ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
மே 18 அன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு மே 18 புதன்கிழமையன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பில் முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, எமது தேசியக் கடமையாகக் கொண்டும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எமது உறவுகளின் ஆத்ம இழப்புகளுக்கு சர்வதேச நீதி வேண்டி…
-
- 1 reply
- 291 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உண்மையான பெறுமதியை காட்டாமல் குறைந்த பெறுமதியை காட்டி அதிசொகுசு வாகனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளதாககுற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த உறுப்பினர் யார் என்ற தகவலை செய்தித்தாள் குறிப்பிடவில்லை. பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு Land Rover Diesel STA/Wagon Sports ABIO Dynam SDV6 என்ற வாகனமே அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது. இது மொத்தத்தில் புதிய வாகனம் என்ற போதும் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற அடிப்படையில் அதன் இறக்குமதிக்கு 1750 ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக…
-
- 0 replies
- 504 views
-
-
ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் வடக்கிற்கான புகையிதரச் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வேக் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. தலாவ மற்றும் தம்புத்தேகமவிற்கும் இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொழும்பில் இருந்து செல்லும் புகையிரதங்கள் தம்புத்தேகம வரையிலும் வடக்கில் இருந்து புறப்படும் ரயில்கள் தலாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றிரவு வெளிக்கிட்ட நான்கு தபால் ரயில்களும் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://thuliyam.com/?p=26831
-
- 0 replies
- 273 views
-
-
வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள். தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நாள். இந்நாளை எமது தமிழ் மக்கள் இரத்தசரித்திரம் எழுதிய துக்கதினமாக வரலாறு உள்ளவரை அனுஷ்டிக்க வேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யுத்தத்தில் படுகொலை …
-
- 0 replies
- 292 views
-
-
கிளிநொச்சி. மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிப்பு கிளிநொச்சியின் அதிக மழைவீழ்ச்சி! 373.2 மில்லி மீற்றராகப் பதிவு!! குளோபல் தமிழ் செய்தியாளர்கள்:- கிளிநொச்சி. மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர்இடம் பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர் என கிளிநொச்சி.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன கடந்த இரண்டு தினங்களாக …
-
- 0 replies
- 209 views
-
-
திருடிய வீட்டில் பொலிஸாருடன் சென்று பொருளை ஒப்படைத்த திருடன் செல்வநாயகம் கபிலன் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரமொன்றை, திருடிய வீட்;டிலேயே கொடுத்த சம்பவமொன்று நீரவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. நீர்வேலியிலுள்ள வீடொன்றில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை திருடிய நபரொருவர் அதனை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றுன்னார். இடையில் ரோந்து சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுன்னாகம் பொலிஸார், முச்சக்கரவண்டியை வழிமறித்து விசாரித்துள்ளனர். இதன்போது, குறித்த மோட்டார் சைக்களிளை தான் ஒரு வீட்டிலிருந்து திருடிக்கொண்டு வருவதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 357 views
-
-
வடமாகாண ஆளுநரை மீளப்பெறவேண்டும் ; ஸ்ரீகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம் வடக்கு மாகாண ஆளுநரை மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் பகிரங்கக் கோரிக்கையை விடுத்துள்ளோம். அதனை மேலும் தாமதப்படுத்தினால் அரசியல் சாசனத்தினூடாக வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ந.சிறிகாந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் விடுதியொன்றில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளுநர் ஒருவர் தெரிந்தெடுக்கப்படுபவர் அல்ல. ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். இதற்கு உதாரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆளு…
-
- 1 reply
- 268 views
-
-
வடமராட்சியில் 3 பாடசாலைகளுக்கு விடுமுறை -செல்வநாயகம் கபிலன் வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட மூன்று பாடசாலைகள், செவ்வாய்க்கிழமை (17) இயங்கவில்லை என வலயக்கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை, ஹாட்லி கல்லூரி மற்றும் அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளே இயங்கவில்லை. கடற்கரையை அண்மித்த வகையில் இந்தப் பாடசாலைகள் அமைந்திருப்பதாலும் கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், பாடசாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக்கருதி இந்த மூன்று பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காலநிலை சீரானதும்,…
-
- 0 replies
- 388 views
-
-
யாழில் 5,047 பேர் பாதிப்பு -சொர்ணகுமார் சொரூபன் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக யாழ்;. மாவட்டத்தில் 1,168 குடும்பங்களைச் சேர்ந்த 5,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி, செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். பாதிப்புகள் குறித்து மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள், இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 9 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பாதிப்பில் 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மேல…
-
- 0 replies
- 213 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவது சிறந்தது புதிய தேசிய பாதுகாப்புச்சட்ட கட்டமைப்பு ஒன்றினால் பழைமையான பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவது எதிர்கால துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு மாத்திரமன்றி, இலங்கைக்கும் அதன் ஜனநாயகத்திற்கும், பிரஜைகள் உரிமைகளுக்குமான நவீன அச்சுறுத்தல்களுக்கும் எதிரான வலுவான பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் தெரிவித்தார். இலங்கை சரியான இடத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகளில், மேலதிக ஆதரவினை வழங்குவதற்கும், மேலதிக நிபுணத்துவத்தை பகிர்வதற்கான சந்தர்ப்பங்களையும் அமெரிக்கா எதிர்பார்த்திருக்கின்றது என்றும் அவர் குறிப்ப…
-
- 1 reply
- 573 views
-
-
யாழ். பல்கலைக்கழத்திலும் மே 18 நிகழ்வுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே 18 நினைவேந்தல் நிகழ்வு, பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பில் இந்த மாணவர் ஒன்றியம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'யுத்த விதிகளை மீறி ஒரு தனி இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய மனிதப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுகள் ஆறாத ரணங்களாக மீண்டும் ஒருமுறை நினைவில் எழுகின்றன. அந்நாளில் உயிர்துறந்த அப்பாவி உயிர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, இன்று மறைக்கப்பட்ட நீதியாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம், குற்றமிழைத்தோரை எவ்…
-
- 0 replies
- 415 views
-
-
பதவியிழக்கிறார் அர்ஜூன மகேந்திரன்? ஏ.பி.மதன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் பதவிக்காலம், எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், 2015ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன மகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பிணை முறி வழங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளான ஆளுநர் மீது, பெரும் எதிர்ப்பலையொன்று உருவாகியிருந்தது. இந்த விவகாரத்தினால், நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்துக்கும் பல்வேறுபட்ட எதிர்ப்புகளுக்கு முகங்கொடு…
-
- 0 replies
- 260 views
-
-
இறந்தவர்களை நினைவு கூர்வதற்கு 'தமிழர்களுக்கும் உரிமை உண்டு' ஜே.ஏ.ஜோர்ஜ் 'இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால், மூவினங்களைச் சேர்ந்த மக்களும் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தையோ விடுதலைப் புலிகள் அமைப்பையோ சாராதவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகையினால், இறந்தவர்களை நினைவுகூர, சகலருக்கும் உரிமை உள்ளது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமது உறவினர்களை நினைவுகூர, தமிழர்களுக்கும் உரிமை உண்டு. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில் யாரேனும் செயற்பாடுகளை முன்னெடுத்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் கடமை, பொலிஸாருக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். …
-
- 0 replies
- 232 views
-
-
கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு 8 பேர் பலி| இருவர் மாயம் 118 வீடுகள் சேதமடைந்தன 5,196 பேர் இடம்;பெயர்வு எஸ்.றொசேரியன் லெம்பேட், சிவாணி ஸ்ரீ, எம்.இஸட். ஷாஜகான் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கமானது, நாட்டை விட்டு அப்பால் சென்றவண்ணம் இருந்தாலும், வீரியமுள்ள மேகமூட்டம் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வரையிலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலை நீடிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 14 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால், பத்து மாத சிசு உட்பட எண்மர் பலியாகியுள்ளனர். மண்சரிவுகளில் சிக்கி மூவர் காயமடைந்தும், ஆறுகளில் தவறி வீழ்ந்து இருவர் காணாமல் போயும் உள்ளனர். இந்த அனர்த்தங்களினால், …
-
- 0 replies
- 207 views
-
-
ஸ்ரீலங்கா நாடாளுமன்றமும் நீரில் மூழ்கும் நிலையில்; இராணும்,கடற்படை களத்தில் [ Tuesday,17 May 2016, 03:21:05 ] கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் காணப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருமணியளவில் கூடவுள்ளது. எனினும் பத்தரமுல்ல – தியவன்னா குளத்தின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை சுற்றியும் மணல் நிரப்பப்பட்ட 800 மூடைகள் இடும் பணியிலும், வெள்ளநீர் தடுப்பு முயற்சியிலும் ஸ்ரீலங்கா இராணுவமும், கடற்படையும் ஈடுபட்டுள்ளன. மேலும் 60க்கும் ம…
-
- 0 replies
- 324 views
-
-
போர் வெற்றி விழா – மகிந்தவுக்கு அழைப்பு இல்லை MAY 16, 2016 வரும் மே 18ஆம் நாள் நடைபெறவுள்ள, போர் வெற்றி நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “பத்தரமுல்லையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசெனவின் தலைமையில், ஏழாவது போர் வெற்றி நாள் நிகழ்வுகள் இடம்பெறும். இதையடுத்து சுதந்திர சதுக்கத்தில் கலாசார நிகழ்வுகள் நடைபெறும். இதில், சிறிலங்கா பிரதமர், அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், போர் வீர்ர்கள் மற்றும்…
-
- 3 replies
- 569 views
-
-
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனின் திருமண வைபவம் கடந்த செவ்வாயன்று கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், எம். சுமந்திரன் எம்.பி ஆகியோர் உரையாடிய போது…. http://tamilleader.com/
-
- 0 replies
- 325 views
-
-
யாழ்ப்பாணம் கரவெட்டியில் இன்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி வீசியுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் காற்றினைத் தொடர்ந்து இன்று மாலை 4.15 மணியளவில் அல்வாய்ப் பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamilleader.com/
-
- 0 replies
- 466 views
-
-
வரலாறு காணாத வெள்ளத்தால் கிளிநொச்சி மக்கள் கடுமையான பாதிப்பு! தொடரும் மழை! அச்சத்தில் மக்கள்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்- 16 மே 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை காரணமாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாரி மழை காலத்தில் கூட பெய்திராத மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் கிளிநொச்சியின் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனகாம்பிகை, இந்துபுரம், இரத்தினபுரம், சிவபுரம், பரந்தன், பன்னங்கண்டி, மருதநகர் மற்றும் கிளிநொச்சி …
-
- 0 replies
- 379 views
-
-
கடும் காற்று: 40 படகுகள் கடலில் மூழ்கின -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக, மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 படகுகள் சேதமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்துவரும் நிலையில், இன்று அதிகாலையில் மன்னாரில் திடீரென கடுங்காற்று வீசியது. இதனையடுத்து, பெரியளவிலான படகுகள் 20 சேதமடைந்ததுடன் ஏனைய 20 படகுககள் கடலில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கடலில் மூழ்கியுள்ள படகுகளை தேடும் பணியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை…
-
- 0 replies
- 393 views
-
-
ஈழத்து குழந்தையை தவறாகப் பயன்படுத்திய இந்தியச் சஞ்சிகை! ஈழ அகதியின் குழந்தையொன்றின் புகைப்படத்தை மோசடியான முறையில் இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின்போது, கேளர மாநிலத்தில் போசாக்குக் குறைபாடு காணப்படுவதாகவும், அதற்கு உதாரணமாக 2013ஆம் ஆண்டு அவுட்லுக் சஞ்சிகையில் வெளியான புகைப்படம் ஒன்றையும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷா பொதுக் கூட்டம் ஒன்றின்போது காண்பித்து உரையாற்றியுள்ளார். எனினும் இந்தப் புகைப்படத்தில் உள்ள குழந்தை கேரளாக் குழந்தையில்லையெனவும், இது 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின்போது பாதிக்கப்பட்ட ஈழ அகதியின் குழந்தையென்றும் இந்தியா.கொம் செய்தி வெளியிட…
-
- 1 reply
- 697 views
-
-
தமிழ் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும் கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபக…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
தனித்தமிழீழ நிலைப்பாட்டை விட்டு நகர்ந்துவிட்டோம்! இந்தியாவில் சம்பந்தன் தனித் தமிழீழ நிலைப்பாட்டை விட்டு தாம் நகர்ந்துவிட்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை விலகிவிட்டதாக வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட தினமான நேற்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இந்தியா சென்றுள்ள இரா.சம்பந்தன் இந்திய பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்த…
-
- 10 replies
- 967 views
-
-
திருகோணமலையில் அடை மழை திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பொய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள், வயல் நிலங்கள், வீதிகள் என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இம் மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், தோப்பூர், குச்சவெளி, திருகோணமலை மற்றும் வெருகல் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மந்தகதியில் செல்கின்றது. இப் பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு, வீடுகளில் உள்ள தோட்டப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான மழை காரணமாக கந்தளாய் குளம், பரவிபாஞ்சான்குளம், கல்மெட்டியாவக்குளம் போன்றவற்றின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. http://tamil.ad…
-
- 0 replies
- 341 views
-
-
சீரற்ற காலநிலை காரணமாக 3 விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்படவில்லை:- 16 மே 2016 சீரற்ற காலநிலை காரணமாக மூன்று விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படவில்லை. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய மூன்று விமானங்கள் வேறும் விமான நிலையங்களுக்கு திருப்பப்பட்டுள்ளன. இந்தியாவின் கொச்சின் மற்றும் மத்தள விமான நிலையங்கள் ஆகியனவற்றுக்கு நேற்றைய தினம் இரவும் இன்று காலையும் விமானங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மும்பையிலிருந்து புறப்பட்ட ஜெட் எயாருக்கு சொந்தமான விமானமொன்றும், மலேசியாவிலிருந்து வந்த விமானமொன்றும் கொச்சினுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை…
-
- 1 reply
- 354 views
-