ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
வவுனியாவில் இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் காயம் வவுனியாவில் இதுவரையில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 5 பேர் காயமடைந்தள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த வேன் சாரதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏ9 வீதியிலுள்ள மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் 5 மணித்தியாலயங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தததுடன், இவ் விபத்து காரணமாக தமக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வவுனியா மின்சார சபையினர் …
-
- 0 replies
- 366 views
-
-
நாட்டின் தேசிய மலராக அல்லிப்பூ பிரகடனம் நாட்டின் தேசிய மலராக அல்லிப்பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மலர் தொடர்பில் விசேட குழுவினரால் ஆராயப்பட்ட பின்னரே புதிய மலர் தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும்,இது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேசிய உயிர் பல்வகைமை செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் காணப்பட்ட தேசிய மலரான நீலோற்பவம் தொடர்பில் இணையத்தில் தவறான நிழற்படங்களும் விமர்சனங்களும் எழுந்தது.இந்நிலையில் இதுகுறித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொ…
-
- 0 replies
- 542 views
-
-
மூன்று மாதத்திற்குள் மீள்குடியேற்றம் பூர்த்தியாகும்;ஜனாதிபதி உறுதி! யாழ்.மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் எதிர்வரும் மூன்று மாதங்களிற்குள் பூர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள நடேஸ்வரா கல்லூரியை கையளித்து மக்கள் முன்பாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், 30 வருடகாலமாக பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கிய எமது மக்களுக்கு வழங்கப்பட உள்ள 65 ஆயிரம் வீட்டு திட்டத்தை பார்வையிடவும், காணிகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு காணிகளை வழங்குவதற்காகவுமே நான் இங்கு வருகை தந்துள்ளேன்…
-
- 0 replies
- 214 views
-
-
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம் நாட்டில் கடந்த சில வாரங்களாக பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசியல்வாதிகள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு நாட்டில் பாரியளவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களின் முக்கிய உறுப்பினர்களுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கொட்டாஞ்சேனை, கம்பஹா, மாளிகாவத்த…
-
- 0 replies
- 210 views
-
-
ராஜபக்ஷ படையணிதான் உலகிலேயே மிகப்பெரிய திருட்டுக் கும்பல் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது. இதன்போது, இலங்கையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பொருளாதார மாநாட்டுக்கு ஜோர்ஜ் சொரோஸ் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார் எனச் சுட்டிக்காட்டி அதனுடன் தொடர்புடைய ஐந்து வினாக்களை அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பியிருந்தார். "மேற…
-
- 2 replies
- 1k views
-
-
இளவரசர்களுக்கு ஆடம்பர பங்களாக்களை கட்டிய மகிந்த! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்,வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொல்லப்பட்ட கடனில் 90 வீதமானவை எவ்வித பயனுமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டுக் கடன் நிதியைப் பயன்படுத்தி ராஜபக்ச அரசாங்கம் என்ன செய்தது என்பது எனக்குத் தெரியும்.பாணம பிரதேசத்தில் மூன்று இளவரசர்கள…
-
- 1 reply
- 373 views
-
-
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்தினால் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையில் விசா ரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இடம்பெறவி…
-
- 1 reply
- 257 views
-
-
அமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன். இது ஒரு சிறு கதை அல்ல, ஒரு தொடர்கதை. இதையே நாங்கள் சொன்னால் இட்டுக்கட்டிய புனைக்கதை. அதையே அவர் சொல்லும்போது அது உண்மைகளை புட்டு, புட்டு வைக்கும் வாக்குமூலம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரி விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்டு பெற்றோர் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதைக்கூறினார். அவர் மேல…
-
- 2 replies
- 515 views
-
-
தெல்லிப்பழையில் 700 ஏக்கர் காணிகள் ஜனாதிபதியால் மீளக் கையளிக்கும் போது முதலமைச்சரின் உரை தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 700 ஏக்கர் காணிகள் மற்றும் நடேஸ்வராக் கல்லூரி, நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகியன ஆகியன மாட்சிமை தங்கிய ஜனாதிபதி அவர்களால் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு நடேஸ்வராக் கல்லூரி காங்கேசன்துறை - 12.03.2016 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணி மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே, அமைச ;சர் கௌரவ னு.ஆ. சுவாமிநாதன் அவர்களே, அரசியல் பிரமுகர்களே, உயர் அதிகாரிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! வலிகாமம் வட…
-
- 4 replies
- 666 views
-
-
வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வட மாகாண பட்டதாரிகளிற்கான 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது. வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூத்திசெய்யும் வகையில், 111 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ரீதியில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் குறித்த பட்டதாரிகள் நியமணம் வழங்கப்பட்டது. குறித்த ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வழங்கிவைத்தார். ஆசிரியர்களுக்கான நியமனம் பெறுவதில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டராக பணிபு…
-
- 0 replies
- 398 views
-
-
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்த 700 ஏக்கர் காணி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச சபைப் பிரிவுகளில் மேற்படி 700 ஏக்கர் காணிகளை மக்களுக்குக் கையளிக்கவுள்ளார். 12 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களுக்கு இன்றைய தினம் ஜனாதிபதியினால் காணிகள் மீள கையளிக்கப்படவுள்ளது. அத்துடன் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பிரபல பாடசாலைகளான நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தையும் விடுவித்து கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். யாழ்.…
-
- 2 replies
- 364 views
-
-
பிரபாகரன் இறுதிநேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இத்தனை காலமாக வெளிவராத உண்மைகள் இன்று உரிய நபரின் மூலமாக வெளிவந்திருப்பது முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தை வழிநடத்திய அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா மூலமாக இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது ஆரோகியமான விடயமாகும். ஆனால் யுத்தத்தை எவ்வாறு ம…
-
- 0 replies
- 345 views
-
-
அனுமதியின்றி பிக்குகளை கைது செய்ய வேண்டாம்! என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம், அவ்வாறு கைது செய்வதாயின் அதற்கு முன் என்னிடம் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, விளக்கமறியலில் வைத்தமை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்புகள் காரணமாகவே ஜனாதிபதி பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரர், சட்டவிரோதமாக யானை குட்டியொன்றை தனது விகாரையில் வளர்த்து வந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் நேற்று 60 லட்சம் ரூ…
-
- 0 replies
- 215 views
-
-
பிக்குகளுக்கு நெருக்கடி கொடுத்தால் புதிய அரசாங்கம் கவிழ்க்கப்படும் பௌத்த பிக்குகளுக்கு நெருக்கடி கொடுத்தால் புதிய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என பெவிதி ஹன்ட அமைப்பைச் சேர்ந்த முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதும் அதனை கவிழ்ப்பதுவும் பௌத்த பிக்குகள் என குறிப்பிட்டுள்ள அவர் முறைமையில் மாற்றம்கொண்டு வரப்பட வேண்டுமென மாதுலுவே சோபித தேரர் முயற்சித்த போதிலும் அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வாறு பௌத்த பிக்குகள் கைது செய்யப்படவில்லை எனவும் பௌத்த மதத்திற்கு இழிவு ஏற்படும் வகையில் அரசாங்கம்செயற்பட்டு …
-
- 1 reply
- 295 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும், நீலாவணையைச் சேர்ந்த ஒரு மாணவனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும், நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ஒரு மாணவனுமே தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்க…
-
- 2 replies
- 259 views
-
-
நீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் நகர், மிச் நகர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மலிக் பௌமி (வயது 18) என்ற இளைஞன், கட்டிலில் படுத்துக் கொண்டு மிக நீண்டநேரமாக அலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்துள்ளார். எனினும் சிறிது நேரத்தின் பின்னர், குறித்த இளைஞன் எந்தவொரு அசைவும் இன்றி கட்டிலில் கிடந்துள்ளார். இதனை அவதானித்த குடும்பத்தவர்கள், இளைஞனை தட்டி எழுப்பிய போதும் குறித்த இளைஞம் எழும்பவில்லை. இத…
-
- 0 replies
- 322 views
-
-
எங்களுடைய வரலாற்றில் 1989 இலிருந்தே விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்துக் கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். இந்திய இராணுவத்தின் காலத்திலிருந்தே அவர் மரணித்துக் கொண்டுதான் இருக்கின்றார். தங்களுக்கு தேவையான காலப்பகுதிகளில் அவருக்கு உயிரோட்டம் கொடுப்பதையும் தேவையற்ற காலத்தில் அவரைக் கொல்லுவதுமான செயற்பாட்டை கடந்த காலங்களில் பல நாடுகளின் உளவுப் பிரிவும் இராணுவப் பிரிவும் மேற்கொண்டு வருகின்றது என வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.tamilwin.com/show-RUmuyDSVSXnuyC.html
-
- 0 replies
- 452 views
-
-
இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளது. இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன்படி அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் இது குறித்து இளைஞர்களின் மன்ற பிரதிநிதிகளுக்கும் ஊடகங்களுக்கும் தெளிப்படுத்தும் வகையில் பலன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது என்றார். …
-
- 0 replies
- 403 views
-
-
எட்டு மணிநேரம் நின்றநிலையில் வாக்குமூலமளித்த கோத்தபாய ரக்னா லங்கா, எவன்கார்ட் ஆயுத களஞ்சிய நிறுவன ஊழல் குற்றச்சாட்டில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எட்டு தடவைகள் இடம்பெற்ற தொடர்ச்சியான விசாரணையின் பின்னர்முதல் தடவையாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நேற்று வெள்ளிக்கிழமை வாக்கு மூலமளித்தார். இதன்போது, விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் கோத்தபாய ராஜபக் ஷ எட்டு மணிநேரம் நின்றுகொண்டு சாட்சியமளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின்கீழ் செயற்பட்ட ரக்னா லங்கா, எவன்கார்ட் ஆயுத களஞ்சியம் மற்றும் அதில்…
-
- 2 replies
- 404 views
-
-
காலியில் பொலிஸாரும் இளைஞர்களும் மோதல்! காலி, தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண வைபவத்தில் மோதல் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி இன்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்படி காலி பொலிஸ் நிலையத்தின் நான்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குழுவொன்றுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காலி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் தலைப்பகுதி தடி ஒன்றினால் தாக்கப்பட்டு காராப்பிட்டிய…
-
- 2 replies
- 371 views
-
-
அடுத்த வாரம் தாயகம் திரும்பும் 13 ஈழஅகதிகள் இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழஅகதிகளில் 13பேர் தாயகம் திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் இவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவிருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து தாயகம் திரும்பும் இவர்களில் 8 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்…
-
- 0 replies
- 235 views
-
-
வல்வெட்டித்துறையில் 2.8 கிலோகிராம் ஹெரொய்ன் மீட்பு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள தொண்டைமானாறு கடற்கரை பகுதியில் இருந்து, சுமார் 2.8 கிலோகிராம் ஹெரோய்னை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த ஹெரோய்ன், கடல் வழியாக கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/167984/%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B9-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-#sthash.X0Tdu0Fb.dpuf
-
- 1 reply
- 299 views
-
-
வெள்ளைக் கொடி விவகாரத்தில் என்னை குற்றவாளியாக்க முயற்சி : லசந்த படுகொலை தொடர்பில் முதலில் விசாரணைகள் செய்யுங்கள் வெள்ளைக் கொடி விவகாரத்தில் என்னை குற்றவாளியாக சித்தரித்து அவ்விடயம் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் சரத்பொன்சேகா கூறுகின்றார். அதனை செய்வதற்கு முன்பதாக ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார். முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது இயங்கிவந்த ரக்னா லங்கா ஆயுதக் களஞ்சிய நிறுவனத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பில் பாரிய ஊழல் விசா…
-
- 0 replies
- 701 views
-
-
கொளுத்தும் வெயில். சுடு மண்ணில் செருப்பணியாத வெறும் கால்கள். உழைத்துக் களைத்த தேகம். ஒடுங்கிய தேகம். வெயிலில் கருகிய முகம். நின்று பதில் சொல்ல முடியாத அவசரம். இப்படித்தான் நடந்துசென்றார் சின்னராசு. பூநகரி - யாழ்ப்பாண வீதியிலிருந்து கௌதாரி முனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. பேருந்து எதுவும் இல்லை. எப்போதாவது வரும் எதோ ஒரு வாகனத்தில்தான் செல்லலாம் என்றார்கள் வழியில் தென்படும் சிலர். நடந்து பார்க்கலாமே என்ற முயற்சியில் நடந்தேன். முடியவில்லை. கொளுத்தும் வனாந்தர வெம்மை. ஒரு குட்டிப் பூவரசு நின்றது. அதற்குள்ளும் கொஞ்ச நிழல். அதைவிட்டால் நீண்ட தூரத்திற்கு மரங்கள் எதுவும் இல்லை. அதற்குள் அ…
-
- 0 replies
- 566 views
-
-
வெள்ளைக்கொடி விவகாரத்தில் முதல் குற்றவாளியாக பொன்சேகாவே சிக்குவார்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் 2009இல் நடந்த இறுதிப் போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலி உறுப்பினர்களை கொலை செய்தமை தொடர்பில் சரத்பொன்சேகாவே முதல் குற்றவாளியாக முதலில் சிக்குவார் என்று முன்னாள் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அழுத்தம் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டுதலில் இன்று வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் சரத்பொன்சேகா பேசுவதாக குறிப்பிட்ட ஹெகலிய இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகாதான் போரை முன்னின்று நடத்தினார் என்று சொல்ல முடியாது என்றும் அவ…
-
- 0 replies
- 317 views
-