Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யுத்தத்தில் எனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்து விட்டேன். மற்றைய மகன் காணாமல் போய்விட்டார். அவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரை கண்டுபிடித்து தாருங்கள் பரணகம ஆணைக்குழுவிடம் தாய் ஒருவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். முல்லைத்தீவில் நடைபெறும் காணாமற்போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழு அதிகாரிகள் உங்களுடைய மகன் உயிரோடு இருப்பாரென நம்புகிறீர்களா என வினவியபோது, எனது மகன் உயிரோடுதான் இருக்கிறார் என உறுதியாக தெரிவித்தார். அவரை நாங்கள் தொடர்ந்து தேடுவோம், அதுவரை உங்களுக்கு ஏதாவது உதவிகள் கொடுப்பனவுகள் செய்ய வேண்டுமா என வினவியதற்கு, இல்லை நான் கொடுப்பனவை விரும்பவில்லை. எனக்கு பிள்ளை…

  2. தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் வடக்கு நோக்கிய நல்லிணக்க பயணம் ஆரம்பம்! யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் நிலவரங்களைப் பார்வையிடவும் வடக்கு ஊடகவியலாளர்களுடன் நல்லுறவைப் பேணவும் தெற்கிலிருந்து ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்துச் செல்லும் பயணம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. இதேவேளை வடபகுதிக்கு ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் செல்லும் தெற்கு ஊடகவியலாளர்கள் யுத்தத்தினால் உயிரிழந்த மூன்று ஊடகவியலாளர்களின் குடும்பங்களிற்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நிகழ்வினையும் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்தார். பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பயணத்தில் போரில் பாத…

  3. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக 5,000க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துகள் பதிவு புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக இதுவரை 5000க்கும் மேற்பட்ட மக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்களை பதிவு செய்யும் விசேட குழு தெரிவித்துள்ளது. வரும் 31ஆம் தேதியுடன் மக்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முடியுமென லால் விஜே நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அந்த குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் சென்று மக்களின் கருத்துக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறிய லால் விஜேநாயக்க தற்போது அரசியல் தலைவர்கள், மத குரு…

  4. அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ஏற்க முடியாது! தகுதியானோருக்கு மட்டுமே வீட்டுத்திட்டம்! வீட்டுத் திட்டங்கள் எந்த அரசியல்வாதியினதும் பரிந்துரையின் பேரிலன்றி, அமைச்சின் சட்டத்துக்கு உட்பட்ட தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ள வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் குடாநாட்டின் அரசியல்வாதிகள் சிலர், தமது அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்படுவது குறித்துக் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறான முறைப்பாடுகள் எமது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் எந்த அரசி…

  5. இலங்கையில் அண்மை காலமாக புதிய வாகனப் பதிவு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது. எனினும் ,இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 2837 வாகனங்களே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்,கடந்த வருடத்தில் இதன் எண்ணிக்கை 4138 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் புதிய வாகனங்களின் பதிவு மிகவும் மந்த கதியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்திற்கு அமைய வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு ,தவணைக் கட்டண முறை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் புதிய வாகனங்கள…

  6. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம், இந்த யோசனை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்படுவதை தடுக்க முடியும் என்பதுடன் தற்போதைய நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக தெரி…

  7. சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்தார். தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர். இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட…

  8. புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கான ஹதபிம அதிகார சபை சரத் பொன்சேகாவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே அரச திணைக்களம் இதுவாகும். கடந்த 16ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ளார். ஹதபிம அதிகார சபையின் புதிய குடியேற்றத் திட்டங்களின் ஊடாக கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கும் அதிகாரம் சரத் பொன்சேகாவிடம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான செயற்திட்டங்கள், ந…

  9. யுத்தம் பற்றிய உண்மைகளை கண்டறிவது மிகவும் முக்கியமானது – சந்திரிக்கா யுத்தம் பற்றிய உண்மைகளை கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை நோக்கி முன் நகர வேண்டுமாயின் யுத்தம் பற்றிய பின்னணி மற்றும் அது குறித்த ஏதுக்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச உண்மை அறியும் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உண்மையை கண்டறியும் பொறிமுறைமையை சீர்குலைப்பதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் …

  10. உண்ணாவிரதத்தை கைவிடுக! கேப்பாப்புலவு மக்களிடம் முதலமைச்சர் கோரிக்கை! முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்கள் தங்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை (24) முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற இவ் உண்ணாவிரதத்தை நிறைவு செய்யுமாறு முதலமைச்சர் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மூலம் கோரியுள்ளார். 1 வார காலத்துள் 3 பேர் கொண்ட குழுவை நியமித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற…

  11. கடும் வெப்பத்தால் வைரஸ் தாக்கம் அதிகரிப்பு சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மே மாதம் வரையில் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை நிலவுகின்றது. வெப்பநிலை அதிகரிப்புடன் வைரஸ்களின் தாக்கமும் அதிகரித்திருப்பதனால் சிறுவர்கள், மற்றும் கர்ப்பிணிகள் விரைவில் நோய் தாக்கங்களுக்கு உள்…

    • 1 reply
    • 442 views
  12. 11 தசாப்தங்களின் பின் வடபகுதி புகையிரதப்பாதை புனரமைப்பு கொழும்பு - யாழ்ப்பாணம் வரையான புகையிரதப் பாதையில் மஹவையிலிருந்து தாண்டிக்குளம் வரையான புகையிரதப் பாதை சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா குறித்த பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்ட பின்னர் இந்தப் பாதையை புனரமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதில் 120 கிலோ மீற்றர் தூரத்திற்கான பகுதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தோடு, புனரமைப்பு வேலைகளுக்காக 25 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புனரமைப்புப் பணிகளை இந்…

  13. ஐக்கியம் என்ற சொல்லைக் கேட்டு தமிழ் சமூகம் சலித்து போயுள்ளது! அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும்' என கொழும்பு கம்பன் கழகத்தில் உரையாற்றிய என் இனிய நண்பர் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தமிழர்களை நோக்கி ஜே.வி.பி இன்று நகர்வுகளை மேற்கொள்வதையும் இருகரம் கூப்பி வரவேற்கிறேன். ஆனால், தமிழ் மக்களை பொறுத்தவரையில், அடிப்படை உரிமை வரிசை பட்டியலில் அதிகாரப் பகிர்வு என்பதுவே எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்காகத்தான் தமிழர்கள் சொல்லொணா துன்பங்களை சந்தித்து சளைக்காமல் கடந்த 68 வருட கால சுதந்திர இலங்கையிலே பல்வேறு விதமாக போராடி வருக…

  14. மாதகல் கடலில் புதிய இன மீன்! மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மாதகல், குசுமந்துறை கடற்பரப்பின் ஊடாகக் கடற்றொழில் புரியும் மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த 17 அடி நீள புதிய இன மீன் அகப்பட்டுள்ளது. இவ்வாறு அகப்பட்ட குறித்த மீன் தொடர்பில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மீனானது சுறா மற்றும் திமிங்கல வகைகளைச் சார…

  15. அமெரிக்க கடற்படையின் கப்பல் வருகை -ஏ.எச்.ஏ. ஹுஸைன் அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் படையணியின் கட்டளைக் கப்பலான யு.எஸ்.எஸ் புளு ரிட்ஜ் (எல்.சி.சி 19) கப்பல் இன்று சனிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2011 ஒக்டோபர் மாதத்துக்கு பின்னர் இலங்கை வரும் முதலாவது அமெரிக்க கடற்படை கப்பலாக இதுவாகும். கடற்கொள்ளையை எதிர்கொள்ளல், மனிதநேய உதவி வழங்குதல், பிராந்தியத்தின் பிரதானமான கடற்பாதையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றுக்கான கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கடந்த மாதம் வொசிங்டனில் நடைபெற்…

  16. பல அமைச்சுக்களை கண்காணிக்க பிரதமர் தீர்மானம் பல அமைச்சுக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார். எதிர்பார்த்த இலக்குகளை எட்ட முடியாத அமைச்சுக்கள் இவ்வாறு கண்காணிக்கப்பட உள்ளன. இந்த ஆண்டின் முதல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இலக்கு எட்டப்படாத சில அமைச்சுக்களில் நேரடியாக தலையீடு செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக மூன்று அமைச்சுக்கள் மற்றும் நான்கு அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் பிரதமரின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு முன்னரும் வெளிவிவகார அமைச்சு கல்வி அமைச்சின் நட…

  17. அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலம் ஐக்கியத்தை கட்டி எழுப்பலாம்! அனுரகுமார திஸாநாயக்க:- மூன்று இனங்களுக்கும் அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலமே சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இன்னொரு இன யுத்தத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இடமளிக்காது என்று தெரிவித்துள்ள அனுரகுமார உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்த தமிழினத்துடன் இணைந்து குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற கம்பன் கழ விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். எவரும் பிறக்கும்போது இன, மத, …

  18. ஈழம் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசம். ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகபூமியான வடக்கு கிழக்கை அபகரித்தலுக்கு எதிராகவும் அதன் சுய ஆட்சிக்காகவும் போராடுகின்றனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ் இனத்தை அழிப்பதற்கு நிகராக தமிழர் நிலத்தை அபகரிக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு திட்டமிட்டு முன்னெடுத்துவருகிறது. ஈழம் எங்கும் நிலம் அபகரிக்கப்படுகிறது. இராணுவத்திற்காகவும் சிங்களக்குடியேற்றங்களுக்காக அபகரிக்கப்படுவதுடன் நிலத்திற்கான மக்களின் உரிமையை பறித்து அந்நிய நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன. அவ்வாறு பலவகையிலும் ஆக்கிரமிப்பையும் அபகரிப்பையும் சந்தித்து அதற்கான இடையறாத போராட்டத்தை சம்பூர் நிலத்து மக்கள் முன்னெடுத்தனர். 20…

    • 0 replies
    • 296 views
  19. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்புகளுக்கு சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரித்து விட முடியாது என ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பியகம, கொட்டுகொட பிரதேசங்களின் மின்மாற்றிகள் அண்மையில் வெடித்தன. இதனால் நாடு முழுவதும் சில நாட்கள் நீண்ட நேர மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மின்மாற்றிகள் எப்படி வெடித்தன என்பது குறித்து ஆராய ஜேர்மனின் நிபுணர் குழு இலங்கை வந்து ஆய்வு நடவடிக்கைளில் ஈடுபட்டது. மின்மாற்றியின் குழாய் மாற்றிகளின் தன்னியக்க செயற்பாடுகளில் ஏற்பட்ட பிரச்சினையே வெடிப்புக்குக் காரணம். பியகம மின்மாற்றி வெடித்த போது கடமையில் இருந்த பணியாளர் அங்கிருக்கவில்லை. இருந்திருந்தால் அவர் மரணமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. - http…

    • 0 replies
    • 193 views
  20. முன்னாள் பிரதமர் ஜயரட்ன கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிடம் உருக்கமான வேண்டுகோள் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களிடம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையாது இருப்பதனை உறுதி செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சிக்குள் தற்போது இடம்பெற்று வரும் சமப்வங்கள் பெரும் வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சு…

  21. வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள் கூட ஒருமித்த நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்குத் தயாராகவுள்ளோம் எனக் கூறக்கூடிய அளவுக்கு நாம் நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம் என த.தே.கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஐயா கூறியிருப்பதானது மாபெரும் மோசடியாகும். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் 19 ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரையானது தேன் தடவிக்கொடுக்கும் ஆலகால விசத்திற்கு ஒப்பானதாகும். ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் எதிர்காலமே சூன்யமாகிப்போன நிலையில் உலகத் தமிழர்கள் நிர்க்கதியாக நின்றது முதல் இன்றுவரை சம்பந்தன் அவர்களின் பேச்சும் செயற்பாடும் உலகத்தமிழர்களின் உணர்வுகளுக்கு நேர் விரோதமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், 'நாம் இ…

    • 2 replies
    • 532 views
  22. பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்ட சில பேராசிரியர்களை இடைநிறுத்தியுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பெண்களின் குரலமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், பல்கலைக்கழக மாணவிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை நாம் எடுத்தோம். ஆனால் இச்செயற்பாடு தொடர்பாக ஆரம்பத்திலேயே பெண்கள் தெரிவித்திருந்தால் இப்பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். பெண்கள் துணிச்சல் மிக…

  23. அண்மையில் பெல்ஜியத்தில் இடம்பெற்ற தாக்குதல்களால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறெனினும் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் அதனை எதிர்நோக்க முப்படையினரும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானப்படையினரின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டாரநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154159&category=TamilNew…

  24. இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை! இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள புழல் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை அகதிகளை, பாஜக-வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். வேலை வாயப்புகளை அளிக்க வேண்டும் என்பதே அகதிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அகதிகளின் இக்கோரிக்கைகள் குறித்து நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று தருண் விஜய் உறுதி…

    • 3 replies
    • 498 views
  25. சம்பூர் அனல்மின் நிலையம் : மீள்பரிசீலனை செய்ய தயார் சம்பூர் அனல்மின் நிலையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமென மக்கள் கருதினால் அதை நிர்மாணிப்பது பற்றி மீள்பரிசீலனை செய்வோம் எனவும் இது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கக் காத்திருக்கிறேன் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கடற்படை வசமிருந்த உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 177 ஏக்கர் சம்பூர் மக்களுக்கான காணிகள் கையளிக்கும் வைபவம் சம்பூரில் அரசாங்க அதிபர் என் புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றவேளை அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சம்பூர் அனல்மின் நிலையம் சம்பந்தமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து…

    • 1 reply
    • 668 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.