ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
சமிக்ஞை ஒலிக்கு செவிசாய்க்காத சி.வி -எம்.றொசாந்த் முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது. முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர். ரயில் வருகின்றதா என ரயில் பாதையைப் பார்த்து, வரவில்லையென்றவுடன் வாகனத்தை கடக்க சைகையும் காட்டினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தக் கடவைக்கு அருகிலுள்ள பிறிதொரு பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முற்பட்ட கார் ஒன்று விபத்துக்குள்ளாகி பொறியியலாளர் ஒருவ…
-
- 3 replies
- 776 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக இரண்டாவது முறையாகவும் தேங்காய் உடைக்கும் நிகழ்வு இன்று [ சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016, 04:08.37 AM GMT ] புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தும், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் ஒருவருட நிறைவிற்கு எதிராகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்று தேங்காய் உடைக்கும் நிகழ்வினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வானது கொடகவல – அம்மடுவவை - சிறிய கதிர்காமத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சீனிகம தேவாலயத்தில், தேங்காய் உடைக்கும் போராட்டம் ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இன்றைய நிகழ்வ…
-
- 2 replies
- 319 views
-
-
முன்னைய தலைவர்கள் மின்சார கதிரைக்கு செல்வதில் இருந்து தப்பியது தான் ஜனாதிபதியானதாலே நாட்டில் முன்னிருந்த அரசியல் தலைவர்கள் மின்சாரக் கதிரைக்கு செல்வதில் இருந்து விடுபட்டமைக்கு காரணம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனாலேயே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தான் மின்சாரக் கதிரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று அன்றிருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் அவர்களை அதிலிருந்து காப்பாற்ற முடிந்தது புதிய அரசாங்கம் வந்ததனாலே என்று அவர் கூறினார். பொலன்னறுவை, வெலிகந்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். தற்போதை நிலையில் இலங்க…
-
- 0 replies
- 291 views
-
-
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்யவும் தயார்! தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதற்கும் தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் தனது புதிய அரசியல் கட்சி அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், வெளிநாட்டு வங்கிகளில் தாம் பாரியளவில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார். தாம் இவ்வாறு பணம் பதுக…
-
- 2 replies
- 468 views
-
-
மாவீரர்களை நினைவுகூர அனுமதி வழங்க வேண்டும்! இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம் தான் தீர்வு எனவும், போரில் உயிர்நீத்த எங்களுடைய உறவுகளையும் மாவீரர்களையும், நினைவு கூருவதற்கும் எந்தவித தடைகளும் இன்றி அங்கீகரிக்க வேண்டும். அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாகக் கருத்தறியும் குழுவிடம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட மக்கள். புதிய அரசமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினுடைய 2ஆவது அமர்வு நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கருத்தறியும் அமர்வில் கலந்து கொண்டு புதிய அரசமைப்பு தொடர்பாக, தங்களது கருத்துக்களை முன்வைக்கும்போதே முல்லைத்தீவு மக்கள் இவ்வ…
-
- 4 replies
- 722 views
-
-
எந்தவொரு விடயத்திலும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை February 13, 2016 04:59 pm இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹுஸைன் கூறியுள்ளார். சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். ரொய்ட்டர் செய்தி சேவையுடன் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எனினும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடைமுறையும் பக்கச்சார்பற்ற முறைய…
-
- 1 reply
- 416 views
-
-
ஆட்சியரைத் திருப்திப்படுத்தும் அரசியல் Posted By: கீதன்on: February 13, 2016In: அணியம்No Comments Print Email திருமலை சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது! அப்படிப் போர்க்கொடி துாக்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அல்ல. தமிழரசுக் கட்சியினரும் அல்ல. திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுமல்ல. கிழக்கின் குரல் என்ற சிவில் அமைப்பும் ஜே.வி.பி. தலைவர்களில் ஒருவரான லால்கந்தாவும் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைப்பதை எதிர்த்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த அனல் மின்நிலையம் அமைக்கப்படுவதால் சேருவில வாழ் சிங்கள மக்களுக்கு ஒரே ஒரு ப…
-
- 0 replies
- 488 views
-
-
ஜே.வி.பி யின் யாழ்.பிரதான அலுவலகம் திறந்து வைப்பு! மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்டத்திற்குரிய புதிய அலுவலகம் இன்று கண்டி வீதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கலந்து கொண்டு இந்த புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தார். மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கருத்து தெரிவிக்கையில், இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட…
-
- 0 replies
- 373 views
-
-
அவர்கள் செய்த பாவத்தை நாங்கள் கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கைக்கு எந்தவொரு அழுத்தங்களோ அல்லது உத்தரவுகளோ பிறப்பிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நாட்டுக்கு ஆபத்தான ஜெனீவா யோசனைக்கு ஜனாதிபதியும் பிரதரமரும் ஒப்புக் கொண்டதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் விதமாகவே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். "சிலர் பத்திரிகைகளுக்கு பலவாறு கூறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்கு கூறுவது, அவர்கள் செய்த பாவங்களைத்தான் நாங்கள் இப்போது கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." என்று ஜனாதிபதி கூறினார். இது தவிர எதிர்வரும் திங்கட்கிழ…
-
- 0 replies
- 363 views
-
-
எமில்காந்தனுக்கு எதிரான சர்வதேச பயணத் தடையை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படும் எமில்காந்தனுக்கு எதிரான சர்வதேச பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. எமில்காந்தனுக்கு எதிரான தடையை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டே நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ராடா நிறுவனம் சுனாமி வீடமைப்பு திட்டதத்தினை முன்னெடுப்பதாகக் கூறி 168 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடிகளுடன் எமில்காந்தனுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எமில்காந்தன் தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார் என்பது குறிப்ப…
-
- 0 replies
- 301 views
-
-
இறுதி யுத்த விவகாரம்: சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அயல் நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புகள் போர்க்குற்றங்கள் தொடர்பான கலந்துரையா…
-
- 0 replies
- 298 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரவை குறித்த மஹிந்தவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது – ருவான் விஜேவர்தன குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கைப் படையினர் கைது செய்வது குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். படைவீரர்களை கைது செய்ய நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு உ…
-
- 0 replies
- 468 views
-
-
மரணச் சான்றிதழுக்குப் பதில் காணாமல்போனோர் படிவம்! நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு! காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் முறைமை ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அத்துடன், இலங்கைச் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. அதற்கான அதிகாரமும் அரசுக்கு இல்லை. அதனால் மேற்படி தரப்பினருக்கு 'மரணச் சான்றிதழ்' வழங்குவதற்குப் பதிலாக 'காணாமல் போனோர் சான்றிதழ்' இன்னும் இரு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்று உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன சபையில் தெரிவித்தார். காணாமல்போனோர் என சான்றிதழ் வழங்கப்பட்டவர் மீண்டும் இனங்காணப்பட்டால் குறிப்பிட்ட காலப்பகுதியில் அனுபவிக்காத சிறப்புரிமைகள் அவர்களுக்கு மீள வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெ…
-
- 0 replies
- 294 views
-
-
சிங்களத் தலைவர்களின் வெற்றிக்கும், தமிழ்த் தலைவர்களின் தோல்விக்கும் கட்டியம் கூறும் ஐ.நா.மனிதவுரிமை ஆணையரின் பிரகடனத்தின் பின் தமிழ்த் தலைமைகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? • “அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை என்பது இப்போது சர்வதேச விதியாகிவிட்டது” ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் 7-2-2016 அன்று யாழ்ப்பாணத்தில் வைத்து வடமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஷ்வரனிடம் நேரடியாக தெரிவித்தார். • “வெளிநாடுகளுடன் இணைந்த கலப்பு விசாரணை என்ற ஒன்றுக்கு இடமில்லை” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியமை. • “சமஸ்டிமுறையிலான தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு வாரங்களுக்கு முன் கூறியமை. • “காணாமற் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோர் என்று எவரும் உயி…
-
- 0 replies
- 313 views
-
-
சம்பூர் விதுர கடற்படை முகாம் விரைவில் இடமாற்றப்படும் ; அரசாங்கம் உறுதி [ Saturday,13 February 2016, 03:20:46 ] திருகோணமலை - சம்பூரில் காணப்படும் விதுர படை முகாம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுதல் தொடர்பான தனிநபர் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மரூப் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். இந்தப் பிரேரணை மீதான விவாதத்தல் கலந்துகொண்டு பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில…
-
- 0 replies
- 359 views
-
-
யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயாhர் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட தனிநபரின் பாவத்திற்காக, அவரை காப்பாற்றுவதற்காக படையினரும் முழுநாடும் பலியாக முடியாது என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரே அந்த பாவங்களுக்கு காரணமானவர் என்பதையும் அம்பலப்படுத்தியுள்ள அந்த அதிகாரி, இலங்கை இராணுவத்திலேயே தொடர்ந்து பணிபுரிவதால் தனது பெயர் விபரங்களை பகிரங்…
-
- 0 replies
- 311 views
-
-
தமிழீழத்தால் நாடாளுமன்றில் மூண்டது சர்ச்சை! தமிழீழத்தையும் உலகத் தமிழர் பேரவையையும் ஒப்பிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்வியால் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டது. நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது. இதன்போது உலகத் தமிழர் பேரவை தொடர்பிலும் அதன் தலைவர் சம்பந்தமாகவும் ஏழு வினாக்களை வெளிவிவகார அமைச்சரிடம் உதய க…
-
- 0 replies
- 407 views
-
-
யோசித மீதான விசாரணைகள் இடைநிறுத்தம் [ சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016, 03:13.04 AM GMT ] கடற்படை லெப்டினன்ட் யோசித ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யோசித தற்போது பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே தமது விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். யோசிதவின் கல்வித்தரம் மற்றும் கடற்படைக்கு அறிவிக்காமல் அவர் 70 தடவைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கடற்படையினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலும் யோசிதவின் குற்றங்கள் நிரூபிக்கக்கூ…
-
- 0 replies
- 284 views
-
-
சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதன் மூலம் சிங்கள மக்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வெற்றியளித்திருப்பதுடன், நோயாளியும் பிழைத்திருப்பதாக சகவாழ்வு மற்றும் தேசிய மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்துவதற்கு முயற்சித்தவர்களின் முகம்களில் கரி பூசப்பட்டுள்ளது. தமிழில் தேசிய கீதம் பாடியமை தமிழர்களுக்கு பெரிதான விடயம் அல்ல. உண்மையில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமையானது சிங்கள மக்களுக்கான உளவியல் சிகிச்சையாகும். இச்சிசிச்சை வெற்றியளித்துள்ளது என்றும் கூறினார். நாட்டினுள் காணப்படுகின்ற யுத்தகால சிதைவுகளை புனரம…
-
- 0 replies
- 256 views
-
-
ஸ்ரீலங்காவில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யாமல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மட்டும் விசாரணை செய்யும்படி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்காவிற்கு அண்மையில் விஜயம் செய்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நடத்திய சந்திப்புகளின்போதே இந்த ஆலோசனையை வழங்கியிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள், அரசியல்தீர்வு விடயம் குறித்தும் ஜனாதிபதி, பிரதமர் இருவருடன் நடத்திய கல்நதுரையாடலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தியதாகவும…
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் விசாரணைப் பொறிமுறை சுயாதீனமானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்குமிடத்து அதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளளார். இலங்கைக்கான விஜயத்தினையடுத்து, ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘யுத்த குற்ற விசாரணை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் மீது நாம் எதனையும் திணிக்கவில்லை. குறித்த விசாரணை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நாம் எமது விருப்பத்தை தெரிவித்துள்ளோம். யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில், சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு வகையான பொறிமுறையொன்றையே ஆரம்பத்திலிருந…
-
- 0 replies
- 229 views
-
-
காணாமல்போனோருக்கு நீதியை நிலைநாட்ட பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பியான புத்திக பத்திரண சபையில் வலியுறுத்தினார். வடக்கு, கிழக்கில் காணாமல்போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பில் நேற்று சபையில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "நான் யாழ்ப்பாணம் சென்ற சந்தர்ப்பத்தில் அங்குள்ள தமிழ் மக்களால் என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே காணாமல்போனோர் தொடர்பான இந்தப் பிரேரணையை நான் கொண்டுவந்துள்ளேன். காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட …
-
- 0 replies
- 251 views
-
-
மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகள் தொடர்பில் என்னிடம் அழுது புலம்பி விமர்சனங்களைத் தொடுத்தவர்களே இன்று அவர் பின்னால் வலம் வருகின்றனர். புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த பிறகு நான் காரமான கட்டசம்பலை தயாரித்து வழங்குவேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீறிப் பாய்ந்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மஹிந்த தரப்பினர் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சி பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போதே கடும் சீற்றத்துடன் ஜனாதிபதி மேற்படி கருத்தை முன்வைத்துள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்குப் பாராட்டுத் தெரிவித்த முன்னாள் ஜனா…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டு தொடர்பிலான கலந்துரையாடல்களில் சர்வதேச நாடுகள் பங்கேற்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் இறுதி தீர்ப்பு இலங்கையின் நீதியமைப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேரளாவின் குருவாயூருக்கு இன்று வழிபாட்டுக்கு சென்றிருந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் அமரிக்கா, மனித உரிமை அமைப்புக்கள் என்பன போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடமுடியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இறுதி தீர்ப்பு இலங்கையின் நீதி அடிப்படையிலேயே இருக்கும் என …
-
- 0 replies
- 256 views
-
-
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொதுஅமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த கருத்தறியும் விசேட அமர்வுகள் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், கடந்த ஆறு தசாப்தங்களாக இன முரண்பாட்டுகள், சமத்துவமின்மை, ஜனநாயக அத்துமீறல், சிங்கள பௌத்த நாடு எனும் தன்மை ஆகியவை இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களுக…
-
- 2 replies
- 513 views
-