Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சவுதியில் இலங்கை பணிப் பெண் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்' தண்டனைகளுக்கு எதிராக கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இணங்கியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. அந்தப் பெண்ணை கற்களால் அடித்துக்கொல்ல வேண்டும் என்று நான்கு மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவர் மீதான வழக்கு விசாரணை மீண்டும் நடக்கவுள்ளதாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தின்படி, திருமணத்துக்கு வெளியிலான ப…

  2. ஆதாரம் காண்பித்தும் நல்லாட்சி அரசாங்கத்தால் என் பிள்ளையை மீட்டு தர முடியவில்லை எனது மகள் இருக்கின்றா என்ற ஆதாரத்துடன் காண்பித்தும் எமது பிள்ளையினை மீட்டு தர முடியாது இந்த நல்லாட்சி அரசாங்கம்.இருக்கின்றது என காணாமலாக்கப்பட்ட மாணவி ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆதாரங்களை கொண்டு வாருங்கள் என கூறுகின்றார்கள். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரி பால சிறிசேனா அவர்களினால் வெளியிடப்பட்ட தேர்தல் பிரச்சார…

  3. அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றனர் – சந்திரிக்கா அதிகாரத்தைப் பகிர வேண்டுமென 68 வீதமான சிங்களவர்கள் விரும்புகின்றார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நிறுவனமொன்றின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் 23 வீதமான சிங்களவர்களே அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும் பின்னர் அந்த எண்ணிக்கை 68 வீதமாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெண்த…

  4. போதைப்பொருளுக்கு அடிமையாக்கி இளைய தலைமுறையின் சுதந்திர வேட்கையை நிர்மூலமாக்கத் திட்டம் கடந்த காலத்தில் தமிழ்மக்கள் ஒழுக்க சீலர்களாகவும் பண்பாடு உள்ளவர்களாகவும், கல்வியில் சிறந்து விளங்குபவராகவும், உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர் போதைப்பொருள் பாவனையை எம்மிடையே அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் எமது சமுதாயத்தை நிர்மூலமாக்கினால் தான் சுதந்திர எண்ணம் எமது இளைய தலைமுறையினருக்கு எழாது தடுக்கலாம் என்ற நப்பாசையே சிலரிடம் இருக்கின்றது இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் பால்நிலை வன்முறைக்கு எதிரான 16 நாள் செயற்பாட்டு விழிப்புணர்வு நிகழ்வு இ…

  5. ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க மாட்டோம் -சொர்ணகுமார் சொரூபன் யாழில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பாக தாங்கள் சாட்சியமளிக்க மாட்டோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண குடும்ப உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த காணாமற்போனோரின் உறவினர்கள், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (08) ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர். தங்கள் முடிவு தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'காணாமற்போனோரை கண்டறிவதற்காக முன்னாள் ஜனாத…

  6. ஜெயக்குமாரியின் ஆவணங்களைக் கையளிக்குமாறு உத்தரவு பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடுமையான நிபந்தனைகளுடன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விசாரணைக்கு தேவைப்படாத பொருட்களை மீளக் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலேந்திரன் ஜெயக்குமாரி உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது ஜெயக்குமாரி சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி கணேசலிங்கம், ஜெயக்குமாரியின் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பலதரப்பட்ட ஆவணங்கள் இரகசிய பொ…

  7. மகேஸ்வரன் கொலை தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் விஜயகலா முறைப்பாடு செய்ய முடியும் - டக்ளஸ் தேவானந்தா 08 டிசம்பர் 2015 முன்னாள் அமைச்சர் ரீ.மகேஸ்வரன் கொலை தொடர்பில், அவரது பாரியார் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உயர் நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்து நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் நீதிமன்றில் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆணைக்குழு ஒன்றின் ஊடாகவோ அல்லது நீதிமன்றின் ஊடாகவோ விசாரணை நடத்தப்பட முடியும் எனவும், விசாரணைகளை எதிர்நோக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  8. வடக்கில் காடழிப்பு பிரச்சினையை ஆராய உயர்மட்டக் குழுவை அனுப்புகிறார் ஜனாதிபதி! [Tuesday 2015-12-08 09:00] வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக காடுகளை அழிப்பதற்கு அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடந்த ஆட்சியின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு வாரத்துக்குள் வடக்குக்கு அதிகாரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என்றும், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பில் நடடிவக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். வடக்கில் மீள்குடியேற்றத்துக்காக காடுகளை அழிப்பதற்கு அதிகாரிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடந்த ஆட்சி…

  9. யார் வருவார் ஒரு சேதி சொல்ல? - வன்னிப்போரின் சாட்சியாகவுள்ள சதீஸ்குமாரின் அவல வாழ்வு! [ செவ்வாய்க்கிழமை, 08 டிசெம்பர் 2015, 05:03.41 AM GMT ] காத்திருப்புக்கு எல்லையில்லை. வலி நிறைந்த வாழ்க்கையிலிருந்து மீள்வதற்காக, எங்காவதிருந்து ஒரு கை நீண்டு அந்த மீட்பைச் செய்யுமா என்று எதிர்பார்த்திருக்கும் காத்திருப்பு மிகக் கொடியது. ஆனால், அப்படித்தான் இன்றைய வாழ்க்கை வன்னியில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதை அவர்கள் விரும்பவேயில்லை. ஆனால் தள்ளி விடமுடியாத அளவுக்கு இது அவர்களுடைய கால்களைச் சுற்றிக் கொடியாகவும் விசப்பாம்பாகவும் பின்னியிருக்கிறது. இந்த அவலத்திலிருந்து, இந்தக் காத்திருப்பிலிருந்து மீள்வதெப்படி? போர் முடிந்தாலும் அவலம் முடியவில…

  10. நிலாவெளிக் கடற்பரப்பில் மீதந்த சடலம் சென்னை டாக்ஸி சாரதி ஒருவரது 08 டிசம்பர் 2015 அண்மையில் நிலாவெளிக் கடற்பரப்பில் மிதந்த சடலமானது, சென்iயைச் சேர்ந்த டாக்ஸி சாரதி ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. என்.பூமணிதுரை என்ற நபரின் சடலமே இலங்கையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் மீட்கப்பட்ட விடயங்கள் சென்னைக்கு அறிவிக்கப்பட்டள்ளதாகவும், சடலம் திருகோணமலை வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீனவர்கள் குறித்த சடலம் மிதப்பதனை அவதானித்து இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…

  11. பல்கலை, உயர்தர மாணவர்களுக்கு எச்.ஐ.வி.பரிசோதனை 08-12-2015 08:29 AM பல்கலைக்கழக மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு, எச்.ஐ.வி மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 191பேர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 6,300 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், உயர்தரம்…

  12. ஒருவாரத்திற்குப் பின் சென்னை - கொழும்பு விமான சேனை மீண்டும் ஆரம்பம் [ Tuesday,8 December 2015, 03:29:45 ] கடந்த ஒருவாரகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சென்னை – ஸ்ரீலங்காவிற்கான விமானப்போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் UL-127 ரக ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் சென்னை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக அங்கு கடந்த ஒருவாரமாக வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து சகன போக்குவரத்துகளும் தடைபட்ட அதேவேளை மக்களின் இயல்பு வாழக்கையும் பாதிக்கப்பட்டது. தற்போது வெள்ளநீர் வடிய ஆரம்பித்திருக்கும் நிலையில் மூடப்பட்டிருந்த சென்னை விமான…

  13. வரலாற்றில் அதிக மாணவர்கள் தோற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம் [ Tuesday,8 December 2015, 03:41:00 ] ஸ்ரீலங்கா வரலாற்றில் அதிக மாணவர்கள் தோற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தப் பரீட்சைக்கு இம்முறை 2 இலட்சத்து 61 ஆயிரத்து 95 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும், 4 இலட்சத்து மூவாயிரத்து ஆயிரத்து 442 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாகவும் மொத்தமாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இப்பரீட்சை 4 ஆயிரத்து 670 பரீட்சை நிலையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை நேரங்களில் 46 ஆயிரம் கண்கானிப்பாளர்கள் ஈடுபடுத்தப…

  14. சீனாவின் போட்சிட்டி பணிகள் ஆரம்பம்: இந்தியாவும் போட்சிட்டி திட்டத்தை முன்னெடுக்கலாம்! [ செவ்வாய்க்கிழமை, 08 டிசெம்பர் 2015, 03:04.10 AM GMT ] இலங்கையின் புதிய அரசாங்கம், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாலமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்தக்கருத்தை இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப்பெரிய அயல்நாடுகளான இந்தியாவும் சீனாவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் போட்டித்தன்மையை கொண்டுள்ளன. இந்தநிலையில் இரண்டு நாடுகளுடனும் இணைந்திராமை மற்றும் நடுநிலைப் போக்கை கொண்டிருக்கவே இலங்கை விரும்புவதாக ரவி கருணாநாயக்க நிக்கேய் ஆசியன் ரிவ்யூ என்ற சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். …

  15. மகிந்த அணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க மறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணிக்கு வழங்க முடியாது என அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பார் எனவும் ஜனாதிபதி கூறியதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டினர். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்…

  16. முல்லைத்தீவில் 3,487 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசம் [ Monday,7 December 2015, 07:56:12 ] முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 487 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசம் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் காணி அனுமதிப்பத்திரமுள்ள மற்றும் பொதுக் காணிகளாக 12 ஆயிரத்து 785 ஏக்கர் நிலங்களும், உறுதிக்காணிகளாக 702 ஏக்கர் நிலங்களும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் சிங்கள குடியேற்றங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்…

  17. யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம் யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை வரையிலான பகுதிகளில் மக்களுடைய குடிநீர் கிணறுகளில் எண்ணெய் படலம் உருவாகியுள்ளதாகவும்,கழிவு எண்ணெய் மற்றும் பார உலோகங்கள் கலந்துள்ளதாகவும் இவ்வாண்டு தொடக்கத்தில் யாழ்.குடாநாடு முழுவதும் பரபரப்பான பேச்சுக்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. …

  18. நயி­னா­தீவு – நாக­தீப நடப்பது என்ன?? –கபில் வடக்கு மாகா­ண­ச­பையில் நயி­னா­தீவு தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், அர­சியல் அரங்கில், சர்ச்­சை­களை ஏற்படுத்தியிருக்கிறது. நயி­னா­தீவின் பின்­னணி, வடக்கு மாகா­ண­ச­பையின் தீர்­மானம் இந்த இரண்­டையும் சரி­வரத் தெரிந்து கொள்­ளா­ம­லேயே, சிங்­கள, தமிழ் அர­சியல் தலை­வர்கள் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். நாக­பூ­சணி அம்மன் ஆல­யத்­தினால் வர­லாற்று ரீதி­யாகப் பிர­பல்யம் பெற்­றி­ருந்த நயி­னா­தீவு, இப்­போது நாக­வி­கா­ரை­யினால், “நாக­தீப” என்று மாறும் நிலையை எட்­டி­யி­ருக்­கி­றது. இலங்­கைக்கு இரண்­டா­வது தடவை வருகை தந்­த­போது நாக­தீ­பவில் புத்தர் ஓய்­வெ…

  19. பிரகீத் எக்னிலிகொட காணாமல் போன வழக்கு: இராணுவம் மீது மனைவி புகார் பிரகீத் எக்னிலிகொடவின் மனைவியும் மகனும் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரத்தில் சில அரச நிறுவனங்கள், குறிப்பாக இலங்கை இராணுவம் செயற்படும் விதம் குறித்து தனக்கு திருப்தியானதாக இல்லை என்று எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட குற்றம் சாட்டியிருக்கிறார். இலங்கை இராணுவமும் இராணுவப் புலனாய்வு பிரிவும் மந்தகதியில் செயற்படுகின்றமை தனக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்தார் சந்தியா எக்னெலிகொட. ஊடகவியலாளர் பிரகீத் எக்னிலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வ…

  20. தமிழகத்துக்கு உதவுமாறு பிற நாடுகளிடம் கோரவில்லை - இந்திய துணைத் தூதுவர் தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் உதவி கோரவில்லையென யாழில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஏ.நடராஜனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக மக்களுக்கு உதவுவது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வடக்கு முதல்வர் தம்மிடம் தொடர்புகொண்டு கேட்டபோத…

  21. இலங்கைப் பணிப் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை மீள்பரிசீலனை இலங்கைப் பணிப் பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனை மறு பரிசீலனை செய்யப்படுவதாக, செய்திகள் வௌியாகியுள்ளன. குறித்த தண்டனையை மீள் பரிசீலனை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. 45 வயதுடை குறித்த பெண் மூன்று குழந்தைகளின் தாயாவார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து சவுதியில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருக்கு பிரிதொரு ஆணுடன் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்தக் குற்றத்தை அவர் ஒப்புக் கொண்ட நிலையில், …

  22. மகேஸ்வரன் கொலை : சகோதரர்களிடம் விசாரிக்க வேண்டும் மகேஸ்வரன் கொலை தொடர்பில் அவரது ஐந்து சகோதரர்களையும் அழைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் என தெரிவித்த ஈ.பி.டி.பி. தலைவரும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா இக் கொலை தொடர்பில் விசேட விசாரணைகள் குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென்றும் அவர் இன்று பாராளுமன்றத்தில் வேண்டுகோளை முன்வைத்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா எம்.பி. இவ் வேண்டுகோளை முன்வைத்தார். சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ம…

  23. யுத்த குற்றங்களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும்: 07 டிசம்பர் 2015 யுத்த குற்றங்;களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும், புதுடில்லியில் உள்ள பிரிட்டனின் பாதுகாப்பு ஆலோசகர் இந்தவிடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவார் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் பாரம்பரியத்திற்கு தீர்வை காணப்போவதாக அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் அது தீர்மானமொன்றிற்கு இணை அனுசரனையை வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் இலங்கை இராணுவத்திற்கு முக்கிய பங்களிப்புள்ளது. பிரிட்டன்…

    • 3 replies
    • 910 views
  24. திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக்கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள் [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2015, 12:29.15 AM GMT ] இந்தியாவின் பிரபல்யமான ஆலயங்களில் ஒன்றான திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக் கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள் காணப்படுவதாக, திருப்தி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பணத்தை, கதிர்காம தேவாலயத்தின் அபிவிருத்திக்காக வழங்கத் தயார் என திருப்பதி ஆலய பரிபாலன சபையினர், கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகே தெரிவித்துள்ளார். சுமார் இருபது லட்ச ரூபா பெறுமதியான பணம் இவ்வாறு நாணயக் குற்றிகளாக ஆலய உண்டியல்களில் முடங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவான நாணயக் குற்றிகள் காணப்படுவதனால் விமானம் ஊட…

    • 4 replies
    • 1.4k views
  25. 2016 தமிழரின் அரசியல் வரலாற்றில் முக்கியமான ஆண்டு! - சம்பந்தன் [Monday 2015-12-07 09:00] தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்: தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 ஆம் ஆண்டு அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.