Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 184 பாடசாலைகள் உள்ள வவுனியா மாவட்டத்தில் மட்டும் 66 மதுபான விற்பனைக் கூடங்கள் உள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் உள்ள இரு கல்வி வலயங்களிலும் மொத்தம் 184 பாடசாலைகள் உள்ளன. ஆனால் இங்கு மொத்தமாக 66 மது விற்பனைக்கூடங்கள் இயங்குகின்றன .இவ்வாறு இயங்கும் குறித்த 66 மது விற்பனை மையங்களிலும் மதுபானச்சாலைகள் வகையில் 14 உள்ளன. அதேபோன்று , 11 ரெஸ்ரூரன்ட்களும் இயங்குகின்றன. இவற்றிற்கு அப்பால் உள்ளூர் கள்ளுத் தவறனைகள் 41ம் இயங்குவதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தொகையினைக் கொண்ட இம் மாவட்டத்தில் மொத்தமாக 184 பாடசாலைகளும் சகல தரங்களையும் உடைய 14 வைத்தியசா…

    • 0 replies
    • 446 views
  2.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரிப்பு சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. மேலும், 29 பேர் காயமடைந்துள்ளதுடன் 118 பேர் காணமல் போயுள்ளனர். சுமார் 400 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 57,590 குடும்பங்களைச் சேரந்த 242,927 பேர் இடம்பெயர்ந்து 398 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/172770/%E0%AE%89%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%86%E0…

  3.  தீர்வுத் திட்டம் எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிப்பு -சொர்ணகுமார் சொரூபன் வட மாகாண சபை தயாரித்த அரசியல் தீர்வு திட்டம் சனிக்கிழமை (21) மாலை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க் கட்சி தலைவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்து இந்த தீர்வு திட்டத்தை கையளித்துள்ளனர். அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடக்கு வாழ் மக்களின் அரசியல் அபி…

  4. நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை.! நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கு, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய பகுதிகளிலும் மழை பொழியும் சாத்தியகூறு காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் கிழக்கில் நண்பகல் 2 மணியளவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/6692

  5. சம்பூர் அனல் மின் நிலையத் திட்டப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு? சம்பூர் அனல் மின் நிலையத்திட்டப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தேசிய அனல் மின்நிலைய கூட்டுத்தாபனத்தினால் சம்பூரில் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 500 மெகாவொட் வலுவுடைய மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத் திட்டப் பணிகளை நிறுத்துவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. அனல் மின் நிலையத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் அல்லது அனல் மி…

  6. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நலன்விரும்பிகளால் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரணத் திட்டம் 16.05.2016 அன்று கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சில தொழில்சார் நிபுணர்கள் கிளிநொச்சி மாவட்ட மக்கள் மற்றும் தென்பகுதி மக்களுக்கு நேர்ந்த இயற்கைப் பேரிடர் அழிவு குறித்தும் அதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலின் முடிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் சகல அரச திணைக்கள மற்றும் தனியார் துறையினரிடமும் மக்களிடமும் நிவாரணப்பொருட்களைச் சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. மறுநாள் 17.05.2016 அன்று கேகாலை- அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மாபெரும் மனித அவலம் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைக்கப்…

  7. தனிச்சிங்களச் சட்டத்தால் 1958இல் தமிழருக்கு எதிரான முதல் இனகலவரம் இடம்பெற்ற நாள் இன்று! இன்றைய தினம் 1958 இனக்கலவரம் இடம்பெற்ற தினமாகும். இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறையே 1958 இனக்கலவரம் ஆகும். இவ்வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன. ஆனாலும், 1958 சூன் 1 இல் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வு பொதுவாக இனக்கலவரம் என அழைக்கப்பட்டாலும், சில இடங்களில் இனவழிப்பாகவே நடத்தப்பட்டது. இவ்வழிப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையைக் கொண்…

  8. தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா ; யாழில் வெடிகொளுத்தி மகிழ்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ( மயூரன் ) தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சராக செல்வி ஜெ.ஜெயலலிதா தெரிவாகியமையை அடுத்து யாழ்ப்பாணத்தில் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். யாழ். எம்.ஜி.ஆர். என அழைக்கப்படும் இ.சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தவராவார். யாழ்.கல்வியங்காட்டு சந்தியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரதீபம் காட்டிய பின்னர் சிலைக்கு முன்பாக வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார். குறித்த நபர் எம்.ஜி.ஆரின். பிறந்த தினம் மற்றும் இறந்த தினங்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு பல உதவி…

    • 3 replies
    • 498 views
  9. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள், பீரங்கிக் குண்டுகளின் பாகங்கள், ஏராளமாக மக்கள் வாழும் பகுதியில் பரவிக்கிடக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் அடிக்கடி போர் இடம்பெற்ற முன்னரங்கப் பகுதியான நாகர்கோவிலில்தான் இந்த நிலை. பிரதான பாதையிலிருந்து கொஞ்சம் கீழிறங்கினால் போரின்போது பயன்படுத்தப்பட்ட அத்தனை ஆயுதங்களையும் முழுசாகவோ அல்லது பகுதியாகவோ பார்த்துவிடலாம். மணலில், மரத்தில் மக்களின் உடம்பில் என்று பல வகை வெடிபொருட்க…

  10.  அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அரநாயக்க, கபரகல கந்தையில், இன்று பிற்பகல், மீண்டுமொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும் அந்நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172750/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5-#sthash.a92Y7ebo.dpuf

  11. கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் 29 பயனாளிகளுக்கு கால்நடைகள் வழங்கப்பட்டன:- கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு 29 பயனாளிகளுக்கு கால்நடைகள் இன்று சனிக்கிழமை (21) வழங்கப்பட்டன. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பயனாளிகளுக்கு கால்நடைகளை வழங்கிவைத்தார். “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இக்கால்நடைகள் வழங…

  12. நிரந்தர தீர்வு கோரி... உடப்பு அறுவாய்ப் பகுதியில் நிரந்தரப் பாலமொன்றை நிர்மாணித்துத் தருமாறு உடப்பு கிராம மக்கள், நேற்று வெள்ளிக்கிழமை (20) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். (படப்பிடிப்பு: க.மகாதேவன்) - See more at: http://www.tamilmirror.lk/172738/%E0%AE%A8-%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B0-#sthash.gQazBEuN.dpuf

  13. ஓரங்கட்டப்பட்டுள்ள தமிழர்களை இலங்கை அரசு அரவணைக்க வேண்டும்! - அமெரிக்கா [Saturday 2016-05-21 09:00] தாம் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுவதாகவே தமிழ் மக்கள் உணருகின்ற நிலையில், தமிழ்மக்கள் மத்தியில் அந்த எண்ணப்பாட்டை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. தாம் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுவதாகவே தமிழ் மக்கள் உணருகின்ற நிலையில், தமிழ்மக்கள் மத்தியில் அந்த எண்ணப்பாட்டை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்களான போதிலும், இலங்கை தமிழர்கள் இன்னும் தாம் ஒதுக்கப்படு…

    • 1 reply
    • 461 views
  14. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த வாரம் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் தோல்வியின் பின்னர் இலங்கையிலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு முதல் தடவையாக பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இருவரும் பயணத்தை மேற்கொண்டதன் நோக்கம் வெவ்வேறானதாகக் காணப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் அழைப்பை ஏற்று ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்றார். கடந்த பத்து வருடங்களாக பிரித்தானியா உட்பட ஐரோப்பாவில் நடைபெற்ற எந்தவொரு மாநாட்டிற்கும் இலங்கை அரச தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. தூதுவராலய தொடர்புகள் தவி…

  15. தாம் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுவதாகவே தமிழ் மக்கள் உணருகின்ற நிலையில், தமிழ்மக்கள் மத்தியில் அந்த எண்ணப்பாட்டை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்களான போதிலும், இலங்கை தமிழர்கள் இன்னும் தாம் ஒதுக்கப்படுவதாகவே உணர்கின்றனர் என்று அமெரிக்காவின் சிரேஸ்ட அரசியல்வாதியான டான்னி கே டேவிஸ் தெரிவித்தார். எனவே அந்த நிலை மாற வேண்டும். இந்த நிலைமையை போக்க இலங்கை அரசாங்கம் வலிமையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டில் நிறுவப்பட்டதை தொடர்ந்து தலைவர்கள் …

  16. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிய நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- இலங்கையில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன காரணமாக உயிரிழந்த, பொருட்கள் சேதமடைந்த மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உணவு, உடை, சுகாதாரம் மற்றும் வீட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், துரித நிவாரணம் வ…

  17. யாழ். சிறையில் இருந்த 8 பேர் விடுதலை -சொர்ணகுமார் சொரூபன் வெசாக் பண்டிகையினை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்த 8 கைதிகள் இன்று சனிக்கிழமை (21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தண்டப்பணம் கட்டமுடியாமல் தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் சிறு குற்றம் புரிந்தவர்கள் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . - See more at: http://www.tamilmirror.lk/172739#sthash.1TY8nvjL.dpuf

  18. இன்னொரு பிரபாகரனின் தோற்றம்? முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னொரு பிரபாகரனின் உருவாக்கம் பற்றி எதிரெதிர் முனைகளில் இருந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக கடந்தவாரம் கொழும்பில் நடந்த பொதுநிகழ்வு ஒன்றில் சி.வி.விக்னேஸ்வரன், உரையாற்றியிருந்தார். ஊடகவியலாளர் குசல் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவையடுத்து நடந்த கருத்தரங்கிலேயே, அவர் உரையாற்றியிருந்தார். அவரது உரையின் ஒரு கட்டத்தில் தான், வடக்கில் தற்போதைய இராணுவ நெருக்குவாரங்கள் உள்ள சூழல் தொடர்ந்தும் நீடித்தால், இன்னொரு பிரபாகரன் உருவாகலாம் என்பதை வெளிப்படுத்தியிருந்தார். தனது உரையில…

    • 1 reply
    • 556 views
  19. வெசாக்கையொட்டி 540 கைதிகள் விடுதலை 21-05-2016 09:27 AM வெசாக் போயா தினத்தையொட்டி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று சனிக்கிழமை (21), 540 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறு குற்றங்களின் பேரில் தண்டணை பெற்று வந்த 540 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ரி.என்.உபுல்தெனிய தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/172701#sthash.SwNslLES.dpuf

    • 1 reply
    • 372 views
  20. கெளதம புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்த நாள் இன்று. பெளத்த மதத்தவர்களுக்கு இன்றையநாள் புனிதமான வழிபாட்டு நாள். கெளதம புத்தபிரானின் போதனைகள் உன்னதமானவை. அவரின் போதனைகள் சரியான முறையில் பின்பற்றப்படுமாயின் இந்த உலகில் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ முடியும். இருந்தும் கெளதம புத்தபிரானின் போதனைகள் பின்பற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக பெளத்த மதத்தை பின்பற்றுகின்ற மக்கள் அதிகளவில் வாழ்கின்ற இலங்கைத் தீவில் புத்தபிரானின் போதனைகள் எந்தளவு தூரம் பின்பற்றப்படுகின்றன என்றொரு ஆய்வு செய்தால், கிடைக்கின்ற முடிவுகள் கவலை தருவதாகவே அமையும். அந்தளவிற்கு புத்தபிரானின் போதனைகளை பின்பற்ற வேண்டிய புத்ததுறவிகளே அதனை மறந்து செயற்படுகின்றனர். ப…

    • 1 reply
    • 652 views
  21. வெள்ளத்தில் மிதக்கும் வெல்லம்பிட்டி : மீளாத் துயரத்தில் மக்கள் Published by MD.Lucias on 2016-05-20 20:28:21 4 களனி கங்கை பெருக்கெடுத்தமையால் வெல்லம்பிட்டி பகுதி நீரில் மூழ்கியுள்ளது. வீதிகள், பாடசாலைகள் மக்களின் குடியிறுப்புகள் என அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த பகுதியிலுருந்து பல்லாயிம் கணக்கான மக்கள் வெளியேறியுள்ள போதும் இன்னும் பலர் குடியிறுப்புகளுக்குள் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றர். குறிப்பாக கடந்த இருநாட்களில் காலநிலை சீராக காணப்பட்ட போதும் வெல்லம்பிட்டி பகுதியில் இன்னமும் 10 அடிக…

  22. வெள்ளப் பாதிப்பு அதி­க­ரிக்கும் அபாயம் : மக்கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­ல­வேண்டும் என்­கி­றது அர­சாங்கம் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்ள வீடு­களில் தங்­கி­ யுள்ளோர் அவற்றை விட்டு வெளி­யேறி பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் செல்­லு­மாறும் எதிர்­வரும் நாட்­களில் நீரின் மட்டம் மேலும் அதி­க­ரிக்­கலாம் என்றும் அர­சாங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கு போது­மான அளவு நிதியை வழங்க நிதி­ய­மைச்சு உறு­தி­ய­ளித்­துள்­ளது என்றும் அரசு குறிப்­பிட்­டது. பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ளவில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது.…

  23. அரநாயக்காவில் ஏற்பட்டது ‘கில்லர் நிலச்சரிவு’ கேகாலை, அரநாயக்காவில் ஏற்பட்டது ‘கில்லர் நிலச்சரிவு’ வகையைச் சார்ந்தது என்று பேராதனைப் பல்கலைக்கழக புவியில் மற்றும் புவிச்சரிதவியல் பேராசிரியர் கபில தகநாயக்கா தெரிவித்தார். இதேவேளை, இது சுமார் நூறு வருடங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் தன்மை கொண்டது என்றும் இது பாறைகள் சிதைவடைந்து மண் உருவாகும் இயற்கை செயற்பாட்டின் ஒரு கட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பேராசிரியர் கபில தகநாயக்கா அவ்விடத்தை நேரடியாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரநாயக்கா வி…

  24. நிவாரணப்பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் இலங்கைக்கு வந்தன நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்திய விமானங்கள் இலங்கை வந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களுடன் முதலாவதான ஜப்பான் நாட்டு விமானம் நேற்று இரவு 8 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாகவும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்று இன்று காலை 4.45 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்துள்ளதாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, போர்வைகள், தண்ணீர் சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தும் மாத்திரைகள், மின்பிறப்பாக்கிகள் ,…

  25. அரநாயக்க பேரவலம்; பலி எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட தகவல்களால் குழப்பம் [ Saturday,21 May 2016, 03:20:43 ] கேகாலை – அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருப்பதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அரநாயக்க மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரை 17 பேரது சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு, மேலும் 132 பேர் புதைந்திருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையை விடவும் அதிகளவில் அங்கு மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்ற தகவலை ஸ்ரீலங்கா செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.