Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கோரி ப்ளொட் மாநாடு இலங்கையில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதுடன், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் நோக்கிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புளொட் அமைப்பு மாநாடு ஒன்றை ஞாயிறு அன்று வவுனியாவில் நடத்தியுள்ளது. மூன்று வருடங்களுக்கு பின்னர் அந்த அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் ஒரு திருப்பு முனையில் இருப்பதாகக் கூறும் சித்தார்த்தன், இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் தலைமையை ஓரணியில் பலப்படுத்துவது மிக முக்கி…

    • 1 reply
    • 730 views
  2. வயோதிபப் பெண் கழுத்து வெட்டிக் கொலை - செல்வநாயகம் கபிலன் உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீடொன்றில் இருந்த வயோதிப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். இந்த வயோதிப் பெண்ணும் அவரது கணவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினம் வயோதிப்பெண், உணவை உண்டு கைகழுவச் சென்ற போது, பின்னால் வந்த இனந்தெரியாத நபர், வயோதிப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். கறுத்து அழுபட்ட நிலையில் வயோதிப் பெண் வீட்டுக்குள் ஓடிச்சென்று விறாந்தையில் வீழ…

  3.  சிறுவனும் இளைஞனும் வாள்களுடன் கைது - செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், கந்தரோடைப் பகுதியில் வாள்களுடன் 17 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஒருவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குழு மோதல் ஒன்றுக்கு தாயாராகவிருந்த போது, இவர்களைப் பொலிஸார் கைதுசெய்தனர். இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் கூறினர். - See more at: http://www.tamilmirror.lk/172841/%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E…

  4. தெடிகமுவ, அம்பலம, மலைகளும் படுக்கும்? புளத்கொஹுபிட்டிய, அம்பலம பிரதேசத்திலுள்ள பல இடங்களிலும் வீடுகளிலும் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்புக் கோடுகள் விழுந்துள்ள நிலையில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதேவேளை, மண்சரிவு அபாயத்துக்கு இலக்காகியுள்ள ரணால, தெடிகமுவ மலையை அண்மித்த 13 குடும்பங்களையும் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன், அரநாயக்க பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, அம்பலம மலையும் நேற்றுச் சரிந்துள்ளது. இந்த அம்பலம மலையானது, அரநாயக்க சாமசர மலையின் மற்றுமொரு வளைவிலேயே அமைந்துள்ளது. இந்த மண்சரிவு காரணமாக, அம்பலம மலையடிவாரத்தில் அமை…

  5. வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்த முடிவு வெல்­லம்­பிட்டி, கொலன்­னாவ பிர­தே­சத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தொடர்ந்தும் நிவா­ர­ணங்கள் வழங்­கு­வ­தற்கும் வீடுகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­கா­லிக வீடுகள் அமைத்­துக்­கொ­டுப்­ப­தற்கும் அவர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு உட­னடி தீர்­வுகள் வழங்­கு­வ­தற்கும் தீர்­மானிக்­கப்­பட்­டுள்­ளது. வெல்­லம்­பிட்டி, கொலன்­னாவ பிர­தே­சத்தில் வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தொடர்ந்து நிவா­ர­ணங்கள் மற்றும் அவர்கள் மீண்டும் வீடு­க­ளுக்கு செல்­வ­தற்கு தேவை­யான வச­திகள் தொடர்­பாக ஆராயும் உயர்­மட்ட கூட்டம் நேற்று வெல்­லம்­பிட்டி கொலன்­னாவ பிர­தேச செய­ல­கத்தி…

  6. ஜீ –7 இல் கலந்து கொள்ள ஜனாதிபதி ஜப்பான் விஜயம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 25 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜப்­பா­னுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். ஜப்­பானில் இடம்­பெறும் ஜீ –7 நாடு­களின் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி ஜப்பான் செல்­கிறார். இதன்­போது அம்­மா­நாட்டில் ஜீ–7 அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்­களைச் சந்­தித்து ஜனா­திபதி பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இம்­மா­நாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்­ளது. இதே­வேளை, ஜப்­பா­னியப் பிர­தமர் ஷின்சோ அபேயின் விசேட பிர­தி­நிதி இலங்கை வந்­த­தோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தை…

  7. உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு, சொத்து, சுகம், பிறப்­புச்­சான்­றிதழ் என அனைத்­தையும் இழந்து நடு வீதியில் அக­தி­க­ளாக நிற்­கிறோம். நாங்க கன­வுல கூட நினைக்­கல இப்­படி ஒரு துய­ரத்தை அனு­ப­விப்போம் என்று. கடந்த ஆறு நாட்­க­ளாக ஒரே உடுப்­போட இருக்­கிறோம். சில பொருட்­களை வெளிப்­ப­டை­யாக வாய் திறந்து கேட்க முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். கூலித்தொழில் செய்து கஷ்­டப்­பட்டு குருவி போன்று கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்த அனைத்தும் இன்று இல்­லாமல் போய்­விட்­டது என வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்டு வீதி­க­ளிலும் விகா­ரை­க­ளிலும் முகாம்­க­ளிலும் தங்­கி­யி­ருக்கும் மக்கள் கண்…

  8. தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்விக்காகச் சாகும்வரை பட்டினிப் போர் என... தமிழ் ஆர்வலர்களைக் கொண்டு இயக்கம் நடத்தியவரும் பார்ப்பனர் நடத்தும் இசைவிழாக்களில் தமி ழ் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தை நிறுவி, தமிழிசை வாணர்களைப் பெருமைப் படுத்திப் பொற்கிழி வழங்கிப் பாராட்டி, தமிழர் இசை விழாவை நடத்தியவரும், நந்தன் இதழை நடத்தி தமிழீழ விடுதலைக்குத் துணை நின்றவரும், என் வாழ்க்கையில் பொது வாழ்வுப் போராட்டங்களில் எனக்கேற்பட்ட அரச அடக்குமுறைகளிலிருந்து விடுபட எந்நாளும் துணை நின்றவருமான தந்தை, ஐயா நா.அருணாசலம் அவர்கள் ... வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்து கவலைக்கிடமாக உள்ளார் என்பதை …

  9. சீரற்ற காலநிலை : வீடுகளில் திருடிய 15 பேர் கைது.! வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியவர்களின் வீட்டில் திருடிய 15 நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களைப் பாதுகாக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6690

    • 1 reply
    • 220 views
  10. படையினர் வசம் உள்ள தனியார் காணிகள் தொடர்பாக, தகவல் திரட்டும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழு, வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளது. படையினர் வசம் உள்ள காணிகளின் விடுவிப்பு மற்றும் வடக்கு -கிழக்கு மீள்குடியமர்வு தொடர்பில், ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. கடந்த மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலில், அரச அதிகாரிகள்,உரிய தகவல்களை வழங்கவில்லை என்று ஜனாதிபதி கடுமையாகச் சாடியிருந்தார். அத்துடன் பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளை நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும் பணித்திருந்தார். பாதுகாப்புத் தரப்பினரால் வழங்கப்படும் தகவல்களுக்கும் அரச அதிகாரிகளின் தகவல்களுக்கும் இடையில் ம…

  11. மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு துரித நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். இதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மட்­டக்­க­ளப்பு விமான நிலை­யத்தில் வர்த்­தக ரீதி­யி­லான பய­ணிகள் சேவை­க­ளுக்­கு­ரிய தொழிற்­பா­டு­களை ஆரம்­பிப்­பது அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். அதற்­க­மைய விமான நிலைய முன…

    • 0 replies
    • 351 views
  12. பாடசாலையில் வைத்து ஆசிரியரைத் தாக்கினார் அபிவிருத்திச் சங்கச் செயலாளர்! [Sunday 2016-05-22 20:00] இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உதயரூபன் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி ஆசிரியரான உதயரூபன் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரான நிலாகரனால் கல்லூரியில் வைத்து தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் உதயரூபன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஆசிரியர் உதயரூபன் வழங்கிய பொலிஸ் முறைப்பாட்டில் ‘ பாடசாலை மாணவர்களின்…

  13. சகோ­தர தமி­ழர்­களை கொன்­று­விட்டு யுத்­த­வெற்­றி­விழா கொண்­டாட முடி­யாது யுத்­தத்தில் எமது சகோ­தர இனத்­த­வ­ரான தமி­ழர்­களை கொன்­று­விட்டு நாம் யுத்­த­ வெற்­றி­விழாக் கொண்­டாட முடி­யாது. விடு­த­லைப்­பு­லிகள் என்­றாலும் அவர்­களும் இலங்­கை­யர்கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூடாது. சிங்­கள யுத்த வெற்­றி­விழா எனக்­கூறி மீண்டும் தமி­ழர்­களை பிரி­வி­னை­வா­தி­க­ளாக்கி அவர்­களை ஓரம்­கட்டும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும் என பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பிட்டார். யுத்­தத்தில் உயி­ரி­ழந்த மக்கள் யாராக இருந்­தாலும் அவர்­களை நினை­வு­கூர வடக்கில் மக்­க­ளுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்­பிய இடங்­களில் அவர்­களை நின…

    • 49 replies
    • 2.7k views
  14. வவுனியா உதைபந்தாட்டச் சங்கத் தலைவர் மீது தாக்குதல்! [Sunday 2016-05-22 08:00] வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத் தலைவர் குணரட்ணம் ஜோன்சன் (வயது 48) மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போதும் அவர்கள் மூன்று மணிநேரமாக தாக்குதலுக்குள்ளானவரை கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றில் போட்டி விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதாக அல்மதார் விளையாட்டுக் கழகத்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த அணியின் தடையை நீக்குமாறு அரசியல்வாதி…

  15.  காணியை தனியார் உரிமை கோருவதை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் -சொர்ணகுமார் சொரூபன் யாழ். வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் கடற்கரையை அண்மித்த 25 ஏக்கர் காணியை தனியார் ஒருவர் உரிமை கோருவதை எதிர்த்து அப்பகுதி மீனவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (22), பொலிகண்டி, ஆலடிவான் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் இப்பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், 'இப்பகுதியில் நாம் தலைமுறை தலைமுறையாக மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றோம். அத்துடன், இக்காணிப்பரப்பிலேயே எங்களது தெப்பங்கள், படகுகள், மீன்பிடி உபகரண…

    • 1 reply
    • 326 views
  16. இரு நாள் பகலுணவை தானம் செய்யும் சிறைக் கைதிகள்.! மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் தமது இரண்டு நாள் பகலுணவை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபா ஆகியோர் தெரிவித்தனர். மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள அனைத்துக் கைதிகளும் நேற்றும் இன்றும் தமக்கு வழங்கப்படும் பகலுணவை வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளனர். இந்த பகலுணவுக்காக செலவு செய்யும் நிதியினை சிறைச்சாலை தலைமையகத்தின் ஊடாக வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு…

  17. பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அவசியம் : மகிந்த.! பௌத்த பிக்குகளின் பாதுகாப்பு தனக்கு அல்ல நாட்டுக்கே அவசியமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பிக்குகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது எனவும் தனது பாதுகாப்புக்காக பிக்குகள் முன்வந்தமைக்கு பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று ரன்ன பிரதேசத்தில் விகாரையொன்றில் இடம்பெற்ற பௌத்த மத நடவடிக்கையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/6696

  18.  'காணிகள் அற்ற மக்களுக்கு பூமி தானம் செய்ய முன்வரவும்' -ஐ.நேசமணி வட பகுதியில் காணிகள் அற்ற நிலையில் வாழும் மக்களுக்கு பூமி தானம் செய்வதற்கு புலம்பெயர் மக்கள், ஆலய பரிபாலன சபைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் என்று அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. தென்மராட்சியில் காணிகள் அற்ற பல குடும்பங்களுக்கு 'சிவகுருநாதபீடம்' எனப்படும் வேதாந்தமடம் காணிகள் வழங்கியுள்ளதைப் போன்று தங்கள் பொறுப்பில் இருக்கும் காணிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஏனையோரும் முன்வரவேண்டும் என்று மேற்படி சபை கோரியுள்ளது. இது தொடர்பாக சைவ மகா சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்ட…

  19. அனுதாபம்... வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல, கொலன்னாவை பிரதேச மக்களின் நிலைபற்றிக் கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று (22) நண்பகல் இப்பிரதேசங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டார். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு) - See more at: http://www.tamilmirror.lk/172815/%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AE-#sthash.Ioc4nuVn.dpuf

  20. ரூ.36 மில். உதவி வழங்கும் அமெரிக்கா இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மேலும் 36 மில்லியனை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 7.2 மில்லியன் ரூபாயை அமெரிக்கா வழங்கியிருந்த நிலையில் மேலதிகமாக இந்த பணத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்தத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/172816/%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-#sthash.axlDpb3o.dpuf

  21. இடப்பெயர்வு தான் எங்கள் வாழ்வோ...? மழையால் சிதைந்த இலங்கை இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர். இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவுத் தேசம் சிதைந்து போய் இருக்கிறது. இம்முறை மனிதர்களுக்கிடையேயான தாக்குதலால் அல்ல. இயற்கை ஒரு பெரும் யுத்தத்தை அம்மண்ணின் மீது நிகழ்த்தி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த பெரும் மழைக்கு, ஏறத்தாழ 155 பேரை காணவில்லை என்று அரசு தரும் புள்ளி விவரங்களே சொல்கின்றன. இன்னும் ஆங்காங்கே மழை கொட்டி தீர்த்து கொண்டுதான் இருக்கின்றது.…

  22. ஏறாவூர் நகரிலுள்ள மருந்தகம் ஒன்றில் ஒரு வகைப் போதை மாத்திரைகளை மட்டக்களப்புப் பிராந்திய உணவு மற்றும் மருந்துப்பொருள் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அம்மருந்தகத்தில் குறித்த மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவரும் கைதுசெய்துப்பட்டுள்ளார். குறித்த மருந்துக்கடையில் போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் திடீர்ச் சோதனையை மேற்கெண்டனர். இதன்போது, ஒவ்வொன்றும் 150 மில்லிகிராம் கொண்ட 18 மாத்திரைகளைக் பொலிசார் கைப்பற்றியுள்ளர். குறித்த மாத்திரைகள் இளவயதினருக்கு குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்குப் போதையூட்டுவதற்காக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அறியப்படுகின்றது. இந்த மாத்திரைகள் போதை தரக்கூடியது என்றும் மேலும…

    • 11 replies
    • 2.2k views
  23. 184 பாடசாலைகள் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் உள்ள இரு கல்வி வலயங்களிலும் மொத்தம் 184 பாடசாலைகள் உள்ளன. ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன .இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன. அதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசா…

    • 0 replies
    • 445 views
  24.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரிப்பு சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. மேலும், 29 பேர் காயமடைந்துள்ளதுடன் 118 பேர் காணமல் போயுள்ளனர். சுமார் 400 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 57,590 குடும்பங்களைச் சேரந்த 242,927 பேர் இடம்பெயர்ந்து 398 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/172770/%E0%AE%89%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%86%E0…

  25.  தீர்வுத் திட்டம் எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிப்பு -சொர்ணகுமார் சொரூபன் வட மாகாண சபை தயாரித்த அரசியல் தீர்வு திட்டம் சனிக்கிழமை (21) மாலை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க் கட்சி தலைவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்து இந்த தீர்வு திட்டத்தை கையளித்துள்ளனர். அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடக்கு வாழ் மக்களின் அரசியல் அபி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.