ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
கொழும்பு இலங்கையில், பாதாள அறைகளுடன் ரகசிய சித்ரவதை கூடம் இயங்கியதை ஐ.நா. குழு நேரில் கண்டுபிடித்தது. 10 நாள் பயணம் இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்த சமயத்திலும், சண்டைக்குப் பிறகும் ஏராளமான தமிழர்கள் காணாமல் போய்விட்டதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரிப்பதற்காக, பெர்னார்ட் துகைமே, தே–ஒங் பைக், ஏரியல் துலிட்ஸ்கி ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைத்தது. இக்குழுவினர், இலங்கைக்கு சென்றனர். அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். தலைநகர் கொழும்பு மட்டுமின்றி, கலே, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, மன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
அண்மையில் வடக்கு, கிழக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த காணாமல் போனோர் தொடர்பிலான ஐ.நா செயற்குழுவிடம் சாட்சியமளித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசு விசாரணைகளை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். காணாமல் போனோர் தொடர்பிலான ஐ.நா குழுவினர் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர். அதன்போது சாட்சியங்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் கருத்துவெளியிட்டதுடன், இலங்கை அரச தரப்பினருடான சந்திப்பின்போதும், இக்கருத்தை தெரிவித்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவ்வாறு சாட்சியங்கள் மிரட்டப்பட்டிருந்தால், அது குறித்து இலங்கை அரசு விசாரணைகளை நடத்தும் எனத் தெரிவித்தார். இவ்வாறான மிரட்டல் செயற்பாடுகள் ஒவ…
-
- 0 replies
- 468 views
-
-
மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கிணற்றினுள் தவறி வீழ்ந்து சாவு ஈழத்தின் மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கதிரவேற்பிள்ளை கிணற்றில் தவறி வீழ்ந்து அகால மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்.கே.கே.எஸ் வீதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழராட்சி மாநாட்டு படுகொலை, மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல நெருக்கடியான நேரங்களில் புகைப்பட ஊடகவியலாளராக செய்தி சேகரிப்பில் துணிவுடன் ஈடுபட்டவர். போராட்டங்கள் இடம்பெற்ற காலங்களின்போது பொலிசாரின் தாக்குதலால் தனது ஒருகண்ணின் பார்வையையும் இழந்தவர். ஒற்றைக்கண் பார்வை இழந்த பின்னரும் ஊடகத்துறையை விட…
-
- 0 replies
- 882 views
-
-
சுமந்திரனின் நடவடிக்கைகள் பச்சோந்தித் தனத்தை காட்டுகின்றது : ஆனந்தசங்கரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செயகின்றன. சமீபகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின் நிரந்தர தீர்விற்கும் வழி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக தமிழ் மக்களின் போராட்டம், அவர்களின் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், அவரின் பச்சோந்த…
-
- 0 replies
- 508 views
-
-
14 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் 14 பேரும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் இன்றைய தினம் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அத்துடன், இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய மூன்று படகுகள் கடற்படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று யாழ். கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://onlineuthayan.com/news/3387
-
- 0 replies
- 369 views
-
-
விபத்துக்களால் மாண்ட உயிர் ஊர்வலங்களால் மீண்டு வராது : முதலமைச்சர் கடந்த கால போரினால் வீதிகள் குன்றும் குழியுமாக காணப்பட்டமையினால் வாகனங்களை மெதுவாக செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது போர் மேகங்கள் களைந்து சென்று அமைதிச் சூழல் ஏற்பட்டதால் வீதிகள் திருத்தப்பட்டு காப்பெற் வீதிகளாக்கப்பட்டு அளவுக்கதிகமான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகின்றது என வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இன்று வீதி பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்று யாழ்.கிறீன் கிறாஸ் விடுதியில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே …
-
- 0 replies
- 685 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிந்த பின்னரே நடைமுறைக்கு வரும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=145138&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 647 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு, இனப்படுகொலையும் நாமும் எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார். அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார். உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. ஆன…
-
- 24 replies
- 1.7k views
-
-
அரசாங்கத்தின் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்த சிறுமிகளை, குழு ஒன்று, விபச்சாரத்திற்கு பயன்படுத்திய சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கம்பளை பகுதியில் உள்ள விபச்சாரவிடுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட விபச்சாரவிடுதியில் சோதனைசெய்த பொலிஸார் அங்கு 20 வயதிற்கும் குறைவான யுவதிகள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர், குறிப்பிட்ட விடுதிக்கு இந்த யுவதிகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டனர் என அவர்கள் விசேட விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த விசாரணைகளின்போது நாடு முழுவதிலும் உள்ள அரசாங்கத்தின் சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு இல்லங்களிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் சிலர் அங்குள்ள சிறுமிகள் 18 வயதை அடைந…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறினார். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவரது இடத்துக்குப் பதிலாக அகிலதாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அங்கஜன் இராமநாதன், தனது அலுவலகத்துக்கு தன்னை அழைத்து, கொலை மிரட்டல் விடுத்து பதவி விலகச் சொன்னதாகக் கூறி, அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 497 views
-
-
750 குற்ற சம்பவங்களுடன் ராஜபக்ஷ குடும்பத்துக்கு தொடர்பு 19-11-2015 10:06 AM கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பான 725 சம்பவங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தொடர்புள்ளதாகவும் இவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மற்றும் மனித படுகொலைகள் தொடர்பானமுறைப்பாடுகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தொடர்புடைய 25 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ, ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய முறைபாடுகள் 725 தொடர…
-
- 0 replies
- 443 views
-
-
பரணகம ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க யாழ் மாவட்டத்தில் 1620 பேர் விண்ணப்பம் [ Thursday,19 November 2015, 03:21:44 ] காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு யாழ். மாவட்டத்தில் விசாரணைகளை அடுத்த மாதம் முன்னெடுக்கவுள்ளது. பரணகம ஆணைக்குழுவுக்கு முன்பாக சாட்சியமளிப்பதற்கு இதுவரை 1620 பேர் விண்ணப்பித்திருப்பதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார். இதன்படி யாழ். மாவட்டத்தில் அடுத்த மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை அமர்வுகளை நடத்த பரணகம ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. டிசம்பர் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலகத்திலும், 13ஆம், 14ஆம் திகதிகளில் வடமாராட்சி பிரத…
-
- 0 replies
- 385 views
-
-
"கடற்படையின் இரகசிய முகாமை சுவரிலிருந்த வரிகளும் கறைகளும் காட்டிக் கொடுத்தன" ஐநா பிரதிநிதிகள்: 19 நவம்பர் 2015 திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் கண்டு பிடிக்கப்பட்டது: திருகோணமலையில் இரகசிய சித்திரவதை முகாம் ஒன்று கண்டு பிடிக்க்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பலவந்த காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இந்த இரகசிய தடுப்பு மற்றும் சித்திரவதை முகாமை கண்டு பிடித்துள்ளனர். இரகசியமான முறையில் நிலத்தின் கீழ் முகாம் அமைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்;திப்பில் இந்த முகாம் பற்றி, ஐக்கிய நாடுகள்…
-
- 0 replies
- 385 views
-
-
11 அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க மறுப்பு! பயங்கரவாத தடை சட்டத்திற்கு அமைய கைது செய்யப்பட்ட 11அரசியல் கைதிகளுக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகள இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் இவர்களை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். http://onlineuthayan.com/news/3341
-
- 1 reply
- 436 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், ஸ்ரீநேசன், வியாழேந்திரன், மாகாணசபைப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினரான நடராசா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, அரியநேத்திரன் ஆகிய…
-
- 3 replies
- 783 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது இயங்கு நிலையில் உள்ளதா என்ற கேள்வி பலரிடம் எழுந் துள்ளது. கொழும்பில் கூட்டம் கூடி இரா.சம்பந்தன் அவர்கள் தனி மனிதனாக தீர்மானம் எடுக்கின்ற நடைமுறை இருக்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் என்று யாரேனும் கருதுவார்களாயின் அதுவே மிகப்பெரும் மடமைத்தனமாகும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதுகாத்து தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்ற சிந்தனை இருந்திருக்குமாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதே முதற்கடமையாக இருந்திருக்கும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்…
-
- 1 reply
- 832 views
-
-
சிறுவன் துஷ்பிரயோகம்: இளைஞனுக்கு சிறை வவுனியாவில் சிறுவனொருவனை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞனை குற்றவாளியாக இனங்கண்ட வவுனியா மேல் நீதிமன்றம், அவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 7 வயது நிரம்பிய சிறுவனொருவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியா அண்ணாநகரைச்சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கே வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், 7 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் தண்டமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். வளர்ப்பு மீன் விற்பனை செய்யும் கடையில் அதன் நிர்வகித்து வந்த 19 வயதுடைய இளைஞனொருவர் தனக்கு அறிமுகமான 7 வய…
-
- 0 replies
- 597 views
-
-
இலங்கையிலிருந்து மதுரையை நோக்கி சென்ற விமானத்தின் சக்கரங்களில் ஒன்று கழன்றது! இலங்கையிலிருந்து இந்தியாவின் மதுரை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் சக்கரமொன்று கழன்று கழன்றதாக 'தி இந்து' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த விமானத்தை பாதுகாப்பான முறையில் விமானி மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் 70 பயணிகளும் விமான ஊழியர்களும் 5 பேரும் பயணித்துள்ளனர். சம்பவத்தினால் விமானத்தில் பயணித்த எவருக்கும் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது. - See more at: http://www.metronews.lk…
-
- 0 replies
- 709 views
-
-
அமெரிக்காவின் 51ஆவது மாநிலமான இலங்கையை பார்வையிடுவதற்கு ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் வருகிறார். இவரது வருகைக்கு எமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் புலி ஆதரவாளர்களைச் சந்திக்கும் சமந்தா பவர் ஏன் முஸ்லிம்,சிங்களத் தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பினார். கொழும்பில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஐ…
-
- 2 replies
- 763 views
-
-
இனவாதம், மதவாதம் உள்ளிட்ட நாட்டில் காணப்பட்ட பல தரப்பட்ட பிரச்சினைகளின் காரணமாக நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் அனைவரும் மீளவும் நாட்டிற்கு வருகை தரவேண்டும். மேலும் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் இலங்கையின் புதிய மாற்றம் நோக்கிய பயணித்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார். ஜனவரி 8 ஆம் திகதி பின்னர் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவது உள்ளிட்ட அனைத்து நல்லாட்சி வேலைத்திட்டங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் அவர் குற…
-
- 2 replies
- 612 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விடுதலைப் புலிகளின் கொடூரமான கொலைகாரர்களை விடுதலை செய்யும் அரசாங்கம் மறுபுறம் இச்சட்டத்தை பயன்படுத்தி நாட்டை மீட்டெடுத்த படையினரை சிறையில் அடைக்கின்றது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சாட்டினார். அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரிடம் அந்நாட்டு நீதிபதிகளை இலங்கை தொடர்பான விசாரணைக்கு அனுப்பிவைக்குமாறு கோரும் அதிகாரத்தை சுமந்திரனுக்கு அரசு வழங்கியுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மஹிந்த அணி சார்பு கூட்டு எதிர்க்கட்சி ஊடகவியலாளர் …
-
- 2 replies
- 895 views
-
-
அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது. யு எஸ் எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி, பாலமுனை ஆகிய பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர் முகாமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்ற 80 பயணாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒரு பயனாளிக்கு 100 கோழிக் குஞ்சுகள் வீதம் 8000 குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. குஞ்சுகளை வளர்ப்பதற்காக போதிய வசதி …
-
- 0 replies
- 606 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. அத்தோடு அனைத்து குளங்களும் நிரம்பி வான் பாய்தது. இதனால் குளம் மற்றும் ஆறுகளில் இருந்த முதலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஊர்களில் காணப்படுகின்ற வெள்ளத்தினால் ஏற்பட்ட, சிறிய நீர்த்தேங்களில் தங்கிய நிலையில் இரவு வேளைகளில் மக்களின் வீடுகளில் புகுந்தும் வீதிகளில் திரிந்தும் வருகிறன. இதனால் மக்கள் அசத்தில் காணப்படுகின்றனர். கடந்த வாரம் கிளிநொச்சியில் வெளத்தில் சென்ற முதலை 14 வயது சிறுமியின் தலையை கௌவ்விய சம்பவம் மக்களை அச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. நீர்த்தேக்கங்கள், ஆற்றங்கரையோரங்களில் வாழக்கின்ற மக்கள் தங்களது குழந்தைகளை சிறுநீர் கழிக்க கூட வெளியில் அ…
-
- 0 replies
- 549 views
-
-
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை வெள்ளத்தினால் வட்டுவாகல், நந்திக்கடல் பாலம் சேதமடைந்துள்ளது. நீர்வரத்து கூடுதலாக பாய்ந்து கொண்டிருப்பதால் சேதமடைதல் இன்னும் அதிகரிக்கலாம் என நேரில் சென்று பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் அவதானத்துக்கு பொதுமக்கள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பில் ரவிகரன் கருத்து தெரிவிக்கையில், இப்பாலம், முன்னோர்களின் கருத்துக்களின்படி 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் பழமை வாய்;ந்ததாக இருப்பதுடன், இறுதிப்போர்க் காலப்பகுதியிலும் பலத்த சேதங்களை சந்தித்தது. சிறிய சிறிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் பழமையான இப்பாலம் ஆறுபாயும் காலத்தில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. …
-
- 0 replies
- 546 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். நல்லூர், கோவில் வீதியில் அமைந்துள்ள அங்கஜனது அலுவலகத்தக்கு தன்னை அழைத்து, அவருடன்; இணைந்து செயற்படவில்லையெனவும், இதனால் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி, அங்கஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அகிலதாஸ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, …
-
- 0 replies
- 464 views
-