Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் போது வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவி பெற்றக் கொள்ளப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தொழில்நுட்பசார் உதவியும் எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது வேறும் உறுதிமொழிகளின் அடிப்படையிலோ பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ம் அமர்வுகள் நாளைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பாக உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …

  2. யாழில் பெற்றோர்களால் கவனிப்பின்றி வளர்க்கப்படும் இளைஞர்களை சில அரசியல்வாதிகளே குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டி விடுகின்றனர் – யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.வீரசிங்க யாழில் உள்ள இளை­ஞர்­களை அர­சி­யல்­வா­திகள் சிலர் குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு பயன்­ப­டுத்தி வரு­வ­தாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சி.ஐ.வீர­சிங்க தெரி­வித்­துள்ளார். மேலும் பெற்­றோர்­களால் கவ­னிப்­பின்றி வளர்க்­கப்­படும் இளை­ஞர்­களை அர­சி­யல்­வா­திகள் தூண்டி விடு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பாணம் கொக்­குவில் கிழக்கு 3 கிராம சேவை­யாளர் பிரிவில் பொலி­ஸா­ருக்கும் பொது­மக்­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற சந்…

  3. தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத்திட்டத்தில் தங்கியில்லை தமிழர் பிரச்சினைக்கு ஜெயலலிதாவின் தீர்வுத் திட்டத்தில் தங்கியில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக இந்தியன் எஸ்பிறஸ் தெரிவித்துள்ளது. தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக தாம் வாழ்த்து தெரிவித்ததாகவும் உள்நோக்கம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முழுக்க முழுக்க ஜெயலலிதா தீர்வுத் தி;ட்டமொன்றை வழங்குவார் என தங்கியிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் வேறும் தரப்பினரில் தங்கியில்லை என அவர் தெரிவித்துள்ளார். பிரிவிணைவாதத்தை தாம் கோரவில்லை எனவும் அதற்கான போராட்டங்கள் நட…

  4. கிளிநொச்சி இரணைதீவு பகுதியை சேர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தமது சொந்த நிலமான இரணைதீவுப் பகுதியில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளடங்கும் இணைதீவு கிராமத்தில் சுமார் 183 குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 1992ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் ஏற்பட்ட யுத்த நடவடிக்கை காரணமாக இரணைதீவு கிராம மக்கள் தமது சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்தனர். தமது மீன்பிடி உபகரணங்களான வலைகள், படகுகள் முதல் கால்நடைகள் வரை அனைத்தையும் இழந்து இந்த மக்கள் அன்று அகதிகளாக்கப்பட்டதாக கூ…

  5. மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் உள்ள பொது மக்களின் காணிகளில் தற்போது நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி இடம் பெயர்ந்த மக்களை அக்காணிகளில் மீண்டும் மீள் குடியேற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதும், கடற்படையினர் குறித்த காணிகளில் இருந்து வெளியேற எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என இடம் பெயர்ந்துள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் உள்ள காணிகள் மற்றும் வீடுகளில் கடற்படையினர் முகாம்களை அமைத்துள்ளனர். கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இராணுவத்தினர் குறித்த வீட்டுத்திட்டத்தினுள் உட்புகுந்…

    • 0 replies
    • 284 views
  6. உள்­ளக விசா­ர­ணை­யின்­போது சர்­வ­தேச நிபு­ணர்­க­ளுக்கு இட­மில்­லை.! யுத்தக் குற்றம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ர­ணையின் போது எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நிபு­ணர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து எமக்கு தொழில்­நுட்ப உத­விகள் மாத்­தி­ரமே அவ­சி­ய­மாகும். இதனை தவிர எமது உள்­வி­வ­காரம் சார்ந்த பிரச்­சி­னை­களை எம்மால் தீர்த்­துக்­கொள்ள முடியும். மேலும் இந்த விட­யத்தின் போது சர்­வ­தே­சத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணிய போவ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்துள்­ளார். தற்­போது எம்­முடன் முரண்­பட்ட சர்­வ­தேச நாடு­க­ளுடன் சகோ­த­ரத்­து­வத்தை கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ளோம். அத்­…

  7. மாநகர கழிவை அகற்ற விசேட செயற்றிட்டம் செல்வநாயகம் கபிலன் 'யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் கழிவுகளை அகற்றுவதற்கான செயற்றிட்டத்தை மாநகர சபையுடன் இணைந்து நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான திட்ட வரைபுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவகின்றது' என்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'குறித்த பகுதியிலுள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்புடைய செயற்பாடு, யாழ்ப்பாண மாநகர சபைக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக கரையோரப் பகுதியிலுள்ள கால்வாய்களின் நீரை அகற்றுவது சிக்கலான விடயமாக மாறியுள்ளது. இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொ…

  8. இன்று ஆரம்பமாகின்றது ஜெனிவா கூட்டத் தொடர் : 29 இல் வாய் மூல அறிக்கை; 28 இல் மங்கள பயணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறையின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதியே உரையாற்றவுள்ளார். அந்தவகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா பயணமாகவுள்ளார். அத்துடன் இம்முறை ஜெனிவாக் கூட்டத்தொடரில் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவலவும் இலங்கையின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளார். இம்முறை ஜெனிவ…

  9. வடக்கில் இராணுவ முகாமகள் அகற்றப்படாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கண்டி அஸ்கிரி மகாநயக்கரை சந்தித்தது ஆசி பெற்றுக்கொண்ட போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வடக்கில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர் மேற்கொண்டு வருகின்றார். இராணுவ முகாம்கள் தொடர்ச்சியாக பேணப்படும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முன்னதாக வடக்கில் சிங்கள, முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த மக்களை விரட்டியடித்தனர். தற்போது வடக்கில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் உதவியுடன் வடக்கில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனமொன்று நிறுவப்பட உள்ளது, மஹ…

  10. ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு கடமைப்பட்டுள்ளது! -மனித உரிமைகள் கண்காணிப்பகம் [Sunday 2016-06-12 08:00] ஜெனீவாவில் ஏற்றுக்கொண்ட யோசனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதில் ஏற்கனவே தமது கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்தை வலியுறுத்தியே மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் யோசனைப்படி இலங்கை ஏற்றுக்கொண்ட விடயங்களில் காணாமல் போனோர் அலுவலகமும் அடங்குகிறது. இந…

    • 1 reply
    • 386 views
  11. மட்டக்களப்பில் நடைபெறுகின்ற அத்துமீறிய சிங்கள குடியேற்றம் மற்றும் விகாரைகள் அமைப்பதற்கு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் துணைபோவார்களாக இருந்தால் நாங்கள் வீதிக்கு இறங்கி போராடுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றுவருகின்ற சிங்கள குடியேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்படுகின்ற தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்ட பல நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பின்னணியிலும் கூட்டு எதிர்க்கட்சிகளின் பின்னணியிலும் திட்டமிட்டு குடியேற்றங்கள் மேற்க…

    • 0 replies
    • 314 views
  12. வடக்கு இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம் என கண்டி அஸ்கிரி மாநாயக்க தேரர் வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். அஸ்கிரி மாநாயக்கரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று சந்தித்த போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளதாவது, சாலாவ இராணவ ஆயுதக் களஞ்சியம் வெடித்துச் சிதறியதனைத் தொடர்ந்து வடக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எனினும் வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது.இராணுவ முகாம்களை அந்தந்த இடங்களில் பாராமரிப்பதன் மூலம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொள்ள முடியும். நாட்டின் அனைத்து இன சமூகங்களுடனும் புரிந்துணர்வுடன் செயற்படு…

    • 1 reply
    • 337 views
  13. ரிவிர சிங்கள செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீது இராணுவத்தின் புலனாய்வு உறுப்பினர்களே தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளின் மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தநிலையில் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கும் உபாலிதென்னக்கோனின் தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக விசாரணையாளர்கள்தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/crime/01/107469

    • 0 replies
    • 277 views
  14. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள தற்காலிக பாடசாலைக்கட்டிடம் ஒன்று நேற்று சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்துள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று காலை அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். நேற்று பிற்பகல் குடியிருப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் நாளை திங்கட்கிழமை தரம் ஒன்று மற்றும் இரண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையிலேயே இந்த தீச்சம்பவம் இடம்பெற்றுள்ளது…

    • 0 replies
    • 192 views
  15. வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவோராலே பாலியல் துஷ்பிரயோகம் அதிரிகப்பு இலங்கை கடற்பரப்பில் சண்டித்தனம் காட்டும் இந்தியா, பாகிஸ்தான் கடற்பரப்பில் அணுவாயுதத்திற்கு பயந்து அத்துமீறுவதில்லை என ஜே.வி.பி. எம். பி. பிமல் ரத்னாயக்க நேற்று சபையில் தெரிவித்தார். வெளிநாடுகளிலிருந்து யாழ். குடா நாட்டுக்கு விடுமுறைக்காக வருவோரால் “பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்” அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முன்வைத்த வடக்கு, கிழக்கு நிலைமைகள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஜே.வி.பி. எம்.பி. பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவ…

  16. போரின் இறுதிக்கட்ட மீறல்கள் புலம்பெயர் புலிகள் சாட்சியமளிக்கத் தயார்! போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என்று, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். ஜஸ்மின் சூகா தலைமையிலான, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, மனித உரிமைகளுக்கான நிறுவகத்துடன் இணைந்து, இலங்கையில் அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் மேற்கொண்ட ஆய்வின் போதே, அவர்கள் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். நான்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 75 தமிழர்களிடம், இந்த ஆய்வு நடத…

  17. தகுதியுடைய தமிழர்களுக்கு அரச உத்தியோகத்தை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது தகுதியுடைய தமிழர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் முறையிட்டுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கும், சிங்களத் தலைவர்கள் சிங்களவர்களுக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கின்றனர். அத்துடன், அதிகாரத்திலுள்ள குறைந்தளவான தமிழர்களே சில தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதாகவும், தகுதியான தமிழர்களுக்கு அரச பணிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தமிழர்களுக்கு எதிரான பாராபட்சங்கள் பற்றி இலங்கையில் நீண்டகாலமாக முறைப்பாடுள்ளது, எனினும் அதில் எந்த…

  18. கதிர்காம ஆலயத்தை நோக்கிய 400 கிரோமீற்றர் பாதயாத்திரை.! கதிர்காமத்தை நோக்கிய 400 கிலோமீற்றர் பாதயாத்தரை நேற்று மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. இப்பாதயாத்திரை கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கூடாக எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி கதிர்காமம் முருகன் ஆலய திருத்தலத்தை அடையவுள்ளது. இடை நடுவில் குறித்த மாவட்டங்களின் பிரதான ஆலயங்களில் தங்கி மேற்படி பக்தர்கள் கதிர்காமத்தை அடையவுள்ளனர். இப்பாதையாத்திரை குழுவில் ஆண்கள் பெண்கள் அடங்கலாக சுமார் 120 பேர் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk/article/7452

  19. இலங்கையில் சிறுநீரக நோயை ஒழிக்க தூய குடிநீர் திட்டம்: சிறிசேன அறிவிப்பு நாட்டின் தேசிய பிரச்சினையாகியுள்ள சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு தூய குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தூய குடிநீர் விநியோக திட்டத்தை துவக்கி வைத்த மைத்திரிபால சிறிசேன இலங்கையின் வடமத்திய மாகாணத்திலேயே அதிக அளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்ற போதிலும், இந்த நோய் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வவுனியா மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். நாட்டில் வருடமொன்றிற்கு ஐயாயிரம் பேர் புத…

  20. சம்பூர் பகுதியிலுள்ள காளி கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை inSha திருகோணமலை சம்பூர் பகுதியிலுள்ள காளி கோயில் உடைக்கப்பட்டு தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சுமார் 77,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளும், 8000 ரூபா பணமும் கோவிலிருந்து திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளங் காணப்படவில்லை. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை காளி கோயில் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்…

  21. இரணைதீவிற்கு செல்லவுள்ள இணைத்தலைவர்கள் நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி இரணைதீவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள், கிளிநொச்சி மாவட்டச் செயலர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் இரணைதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி இரணைதீவிற்கு படகுகளில் செல்வதென சனிக்கிழமை (11) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு போர் ஏற்பட்ட பின்னர் பூநகரி இரணைதீவிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து முழங்காவில் இரணைமாதா நகரில் குடியமர்ந்துள்ளனர். மீள்குடியேற்றத்தின் பின்னர் பூநகரிப் பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற…

  22. வடக்கின் இராணுவம் வெளியேற்றப்படாது.! வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன. வடக்கு முதல்வரின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. வடக்கில் தொடர்ந்தும் இராணவ ஆக்கிரமிப்பு உள்ளதாகவும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இராணுவம் தடையாக இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான பதிலை தெரிவிக்க…

  23. நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை -சம்பந்தன் விசனம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய அரசு வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்ற போதும், நல்லிணக்கம் உரிய முறையில் தென்படவில்லை. நீதி, சமத்துவம் , ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் அரசிடம் சரியான திட்டம் இல்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஆதங்கம் வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். வடக்கு, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவிக்கையில், …

  24. இந்திய கடலில் தத்தளித்த இலங்கை தமிழ்குடும்பம் மீட்பு! இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களை நாகப்பட்டின மீனவர் குழுவினால் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான படகில் பயணித்த இலங்கையர்கள், மத்திய கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டுள்ளதாக அக்கரைப்பேட்டை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவை சேர்ந்த துஷ்யந்த் (27), துவாரகை (24) மற்றும் காகிதா(2) என இவர்கள் அடையா…

  25. லண்டன் பிரஜை மீது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் -செல்வநாயகம் கபிலன் சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (06) இரவு, யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இலண்டனில் வசித்து வந்தவரும், குடமியன் வரணிப் பகுதிய…

    • 8 replies
    • 968 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.