Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 18ம் திருத்தச் சட்டம் ஒரே இரவில் நிறைவேற்றப்பட்டது! [ சனிக்கிழமை, 09 சனவரி 2016, 12:27.53 AM GMT ] 18ம் திருத்தச் சட்டத்தை கடந்த அரசாங்கம் ஒரே இரவில் நிறைவேற்றியதாக பிரதி அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பில் முழு நாடாளுமன்றை தெளிவுபடுத்தி மக்களின் அனுமதியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும். கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் செயற்படாது. கடந்த அராங்கம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்பட்டிருந்தது. எனினும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயக விரோத தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் தொடர்பில் பல்வேறு…

  2. ஊடகவியலாளர்கள் படுகொலை; விசாரணைகளை விரைவுபடுத்துக - ஐ.நா [ Saturday,9 January 2016, 05:20:24 ] ஸ்ரீலங்காவில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் விரைவுபடுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ப…

  3. ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறைமை வலுப்படுத்தப்பட வேண்டும் - மஹாத்மா காந்தியின் பேரன்:- 09 ஜனவரி 2016 ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி முறைமை வலுப்படுத்தப்பட வேண்டுமென மஹாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஸ்ண காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். 2000 முதல் 2002ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கோபலகிருஸ்ண காந்தி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முக்கியமானது என அவர் குறிப்பிட்…

  4. ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற முடியாது – மார்தட்டுகிறார் பசில் ஐதேகவினாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினாலோ, ராஜபக்‌சக்களை அரசியலிலிருந்து அகற்ற முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐதேகவினாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினாலோ, ராஜபக்‌சக்களை அரசியலிலிருந்து அகற்ற முடியாது. மக்களால் மாத்திரமே அவர்களை அரசியலில் இருந்து நீக்க முடியும். மகிந்த ராஜபக்‌ச சதி செய்து முன்னுக்கு வந்தவர் அல்ல, போராட்டத்தின் மூலமே முன்னுக்கு வந்தவர். மகிந்த ராஜபக்ச ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்னர் நாடு எதிர்கொண்டிருக்கும் நிலைமை கவலை தருகிறது. எமது நிர்வாக…

    • 0 replies
    • 421 views
  5. குமார் பொன்னம்பலத்தின் படுகொலையின் பின்னணி- சந்திரிக்காவின் களங்கத்தை போக்க தமிழ் தலைவர்கள் செய்த திருகுதாளம். அங்கம் -1 (குமார் பொன்னம்பலம் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இக்கட்டுரை தொடர் பிரசுரமாகிறது) குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் மூடப்பட்டு விட்டது. கொழும்பு நகரில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்காகவும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசிவந்ததை ஜீரணிக்க முடியாதவர்களே இப்படுகொலையை செய்தார்கள் என்பது வெளிப்படையான விடயம். என்றாலும் இப்படுகொலையின் சூத்திரதாரிகள் யார்? கொழும்பு நகரில் கும…

    • 0 replies
    • 333 views
  6. அமைச்சர் ராஜிதவும் ஆட்களைக் கடத்தியவர் தான்! - என்கிறார் கோத்தபாய தற்போது அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன ப்ரா என்ற அமைப்பை வைத்து கொண்டு ஆட்களை கடத்தினார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி காலத்தில் முகமூடி அணிந்த தலையாட்டிகள் எந்த வாகனத்தில் வந்தனர்?. கறுப்பு வாகனங்களிலா, வெள்ளை வாகனங்களிலா? தற்போது அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன ப்ரா என்ற அமைப்பை வைத்து கொண்டு ஆட்களை கடத்தினாரே.. அந்த காலத்தில் நான் இராணுவத்தில் இருந்தேன். அந்த காலத்தில் நான் மாத்தளை இராணுவ இணைப்பதிகாரி.. அந்த காலத்தில் மொறிஸ் மைனர் வாகனங்களில் இதனை செய்திருப்பார்கள் போல. நான் இர…

    • 0 replies
    • 347 views
  7. 31 வருடங்களின் பின்னர் மூதூர் பாலத்தடிச்சேனையில் மீள்குடியேறிய தமிழ் மக்கள்! திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாலத்தடிச்சேனையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாம்கள் அகற்றப்பட்டு அந்தப் பகுதியில் மீள்குடியேற மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 வருடங்களின் பின்னர் அப்பகுதியில் தமிழ் மக்கள் மீள்குடியேறுகின்றனர். 1985ஆம் ஆண்டு போர் காரணமாக அப்பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி இலங்கை இராணுவத்தின் ஆட்லறித் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. குறித்த காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தமது சொந்த ஊருக்குச் செல்ல…

    • 3 replies
    • 505 views
  8. தமிழ் மக்கள் பேரவையின் இணைந்தலைர் தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் தமிழ் மக்கள் பேரவையின் இணைந்தலைவராக செயற்பட்டுவரும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தராசா என்பவரை தமிழரசுக்கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.தெடர்ந்தும் தெரிவித்த வசந்தராசா என்னை கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சியின் அங்கத்தவராக சேர்த்துக்கொண்டவர்கள் தனக்கு 402 என்ற அங்கத்துவ இலக்கத்தை வழங்கி தமிழரசுக்கட்சியின் அனைத்துக் கூட்டங்களுக்கும் அழைத்திருந்தனர். தற்போது எனது அங்கத்துவ விண்ணப்பம் தமிழரசுக்கட்சியின் தொகுதிக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி எனது ஆயுட்கால அங்கத்துவ பணத்தை திருப்பி அனுப்பியுள்ளனர். நான் பொதுதேர்தல் நேரங்களில் சரியாக செயற்படவில…

    • 7 replies
    • 719 views
  9. வடக்கின் நிலைமைகள் குறித்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் மகிழ்ச்சி! இலங்கையின் நல்லிணக்க செயற்பாடு களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நோர்வே தயாராக இருக்கின்றது என்று நேற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார். இலங்கைக்கு நேற்றைய தினம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே நேற்றுக்காலை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் மேலும் கு…

    • 4 replies
    • 587 views
  10. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கான பணிகள் துரித கெதியில் ஆரம்பிக்கபடவுள்ளன 08 ஜனவரி 2016 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்பாக நினைவு தூபி அமைப்பதற்காக நடவடிக்கைகளை துரித கெதியில் வடமாகாண சபையினரால் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக நினைவுத்தூபி அமைப்பதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டு ஏக மனதாக நிறைவேற்ற பட்டு உள்ளது. அதனை அடுத்து தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் தூபி அமைப்பதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்க படவுள்ளன. அதற்காக முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் ஏற்பாட்டில் புதிதாக குழுவொன்றும் மாகாண சபையால் நியமிக்கப்பட்டு உள்ளது. வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி…

  11. ஜனாதிபதிக்கு முறையிட 1919 இலக்கம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டங்களை வழங்குவதற்காக இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த விசேட தொலைபேசி மையம் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1919 என்ற விரைவு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது குறைகளை அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். …

  12. பலாலி இராணுவ தலைமையகத்தில் சந்தன மரம் -செல்வநாயகம் கபிலன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பலாலி கட்டளை தலைமையகத்தில் சந்தன மரக்கன்று இன்று வெள்ளிக்கிழமை (08) நாட்டப்பட்டது. பிரிகேடியர் டி.எஸ்.வீரமணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சந்தனமரம் நாட்டப்பட்டதைத் தொடர்ந்து, 1,000 பயன்தரு மரக்கன்றுகளை கட்டளை பணியகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் நாட்டிவைத்தனர். - See more at: http://www.tamilmirror.lk/163370/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE…

  13. தமிழ் மக்கள் பேரவை தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தது. அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்களடங்கிய உபகுழுவை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது…

  14. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததனை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகி நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என அவரது ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச இன்று கண்டி அஸ்கிரிய விகாரைக்கு செல்லவுள்ளமையினால், அவர் கண்டி பிரதேசத்தில் உள்ளார் என ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஓராண்டு நிகழ்விற்கு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என வினவிய போது, தனக்கு தெரிந்தவரை அவ்வாறான அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அத…

  15. 30 வருடங்களுக்குப்பின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சம்பந்தன் சுமார் 30 வருடங்களுக்குப்பின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இரா. சம்பந்தன். புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூ அமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமாகிய இரா. சம்பந்தன் இணைத்தலமையை ஏற்றுக் கொண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். மேற்படி ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்க…

  16. ஜனாதியின் மகிழ்ச்சியான காலம் எதுவென்று தெரியுமா? கூறுகின்றார் ஜனாதிபதி நான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எது என்றால் 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இருந்து பதவிகளை எல்லாம் விட்டு வெளியில் வந்த காலம் தான் என் வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்த காலம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகின்ற நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுகின்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில், நான் பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட போது எனக்கு வாக்களித்த…

  17. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று விடுத்துள்ளது. இலங்கையின் சமகால அரசாங்கத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் சித்திரவதைகள் தொடர்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. புலிகள் அமைப்புடன் நேரடியாகவே…

    • 3 replies
    • 658 views
  18. தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின்நிற்க மாட்டேன் வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும். ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நீங்கள் காணாத உங்களுக்கு விளங்காதவற்றை தெளிவுபடுத்துவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம். கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்தது. ஜனவரி மாதம் தேர்தல் இடம்பெற்றது. ஆகஸ்ட் மாதம் இட…

  19. இலங்கையில் தமிழினமும் அரசியல் தீர்வும் இலங்கையில் தமது உரிமைகளை வென்றெடுத்து சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்காக தமிழ் மக்கள் பல வழிகளில் போராடியமை வரலாற்று உண்மையாகும் . அரசியல் ரீதியில் பல்வேறு போராட்டங்களில் சம உரிமைக்காக போராடிய தமிழினம் காலப்போக்கில் உரிமைகளை ஆயுதம் ஏந்திப்பெற்றுக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டது. இதன் பின்னரே இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் சர்வதேச அரங்கிற்கு சென்றது. குறிப்பாக மேற்குலக நாடுகளின் பார்வையும் தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தின் பின்னர் தான் இலங்கை மீது வலுவடைந்தது . எவ்வாறாயினும் மூன்று தசாப்தகால உரிமைகளை வென்றெடுப்பதற்கான தமிழினத்தின் ஆயுதவழிப் போராட்டம் ஓய்ந்தபோது , தமிழ் மக்களின் அரசியல் …

  20. நினைவுகளை மீட்டும் உறவுகள் -செல்வநாயகம் கபிலன் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலி-வடக்கு, மற்றும் வலி-கிழக்கு பகுதிகளை பார்வையிட வந்த காணி உரிமையாளர்கள் தாம் விட்டு சென்ற தமது நினைவுப் பொருட்களை எடுத்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது. 1990ஆம்ஆண்டு இப்பகுதியினை விட்டு வெளியேறிய இப்பகுதி மக்கள், தற்போது வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தமது காணிகளை பார்வையிட்டு வருவதுடன், துப்பரவு பணிகளிலும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் சிறு வயதில் இப் பகுதியினை விட்டு சென்ற தாம் தற்போது திருமணமாகி தமது குழந்தைகளுடன் இப்பகுதிக்க…

  21. இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையமாக இருந்து அண்மையில் பகுதியளவில் விடுவிக்கப்பட்ட பலாலி பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இப் பகுதியில் இராணுவத்தினர் பயன்படுத்திய ஒரு சில வீடுகளைத் தவிர ஏனைய வீடுகளுக்கே இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலிப் பகுதியிலும் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஜே 252, ஜே 253, ஜே 254 ஆகிய கிராம சேவர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பகுதி மக்களுடைய விவசாய நிலங்களாகவே காணப்படுகின்றது. இருந்த போதும் சிறிதளவு மக்களுடைய குடியிருப்பு காணிகளும் விடுவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் …

  22. வடக்கு வரும் ஜனாதிபதியும், பிரதமரும் கைதிகளை விடுவிக்க உதவ வேண்டும் : சரவணபவன் எம்.பி கோரிக்கை தேசிய பொங்கல் விழாவுக்காக வடக்குக்கு வருகை தரும் ஜனாதிபதியும், பிரதமரும் அரசியல் கைதிகள் தொடர்பில் திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் கைதிகள், ஊடகவியலாளர்களிடம் உரையாடும் போது பொங்கல் விழாவை புறக்கணிப்பதன் மூலம் தமிழ் மக்கள் தமது விட…

  23. எனக்கு ஒன்றும் தெரியாது -எம்.றொசாந்த் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்களின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மையா?' என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும…

    • 20 replies
    • 1.3k views
  24. சிங்க லே இயக்கம் வெளிப்பட்டது ஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட 'சிங்க லே' இயக்கத்தினர், புதன்கிழமை (06) மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டனர். யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் 'சிங்கள ஜாதிக பலமுலுவ' என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான 'சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்' என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார். முன்னர் பொது பல சேனாவின் செயற்பாட்டாளராக இருந்த மிதில்லே பஞ்ஞலோக்க தேரரே இந்தப் புதிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். அரசிய…

    • 1 reply
    • 748 views
  25. படையினரை போர்க்குற்றச்சாட்டில் இருந்து அரசாங்கம் விடுவிக்கும் – சிறிலங்கா அதிபர் உறுதி போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறிலங்கா படையினரை விடுவிப்பதற்கு, தமது அரசாங்கம் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் அரசாங்கம் ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தம்மைக் கொலை செய்வதற்கு, விடுதலைப் புலிகள் ஐந்து தட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.