ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் சுற்றுச்சூழல் கரிசனை எழுப்பப்பட்டுள்ள போதிலும், இதற்கு மாற்றாக, இயற்கை திரவ எரிவாயு மின் நிலையத்தை அமைப்பதா அல்லது அனல் மின் நிலையத்தை அமைப்பதா என்பது குறித்து சிறிலங்கா இன்னமும் இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அனல்மின் திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று உள்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதற்குப் பின்னரே, இந்தியா இந்த திட்டத்துக்கான ஒத்துழைப்பை வழங்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, இயற்கை திரவ எரிவாயு மின…
-
- 0 replies
- 155 views
-
-
வியாங்கொட இராணுவத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் பிரதான ஆயுதக் களஞ்சியத்தை, அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்படவுள்ள கட்டடங்களைச் சுற்றிய பாரிய மண் அணைகள் அமைக்கப்படவுள்ளன. வெலிசறை கடற்படைத் தளத்தில், அமைந்துள்ள ஆயுதக் களஞ்சியமும் கூட எதிர்காலத்தில் அம்பேபுஸ்ஸ இராணுவத் தளத்துக்கு மாற்றப்படவுள்ளது. எனினும், வியாங்கொட மற்றும் வெலிசற தளங்களில் தங்போது வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் அனைத்தையும், களஞ்சியப்படுத்தும் வசதி அம்பேபுஸ்ஸவில் கிடையாது என்றும் கூறப்படுகிறது. வெடிபொருட் களங்சியங்களை நிலத்துக்குக் கீழ் கொங்றீட் பதுங்கு குழிகளி…
-
- 0 replies
- 181 views
-
-
இலங்கையில் நிலவிய போரின் காரணமாக நாட்டின் பாதுகாப்பு துறை அளவுக்கு அதிகமான வளர்ச்சி கண்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இராணுவத்தை பலப்படுத்தல், ஆயுத கொள்வனவு, ஜெட் விமானங்கள், போர் கப்பல்கள் உள்ளிட்ட போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதில் இலங்கை அரசாங்கம் தீவிரம் காட்டியிருந்தது. தமிழனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போருக்கு சிங்கள மக்களும் பூரண ஆதரவினை வழங்கியினருந்தனர். அதற்கான தமது வாழ்வாதாரங்களை கூட கண்டுகொள்ளாமல் தேசிய பாதுகாப்புக்கான அதிகளவான நிதியை ஒதுக்க அனுமதியளித்திருந்தனர். இன்றைய நாட்களில் போர் ஓய்ந்து ஏழு வருடங்களை தாண்டியுள்ளது. நாட்டில் நல்லாட்சி மலர்ந்து அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழ்வதாக உலக நாடுகளுக்கு…
-
- 0 replies
- 345 views
-
-
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கடூழிய சிறை! பாடசாலைக்குச் சென்று வரும் சிறுமியான மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி தயாக்கிய இரு பிள்ளைகளின் தந்தையான நபர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனையும் தண்டமும் விதித்து மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளதுடன் குறித்த சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கன்னங்குடா பாவக் கொடிச்சேனையை சேர்ந்த பொன்னம்பலம் திருச்செல்வம் எனும் இரு பிள்ளைகளின் தந்தைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு 6 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு மட்டக்க…
-
- 0 replies
- 267 views
-
-
சிறிலங்கா உள்ளிட்ட அயல் நாடுகளுடன், சுற்றுலா, சுகாதாரம், சமூகத் துறைகளில், உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் அக்கறை கொண்டுள்ளதாக இந்தியாவின் தெலங்கானா மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இருந்து சென்றிருந்த 15 ஊடகவியலாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை, ஹைதராபாத்தில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் சந்தித்த, தெலங்கானா மாநில தலைமைச் செயலர் ராஜீவ் சர்மா இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கும் தெலங்கானாவுக்கும் இடையில் இருந்த பாரம்பரிய கலாசாரத் தொடர்புகள் குறித்தும், பாதுகாப்பு. விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொழில்துறை கேந்திரமாக விளங்கும் தெலங்கானா மாநிலத்தின் சிறப்புகள் குறித்தும், இந்தச் சந்திப்பின் போது, மாநில தலைமைச்செயலர் விளக்கமள…
-
- 0 replies
- 310 views
-
-
இந்த பூமியில் இறைவனுக்கு அடுத்தபடியாக மனிதர்களினால் மதிக்கப்படுபவர்கள் வைத்தியர்களும் அவர்கள் பணியாற்றும் வைத்தியதுறையுமே. ஏனெனில் இந்த பூமியில் ஒரு மனிதனின் பிறப்பதையும் இறப்பையும் உறுதிப்படுத்தகின்ற இடமாக மனிதனின் படைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற இடமாக இந்த வைத்தியசாலைகள் அமைகின்றன. இவ்வாறு மனிதனின் உயிரைகாப்பாற்ற வேண்டிய மட்டக்களப்பு வைத்தியசாலையில் கவலையீனம் காரணமாக மனித உயிர்கள் இழக்கப்படுவதாக பொதுமக்கள் பல புகார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பேசு பொருளாக இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மாறியுள்ளது. இன்றைய தினம் கூட குறித்த வைத்தியசாலைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. …
-
- 0 replies
- 296 views
-
-
இராணுவமுகாங்களும் இராணுவநினைவுத் தூபிகளும் அகற்றபடவேண்டும்! கிளிநொச்சி நகர அபவிருத்தி முகாமைத்துக் குழுகூட்டத்தில் வலியுறுத்தல்!! குளோபல் தமிழ் செய்தியாளர் - கிளிநொச்சி:- கிளிநொச்சி நகரத்தில் நிலைகொண்டுள்ள இராணுவமுகாங்கள் அகற்றப்படுவதுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள இராணுவநினைவுத் தூபியும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாகாண சபை உறுப்பி…
-
- 2 replies
- 345 views
-
-
தேசிய அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரியை குறைப்பது தொடர்பில், அரசாங்கம் உறுதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாளை இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக, கொழும்பில் நேற்றுக் காலையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போது தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கத்தின் கடன் சுமையை ஈடு செய்வதற்காக, நல்லாட்சி அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வற் வரி குறித்து பல்வேறு விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்த நிலையில், ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=160727&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 307 views
-
-
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 21 ஆம் திகதி மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வித்தில் உரையாற்றியிருந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச்ச நிலையினைத் தோற்றுவித்திருந்தது. ஆகவே அவ்விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. …
-
- 0 replies
- 239 views
-
-
மிருகங்களை வேட்டையாடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டவர்கள் கைது.! காட்டு மிருகங்களை வேட்டையாடி புகைப்படங்களை பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்களை இன்று தெல்தெனிய நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த புகைப்படங்களில் அரிய வகை மிருகங்களான மான், வெளவால், காட்டுப்பூனை, முயல், மரை, முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, மர அணில் போன்ற மிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. வேட்டையாடப்பட்ட மிருகங்களுடன் குறித்த நபர்கள் துப்பாக…
-
- 0 replies
- 137 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ் இன் செயற்பாடு படையினரே உஷார்- எச்சரிக்கும் பாதுகாப்பு செயலர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பங்களாதேஸில் உணவகம் ஒன்று தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார். தென்னாசிய நாடானா பங்களாதேஷ் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவை எனவும், இதன் காரணமாக…
-
- 0 replies
- 248 views
-
-
பொறுமை காக்குமாறு முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள் (எம்.சி.நஜிமுதீன்) பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்தவாரம் ஊடகமொன்றுக்கு தெரிவித்த கருத்தானது, இஸ்லாம் சமயம் மீது மேற்கொண்ட மாபெரும் மதநிந்தனையாகும். எனினும் அவ்விடயத்தில் முஸ்லிம்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாது பொறுமை காக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாம் சமயத்தை நிந்திக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் தற்போது பல்வேறுபட்ட எதிர்ப்புகள் எழுந்துள்ள…
-
- 7 replies
- 1.6k views
-
-
மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் அத்துடன் அவர்கள் மீன்பிடியில் ஈடுப்பட்ட படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இந்திய மீனவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் கூறினார். கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களையும் யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 164 views
-
-
பொலிஸாருக்கு கஞ்சா விற்க முற்பட்டவர் கைது! கேரள கஞ்சாவை விற்பனை செய்து வரும் இளைஞரொருவர், மாறுவேடத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சி செய்த போது, அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில், இந்திய கேரளக் கஞ்சாவை விற்பனை செய்து வந்த 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். குறித்த நபர் குறித்து, மட்டக்களப்பு மாவட்ட போதைவஸ்து ஒழிப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரசிய தகவலையடுத்து, குறித்த பிரிவின் பொலிஸ் உத்தியோத்தர்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைய…
-
- 0 replies
- 215 views
-
-
மத்திய வங்கி ஆளுனர் நியமனம் – நடந்தது என்ன? மத்திய வங்கியின் புதிய ஆளுனர் தொடர்பாக, கொழும்பு அதிகாரமட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இழுபறியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். மத்திய வங்கி ஆளுனர் நியமனம் தொடர்பாக கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நீண்ட கயிறிழுப்புகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுக்காலையில், திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி மூலோபாய, அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரை, சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
-
- 0 replies
- 235 views
-
-
இவ்வருட இறுதிக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், 1700 பேருக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் தெரிவித்தார். இந்நிகழ்வு உள்விவகார அமைச்சர் எஸ். பி. நாவின்ன தலைமையில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளது. 2015 ஜனவரி 08 ஆம் திகதி முதல் இதுவரையில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் போலல்லாமல் தற்போது மிகுந்த நேர்மையுடனும் விரைவாகவும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுவதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். வெளிநாடுகளில் பிரஜா…
-
- 8 replies
- 2.1k views
-
-
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மையம் அமைப்பதற்காக 2010ம் ஆண்டே ஓமந்தையில் 18 ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 15.06.2010ம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வட மாகாண ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குறித்து பேசப்பட்ட போது மாவட்ட பொருளாதார வலயமாக ஓமந்தை, பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் 18 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த 18 ஏக்கர் காணிக்கும் அனுமதி வழங்கப்பட்டு வனஇலாகாவிடம் இருந்து அவை விடுவிக்கப்பட்டு அதற்கான வரைபடங்கள் கூட 2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த 18 ஏக்கர் காணியும் கைவிடப்பட்…
-
- 1 reply
- 368 views
-
-
தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் அரசியல் விவகாரங்கள் பற்றியும் எவர் வாய் திறந்தாலும், முதலில் அவர்களை இலங்கையின் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த அரசியல்வாதிகள் அடையாளப்படுத்துவது புலிப்பயங்கரவாதிகள் என்று தான். இந்த அடையாளப்படுத்தல் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனையும் விட்டுவைக்கவில்லை. இலங்கையில் இது ஒருவகையான வியாதியாக மாறிப்போயுள்ளது அல்லது மனநோயாக மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாய சூழலில் இருந்தது மகிந்த தரப்பு. சர்வதேச நெருக்கடிகளும், இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்திற்குப் பின்னர் தான் மகிந்த அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இணங்கியது. இலங்கையின் மற்றைய மாகாணங்களை …
-
- 0 replies
- 367 views
-
-
தமிழரை பற்றி என்னதான் பேசினாலும் பயங்கரவாதியை போல் தன்னை கொழும்பில் சித்தரிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கடந்த 60வது வருடம் தமிழர்களை முன்னேற விடக்கூடாது என்ற எண்ணம் இன்னமும் மாற வில்லை என்றும் இதற்கு எடுத்து காட்டாக இரண்டாம் உலக யுத்ததின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் நினைவு படுத்தினார். இதேவேளை, அண்மையில் தான் ஒரு இடத்தில் உரையாற்றிய விடயம் ஒன்றுக்கு பதில் கிடைத்துள்ளதாகவும் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார். மேலும் தான் உரையாற்றிய விடயத்தில் கோயில்களில் 6 காலம் பூஜை செய்யுங்கள் புதிய கோவில்கள் கட்டுவதற்கு முக்கியத்த…
-
- 0 replies
- 201 views
-
-
முல்லைத்தீவில் 4396 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 41465 குடும்பங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 4396 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாக மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்களின் படி ஆறு பிரதேச செயலலாளர் பிரிவுகளையும் சேர்ந்த 4396 பேர் இருப்பதாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முப்பது வயதிற்கு உட்பட்ட இளம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 193 காணப்படுகின்றனர் மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கிறது. இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளால் 1617 பேரும், விபத்துக்களால் 93 பேரும், நோய் மற்றும் இய…
-
- 0 replies
- 181 views
-
-
பொருளாதார மத்திய நிலையம் வடக்கில் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நாளை காலை 10 மணிக்கு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கலந்துரையாடலில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வட மாகாணசபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் அதன் பிரகாரம் தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மையம் அமையவேண்டும் எனக்கோரியும் வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் கடந்த 27 ஆம் திகதி…
-
- 0 replies
- 248 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு எதிராக இன்று காலை களுவாஞ்சிக்குடி பகுதியில் ஆர்ப்பாட்டம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தமது கடமைகளை பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளாமைக்கு எதிராகவே பொது மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பொது மக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டமானது பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்பமாகி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று நிறைவடைந்துள்ளது. பட்டிருப்புமத்திய மகா வித்தியாலத்தில் கல்வி கற்ற 07 வயதுடைய மேகநாதன் மோகவர்மன் என்ற மாணவன் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 15 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்…
-
- 0 replies
- 283 views
-
-
குறைந்த விலையில் சிகரெட் தருமாறு கோரி கடை உரிமையாளர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மதுபோதையில் யாழ். பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோத்தர்கள், யாழ். பேரூந்து நிலையத்தின் பின்புறமாக உள்ள தேனீர் கடை ஒன்றிற்கு சென்று, 100 ரூபாவிற்கு 4 சிகரெட் தருமாறு கோரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த கடைக்குச் சென்று, 100 ரூபாவினைக் கொடுத்து விட்டு பொலிஸார் 4 சிகரெட் தருமாறு கோரியுள்ள நிலையில், கடை உரிமையாளர் இரண்டு சிகரெட்டுகள் தான் தர முடியும் என்றும் ஒரு சிகரெட்டின் விலை 40 ரூபா என்றும் கூறியுள்ளார். கோபமடைந்த பொலிஸார் ஏன் 40 ரூபா, என்றும் சிகரெட் ஒன்று 30 ரூபா தானே என்ற…
-
- 4 replies
- 506 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் அண்மைய காலமாக உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தம்மிடம் கேள்வி கேட்பதில் எவ்வித பயனும் கிடையாது என மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்கு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளை, தட்டிக்கழித்தவாறு பதில் வழங்கிய அமைச்சர், தான் ஒரு மருத்துவர் அல்ல எனவும் கூறியுள்ளார். http://www.tamilwin.com/politics/01/109636
-
- 6 replies
- 489 views
-
-
-
- 2 replies
- 275 views
-