ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
எரிபொருள் விலைப் பொறிமுறைமை விரைவில் அறிமுகம்:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 23 டிசம்பர் 2015 எரிபொருள் விலைப் பொறிமுறைமையொன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்தின் நன்மைகளை மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், இந்த விலைப் பொறிமுறைமை அமையும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக உலக சந்தையில் சடுதியாக எரிபொருளின் விலைகள் வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய மக்களுக்கு நலன்களை வழங்க விரைவில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பதினொரு ஆண்டுகளின் பின்னர் உலக சந்தையில்,…
-
- 0 replies
- 535 views
-
-
ஹட்டன் நகரில் கடை ஒன்றிலிருந்து கொள்வனவு செய்த சொக்லேட்டுகளில் புழுக்கள் [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 10:35.02 AM GMT ] நோர்வூட் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஒளி விழாவில் கலந்துக்கொண்ட சிறுவர்களுக்கு வழங்கிய சொக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகளுக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்குழு முறைப்பாடு செய்துள்ளது. குறித்த தினத்தில் நடைபெற்ற ஒளி விழாவில் கலந்துக்கொண்ட சிறுவர்களுக்கு வழங்குவதற்காக ஹட்டன் நகரப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் அதிகமாக சொக்லேட் கொள்வனவு செய்துள்ளார்கள். இந்த சொக்லேட்களை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பொழுது இவ்வாறு புழுக்கள் இருந்ததை கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் பொது சுகாத…
-
- 1 reply
- 285 views
-
-
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி .வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களும், அதன் அதிருப்தியாளர்கள் பலரும் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்றதால் இது கூட்டமைப்புக்கு எதிரான கூட்டு என விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், மேற்படி அமைப்பின் இணைத் தலைவரான வடக்கு முதல்வர் அதை …
-
- 1 reply
- 622 views
-
-
12,181 குடும்பங்கள் மீள்குடியமரவில்லை! யாழ். மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2015, 01:38.44 AM GMT ] யாழ். குடாநாட்டில் 10 ஆயிரத்து 716 தமிழ்க் குடும்பங்களும், ஆயிரத்து 465 முஸ்லிம் குடும்பங்களும் உள்ளடங்கலாக 12 ஆயிரத்து 181 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ளன என்று மாவட்டச் செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியமர்த்தப்பட வேண்டிய 10 ஆயிரத்து 716 தமிழ்க் குடும்பங்களில் ஆயிரத்து 318 குடும்பங்கள் குடாநாட்டில் உள்ள முகாம்களில் வாழ்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, குடாநாட்டில் உள்ள 190 ஆயிரத்து 150 குடும்பங்களில் தற்போது 617 ஆயிரத்து 722 குடும்பங்களே வசிக்கின்றன. அத்துடன…
-
- 0 replies
- 442 views
-
-
பொறுப்புக்கூறலுக்கு இலங்கை இராணுவம் ஒத்துழைக்க வேண்டும் : அமெரிக்கா வலியுறுத்து இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நம்பகமான நீதிப்பொறிமுறைக்குப் படையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.அத்துடன், படைத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டுமெனவும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மூன்று நாள் பயணமாக கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கலாநிதி அமி சீரைட், இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம், இதனை வ…
-
- 0 replies
- 467 views
-
-
சிங்கள முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரபாகரன்களைப் போல் அடிப்படைவாத தலைவர்கள் உருவாக இடமளிக்க முடியாது 23 டிசம்பர் 2015 சிங்கள முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரபாகரன்களைப் போல் அடிப்படைவாத தலைவர்கள் உருவாக இடமளிக்க முடியாது பிரதான இரண்டு கட்சிகளினதும் குறுகிய அரசியல் நோக்கத்தினால் வடக்கு பிரச்சினை பூதாகாரமாகியது என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இனியும் அரசியல் குறுகிய லாபங்களின் அடிப்படையில் தொடர்வதனை அனுமதிக்க முடியாது எனவும் அதனை கைவிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பற்றி பேசினால் தம் மீது சேறு பூசப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் தம்மை சிங்களப் புலி என அடையாளப்படுத்தியதாகத் தெரிவி;த்துள்ளார். …
-
- 0 replies
- 481 views
-
-
கோதபாய மீது குற்றம் சுமத்தினால் தற்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலையாக முடியும் - மஹிந்த ராஜபக்ஸ: 23 டிசம்பர் 2015 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலையாக முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோதபாய ராஜபக்ஸ குற்றம் செய்தார் என குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால், தற்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். கோதபாயவை குற்றவாளியாக்க சில தரப்பினர் தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். புத்திஜீவிகள், கலைஞர்கள், படைவீரர்களிடம் விசாரணை நடாத்துவது நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 459 views
-
-
ஐ.நா மனித உரிமை பேரவையின் யூன் அமர்வு நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்கா [ Wednesday,23 December 2015, 03:21:20 ] ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் விவகாரம் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்க்குற்றம் உள்ளிட்ட மனித உரிமை மீறல் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்னும் உறுதியான வடிவத்தை வெளியிடாததனால் இந்த விடயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் வருடாந்த வரைவு வேலைத்திட்டத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த…
-
- 0 replies
- 533 views
-
-
கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தின் போது சுற்றாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் - ஜனாதிபதி 22 டிசம்பர் 2015 கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தின் போது சுற்றாடலுக்கு முன்னுரிமை அளிக்க்பபடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காடுகள் கரையோரப் பகுதிகள் போன்றவற்றையும் ஒட்டு மொத்த சுற்றாடலையும் பாதுகாத்துக்கொள்ள முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றாடல் பாதுகாப்பு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இடம்பெறும் சுற்றாடல் அழிவுகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்று இரண்டு நாட்களில் நிய…
-
- 0 replies
- 449 views
-
-
இலங்கைக்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் கலாநிதி ஏமி சீரைட், மனித நேய உதவி, இயற்கை அனர்த்தங்களில் உதவுதல், மற்றும் வெளிநாட்டு அமைதிகாக்கும் செயற்பாடுகளில் அதிகரித்த பங்கேற்பு என்பவற்றில் இலங்கை பாதுகாப்புப் படையினர் வகிக்கக் கூடிய எதிர்கால வகிபாகம் குறித்து ஆராய்ந்ததாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு துறை மறுசீரமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளுக்கு பயிற்சியளித்தல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தி…
-
- 0 replies
- 365 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் 9ம் திகதி பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இலங்கை ஜனநாயகக் குடியரசின் 3வது அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்குடன், பாராளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக மாற்றப்படவுள்ளமை குறித்தே இந்த உரை அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி 9ம் திகதி காலை ஜனாதிபதி இந்த உரையை ஆற்றுவார் என, அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வென்று ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அது தொடர்பிலான நிகழ்வுகள் குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்ற…
-
- 0 replies
- 271 views
-
-
கொழும்பு மாநகரசபையின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 500 ரூபா நாணயக் குற்றியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. வட்ட வடிவிலுள்ள இந்த நாணயத்தின் விளிம்பில் "இலங்கை மாநகர சபை" என தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாணயங்கள் கொழும்பில் அமைந்துள்ள நகர மண்டபத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=147571&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 408 views
-
-
விடுமுறையை கழிப்பதற்காக பிஷ்வால் இலங்கை விஜயம் செய்துள்ளார் விடுமுறையை கழிப்பதற்காகவே நிஸா பிஷ்வால் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க உதவிச் செயலாளர் நேற்றைய தினம் அதிகாலை இலங்கையை வந்தடைந்திருந்தார். பிஷ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், பிஷ்வால் அவ்வாறு எவரையும் சந்திக்க மாட்டார் எனவும், இந்த விஜயமானது முழுக்க முழு…
-
- 5 replies
- 1.1k views
-
-
குடாநாட்டில் ஏற்பட்டகடும் மழைகாரணமாக பலகிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானது. இம் மக்கள் இடம்பெயர்ந்து பொதுமண்டபங்களில் தங்கவேண்டியநிலைஏற்பட்டது. இவர்களுக்குதேவையான அத்தியவசிய உலர் உணவுபொருட்கள் தேவைப்பட்டது. இதனைகருத்தில் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் உதவமுன் வந்தனர். இந்தவகையில் வடமராட்சிகிழக்கு, தும்பளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியவசிய உதவிகளை ஜேர்மனியில் இருக்கும் கையல்புறோன் கந்தசாமிகோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். கந்தசஸ்டி தினத்தில் கோவிலுக்குவரும் பத்தர்கள் வழங்கியநிதியினை இம் மக்களின் உணவுதேவைக்காக வழங்கப்பட்டது. கையல்புறோன் கந்தசாமிகோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து தாயகமக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் ச…
-
- 1 reply
- 636 views
-
-
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 08:19.51 AM GMT ] தமது தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தமது கல்விக்கான தேவைகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியை 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும், விரிவுரையாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தங்குமி…
-
- 0 replies
- 474 views
-
-
எக்னலிகொட கடத்தல், இராணுவ அதிகாரிகளை வெலிக்கடைக்கு தேடிச் சென்ற மஹிந்த! [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 09:18.32 AM GMT ] ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்று பார்வையிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களில் இருவர் லெப்டினன்கள், மற்றும் சாஜன்கள் உள்ளடங்குவதுடன் இவர்கள் யுத்த காலத்தில் இராணுவ புலனாய்வு சேவைகளை வழங்கியதாக குறிப்பிடப்படுகின்றது. அது தொடர்பான…
-
- 0 replies
- 413 views
-
-
யாழ். நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் ~தமிழ் மக்கள் பேரவை| என்ற அமைப்பு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்ட ஏற்பாடுகள், அறிக்கைகள், வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் போன்றவற்ப் பார்க்கின்றபோது நீண்டகாலமாகத் திட்டமிட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதென்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.மதத் தலைவர்கள், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே ~தமிழ் மக்கள் பேரவை| என்று அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பல தசாப்தகாலமாகப் புரையோடிப்போயு…
-
- 0 replies
- 612 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா காணாமாலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் பதிவில் மட்டும் இருக்க கூடாது. அவை தொடர்பில் தொடர்ந்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும். என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் போது காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் மீதும் பல குற்றசாட்டுக்கள் முன் வைக்…
-
- 2 replies
- 301 views
-
-
செல்வம் அடைக்கலநாதனின் இரட்டை வேடம் அம்பலம்! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை (19.12) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யாத பட்சத்தில் ரெலோ கட்சி வரவு செலவுத் திட்ட வாக்களிப்பை புறக்கணிக்கப் போவதாக அக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சபையில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வாக்க…
-
- 1 reply
- 629 views
-
-
யாழ்ப்பாணத்தில் அங்கஜன் வீட்டில் இளைப்பாறி தேநீர் அருந்திச் சென்றார் ஜனாதிபதி- (வீடியோ) தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்ற சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்து தேநீர் அருந்திச் சென்றார். இன்று காலை யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதியை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் வரவேற்றிருந்தார். http://ilakkiyainfo.com/யாழ்ப்பாணத்தில்-அங்கஜன்/
-
- 0 replies
- 469 views
-
-
வவுனியா வடக்கில் தனிக்கல்லை அண்டியுள்ள 400 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகும் அபாய நிலை வவுனியா வடக்கில் தனிக்கல்லு குளத்தையண்டிய 400 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகும் அபாயநிலையில் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 1965 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட இக்குளம் கடந்த 50 வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையிலேயே உள்ளது. 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரங்களையடுத்து இடம்பெயர்ந்த இப்பகுதி விவசாயிகள் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறிய போது குறித்த குளத்தின் கீழான வயற்காணிகள் எல்லையோரத்தில் குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவரால் பயிர்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், மக்கள் தமது காணி ஆவணங்களைக் காட்டி அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டு, நெற் செய்கையில்…
-
- 0 replies
- 203 views
-
-
சம்பந்தன் அடிப்படை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றார். – அ.ஈழம் சேகுவேரா- December 21, 2015 செய்திகள்0 68 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெயரால் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’ சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களினாலும், வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கு என்ன வேண்டும்? என்பதை பகிரங்கமாகவே கேட்கத்தொடங்கி விட்டனர். நீதிக்காக வீதி வரைக்கும் வந்து போராடவும் தொடங்கிவிட்டனர். இன்றல்ல நேற்றல்ல, போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதற்கு பின்னரான கடந்த ஆறரை வருடங்களாக இந்த போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.…
-
- 0 replies
- 295 views
-
-
சரத் என் சில்வாவிற்கு நெருக்கமான நீதவான் தாஜூடீன் வழக்கை விசாரணை செய்யவுள்ளார்? முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவிற்கு மிகவும் நெருக்கமான நீதவான் ஒருவர் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை வழக்கு குறித்த விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசாரணை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த இதுவரை காலமும் இந்த விசாரணைகளை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சரத் என் சில்வாவின் விசுவாசி ஒருவரை இந்த வழக்கை விசாரணைய செய்ய நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதவான் பீரிஸ் மாத்தறை மாவட்ட நீதவானாக எதிர்வரும் ஜனவரி மாதம்…
-
- 0 replies
- 290 views
-
-
யாழில் காணாமல் போனவரின் அடையாள அட்டை தயாமாஸ்டரின் அலுவலகத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கிறார் டக்ளஸ் யாழில் காணாமல் போனவரின் அடையாள அட்டை கிளிநொச்சியில் தயா மாஸ்டரின் அலுவலகத்தில் காணப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கே,என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழில் 2006ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த பின்னர் ஆவரங்காலை சேர்ந்த தனது மகனை கடத்தி விட்டார்கள் என தாய் ஒருவர் கதறியழுது கொண்டு தனது பிள்ளையை தேடித்திரிந்தார். யாழில் பல்வேறு இடங்களில் தேடி திரிந்து கொண்டு இருந்த வேளை, கிளிநொச்சியில் அவருடைய மகன் இ…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் மக்கள் பேரவை என்பது வெறுனே தமிழ் மக்களை குழப்புகின்ற விடயம்.இது தமிழ் மக்களுக்கு புதிதல்ல.தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு வருகின்றபோது இவ்வாறுதான் நடந்து வந்துள்ளது. கடந்த 65 வருடகாலமாக இவை நடைபெற்றுள்ளன. இதன் இன்னொரு வடிவம்தான் தற்போது உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை ஆகுமென்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வை தட்டடிக்கழிக்க பலர் காலங்காலமாக பாவிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அது விடுதலை புலிக…
-
- 2 replies
- 710 views
-