Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணையின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபா நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை சம்பிரதாயபூர்வமாக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று தொடங்கி வைத்தார். தொண்டைமானாறு உவர் நீரேரியில் மழைநீரைச் சேமிக்கும் நோக்கிலும், கடல்நீர் ஏரிக்குள் வராமல் தடுக்கும் நோக்கிலும் ஏற்கனவே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மடைக்கதவுகள் உருக்கினால் ஆனவை என்பதால் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகின்றன. தற்போது 300 மில்லியன் ரூபா செலவில் துருப்பிடிக்காத கறையில் உருக்கினாலான மடைக்கதவுகளைக் கொண்டதாகத் தடுப்பணை புனரமைக்கப்பட உள்ளது. தொண்டைமானாறு ஏரியில், தடுப்பணையின் மடைக்கதவுகளை மூடி …

  2. நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை (ரொபட் அன்டனி) நீரியல் மற்றும் நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு எவ்விதமான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனவே நீரியல் மற்றும் நீர்ப்பாசன பிரிவுகள் எப்போதும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனராட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதா…

  3. ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வருகிறது சுயாதீன ஊடக ஆணைக்குழு (ரொபட் அன்டனி) ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்றை நியமிப்பது குறித்து ஆராய்ந்துவருகின்றோம். இதனை நாங்கள் தனித்து செய்யமாட்டோம். இதற்காக சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனராட்ன தெரிவித்தார். அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஆசிரியர்களுடனும் ஆலோசனை நடத்தியே இதனை முன்னெடுப்போம்.இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக…

  4. மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழு மூலம் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை – கருவி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் மாற்றுத் திறனாளிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளின் அமைப்பான சமூக வள நிலையத்தின் ஊடாக “கருவி” என்கிற பெயரில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து அயராத முயற்சியால் “SHINE DETERGENT LIQUID” எனும் கழிவகற்றும் பொருட்களை சர்வதேச தரத்துக்கு போட்டியிடும் வகையில் உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். சாதரணமாக சலவை செய்யவும் மற்றும் சலவை இயந்திரத்தில் இட்டும் பயன்படுத்த முடியும். இது sunlight ,surexel அல்லது Shambo க்கு பதிலாக பயன்படுத்தலாம் அத்துடன் வாசனைக்காக பிறிதாக வேறொன்றும் வாங்க தேவையில்லை. இவ் கலவையில் வாசனை தரும் வகையில் comfort போன்ற ஒரு வகையிலான சேர்வை சேர்க்…

    • 1 reply
    • 441 views
  5. ஜனாதிபதியின் கோரிக்கை புறக்கணிப்பு : அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பு வட மாகாண மீள்குடியேற்ற செயலணியில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனும் இணைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண மீள்குடியேற்ற செயலணி அமைப்பதற்கான பத்திரமானது, அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு முதல்வரையும் அதில் உள்ளீர்க்க வேண்டுமென ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை புறக்கணித்தே அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வட…

    • 1 reply
    • 300 views
  6. கனேடிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோன் (Stéphane Dion) சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை விமானசேவைக்கு சொந்தமான UL303 என்ற விமானத்தின் இவருடன் 18 தூதுவர்களும் வருகை தந்துள்ளனர். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி, பிரதமர் ,எதிர்க்கட்சித் தலைவரை மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்திக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் இம்மாதம் 30 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/9489

  7. 4,000 ஹெரோய்ன் பக்கெட்களுடன் ஒருவர் கைது மிரிஹான சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 4,000 ஹெரோய்ன் பக்கெட்கள் வைத்திருந்த நபரொருவரை, அதுருகிரியப் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளிலே குறித்த ஹெரோய்ன் பக்கெட்களை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற வேளையிலேயே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து அருகிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பிறிதொரு சந்தேகநபரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூன்ற…

  8. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு அடை­யா­ளங் ­க­ள் மனிதன் தன்­னு­டைய வாழ்க்­கையில் படிப்­ப­டி­யாக புரிந்துகொள்ள வேண்டியவர்களாவர். எமக்கு முதலில் உயர் நிலையில் மாதாவும் அடுத்து பிதாவும் அத னைத் தொடர்ந்து குருவும் தெய்­வமும் என கௌர­வித்து வரு­கின்றோம். மாதா, பிதாவை நம் பிறப்பின் அடிப்­படை குருவும் தெய்­வமும் வாழ்வின் அடிப்­படை என்­கிறார் சத்­குரு.இவர் ஒரு யோகி­யா­கவும் ஞானி­யா­கவும் ஆன்­மீகக் குரு­வா­கவும் திகழ்­பவர்.இத்­த­கைய நிலையில் யாழ்.மாவட்­டத்தில் ஆசி­ரி­யத்­து­வத்தில் இன்று நடந்து கொண்­டி­ருப்­பது என்ன? 30 வருட காலப் போராட்­டத்தில் இல்­லாத அல்­லது வெளிப்­ப­டுத்­தப்­ப­டாது இருந்த கலா­சார பிறழ்வு இன்று வெளிவரும் நிலையில் உள்­ளது என்றால் இது யாரு­டைய பிழை எனக்…

  9.  பல்லேகலையில் பிறந்த மேனியுடன் ஓட்டம் இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேக மைதானத்தில், இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிந்த நிலையில், வெளிநாட்டு பிரஜையொருவர், உடம்பில் ஒருதுண்டு துணியில்லாமல், மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்துள்ளார். மழை பெய்துகொண்டிருந்த போதே அவர், மைதானத்தைச் சுற்றி நிர்வாணமாக ஓட்டமெடுத்துள்ளார். இதனை அவதானித்த பொலிஸார், அவரை மிக இலாவகமாக பிடித்து, மைதானத்துக்கு அப்பால்…

  10. மகாவலி திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு நீர் கொண்டு வருவது,வடக்கு மாகாணத்தின் குடிசனப் பரம்பலைப் பாதிக்கும் என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “இரண்டு மாகாணங்களுக்கு இடையிலான விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருவதுடன், மத்திய அரசாங்கம் தான் விரும்பியவாறு குடியேற்றங்களைச் செய்யும். இது வடக்கு மாகாணத்தின் குடிசனப் பரம்பலைப் பாதிக்கும். மத்திய அரசாங்கத்தின் இதுவரைக் காலத்திலான செயற்பாடுகள் சிங்கள குடியேற்றங்களையும், சிங்கள மயமாக்கலையும் ஊக்குவித்துள்ளதன் காரணமாக, இந்த விடயத்தினை மிகவும் நிதானமாக அணுகவேண்டிய தேவை வடமாகாணத்திற்கு இருக்கிறது. இது தொடர்பில் வடக்கு மாகாணசபை, மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபையுடன் ஒ…

  11. கூட்டு எதிர்க்கட்சியினால் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட உள்ள பாத யாத்திரைக்கு எனது ஒத்துழைப்பு கிடையாது. கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நாம் அதில் பங்கேற்கப் போவதில்லை. பாத யாத்திரை நல்ல விடயமா- தீமையான விடயமா என்பதனை என்னால் கூற முடியாது. எனினும் நாம் பாத யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/brei…

  12. மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டம் தன்னுடைய வேலைத்திட்டம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரிமை கோரியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலங்களில் யுத்தத்திற்கு பாரியளவு பணம் செலவிடும் போது கூட, இதற்கு முதலில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், மஹிந்த ராஜபக்‌ஷ கூறினார். தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ. உபுல் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைக் கூறியிருந்தார். அந்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன மிகவும் அக்கறை செலுத்தியதாகவும், அதை மிகத் தௌிவாக கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார். …

  13. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி முதல், 8 மணி நேரம் மூடப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுபற்றி அறிவித்த அவர், விமான ஓடுபாதையின் திருத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாலேயே அதனை மூட நேரிடுவதாக சுட்டிக்காட்டினார். மூன்று மாதங்களுக்கு இடம்பெறும் குறித்த பணிகள் காரணமாக, மு.ப 8.30 முதல் பி.ப 04.30 மணி வரையான 08 மணித்தியாலங்களுக்கு, விமான நிலையம் மூடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=162335&category=TamilNews&language=tamil

  14. தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் தனி ஈழம் ஒன்றைக் கோரவில்லை. தமிழர்கள் தனி ஈழத்தைக் கோருகிறார்கள் என்று வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது’ என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2016/07/26/news/17652

    • 10 replies
    • 889 views
  15. முழங்காவிலில் தொடரும் காடழிப்பு - நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் தொடர்ச்சியாக மரங்கள் அழிக்கப்பட்டு களவாக எடுத்துச் செல்லப்படுவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். கரியாலைநாகபடுவான், தென்னியங்குளம் செல்லும் வீதியில் அமைந்துள்ள காடுகளில் மீள்குடியேற்றத்தின் பின்னர், களவாக மரங்கள் அழிக்கப்பட்டு பிற இடங்களுக்குக் கொண்டுச் செல்லப்படுகின்றன. இம்மரங்கள் அழிப்புத் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் கண்டு கொள்வதில்லை எனவும் அழிக்கப்படும் மரங்கள் ஏ-32 வீதி வழியாகவும் பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் வழியாகவும் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரி பரந்தன் வீதி வழியாக கிளிநொச்சி மரக்காலைகளுக்கும் கொண்டுச் செல்லப்படுக…

  16. இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் 16000 தமிழர்களின் நிலைமை என்ன? இது தொடர்பிலான விபரங்களை இலங்கை அரசாங்கம் விரைவில் வெளியிட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த 14 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையினை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கொழும்பில் வெளியிட்டுள்ளது. 34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும், இறுதிகட்ட யுத்தத்தில் காணமல் போனதாக கூறப்படும் 16,000 பேர் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் இல்லை. அவர்களது நிலை என்ன ஆனது? தற்போது எங்குள்ளனர்? அவர்கள் ச…

  17. மகாவலி அதிகாரசபையின் ஊடாக வடக்கில் உள்ள குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்கா அபிவிருத்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹனை மஜிப் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இன்று மாகாண பணிப்பாளர் அலுவகத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர், வடக்கில் தற்போதைய விவசாய நிலைமைகள் மற்றும் அவற்றின் ஊடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் புனர்நிர்மாணம் செய்யப்படாத நிலையில் காணப்படும் குளங்களின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜப்பான் நாட்டின் உதவியுடன் சுமார் 750 மில்லியன் ரூபா செலவில்…

    • 2 replies
    • 1.1k views
  18. மஹிந்த அணியின் பாதயாத்திரைக்கு காத்திருந்த அதிர்ச்சி அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/9472

  19. இலங்கை அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கறிஞர் அருணா லக்சிறி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பிரதிவாதிகளாக பிரதமர் உள்பட நூறுக்கும் மேட்பட்ட அமைச்சரவையின் அங்கத்தவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அரசியல் சாசனத்தின்படி நாட்டில் தேசிய அரசாங்கமொன்று ஆட்சியில் இருக்கின்ற போதுமட்டும் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையோன்றை நியமிக்க முடியுமென்று குறிப்பிடப்பட்டுள்ளதாக மனு மூலம் தெரிவிக்கப்பட்டு…

  20. தமிழ் பேச்சு வழக்கில் ஒரு ஒரு சொற்தொடருண்டு. அதாவது, கேட்பவர் கேனயன் என்றால் எலி ஏரப்பிளேன் ஓட்டுமாம். அவ்வப்போது சில தமிழ் அரசியல் தலைவர்கள் உதிர்த்துவரும் வார்த்தைகளை கேட்கநேரும் போதெல்லாம் மேற்படி பேச்சுவழக்கே நினைவுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையில் மோதலொன்று இடம்பெற்றது. இது இலங்கைக்கு புதிய விடயமல்ல. இது போன்று தென்பகுதியிலுள்ள பல்கலைக்கழங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. மஹிந்தவின் ஆட்சிக் காலத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது தமிழ் மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் அதற்கு பின்னால் ஒரு சக்தியிருப்பதாகவோ அல்லது அதற்கு பின்னால் ஒரு அரசியல் நி…

    • 1 reply
    • 229 views
  21. பாத­யாத்­தி­ரையில் பங்­கேற்றால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் : மஹிந்த அம­ர­வீர ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி பாத­யாத்­தி­ரையை நடத்த தீர்­மா­னிக்­க­வில்லை. எனவே, கட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­வோ­ருக்கு எதி­ராக மத்­திய குழு கூடி தீர்­மா­னங்­களை எடுக்கும் என்று அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்செய­லா­ள­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். கட்­சியை பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தரா­தரம் பார்க்­காது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக மஹிந்த அம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில், அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­புக்கு பாத­யாத்­தி­ரை­…

  22. உலகளாவிய ரீதியில் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய் புற்றுநோய்க்கு வெற்றிலை மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் பாவனையே காரணம் என்றும் பல் வைத்திய சேவையின் பிரதிப் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இதன்காரணமாக வெற்றிலை பாவனையை முற்றாக நிறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெற்றிலை பாவனையால் புற்றுநோயை ஏற்படுத்தும் நான்கு காரணங்கள் ஏதுவாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் வெற்றிலையில் உள்ளடக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை உள்ளிட்டவைகளை தடுக்க வேண்டும் எனவும், விகாரைகளில் பூஜை தட்டில் புற்றுநோயை உருவாக்கும் வெற்றிலையை வழ…

    • 3 replies
    • 426 views
  23. சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு வராவிட்டால் காவல்துறையினரால் ஒன்றும் செய்ய முடியாது: சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வராவிட்டால் அதற்கு காவல்துறையினர் எதனையும் செய்ய முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சிங்கள பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முழு அளவில் காவல்துறையினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறான ஓர் நிலையில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர வருகை தராவிட்டால் அதற்கு காவல்துறையினர் பொறுப்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செ…

  24.  'அங்கவீனமடைந்த எவரையும் கட்டாயப்படுத்தி விலக்கவில்லை' -ஜே.ஏ.ஜோர்ஜ் அங்கவீனமடைந்த எந்தவொரு இராணுவ வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்லவில்லை, தொடர்ந்தும் சேவையில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள அங்கவீனமடைந்த வீரர்கள் தங்களது சுயவிருப்பத்தின் பேரிலேயே விலகிச்சென்றனர். அவர்கள் விலகிச்செல்லும் போது கடிதம் கொடுத்துவிட்டே சென்றனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், அங்கவீனமடைந்த வீரர்கள் முப்படைகளிலும் தற்போதும் சேவையில் உள்ளனர். அவர்கள் விரும்பும் வரை சேவையில் இருக்கமுடியும் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஓய்வுபெற்ற, அங்கவீனமடைந்த இராணுவ வீரர்களின் ஓய்வூதியம்…

  25. முதல்வர் சி.வி.யுடன் இணைந்து இறுதி முடிவை உடன் எடுங்கள் : அமைச்சர் ஹரி­ச­னுக்கு பிர­தமர் பணிப்பு வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை எங்கு அமைப்­பது என்­பது குறித்து வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுடன் இணைந்து உட­ன­டி­யாக முடி­வெ­டுக்­கு மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பணித்­துள்ளார். வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை எங்கு அமைப்­பது என்­பது தொடர்பில் காணப்­படும் பிரச்­சி­னைகள் குறித்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­தொ­டரில் நீண்­ட­நேரம் ஆரா­யப்­பட்­டி­ருந்­தது. இச்­ச­ம­யத்­தி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு பணித்­துள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.