தமக்குரிய பொறுப்பை உதாசீனம் செய்தமையே இந்த நிலமைக்குப் பிரதான காரணம் என்றும் குறித்த செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முது்தெட்டுவேகம தலைமையிலான 11பேர் அடங்கிய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கப் பொ…
-
- 1 reply
- 384 views
-
-
இணையத்தின் வடிவமைப்பாளராக 9 வயது சிறுமி சாதனை இணையத்தளம் ஒன்றை வடிமைத்து இந் நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ளார் ஒன்பது வயது சிறுமி. கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேசக் கல்லூரியில் கல்வி பயிலும் வஷினியா பிரேமானந்தஎன்ற சிறுமியே இச் சாதனையை செய்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவால் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக டீஊளு பட்டம் வழங்கப்பட்டது. தனது 11வது வயதில் இப் பட்டத்தை இச் சிறுமி பூர்த்தி செயதுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/16641
-
- 1 reply
- 707 views
-
-
உடலில் குண்டுத் துகள்களுடன் 410 பேர் விபரங்களை சபையில் சமர்ப்பித்தது கூட்டமைப்பு உடலில் குண்டுத்துகள்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.மற்றும் வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்து வரும் 410 பேரின் பெயர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் சமர்ப்பித்தது. இந்தப் பட்டியலில் 132 பேர் பாடசாலை மாணவர்களாக உள்ளதாகவும் கூட்டமைப்பு சபையில் சுட்டிக்காட்டியுள்ளது. யுத்தத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் இவ்வாறு ஆபத்தான நிலையில் பலர் காணப்படுகின்ற நிலையில் அவர்களது விபரங்களை வழங்குவதற்கு அந்தந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் இழுத்தடிப்ப…
-
- 1 reply
- 308 views
-
-
திருகோணமலைக் கடலில் இராணுவம் ஆயுதங்கள் புதைப்பு : பொ.ஐங்கரநேசன் திருகோணமலைக் கடலில் இராணுவம் ஆயுதங்களை ஆழ புதைத்து வைத்துள்ளார்கள் என்ற இரகசிய தகவல் தற்போது கசிந்துள்ளதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற, கடற்தொழிலின்போது கடலில் மரணமடைந்த மீனவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், போருக்கு முன்னரான காலப்பகுதியில் ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் வடக்கு மாகாண மீன்பிடித் துறை காத்திரமான பங்களிப்பை வழங்கி இருந்தாலும், போர் அதனை நிர்மூல…
-
- 0 replies
- 462 views
-
-
யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொறுப்புக் கூறலுடனான மன்னிப்பு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களுக்கு பொறுப்புக் கூரறுதலுடனான மன்னிப்பு வழங்குவதை ஏற்க முடியாதென்றும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படும் பட்சத்தில அவர்களுக்கு பொறுப்புக் கூறலுடனான மன்னிப்பை வழங்கலாம் என, மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, தமது இறுதி இடைக்கால அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை வன…
-
- 0 replies
- 270 views
-
-
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சில போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அங்கு வருகை தந்தபோராளிகளே காத்திருந்துவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளனர். …
-
- 7 replies
- 479 views
- 1 follower
-
-
வடக்கில் வேலைவாய்ப்புக்களை வழங்குதல், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்றனவே முதலீட்டாளர் சம்மேளனத்தின் நோக்கமென ஆளுநர் ரெஜிட் கூரே தெரிவித்துள்ளார். வடக்கின் முக்கிய பிரச்சனையாகக் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக தொழில் முயற்சிகளை உருவாக்கி வடமாகாணத்திற்கு பொருத்தமான முதலீட்டுத் துறைகளுடன் முதலீட்டாளர்களை இணைக்கும் நோக்குடன் முதலீட்டாளர்கள் சம்மேளன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் உட்கட்டுமாண வளர்ச்சிகள் கடந்த கால அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் அதனை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையிருப்பதாகவும் குறிப்பிட்டார். முதலீட்டாளர் சம்மேளனம் தொடர்பான சகல தகவல்…
-
- 7 replies
- 492 views
-
-
கொழும்பில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தித் தேவைகளின் கணிப்பு பற்றிய கூட்டம்:- திரு.பாஸ்கரலிங்கம் தலைமையில் வடமாகாண முதலமைச்சரின் உரை:- பங்குபற்றியோர் : உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயல்திட்ட நிறுவனம் ஆகியோருடன் வடமாகாண முதலமைச்சர், அந்நிய வளத் திணைக்களம், சந்திரிகாவின் செயலணியின் செயலாளர் போன்றோரும் முதலில் முதலமைச்சரை, தமது கருத்துக்களை கூறுமாறு வேண்டப்பட்டது. முதலமைச்சர் பின்வருவனவற்றை முன்வைத்தார். 2003ல் ஒரு தேவைகள் கணிப்பு நடைபெற்றது. பின்னர் 2004ல் சுனாமியும் 2009ல் போரின் முடிவுக்கட்டமும் பல விதமான பாதிப்புக்களையும் அழிவுகளையும் கொண்டு வந்தன. எனவே புதியதொரு கணிப்பு ந…
-
- 0 replies
- 298 views
-
-
பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் குறித்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள மாணவர்களிடமும் பேராதனை பல்கலையின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் மற்றும் இரண்டாம்…
-
- 0 replies
- 328 views
-
-
நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை 'நிலையான சமாதானம் உருவாகப்போவதில்லை' எஸ்.என்.நிபோஜன் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை, தமிழர் வரலாற்றில் நிலையான சமாதானம் உருவாகப் போவதில்லை என, மதுரையில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கத்தின் 4ஆவது நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டாகத் தெரிவித்தனர். இந்தியாவின் மதுரை நகரிலுள்ள பில்லர் மையத்தில் இடம்பெற்ற அந்நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் க…
-
- 0 replies
- 178 views
-
-
விமானம் தாமதமான விவகாரம்: பயணிகளுக்கு ரூ. 26 மில். நட்டஈடு ஜேர்மனியின் ப்ராங்போர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கா நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானம், குறிப்பிட்ட நேரத்தை விட 15 மணித்தியாலங்கள் தாமதித்துப் பயணித்ததால், அவ்விமானத்தில் பயணித்த 259 பயணிகளுக்கு, 260 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை நட்டஈடாக வழங்க வேண்டிய சூழ்நிலை, குறித்த விமானசேவை நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானத்தின் விமானி, போதையில் இருந்தமையாலேயே, அவ்விமானம் தாமதமாகியுள்ளது. இந்நிலையில், குறித்த விமானியின் சேவையை, உடனடியாக இடைநிறுத்தவேண்டிய தேவை, விமானச் சேவை நிறுவனத்துக்கு…
-
- 0 replies
- 321 views
-
-
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து கடந்த 11ஆம் திகதி தப்பிச்சென்ற நரியென்று அழைக்கப்படும் குணசேன இன்று காலை கைது செய்யப்பட்டார். திராய்மடு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நரி என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அன்று இரவு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு திராய்மடு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந…
-
- 0 replies
- 516 views
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய 65 ஆவது ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு யாழ் குடாநாடும் தயாராகி வருகின்றது. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு ஸ்தாபித்து இன்று பெரு விருட்சம்போல எழுச்சியடைந்திருக்கும் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய 65 ஆவது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன என தலைவர்கள் பலரை உருவாக்கிய இக்கட்சி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் ஸ்தா…
-
- 0 replies
- 438 views
-
-
முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற 09 ஆவது பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, எமது பாதுகாப்புப் படையின் கௌரவத்தையு…
-
- 2 replies
- 480 views
-
-
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பிரதேசத்தின் சில பகுதிகளை விடுவிக்கப் பலாலி இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மயிலிட்டிப் பிரதேச மக்களுக்கு உறுதியளித்துள்ளார் என தெரியவருகின்றது. பலாலி இராணுவத் தளபதி தலைமையிலான குழுவினருக்கும்இ மயிலிட்டிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் சில முகாம்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குமிடையிலான இரகசிய முக்கிய சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. முற்பகல்-11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்ட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நமபகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பில் மயிலிட்டிக் கடற்தொழிலாளர் கூட…
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கையின் பொருளாதாரத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் , வடக்கு மாகாணம் மொத்த தேசிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை முதலீட்டாளர்கள் சம்மேளன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு மத்தியிலும், சீனாவின் பொருளாதார மையங்கள் ஜரோப்பிய ஆசியப் பொருளாதார மையங்களுக்கு இடையில் இலங்கையின் பொருளாதாரம் பல சவால்களை எதிர்நோக்குவதாக அவர் கூறினார். தாழ் நிலை வருமானத்தில் மட்ட நிலையில் இருந்த இ…
-
- 0 replies
- 394 views
-
-
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியினை நில அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இன்று(23) செவ்வாய்க்கிழமை பள்ளிமுனை கிராம மக்களின் ஒருமித்த எதிர்ப்பின் மத்தியில் கைவிடப்பட்டுள்ளது. நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று(23) செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியை அளவீடு செய்து வைப்பதற்காக வருகை தந்த போது கிராம மக்கள் குறித்த அதிகாரிகளை கடற்படையினர் நிலை கொண்டுள்ள குறித்த 25 வீட்டுத்திட்ட காணிக்குள் உற்செல்ல அனுமதிக்காது வீதியில் நிறுத்தி அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இதன் போது மக்களின் சார்பாக வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வின…
-
- 0 replies
- 218 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த சட்டமூலம் மற்றும் நிதி முகாமைத்துவ பொறுப்புத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். குறித்த மசோதாவுக்கு கூட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த போதும், சபாநாயகர் கையொப்பமிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135166/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 280 views
-
-
நல்லூர் உற்சவ காலத்தை முன்னிட்டு புதிய வடிவில் ஜஸ்கிறிம் விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புது வகையான உத்தியை கையாண்டு மக்களைக் கவரும் வகையில் இவ் விமான ஜஸ்கீறிம் விற்பனை நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு அதிக மக்களை கவர்ந்திழுக்கும் அந்த விமானத்திற்குள் ஜஸ்கிறீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நல்லூர் ஆலயத்திற்கு வரும் மக்கள் அவ் ஜஸ்கீறிம் விற்பனை நிலையத்தை ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். http://www.onlineuthayan.com/news/16576
-
- 3 replies
- 723 views
-
-
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். புத்திஜீவிகள் குழுவினர், திங்கட்கிழமை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், போதைப்பொருட்கள் பெருமளவில் கடத்தப்படும் ஒரு தளமாக வடக்கு மாகாணம் தற்போது மாறியுள்ளது. குறிப்பாக, கேரள கஞ்சா யாழ். குடாநாட்டின் ஊடாக அதிகளவில் கடத்தப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் தொடர்ந்தும் இவ…
-
- 1 reply
- 679 views
-
-
இன்றைய தினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையுமில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சில செய்தி நிறுவனங்களே இவ்வாறு செய்திகளை வெளியிட்டுள்ளன. அதற்குத் தான் என்ன செய்யமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கடந்த பெப்ரவரி மாதத்தில் தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க வடக்கு மாகாணம் தொட்பான மீளாய்வுக் கூட்டம் ஒன்று மாத்திரமே இன்று நடைபெறும். திறைசேரியின் தலைவர் …
-
- 0 replies
- 328 views
-
-
பெலாரசிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பெலாரசின் சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏயடநவெin சுலடியமழஎ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் சாhபில் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜீ.ஆசீர்வாதம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினரும் பங்கேற்றனர். கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம், சுகாதாரம், விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்க…
-
- 0 replies
- 315 views
-
-
20 பறவைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாயை அபராதமாக கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் விதித்துள்ளார். அம்பாறை கல்முனைப் பிரதேசத்தில் பறவைகளை விற்பனைக்காக வைத்திருந்தபோது, இவர் இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து அப்பறவைகளையும் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டனர். http://www.tamilmirror.lk/180158/பறவ-கள-வ-ற-பன-க-க-வ-த-த-ர-ந-தவர-க-க-அபர-தம-
-
- 0 replies
- 514 views
-
-
யாழில்.இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது. குறித்த ஆலயத்தில் இருந்த முருகனின் வேலினை பொலிசார் தம்முடன் எடுத்து சென்று உள்ளனர். யாழ்.காரைநகர் ஆலடி வேல் முருகன் ஆலயமே அவ்வாறு இடித்தழிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது , குறித்த ஆலயமானது கடந்த 1918ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வழிப்பாட்டினை மேற்கொண்டு வந்துள்ளனர். நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு சென்று தனி நபர் ஒருவர் ஆலயம் அமைந்துள்ள காணி தனக்கு உரித்துடையது எனவும் அதனால் ஆலயம் தனக்கு சொந்தம் என உரிமை கோரியுள்ளார். அதனால் குறித்த நபருக்கும் , ஆலயத்தில் வழிப்…
-
- 5 replies
- 687 views
-
-
கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உவர் நீரை நன்நீராக்கும் கருவியொன்றைக் கண்டுபிடித்துள்ளார். திருவையாறைச் சேர்ந்த கவியார்த்தனன் என்ற மாணவனே இக்கருவியைக் கண்டுபிடித்துள்ளார். இக்கருவி தேசிய மட்டத்தில் தெரிவாகியிருப்பதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. http://thuliyam.com/?p=38685
-
- 1 reply
- 384 views
-