ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143429 topics in this forum
-
இன்றைய உலகில் பலர் நாம் நிராகரிக்கப்பட்டு விட்டோம், கவனிப்பார் அற்றுக் கிடக்க விடப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்ற ஒரு பாரிய மனச் சுமையை மனதில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றார்கள். குடும்பங்களில் பல காரணங்களால் இப்பேர்ப்பட்டநிலை ஏற்படலாம். ஆனால் சமூக ரீதியாக நாம் அவ்வாறு சிந்திப்பவர்களின் ஏக்கத்தைப் போக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நின்று கொண்டிருக்கின்றோம். பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம், போரினால் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டவர்களாக இருக்கலாம், விசேடதேவைகள் உள்ளவர்களாக இருக்கலாம், இளம் விதவைகளாக இருக்கலாம், குடும்பப் பாரத்தைத் தனியே சுமக்கும் பெண்களாக இருக்கலாம், வயோதிபர்களாக இருக்கலாம், வேறு பல விதங்களில் உடலாலு…
-
- 0 replies
- 393 views
-
-
யாழில் கொள்ளையர்கள் இருவர் கைது யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீ கஜன் தலைமையிலான பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். கடந்த சில தினங்களிற்கு முன்னர் குருநகர் பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதை அடுத்து, பொலிஸாரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குருநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நீர் இறைக்கும் மோட்டர்களை இவ்விருவரும் இணைந்து கொள்ளையிட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைதான, சந்தேகநபர்கள் இருவரிடமும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, கொள்ளையிடப்பட்ட நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரம்…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் தரப்புகள் வெற்றுக்கோசங்களை எழுப்பி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு இந்த அரசை பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் போது அதை குழப்புவற்கும் அப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை தப்பிக்கும் வகையிலும் தென்னிலங்கையில் உள்ள எதிர் அரசியல் கட்சிகள் பாதயாத்திரை போரா ட்டங்கள் என்பவற்றை மேற்கொள்வது தென்னிலங்கை அரசியலில் காலம்காலமாக நடைபெற்று வருகின்ற ஒன்று. அதே போன்று தமிழ் மக்களுக்கு நீதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய உரிமைகளை …
-
- 0 replies
- 221 views
-
-
இனி இதையும் அவதானியுங்கள் நாட்டில் விற்பனை செய்யப்படும் சகல குளிர்பானங்களிலும் அடங்கியுள்ள சீனிக்கலவையின் அளவை வர்ண குறியீடுகளின் மூலம் குறித்துக் காட்டும் நடவடிக்கை இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளிர் பானங்களில் சீனியின் அளவை குறித்துக் காட்டும் செயற்பாடு தொடர்பாக 6 மாதங்களுக்கு முன்பே குளிர்பான உற்பத்தி நிறுவனங்களுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 100 மில்லி லீற்றர் குளிர்பானத்தில் சீனி 11 கிராமிற்கு அதிகமாக காணப்படின் சிகப்பு நிறத்தினாலும் 2 -11 கிராமிற்கு உட்பட்டதாயின் மஞ்சள் நிறத்தினாலும் குறியீடு காட்டப்பட்டிருக்கும் …
-
- 0 replies
- 354 views
-
-
வடக்கு முதலமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று யாருமே நினைக்கக்கூடாது. மேலும் வெளிநாட்டில் தற்போது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை நன்றாக விளங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகி றவர்கள் எல்லோரும், தமிழர்களுடைய நிலைமை உங்களின் முயற்சியால் எல்லோருக்கும் தெரியவருகிறது என்கின்றார்கள். மேலும் வெளிநாட்டிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர்களின் விடயங்கள் குறித்து பல நெருக்கடிகள் ஏற்பட்ட வண்ணமேயுள்ளன. ஆகவே, நாங்கள் முதலில் களத்தில் இறங்கி எதையும் செய்யவேண்டும். அதன் பலாபலன்கள் கிடைக்கின்றனவா? இல்லையா? என்பது குறித்து பின்னர் பார்க்கலாம். அதையே நானும் செய்து வருகின்றேன். முதலமைச்சர் நிதியம் குறித்து…
-
- 0 replies
- 291 views
-
-
சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் மீளக் குடியேற்றுவதே மீளக் குடியேற்றும் செயலணியின் நோக்கம் எனவும் இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகள் எவரும் கருத்து வெளியிடத்தேவை யில்லையெனவும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட டி.எம் சுவாமிநாதனை ஊடகவியலாளர் ஒருவர் மீள்குடியேற்ற செயலணி தொடர்பாக கருத்துக் கேட்டதற்கே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது டி.எம்.சுவாமிநாதன் கருத்துத் தெரிவிக்கும்போது, வடமாகாணத்திலிருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம் மக்களை அதற்குரிய அந்தஸ்த்துடன் வடக்கில் குடியேற்றுவதே மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம். …
-
- 0 replies
- 365 views
-
-
சிறிலங்காவின் கடந்த மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாத ஏற்றுமதிகள் 12 வீதத்தினால், குறைந்துள்ளது. 776 மில்லியன் டொலருக்கே இந்த ஆண்டு மே மாதம் ஏற்றுமதிகள் இடம்பெற்றுள்ளன. அதேவேளை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில், 1590 மில்லியன் டொலர் இறக்குமதிகள் இடம்பெற்றுள்ளன. இது 0.3 வீத அதிகரிப்பாகும். அதேவேளை, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், வர்த்தக பற்றாக்குறை 15.7 வீதமாக விரிவடைந்துள்ளது. அதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும், இறக்குமதிகள் 2.8 வீதத்தினால் (7,645 மில்லியன் டொலர்) குறைவடைந்துள்ளதாகவு…
-
- 0 replies
- 267 views
-
-
மஹிந்த ராஜபக்ஸவின் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமான பாதயாத்திரையில் அனைத்து கெடுபிடிகளுக்கும் மத்தியில், மக்கள் கூட்டங்களுக்கும் நடுவில் தனது கருத்துக்களை பிரத்தியேகமாக லங்காசிறியிடம் பகிர்ந்தார் மஹிந்த ராஜபக்ஸ. கொழும்பை நோக்கிய இன்றைய இறுதிநாள் பாதயாத்திரையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலும் மஹிந்தவை நெருங்கிய எமது ஊடகவியலாளர்கள் அவரிடம் பாதயாத்திரை தொடர்பாக வினவியபோது, தமது எண்ணப்பாடுகளை மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இதில், “இப்பொழுது இருக்கக்கூடிய இந்த அரசாங்கத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம், நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம், இது மக்களுக்கான பாதயாத்திரையே, இனங்களுக்கு இடையிலோ, மதங்களுக்கு இடையிலோ வேறுபாடுகளை உண்டாக்கும் பாதயாத்திரை அல்ல” என…
-
- 0 replies
- 527 views
-
-
விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் மகாநாடு சரியானதா? வெளிநாடுகளுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான தொடர்பு ஏன் குறைவாக உள்ளது? என்பது பற்றியும் மேலும் பல விடயங்கள் பற்றி இந்த வார வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. 2009ல் விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயுதங்களை மௌனித்த பின்னர் சர்வதேச இராஜதந்திரம் தோற்றுப் போயுள்ளது என்ற பரவலான விமர்சனங்கள் இருக்கின்றது. இதில் தற்போது அரசாங்கத்தின் நிலை தமிழர்கள் மத்தியில் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றியும் லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்டமேசையில் பலதரப்பட்ட வினாக்களுக்கு விடை தருகின்றார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் Go to Videos …
-
- 0 replies
- 457 views
-
-
மாத்தறை பிரதேசத்தில் 12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு இராணுவ வீரரும், சந்தேக நபர்களுக்கு அறையை வாடகைக்கு வழங்கிய நபரும் ஒரு பிக்குவும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட பிக்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 12 வயதான தமது மகள் காணாமல் போயுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் கடந்த ஜூன் 10 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர். மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட தேடுதலை அடுத்து கடந்த 21ம் திகதி இந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 9 பேர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதுட…
-
- 3 replies
- 356 views
-
-
மஹிந்த பேசமாட்டார் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'ஜன சட்டன' பாதயாத்திரையின் இறுதி தினக் கூட்டத்தின் போது, தான் விசேட அறிவிப்பு எதனையும் விடுக்கப்போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், இந்தப் பாதயாத்திரையின் இறுதிக் கூட்டத்தை நடத்த கொழும்பு ஹைட் மைதானத்தைக் கோரியிருந்த போதிலும், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில், சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாதயாத்திரையில் கலந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலு…
-
- 0 replies
- 422 views
-
-
'குழிதோண்டியது யார்?' முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டுச் சென்ற போதும், தன்னுடைய தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அக்கட்சியிலேயே இருந்ததாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 'அரசாங்கம், எம்மீது அச்சம்கொண்டுள்ளது. அதனால் தான், ஒன்றிணைந்த எதிரணியினது பாதயாத்திரையின் இறுதிக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்த கொழும்பு ஹைட் மைதானத்தில், அரசாங்கச் செலவில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன' என்றும் நாமல் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை, நான்காவது நாளாக நேற்று, நிட்டம்புவ …
-
- 0 replies
- 289 views
-
-
கிரிபத்கொடையிலிருந்து காலி முகத்திடல் வரையிலும் 3 அடுக்கு பாதுகாப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'ஜன சட்டன' பாதயாத்திரையின் இறுதித் தினம் இன்றாகும். கடந்த வியாழக்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரை, ஐந்தாவது நாளான இன்று, கொழும்பை வந்தடையும் நிலையில், அதன் இறுதிக் கூட்டம், காலி முகத்திடலில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரிபத்கொடையிலிருந்து கொழும்பு காலி முகத்திடல் வரை, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிகப் பொலிஸாரும் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பாதயாத்திரையை வழிநடத்திச் செல்வதற்கான நடவடிக்கைள் பொலிஸார் மேற…
-
- 0 replies
- 241 views
-
-
சிறுவர் துஸ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்போம் செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்ரிக் கழகத்தினால் 'சிறுவர் துஸ்பிரயோகத்தில் இருந்து சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளினாலான கருத்தரங்கு ஒன்று நாவாந்துறை சென்மேரிஸ் சனசமூக நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டது. பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆர்.ரி.என். ராஜீவன் வளவாளராக கலந்து கொண்டு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் சிறுவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என தெளியூட்டினார். யாரென்று தெரியாதவர்கள் எந்த பொருட்களை தந்தாலும் அவற்றை வாங்கக்கூடாது, தனிமையில் வீ…
-
- 0 replies
- 272 views
-
-
இலங்கைக்கு 90 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கியுள்ள ஜப்பான் இலங்கையின் அபிவிருத்தி கொள்கையைச் செயற்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்குக் கடனுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச் சுஹனுமா அவர்களால் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவிடம் நேற்று முன்தினம் நண்பகல் நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் இக்கடனுதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 25 வருட காலப் பகுதி…
-
- 0 replies
- 364 views
-
-
தாக்குதல் நடத்துவோம் ; பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை சட்டத்தை பொலிஸார் அமுல் செய்யும் போது, பொலிஸாருடன் மோதலுக்கு வந்தால் தாக்குதல் நடத்தவும் நாம் தயங்கப் போவதில்லை. , பொலிஸார் அவ்வாறு சட்டத்தை அமுல் செய்யும் சந்தர்ப்பங்களில் நான் பொலிஸாரின் பக்கமே இருப்பேன் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். காலி, கொஸ்கொட பகுதியில் பாடசாலையொன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை பொலிஸ் மா அதிபர் உரையாற்றிக்கொன்டிருக்கையில், அவரது கையடக்கத் தொலைபேசிக்கு கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஊடாக விஷேட அழைப்பொன்று கிடைத்திருந்தது. அதில் ஒன்றினைந்…
-
- 0 replies
- 248 views
-
-
இன ரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு : நாளை மறுதினம் ஜெனிவாவில் கூட்டத்தொடர் ஆரம்பம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இன ரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத் தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் இலங்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அத…
-
- 1 reply
- 274 views
-
-
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை முடக்கியமை, சாட்சியங்களை அழித்தமை போன்ற செயல்களில் முன்னாள் பொலிஸ் உயரதிகாரிகள் ஏழு பேர் ஈடுபட்டமை, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் இருவரிடமும், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரிடமும், ஏனைய பொலிஸ் உயரதிகாரிகள் இருவரிடமும் புலனாய்வுப் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேரும் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=162634&cate…
-
- 1 reply
- 368 views
-
-
திறப்பு விழா -காயத்திரி விக்கினேஸ்வரன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அமெரிக்கா, கனடா நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவ அமைப்பினதும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினதும் நிதிப் பங்களிப்பில் அதிநவீன உயர்தர சைவ உணவகம் அமைக்கப்பட்டு சனிக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகரும் நோயாளர் நலன்புரிச் சங்கத் தலைவருமான வைத்தியர் க.இளங்கோஞானியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமெரிக்கா அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் உபதலைவர் வைத்தியகலாநிதி திருமதி ராஜம் தெய்வேந்திரம் பிரதம விருந்தினராகவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
- 1 reply
- 335 views
-
-
போராளியை ஊசி போட்டு கொன்றார்கள். – போராளி சாட்சியம். வெளிவரும் கொடூரங்கள். இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக் கொடியுடன் சரணடைனவர்கள் சுடப்பட்டார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்தவர்களுக்கு இரசாயன உணவு கொடுக்கப்பட்டது. ஊசிகள் போடப்பட்டன என நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் முன்பாக புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று சனிக்கிழமை ஒட்டுசுட்டானில் நடைபெற்றது. அந்த அமர்வில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு சாட்சியம் அளித்தார். மேலும் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் போனதற்…
-
- 4 replies
- 705 views
-
-
இரண்டாவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கரமசிங்க நாளை இந்தோனேசியாவிற்கு செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க உரையாற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரம சிங்க, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோரா, இந்தோனேசிய நிதியமைச்சர் முல்யானி இந்திரவதி, உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பிரதமருடன் அவரது பாரியார் பேராசிரியர் மைதிரி விக்ரமசிங்க, அமைச்சர் கபிர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக…
-
- 0 replies
- 240 views
-
-
உயர்தர பரீட்சை ஆரம்பிப்பதால் போதைப்பொருள் வழக்குகளில் பிணை வழங்க மறுப்பு! நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படுகின்ற சூழ்நிலையில்போதைப் பொருள் வழக்குகளில் பிணை வழங்குவது பரீட்சை க்குத் தோற்றும் மாணவர்களின்அமைதியைக் கெடுத்து விடும் என கூறி, போதைப் பொருள் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, நீதிபதி இளஞ்செழி யன் பிணை வழங்க மறுத்து வழக்கை ஒத்திவைத்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை 2ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்க ப்படக் கூடாது என்பதற்காக அவர் இதனைக் கூறியுள்ளார். பிணை வழங்க மறுத்தது குறித்து அவர் மேலும் தெரிவித்த…
-
- 0 replies
- 258 views
-
-
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா, நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு $20,000 அவுஸ்திரேலிய டொலர் வரை வழங்கப்படும் என்று அவுஸ்திரேலியா அரச அதிகாரிகள் ஆசை காட்டி வருவதாக அகதிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் Refugee Action Coalition அமைப்பின் Ian Rintoul தெரிவித்துள்ளார். இதற்கு முன் $10,000 டொலர் தருவதாக கூறிவந்த அதிகாரிகள் இப்போது தொகையை இருமடங்கு உயர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நாடு திரும்ப முன்வருவோருக்கு அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறும் அவுஸ்திரேலியாவின் Department of Immigration and Bor…
-
- 0 replies
- 420 views
-
-
ஜி.ஞானவேல்முருகன் COMMENT · PRINT · T+ வ.சுந்தரராஜூ உலகம் முழுவதும் 13 நாடுகளில் உள்ள காடுகளில் புலிகள் வாழ்கி ன்றன. இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தேசிய விலங்கு புலி. 19-ம் நூற்றாண்டில் இவ்வுலகில் லட்சத்துக்கும் அதிகமான புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. அவற்றில் 97 சதவீதம் அழிந்து, தற்போது வெறும் 3,200 என்ற எண்ணிக்கையில் புலிகள் குறைந்துவிட்டன. 1972-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா வில் 2 ஆயிரம் என இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2006-ம் ஆண்டில் 1,411 ஆகக் குறைந்தது. இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்ப…
-
- 0 replies
- 570 views
-
-
வீதி வலம் வருவதற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் : ஜனாதிபதி மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு கால்களில் கொப்பலங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கி.மீ பிரதேச வீதிகளை புனர்நிர்மாணம்செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சித்திட்டம் இன்று பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரபுர கிராமத்தில் ஆரம்பித்துவைக்…
-
- 0 replies
- 148 views
-