ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
நீதி தொடர்பில் அரசு தவறான அணுகுமுறை! சிவில் சமூக பிரதிநிதிகள் குற்றச்சாட்டு!! இலங்கை அரசாங்கம் நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் தவறான அணுகுமுறையைப் பின்பற்றுவதாகவும் பொறுப்புக்கூறலிற்கான பொறிமுறையை தாமதிக்கின்றது என்று எழுபது பேர் கையெழுத்திட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 17 மாதங்கள் கடந்துள்ளன. ஆனாலும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றும் இதில் எந்த முன்னேற்றமும் காணப்படாமை குறித்த தமது ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்துவதாகவும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாச்சார…
-
- 0 replies
- 218 views
-
-
தமிழர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த இறுமாப்பு அரசியல் தலைவர்களின் கதி அரசுக்கு பாடம்! - விக்னேஸ்வரன் [Thursday 2016-06-23 19:00] தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனை நன்கு அறிய வேண்டும். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என்று பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும்என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், தேசிய விதவைகள் பட்டயத் தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றத…
-
- 0 replies
- 271 views
-
-
கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன வடமாகாணத்தில் கடந்த காலத்தில் அசாதாரண சூழல் காரணமாக (போர்காலத்தில்) கால்களை இழந்த 310 பேர்களுக்கான மாற்றுக்கால்களை வழங்கும் நிகழ்வு இன்று யாழ் இலங்கை வேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக யாழ் இந்திய உதவி துணைத் தூதுவர் அ.நடராஐன் மற்றும் மாவட்ட ரொட்றிக் கழக ஆளுநர் பி.வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் யாழ் மாவட்டத்தில் 165 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 195 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 187 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 230 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 145 பேருக்கும் மாற்றுக்கால்கள் வழங்கப்பட்டன. மூன்று கோடி ரூபா செலவில் இம்மாற்றுக்கால்கள் கொள்வனவு செய்யப்பட்ட…
-
- 0 replies
- 294 views
-
-
புதிய கட்சி உருவாக்கும் எண்ணமில்லை: மஹிந்த புதிதாக கட்சி ஒன்றினை உருவாக்கும் திட்டம் தம்மிடம் இல்லையென முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும், பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஒன்றிணைந்த எதிர்கட்சி என்ற ஒரு கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் புதிதாக கட்சி உருவாக்கும் எண்ணமில்லை. என்ன நடக்க போகின்றது என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப்போவதாக தெரிவிக்கப்படும்…
-
- 0 replies
- 297 views
-
-
ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?’ யாழில் துண்டுபிரசுரம் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் யாழ் நகரில் இன்று (வியாழக்கிழமை) துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்று காலை யாழ் நகரப்பகுதியிலுள்ள கடைகள், மற்றும் பொதுமக்களிடம் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ‘ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?’ என்ற தலைப்பிலான துண்டுபிரசுரங்கள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தில் ஜனநாயகம், அடக்குமுறை, மக்களின் வாழ்க்கை, தலைவிதி ஆகிய உப தலைப்புக்களில், மக்களுக்கான தெளிவுபடுத்தல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. …
-
- 1 reply
- 1.4k views
-
-
சொந்த ஊருக்குச் சென்ற அந்தோனியார் -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், பலாலி வடக்கு, அன்டனிபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற அந்தோனியார் சிலை, மீண்டும் நேற்று புதன்கிழமையன்று (22) அதேயிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. யுத்தம் காரணமாக, கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று பலாலி வடக்கிலிருந்து மக்கள், இடம்பெயர்ந்து சென்றனர். இதன்போது, அங்கிருந்த அந்தோனியாரையும் தங்களுடன் எடுத்துச்சென்றனர். அதன் பின்னர், பலாலி வடக்கை உயர்பாதுகாப்பு வலயமாக அறிவித்த பாதுகாப்பு தரப்பினர், இராணுவத்தினர் வசம் வைத்திருந்தனர். இடம்பெயர்ந்த மக்கள், அதன் பின்னர் தாங்கள் வசித்த பருத்தித்துறையில் அந்தோனியாரைப் பிரதிஷ்டை செய…
-
- 1 reply
- 1.5k views
-
-
மஹர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி (UPDATE) மஹர நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் போதைபொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 11.15AM மஹர மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஹய்பிரிட் வாகனமொன்றில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறைச்சாலையிலிருந்து நீதிம…
-
- 0 replies
- 287 views
-
-
வெள்ளவத்தையில் ஹெரோய்ன்: மூவர் கைது ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருடன், மூவரை வெள்ளவத்தையில் வைத்து இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அந்த போதைப்பொருளை கடத்திய அதிசொகுசு கார்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து 7 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி ஒருகோடி ரூபாவாகும் என்றும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/175277/வ-ள-ளவத-த-ய-ல-ஹ-ர-ய-ன-ம-வர-க-த-#sthash.BZyI0nPb.dpuf
-
- 6 replies
- 476 views
-
-
கடந்த ஜெனீவா அமர்வில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முன்னேற்றம் காணப்படாத தீர்மானங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெளிவாகக் குறிப்பிடவேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இதில் கடந்த ஆண்டு சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக வாய்மூல அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார். இதில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து…
-
- 0 replies
- 460 views
-
-
இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். கரிகாலன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திய அவர், 2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து அடைக்கலம் தேடினார். சிறிலங்காவில் துன்புறுத்தப்படும் அபாயம் உள்ளவர் என்ற அடிப்படையில் அகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தற்போது நிரந்தர வதிவிட உரிமை பெற்றுள்ள அவர், மெல்பேர்னில் வசித்து வருகிறார். இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள படகில் இருந்த- ஆனந்தி ( உண்மையான பெயர் அல்ல) உள்ளிட்ட சிலருடன் சிறி…
-
- 0 replies
- 365 views
-
-
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவிப்பு, மகிந்தானந்த எம்.பி.யின் சவால் , பிமல் நிஷாந்த எம்.பி.யின் கொலை மிரட்டல் தொடர்பான சிறப்புரிமை மீறல், பிரதமரின் பதிலடிகள் என சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சபை அல்லோலகல்லோலப்பட்டது. பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. செவ்வாய்க்கிழமை சபை நடவடிக்கைகள் தமிழில் ஆரம்பிக்கப்பட்டது போன்றே சகல அறிவிப்புக்களையும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மொழியிலேயே முன்னெடுத்தார். இதனால் அரச தரப்பு பிரதம கொறடா மற்றும் அமைச்சர்கள், சிங்கள எம்.பி.க்களிடையே தடுமாற்ற நிலை ஏற்பட்டது. அமைச்சர்கள் உரைபெ…
-
- 0 replies
- 288 views
-
-
-எம்.றொசாந்த் இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக நபர் ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்தார். அவரின் தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்கும், முன்னர் தாபரிப்புப் பெற்ற அதே பெண்ணே வந்தார். …
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும். இதற்கான முழு ஒத்துழைப்பை முதலமைச்சர் வழங்க வேண்டும் என கோரியே இவ்வுணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா றோயல் காடன் மண்டபத்தில் இடம்பெற்றது. உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வரியிறுப்பாளர் ச…
-
- 2 replies
- 489 views
-
-
அரச படையினர் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் நாட்டையும் அரசாங்கத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குண்டுகள் இலங்கையில் காணப்பட்டவை என்பதனை அவர்கள் எவ்வாறு நிரூபிப்பார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப் பேரவை இலங்கை குறித்து ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் நோக்குவதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். குண்டு செயலிழக்க குண்டுகளை மீட்பதற்காக வந்தவர்கள் இது பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்தால் அது ஒழுக்கவிதி மீறலாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள…
-
- 0 replies
- 328 views
-
-
இரணைமடுக் குளத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகளை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார். இபாட் திட்டத்தின் கீழ், சுமார் 3,200 மில்லியன் ரூபாய் செலவில், இரiணைமடுகுளத்துக்கான அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 'இவ்வாண்டு சிறுபோகத்தினைக் கைவிட்டு, இந்த புனரமைப்பு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து வேலைத்திட்டங்களும் முடிக்கப்பட வேண்டும். அந்தவகையில் தற்போது 58 சதவீதமான வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன' என்று சுதாகரன் தெரிவித்தார். 'பிரதானமாக, வாய்க்கால் உட்கட்டுமான…
-
- 0 replies
- 318 views
-
-
சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விரைந்து செயற்பட்ட அரசாங்கம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விரைந்து செயற்பட வில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எம்முடன் ஒற்றுமையாக இருங்கள் என அரசாங்கம் நேசகரம் நீட்டுகின்றது. அதனை நாங்களும் மறுக்கவில்லை. தமிழ் மக்களின் குறைகள் நீங்கும் வகையில் நீங்கள் ஒரு அடி முன்னோக்கி வரும் போது நாங்கள் பத்து அடி உங்களை நோக்கி முன்னோக்கி வருகின்றோம். இதனையே நாங்கள் உங…
-
- 0 replies
- 752 views
-
-
இலங்கை அரசு நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் தவறான அணுகுமுறையை பின்பற்றுகின்றது. பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையைத் தாமதிக்கின்றது. ஆனால், உண்மை ஆணைக்குழுவை அமைப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றது. இவ்வாறு சிவில் சமூகப் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் 70 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். குறித்த அறிக்யைில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 17 மாதங்கள் கடந்துள்ளன. ஆனாலும், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. இதில் எந்த முன்னேற்றமும் காணப்படாமை குறித்து எமது ஆழ்ந்த கரிசனையை வெளிப்படு…
-
- 1 reply
- 357 views
-
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, கூட்டாட்சி முறையை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். தென் பகுதியிலுள்ள தீவிர போக்குடையவர்களின் கண்ணோட்டத்தில், தமிழ் மக்களின் பிரச்னைகளை அரசாங்கம் அணுகக் கூடாது. இந்நிலையில், யுத்தக்குற்றச்சாட்டு விசாரணையில், சர்வதேச நீதிபதிகள் இடம்பெறாத எந்த அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு ஏற்புடையதல்ல. கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் …
-
- 0 replies
- 504 views
-
-
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர் ஆவேசமாக பதிலளித்துள்ளார். கபினட் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார். இதன்போது வவுனியா பொருளாதார நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்கப்படாமையால் திட்டத்தை மதவாச்சிக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் அமைச்சரவையிடம் கோரியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், இத்திட்டத்திற்கு பொருத்தமான காணிகள் எம்மால் வழங்கப்பட்டன. ஆனால் அக் காணிகள் தொடர்பில் ஏதோதோ காரணங்களைக் கூறி தட்…
-
- 3 replies
- 407 views
-
-
வடபகுதி கடலில் ஏனைய பிரதேச மீனவர்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடபகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபட ஏனைய பிரதேச மீனவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. தொன்றுதொட்டு வடக்கு மற்றும் கிழக்கு கடல் பிரதேசங்களுக்கு ஏனைய பிரதேச மீனவர்கள் சென்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீனவர்களே தங்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு கற்றுக்கொடுத்ததாக வட பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தற்போதைய சூழலில் அநாவசியமாக வடபகுதி கடலில் பிரவேசிப்பவர்களாலேயே பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனை தடுக்க வேண்டும். கடந்த காலங்களில் அந்த கடல் பிதேசத்திற்கு சென்றுவந்த மீனவர்களுக்கு எவ்வித…
-
- 3 replies
- 361 views
-
-
யாழில் கஞ்சா ரைவத்திருந்த இரு இளைஞர்கள் கைது 126 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட நபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் 300 கிராம் கஞ்சாவுடன் மற்றொரு நபரையும் யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குருநகர் சவற்காலை சந்தியில் வைத்து, அதே இடத்தினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் 126 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், சொலமன் வீதி கொய்யாத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரை 300 கிராம் கஞ்சா பொதிகளுடன் யாழ். குருநகர் கடற்கரை வீதியில் வைத்து இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள பிரபல ப…
-
- 0 replies
- 278 views
-
-
7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வைத்தியர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் நிந்தவூர் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 20ம் திகதி இரவு 07 வயதான சிறுமி ஒருவரை அவரது தந்தை சந்தேகநபரான வைத்தியரின் தனியார் மருந்து வழங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது, சம்பந்தப்பட்ட வைத்தியரால் தனது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக, குறித்த தந்தை சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அடுத்த மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ள…
-
- 0 replies
- 404 views
-
-
மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமையாது! பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கப் பெற வேண்டும். பெண்கள் பிரச்சினைகள் தொடர்பாக, விசேடமாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளைக் கொண்ட விதவைத் தாய்மார்கள் ஆகியோரின் புனர்வாழ்…
-
- 0 replies
- 381 views
-
-
13 அடி நீளமான நாகத்தின் உடல் அருங்காட்சியகத்தில் தெமட்டபிட்டிய தம்மிககம பிரதேசத்தில் தென்னை தோட்டத்துக்கு மத்தியில் இறந்த நிலையில் இருந்த 13 அடி நீளமான நாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று வெளியான செய்தியை அடுத்து, தேசிய அருங்காட்சியக தோல்பொருள் பிரிவு அதிகாரிகள் குறித்த இடத்துக்கு இன்று சென்றிருந்தனர். தென்னை தோட்டத்தின் உரிமையாளர், இழைகளை வெட்டுவதற்காக சென்றபோது, சுமார் 10 அடிக்கும் அதிக நீளமுடைய நாகம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவித்திருந்தன. எனினும் இன்று சென்ற அதிகாரிகள் குறித்த நாகத்தின் நீளம் 13 அடி என்று கூறுகின்றனர். இதற்கு முன்னர் இவ்வளவு நீளமாக நாகம் இலங்கைய…
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கையிலுள்ள அகதிகளுக்கு நோர்வேயால் ரூ. 1.1 பில். உதவி இலங்கையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள அகதிகளுக்கு, ஏறத்தாழ 1.15 பில்லியன் ரூபாயை (65 மில்லியன் குரோனர்) வழங்குவதற்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே தெரிவித்தார். இந்த உதவி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக (யு.என்.டி.பி) வழங்கப்படும் எனவும், உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகி இருப்போரை மீளக்குடியமர்த்தவும் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் இப்பணம் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 242 views
-