Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிணையில் விடுதலையான தம்பியுடன் செல்பி தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ. இதேவேளை, தனது சகோதரன் கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/4179

  2. குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் தந்தால் உடன் நடவடிக்கை! யாழில் இடம்பெறும் வன்செயல்கள் அல்லது குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு அல்லது தகவல்கள் தந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்' என யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமையை பொறுப்பேற்றுள்ள தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேர ரோந்து, விசேட குழு அமைப்பின் செயற…

  3.  சிறுவன் மீது தாக்குதல்: இருவர் கைது -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் 17 வயது சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை திங்கட்கிழமை (14) கைது செய்துள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்தார். 'கடந்த வருடம் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களே இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கம், போக்குவரத்து திணைக்களத்துக்கு அனுப்பி அதிலிருந்து கிடை…

  4. நிசாந்தவிற்கு இன்றும் பிணை இல்லை சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிசாந்த ரணதுங்கவிற்கு இன்றைய தினமும் பிணை வழங்கப்படவில்லை. நிசாந்தவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட்டது. பிணை வழங்குவது குறித்த தீர்மானம் எதிர்வரும் 16ஆம் திகதி அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதவான் எம்.சீ.பி.எஸ் மொராயஸ் தெரிவித்துள்ளார். நிசாந்த சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லந்துவேஹெட்டி நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். நிசாந்தவுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஏனைய நான்கு சந்தேக நபர்களுக்கும் …

  5. பிரபாகரனின் பாதுகாவலர் பயன்படுத்திய கொப்பு ஒப்படைப்பு! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்புவை ஒப்படைப்பதற்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத் தாக்கியழித்த விமான ஏவுகணையின் வெற்றுக்கொப்பே இவ்வாறு ஒப்படைக்கப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த அருளானந்தன் நிஸாந்தன் என்பவரே, அந்த ஏவுகணையை பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. அவர், திருகோணமலை உயர்நீதிமன்றத்தினால் ஏற்கனவே …

  6. நான் கண்ட யாழ்ப்பாணம் 1 - நடராஜா குருபரன்:- (யாழ்ப்பாணம் வரவேற்கிறது) யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், என விதம்விதமான இருசக்கர வாகனங்கள் வீதிகளை நிறைக்கின்றன. இவ்விருசக்கர வாகனங்களின் ஓட்டுனர்களில் பெரும்பான்மையானவர்கள் இளையவர்கள். வேலைக்கும் குடும்பச்சுமைக்கும் இடையில் அல்லாடும் பெண்கள்களும் பெருமளவுக்கு இரு சக்கர மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இளையவர்களின் கைகளில் உருளும் இந்த இரு சக்கர வண்டிகளுக்கு வேகக் கட்டுப்பாடு கிடையாது. நிதானமும், பொறுமையும், பொறுப்பும் அற்ற பெரும்பாலான இளையவர்கள், மற்றவர்களை மோதுவது மட்டுமன்றி தாமும் எங்காவது மோதுண்டு கணிசமான விபத்துகளை…

    • 0 replies
    • 926 views
  7. நா. உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் 2 கோடி ரூபாவுக்கு விற்பனை! [ செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2016, 01:48.01 AM GMT ] நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62500 அமெரிக்க டொலர் பெறுமதியான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிப்பத்திரங்கள் வேறும் நபர்களுக்கு 180 முதல் 200 மில்லியன் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களுக்கும் கடந்த வாரம் முதல் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. …

  8. மலையகக் கூட்டங்களின் தலைமை சிங்களவர்களிடம்; தமிழ் உறுப்பினர் அதிருப்தி [ Tuesday,15 March 2016, 05:10:21 ] மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அமைச்சர்கள் உள்ள நிலையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சிங்கள அமைச்சர் ஒருவர் தலைமையில் நடைபெறுவது குறித்து அக்கூட்டத்தில் பங்கேற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பொறுப்பு வகித்த ஆறுமுகன் தொண்டமான் இந்த ஒருங்கிணைப்புக் கூட்டங்களின்போது தலைமைதாங்கி வந்திருப்பதை ஐ.பி.சி தமிழ் செய்திகளிடம் கருத்துதெரிவித்த அந்த எம்.பி சுட்டிக்காட்டினார். தற்போது மலையகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவை அமைச்சராகவும், மற்றொருவர் இர…

  9. ஸ்ரீலங்காவிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள அமெரிக்கா [ Tuesday,15 March 2016, 03:10:42 ] பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதோடு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும், இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம், அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழுவின் தலைவர் எட்வர்ட் ரொய்ஸ் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் சில சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், உள்ளதாகவும் அதனை தான் வரவேற்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். …

  10. லிந்துலையில் கொண்டாடப்பட்ட காமன் கூத்து! தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காமன் கூத்து லிந்துலை சின்ன இராணிவத்தை தோட்டத்தில் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மன்மதன், ரதிதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி பூர்வமாக ஆடினர். இவ்விழாவில் பக்த அடியார்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். பெரிய இராணிவத்தை, சின்ன இராணிவத்தை, லிந்துலை, நோனா தோட்டம், பம்பரக்கலை, குட்டிமலை, பேரம் ஆகிய பல்வேறு தோட்ட பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தனர். …

  11. "வடமாகாண சபையை நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் வடக்கில் பாலும் தேனும் ஓடியிருக்கும்" "வடமாகாண சபையை நிர்வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் வடக்கில் பாலும் தேனும் ஓடியிருக்கும்" என மார்ச் 13 2016 அன்று GTBC வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் EPDPயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவரது நேரடிச் செவ்வியை கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்... https://soundcloud.com/user-627104592/viluthukal-march-13 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130025/language/ta-IN/art…

  12. பொலிஸார் நிலையங்களில் முடங்கி கிடக்காமல் வீதிக்கு இறங்குங்கள்! பொலிஸார் பொலிஸ் நிலையங்களில் இருக்காமல், வீதிக்கு இறங்கி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வீதிகளில் போட்டிபோட்டு ஓடும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களைக் கைது செய்து சட்டநடவடிக்கைக்கு உட்படுத்துமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இவர்கள் போட்டிபோட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு போட்டிபோட்டு ஓடுபவர்களைக் கைது செய்வ…

  13. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற காணிகள் விடுவிக்கப்படும் (எம்.ஆர்.எம்.வஸிம்) வடக்கில் பாதுகாப்புக்கு அத்தியாவசியம் என்று கருதப்படும் காணிகளைத்தவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை ஏற்கனவே ஜனாதிபதி பகிர்ந்தளித்துள்ளார் என சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். காணி அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், வடக்கில் மக்கள் வசித்துவந்த இடங்களில் இருந்து கடந்த காலங்ளில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகள் காரணமாக அவர்கள் அந்த இ…

  14. வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து உண்மையான விசாரணைகளை முன்னெடுத்தால் முதல் குற்றவாளியாக சரத் பொன்சேகாவே சிக்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சரத் பொன்சேகா ஒரு நல்ல அரசியல்வாதியோ அல்லது நல்ல இராணுவத் தளபதியோ அல்ல. அவர் எந்த நிலையிலும் விலைபோகக்கூடிய நபர். அவர் பலமான நபராகவோ மக்களின் ஆதரவை பெற்றிருந்த நபராகவோ இருந்திருந்தால் கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த தேர்தலில் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் இராணுவத் தளபதியாக இருந்துள்ளார். ஆனால் யுத்தத்தை முன்னெடுத்து சென்றுள்ளார் என்று கூறுவ…

  15. இளைஞர், யுவதிகள் அரச வேலையை மட்டும் எதிர்பார்க்காது தொழில்துறைகளை மேற்கொண்டு உற்பத்தியாளராக தம்மை மாற்றலாம்! இளைஞர் யுவதிகள் அரச வேலைகளை மட்டும் எதிர்பார்த்திருக்காது தமது கற்றல் நடவடிக்கைகளைத் தொழில்சார்ந்த துறைகளில் மேற்கொள்வதன் மூலம் சிறந்த உற்பத்தியாளர்களாகவும், பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையை அடையக்கூடிய விதத்திலும் தம்மை மாற்றிக் கொள்ளலாம்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளப் பகுதியில் அமைந்திருக்கும் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் “சந்தையை நோக்கிய சூழல் நேயமான விவசாயம்” எனும் தொனிப்பொருளில் இன்று விவசாயக் கண்காட்சியை வைபவ ரீதியாக வடக்கு முதலமைச்சர் விக்கி…

  16. தயா, ஜோர்ஜ் மாஸ்டர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பதனை சட்ட மா அதிபர் அறிவிக்கவில்லை தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு நீதிமன்றில் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பிலான மனு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று நடைபெற்றது. வேலாயுதம் தயாநிதி எனப்படும் தயா மாஸ்டர்…

  17. தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனீவா ஐ.நா முன்றலில் தமிழர்கள் அணி திரண்டனர்! தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஜெனீவாவிலுள்ள ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் ஒன்று திரண்டுள்ளதாக அங்கு சென்றுள்ள எமது சுவிஸ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுவிஸ்சர்லாந்து மக்களுடன், ஜேர்மன், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், பிரித்தானியா உட்பட பல நாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். இதற்கமைய ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அரு…

  18. சிறுமியை தாயாக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு! முதியவர் தற்கொலைக்கு முயற்சி ! வழக்கு ஒத்திவைப்பு! பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சிறுமியை தாயாக்கிய முதியவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமதிக்கப்பட்டதால் அவர் இன்ற…

  19. என்னால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் - மஹிந்த ராஜபக்ஸ தம்மால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தம்மை குறை சொல்வதில் அர்த்தமில்லை எனவும், தாம்மால் நாட்டை ஆட்சி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யோசிதவிற்கு பிணை வழங்கப்பட்டதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடன் செலுத்த முடியாது திண்டாடுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது எனவும், அதற்கு தம்மால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஆட்சி செய்ய தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் அனைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கத்…

    • 1 reply
    • 383 views
  20. தெஹிவளை ரயில் நிலைய குண்டுத் தாக்குதல் சந்தேகநபர்கள் இருவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை 1996ம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் தெஹிவளை ரயில் நிலைய குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் சந்தேகநபர்கள் இருவருக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் தமது குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ராங்கனி பெரேரா குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னதாகவே சுமார் 20 வருடங்கள் விளக்கமறியலில் இருந்துள்ளதால், இரண்டு வருடங்கள் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீ…

  21. வடமாகாண விவசாய கண்காட்சி! ஆரம்பித்து வைத்தார் முதல்வர் சி.வி.! வடமாகாண விவசாயக் கண்காட்சியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று மன்னார் உயிலங்குளம் விவசாய பயிற்சி நிலையத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விவசாய கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரையிலான மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சா…

  22. இலங்கையில் 1.7 சதவீதமானோர் பார்வையற்றோர் கண் பிரச்சினைகள் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் உரிய நேரத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. கண்நோய்கள் தொடர்பில் அண்மையில் சுகாதார அமைச்சினால் 2014/2015 ஆம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 1.7 சதவீதமானோர் பார்வையற்றவர்களாகவுள்ளனர் என தெரியவந்துள்ளது. அதேவேளை 17 சதவீதமானோர் கண் தொடர்பான பல பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் 40 வயதுக்கு கூடிய அனைவரும் தமது பார்வை நலன் கருதி குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒ…

  23. மஹிந்தவை காட்டிக் கொடுக்கமாட்டோம் (ப.பன்னீர்செல்வம்) யுத்தத்தை முடித்த மஹிந்த ராஜபக்ஷவையோ எமது படையினரையோ காட்டிக் கொடுக்கமாட்டோம். அனைவரையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளா என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொது ஜன ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் சொந்த ஊரான அங்குணுகொல பெலஸ்ஸவில் இடம்பெற்ற வரவேற்புக் கூட்டங்களில் உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்திருப்பதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஆதரவாளார்களினதும் நன்மை கருதியே ஐ.தே.கட்சியுடன் இணைந்துள்ளோம்…

  24. மின்சார தடை சர்ச்சை : இராஜினமாக கடிதம் நிராகரிப்பு இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபாலவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என மின்வலு அமைச்சின் செயலாளர் சுரேன் படேகொட தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் மின்சார தடை ஏற்பட்டமைக்கு மின்சார சபையின் தலைவர் பொறுப்பு சொல்ல முடியாது என்பதனால், இந்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் 2 தடவைகள் நாடு முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவித்த அவர், இந்த மின்சாரத் தடைகள் நாச வேலை காரணமாக இடம்பெறவில்லை எனவும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடம்பெற்றவை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏதேனு…

  25. சி.எஸ்.என் தொலைகாட்சி விவகாரம் : நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.